2018 ல் பாலியல் துன்புரூத்தலுக்கு ஆளான பெண்ணின் தந்தையை பட்டப்பகலில் குற்றவாளி கொலை செய்தது பற்றி..
இதோ இவன் தான் அது ..கவரவ் ஷர்மா.சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவன்.
ஏன் செய்தான் தெரியுமா?
பெண்ணின் தந்தை அம்ரிஷ், 2018 ல் அவன் மீது தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற மறுத்ததால்,, அவன் சிறைக்குச் சென்றானாம்.
சட்டம் மற்றும் ஒழுங்கை மீறுவது இந்தியாவின் சில பகுதிகளில் வெளிப்படையாக நடக்கிறது, ..இதோ இந்த வழக்கில் நடந்ததைப் போல …
பொது மக்கள் தான் அதற்கு அதிக விலை கொடுக்கிறார்கள்.
நிலைமை இப்படியிருக்க இன்றைய நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைய, அதிக அளவில் பெண் மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்திலு.ம் பாராளுமன்றத்திலும் தேவை…
ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிரதான அரசியல் கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர்களில் சொல்லிக்கொள்ளும் அளவில் பெண்கள் இல்லை…சீமான் கட்சியை தவிர்த்து…
அந்த அளவிற்கு தகுதியான பெண்கள் இல்லையா? வெறும் சாதியும் பணமும், ஆண் என்பன மட்டுமே தகுதியாக ஆகிவிடுமா?
பெண்களை கவரும் வண்ணம் தேர்தல் அறிக்கை விட்டவர்களுக்கு, பெண்களையே அதிக அளவில் வேட்பாளர்களாக நிறுத்தும் துணிவு ஏன் இல்லை?
இதை நம் மக்கள் ஒத்துக்கொண்டு பணமும் சாதியும். மட்டுமே தகுதி என்று தேர்வு செய்தால்…
கண்ணை விற்று, சித்திரம் வாங்கலாகுமோ?
இது உண்மையிலேயே இந்திய பிரஜை என்ற முறையில் என்னை அதிர்ச்சியடைய வைத்தது!!,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக