சமீபத்தில் கிடைத்த செய்தி.
தமிழக அரசு இன்று கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில்,, தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், நான்கு மாத காலத்திற்கு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்க தீர்மானித்தது.
,அதிகரித்து வரும் கோவிட் கேஸ்களுக்கு மத்தியில், சென்ற வாரம் மாண்புமிகு உச்சநீதிமண்றத்தில் இந்த கேசும் விசாரணைக்கு வந்தபோது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்று ஆலையை திறக்க மாநில அரசு மறுப்பது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல என்றுவிட்டது. ஆக்சிஜன் பிளாண்டை திறக்க அனுமதித்தால் தாங்கள் உடன் உற்பத்தி செய்வோம் என்று ஆலை தரப்பில் சொல்லப்பட்டதை அடுத்து, தமிழக அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் கேட்டுள்ளது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்கள் கொல்லப்பட்டதையும் அதனால் சில நாட்களுக்கு பின்னர், 2018 மே மாதம் இந்த அலகு மாநில அரசால் சீல் வைக்கப்பட்டதையும் அரசு சுட்டிக்காட்டியும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த இக்கட்டான காலத்தில், மற்ற மாநிலங்களுக்காவது இந்த ஆக்சிஜன் உற்பத்தி பயன்படும் என்றது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலை இயங்க, நான்கு மாதங்களுக்கு மின்சாரம் வழங்க அனுமதிக்கப்படலாம் என்றும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் தொடர்புடைய உபகரணங்களை பழுதுபார்த்து இயக்க மட்டுமே முடியும், ”என்று கூட்டம் முடிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக