ஞாயிறு, 6 ஜூன், 2021

பொய் வழக்கு போட்ட போலீசிடம் இருந்து நாம் தப்பிக்க முடியுமா?

 ஒருவரை குற்றவாளி எனும் முன்பு, அவர் அந்த குற்றம் செய்திருப்பார் என்று சந்தேகம், கொள்ளும் அளவிற்கு காவல் அதிகாரியிடம் ஆதாரம் இருக்க வேண்டும்.

சட்டப்படி குறித்த காலக் கெடுவிற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய கடமை இருக்கும்போது, எந்தவித ஆதாரமுமின்றி கைது செய்யும்போதும, அவர் மீது வழக்கு தொடரும் போதும், அதற்காக விசாரணை அதிகாரியின் மீது ‘malicious prosecution’ என்ற நடவடிக்கை பாய்வதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் சட்டம் அளித்துள்ள இந்த அதிகாரத்தை நாம் பயன்படுத்தாத காரணத்தினால்தான் தேவையற்ற கைதுகள், காழ்ப்புனர்சியின் காரணமாக பொய் வழக்குகள் போடப்படுவது தொடர்கிறது.

அதே சமயம்,, குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டார் என்பதற்காக, ஒரு குற்றப் புகாரைத் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்த ஒரு காவல் அதிகாரி மீது, பொய்யான குற்றச்சாட்டுகளைச் செய்ததற்காக, ஐபிசி பிரிவு 211 ன் கீழ் வழக்குத் தொடர முடியாது என்று மாண்புமிகு உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வழக்கில்[1] தீர்ப்பளித்துள்ளது..

குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட வழக்குகளில், விசாரணை அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிட்டால், அது விசாரணையை நடத்துவதில் அவர்களின் சுதந்திரத்திற்கு நேரடியாக தலையிடுவதாகிவிடும் என்று நீதிபதியரசர் என். ஆனந்த் வெங்கடேஷ் ஒற்றை பெஞ்ச் குறிப்பிட்டது.

"தவறான குற்றச்சாட்டு" தொடர்பாக பிரிவு 211 இன் கீழ் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், குற்றவியல் சட்டத்தை இயக்கிய புகார்தாரருடன் மட்டுமே தொடர்புபடுத்த முடியும் என்றும் விசாரணை அதிகாரி அல்ல. என்பதையும் நீதிமன்றம் மேலும் தெளிவுபடுத்தியது,

சி.ஆர்.பி.சி.யின் பிரிவு 340 ன் கீழ் தாக்கல் செய்த கிரிமினல் மனுவில், விசாரணை நீதிமன்றம் வழங்கிய சம்மளை எதிர்த்து முன்னாள் சி.பி.சி.ஐ டி. டிஎஸ்.பி தொடர்ந்த வழக்கில் இவ்வாறு நீதியரசர் தெருவித்துள்ளார்.

இந்த வழக்கை பொறுத்து மேற்படி டிஸ்.பி பணியில் இருந்த போது, புகார்தாரர் மீது விசாரணை செய்யுமாறு பணிக்கப்பட்டது.

விசாரணை செய்து அவர் தாக்கல் செய்த குற்ற வழக்கில் இருந்து, மேற்படியாளர் நீதிமன்றத்தில், விடுதலை செய்யப்பட்டார். எனவே டி.எஸ்.பி மீது பொய் வழக்கு தாக்கல் செய்ததாக கோரி, வழக்கு தொடுத்தார்.

அவர் சார்பாக வாதிடுகையில், வெறும் விடுதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பொய் வழக்கு போட்டதாக சொல்லமுடியாது என்றும், அப்படியே வழக்கு போடுவதானாலும், சிவில் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும், குற்றவியல் நீதிமன்றத்தை அல்ல என்றனர்.

ஆனால் எதிர் பார்ட்டியோ, அந்த குற்ற வழக்கு, முழக்க பொய்யான தகவல் கொண்டு போடப்பட்டது என்று தீர்ப்பாகியுள்ளது என்றும், ஒரு சட்ட விரோத கைதை எதிர்த்து, தான் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டதால், வேண்டுமென்றே, உண்மை தெரிந்தும் பொய் வழக்கை டி.எஸ்.பி பதிந்தார் என்றும் ஆட்சேபம் செய்தார். அதுவும் ஒரு முதல் நிலை விசாரணை செய்யத் தான் விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது, இங்கு சொல்வதை அங்கு ஆஜராகியும் சொல்லலாம் என்றார்.

இரண்டு தரப்பையும் விசாரித்த நீதியரசர்,

  • பொய் வழக்கு போட்டதற்காக வழக்கு போடும் முகாந்திரம் இருந்தாலும், சிவில் நீதிமண்றத்தையே நஷ்டஈடு கோரி அணுக வேண்டும் .
  • அதற்கான அடிப்படையை கொண்டு கு.வி.மு.ச.பிரிவு 340ன் கீழ் மனு போட முடியாது.அப்படி போடவேண்டும் என்றால் அது,. 195(1)(b), Cr.P.C.கீழான நிபந்தனைகளை அடியொற்றி இருக்கவேண்டும்.
  • பொய் வழக்கு போடுதல் குறித்து,, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் இதே போன்ற ஒரு வழக்கில் [2] கீழ்கண்டவாறு சொல்லியுள்ளது "சட்டப்பிரிவு 211 சொல்லும் பொய்யான குற்றச்சாட்டுகள் என்பது, "குற்ற நடவடிக்கை தொடங்குவது" என்பதுடன் தொடர்பு படுத்தி பார்க்கவேண்டும், பொய்யான குற்றச்சாட்டுகள் என்பது, இறுதி அறிக்கை அதாவது சார்ஜ் ஷீட் தாக்கல் செய்த பின் வருவதல்ல"
  • மேற்படி வழக்கை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், கிடைக்கப்பட்ட ஒரு புகாரின் அடிப்படையில் தான் எப்.ஐஆர் போடப்பட்டது, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அதன் பின்னர் தான் இந்த வழக்கில் டி எஸ் பி விசாரிக்க வருகிறார் என்றும், வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை கொண்டே இவ்வாறு குற்ற வழக்கு தொடர அனுமதித்தால், போலீசாரின் விசாரணை செய்யும் உரிமையில் குறுக்கீடாக அமையும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடிக்குறிப்புகள்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...