வியாழன், 8 ஜூலை, 2021

குற்றவாளி என்று தீர்ப்பான பின், மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது ஒருவர் இறந்தால் அவர் வாரிசுகள் என்ன செய்ய வேண்டும்?

 பிரிவு 431 சிஆர்பிசியின் கீழ் சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட்டால், உச்சநீதிமன்றம் வைத்திருக்கும், குற்றம் சாட்டப்பட்டவரின் மரணம்,அத்தகைய மேல் முறையீட்டை பாதிக்காது.

சமீபத்தில் மான்பிமிகு உச்ச நீதிமன்றத்தில் வந்த வழக்கு இது.

கேரள அப்கரி சட்டத்தின் 55 (அ) மற்றும் (ஜி) பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ .1 லட்சம் அபராதமும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விதிக்கப்பட்டது.

அந்த தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக அவர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தனர்.மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோது மேல்முறையீட்டாளர் / குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர் இறந்தார். .இதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டாலும்,, கு.வி.மு.ச.பிரிவு 394 ன் படி விசாரணையை தொடர்ந்தது.

பின், உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்போது, "மேல்முறையீடு நிலுவையில் இருந்த போது, மேல்முறையீட்டாளர் இறந்ததால், சிறைத்தண்டனை விதிக்க முடியாததாகிவிட்டது, இருப்பினும், அபராதம் விதிப்பது தொடர்பாக, கீழே உள்ள நீதிமன்றம் எந்த தவறும் செய்யவில்லை " என்று மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது .

இதை எதிர்த்து, ரமேசனின் சட்ட வாரிசு (இறந்தவர்) கிரிஜா என்பவர் உச்சநீதிமன்றத்தை அணுகினார்..அவரின் வாதம், "சிறை தண்டனையும் அபராதமும் ஒரே குற்றத்திற்கு தான் அளிக்கப்பட்டது.குற்றவாளி இறந்ததால், மொத்த வழக்குமே ரத்தாக வேண்டும் என்றார்.

இதை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் மற்றும் நீதிபதி எம். ஆர் ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “பிரிவு 431 இல் பயன்படுத்தப்பட்ட வெளிப்பாடு, அதாவது‘ அபராதம் விதிக்கப்பட்டதிலிருந்து முறையீடு தவிர ’பிரிவு 394 சி.ஆர்.பி.சி.

எனவே, தற்போதைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீடு அபராதத்திற்கு எதிரான மேல்முறையீடாக கருதப்பட வேண்டும், பழைய சட்டத்தின் கீழும் தற்போதைய குற்றவியல் நடைமுறைகளின் கீழும், அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிரான மேல்முறையீடு நிறுத்தப்படாது.மேலும் தகுதி அடிப்படையில் மேல்முறையீட்டை தீர்மானிப்பதில் உயர் நீதிமன்றம் எந்த பிழையும் செய்யவில்லை. ”

என்ற உச்சநீதிமன்றம், அபராதம் விதிக்கப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க, அந்த சட்ட வாரிசுகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளதுடன், மேல்முறையீட்டை விசாரிக்கவும் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது..

இப்போது புரிகிறதா ஏன் முன்னாள் முதல்வர் இறந்தபிறகும், அவரின் மேல்முறையீடு அபராதம் சம்பந்தமாக எடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

தண்டனை அடைந்தவரின் சொத்துக்களுக்கு உண்டான சட்ட பூர்வ வாரிசு தான், இந்த அபராதத்தை கட்ட வேண்டும்.

நிறைய பேர், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை அரசு கட்டியது என்று நினைக்கின்றனர்..அதுவும் அந்த சமயத்தில் அவர் சார்ந்த கட்சி, ஆட்சிப்பொறுப்பில் இருந்ததால் தான் அந்த எண்ணம் வந்திருக்கும்.உண்மையில், இப்போதைய ஆளும் அரசும் அதை தான் செய்திருக்கும்.

ஏன்?

ஜெயலலிதாவின் இல்லம் அரசு உடமையாக்கப்பட்டதால், அதற்கு அரசு கொடுக்கவேண்டிய ஈடு தான், கோர்ட்டில் கட்டப்பட்டது. அது முறையாக, அவரின் ஸதா வாரிசுகளுக்கு போகவேண்டும்.. அவர்கள் தான் இந்த அபராதமும் கட்டவேண்டும்.அதனால் அந்த சொத்தின் முலம் வந்த பணம் அபராததத்திற்கு நேர் செய்யப்பட்டு ட்ராவில் முடிந்தது!

இது குற்ற வழக்கில் மட்டும் அல்ல..சிவில் வழக்குக்கும் பொருந்தும்!!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...