வெள்ளி, 23 ஜூலை, 2021

பொது மக்களால் அறியப்படாத நீதிமன்றத்தில் நடக்கும் பொதுவான நடத்தைகள் என்ன?

 நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குள் தேக்கம், நீதிமன்றங்களுக்கு விடும் விடுமுறைகள், அவை வழங்கும் தீர்ப்புகள்…..இவை பற்றி மட்டுமே பொதுமக்கள் அறிவார்கள்…

ஆனால் எல்லா தீபங்களுக்கு கீழேயே இருள் உண்டு என்பதை மறந்துவிடுகிறோம்.

விசாரணை நீதிமன்றங்களில் இருக்கும் நீதிபதிகலுக்கு உள்ள பணிசுமை தவிர்த்த மனசுமை தெரியுமா?

இதோ ………. மாண்புமிகு உச்ச நீதிமன்றம் சமீபத்திய தீர்ப்பு ஒன்றில், பட்டியலிட்டுள்ளது…இன்னும் சொல்லபோனால் அவர்களுக்காக வாதாடியுள்ளது!! …வழக்கம் போல…..

என்ன தாம்ப்பா அவங்க பிரச்சினை"ன்னு கேட்கிறவங்களுக்கு………….

அவர்கள் வாய்ஸ்சிலேயே

"உள்கட்டமைப்பின் பற்றாக்குறை, போதிய பாதுகாப்பு இல்லாமை , நீதிபதிகள் சரியான முடிவெடுத்து அதன் பால் நிற்கும்போது அவர்கள் இலக்குகளாக மாற்றப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள், துரதிர்ஷ்டவசமாக, உயர்நீதிமன்றத்தின் நிர்வாகத்திற்கு கீழ்ப்படிதல், என்ற அடிப்படையில் அவர்களை பாதிக்கப்படக்கூடிய இடமாற்றங்கள் "

இதை ஏன் திடீருன்னு சொல்லியிருக்குன்னு கேட்கிறீங்களா?

எம், டாமோவில் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர சவுராசியா கொலை செய்யப்பட்டார் இல்லையா?

அது தொடர்பாக, மாநிபுமிகு மத்திய பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த போது சொன்னவை இவை

இந்த வழக்கிற்கும், நீதிபதிகளுக்கும் என்ன சம்பந்தம்?

மேலே சொன்ன கிரிமினல் வழக்கை விசாரிக்கும் கூடுதல் அமர்வு நீதிபதி ஹதா தனது உத்தரவில் தனக்கு உள்ள அச்சங்கள், எல் செல்வாக்குமிக்க குற்றவாளியின் சூழ்ச்சிகள் போன்றவற்றை வெளிப்படுத்தியிருந்தார்.

மாவட்ட நீதித்துறையின் சுதந்திரம் என்பது ஒட்டுமொத்த நீதித்துறை என்ற முழு அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கும் முக்கியமானது என்பதை நீங்கள் ஒத்துகொள்கிறீர்கள் தானே? இதைத்தான் மான்்புமிகு உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

ஒரு சுதந்திரமான, எந்த பக்கச்சார்பற்ற நீதித்துறை ஜனநாயகத்தின் மூலக்கல்லாகும். மாவட்ட நீதித்துறையில் உள்ள நீதிமன்றங்கள் தான் குடிமக்களுடன் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளியாகும். நீதி நிர்வாகத்தில் குடிமகனின் நம்பிக்கை நிலைக்க வேண்டுமானால், மாவட்ட நீதித்துறையிலும், 'உயர்' நீதித்துறையிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். விசாரணை நீதிபதிகள் மோசமான நிலைமைகளுக்கு மத்தியில் பணியாற்றுகிறார்கள் -உள்கட்டமைப்பின் பற்றாக்குறை, போதிய பாதுகாப்பு இல்லாமை , நீதிபதிகள் சரியான முடிவெடுத்து அதன் பால் நிற்கும்போது அவர்கள் இலக்குகளாக மாற்றப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள், துரதிர்ஷ்டவசமாக, உயர்நீதிமன்றத்தின் நிர்வாகத்திற்கு கீழ்ப்படிதல், என்ற அடிப்படையில் அவர்களை பாதிக்கப்படக்கூடிய இடமாற்றங்கள்...

.மாவட்ட நீதித்துறையின் பால் கொண்டுள்ள 
 காலனித்துவ மனநிலை மாற வேண்டும்.
 அப்போதுதான் குற்றம் சாட்டப்பட்டவர்கள்,
 பாதிக்கப்பட்டவர்கள் சமூகம் - என்று எங்கள் 
விசாரணை நீதிமன்றங்களில் அர்த்தமுள்ள 
வகையில் பாதுகாக்கப்படும், ஒவ்வொரு 
ஸ்டாக்கிற்கும் சிவில் சுதந்திரம் கிடைக்கும்.  

மெட்ராஸ் பார் அசோசியேஷேன் எதிர் ஒன்றிய அரசு என்ற வழக்கை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்,

 நீதித்துறையை ஒரு சுதந்திரமான  அமைப்பாக
 செயல்படுத்துவது என்பது,  அதிகாரங்களைப் 
பிரிக்கும் கருத்தில் வேரூன்றியுள்ளது. தனிப்பட்ட
 நீதிபதிகள் சரிசெய்ய முடியும். வேறு எந்த 
காரணிகளின் இடையூறின்றி நீதிபால் சட்டத்தின்
 துணை கொண்டு தீர்ப்பு வழங்க இயல வேண்டும்.
  அதனால நீதித்துறையின் சுதந்திரம் என்பது 
ஒவ்வவொரு நீதிபதியின் சுதந்திரம ஆகும்.  அது 
அவருடன் பணியாற்றும் ஏனைய சக நீதிபதி, 
அல்லது அவருக்கு மூத்த நீதிபதியிடமிருந்தும் 
சுதந்திரத்தை உள்ளடக்கியது.  '

இது சம்பந்தமாக அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 5௦ல் சொல்லப்பட்டதை எடுத்து சொல்லிய உச்ச நீதிமன்றம்,

" இது நீதித்துறையை, பொது சேவையை பொறுத்த வரையில், அரசின் நிர்வாகத்திடம் இருந்து நீதித்துறையை பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது, உயர் நீதிமன்ற நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் மாவட்ட நீதித்துறை, எந்தவித நிர்வாக இடையூறு இன்றி சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். நீதிபதிகளின் தனிப்பட்ட முடிவெடுக்கும் அதிகாரத்தில் எந்தவிதத்திலும் அரசின் நிர்வாகம் இடையூறு செய்யாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். "

என்றுள்ளது..

ஒன்று சொல்லவா…

ஊரில் எங்கு பிரச்சினை என்றாலும் நீதிமன்றத்தில் போய் முறையிடலாம்.

ஆனால் நீதிபதிக்கே பிரச்சினையென்றால் யாரிடம் போய் நீதி கேட்க முடியும்??
















கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...