நம் கர்மாவிற்கும் ஜாதகத்தில் உள்ள ஆறாம் பாவத்திறகும் உள்ள தொடர்பு தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்
ஒரு ஜாதகத்தில் ஆறாம் இடம் எப்படி செயலாற்றுகிறது?
ஆறாம் பாவத்தை பத்தி குறிப்பா கேட்டதிலிருந்து அதனுடைய அடிப்படை விஷயங்கள் தெரியும்ன்னு நினைக்கிறேன் அதனால நேரடியா ஆறாம் பாவத்தின் குணாதியாசங்கள் பார்கலாம்.
நோய், வம்பு வழக்கு, சிறை கடன், வயிற்றுக் கோளாறு, தண்ணீரில் மூழ்குவது இதையெல்லாம் ஜாதகர் அனுபவிப்பார்.என்ற பொது பலன் உண்டு.
எப்போது?
அந்த ஆறாம் பாவத்தின் அதிபதி, தன்னுடைய அல்லது தன் நட்பு கிரகத்தின் தசா புத்திகாலத்தில், நடக்கும்.
அது மட்டுமல்ல அந்த பாவத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்தால், அதனுடைய குணமும் மாறும்..பொதுவாக, 3, 6, 8, 11 மறைவு ஸ்தானங்கள் எனப்படும்.அங்கிருக்கும் கிரகங்களின் பொதுவான குணம் மறைந்துவிடும். என்பர்..
ஆனாலும் சில கிரகங்கள் தங்களுடைய குணத்தை விடாமல் காட்டும் பாருங்க.
சூரியன்.. சூரியன் தகப்பனை குறிப்பவர்..பிள்ளையை விட்டுக்கொடுப்பாரா?எதிரிகளை ஜெயம் கொள்ளும்.
சந்திரன்.. சாதரணமாக , இந்த சந்திரன்தான் நவக்கிரகங்களையும் வேகமாக நகரக் கூடியது அதாவது 21/2 மணி நேரத்தில் ஓர்் ராசியை கடக்க கூடியது.
ஆனால் ஆறாம் பாவத்தில் வந்து உட்கார்ந்தவுடன் மந்தம் ஆகிவிடும். வயிற்றின் ஜீரணமும் அப்படியே.
செவ்வாய் இருந்தால் தன்னை எதிர்ப்பவர்களை திறம்பட கையாண்டு வெற்றி கொள்ளுதல்
புதன் இருக்கும் போது தொழுநோய.
குரு இருந்தால்ஒரு ஸ்திரத்ன்மை இல்லாத வயிறு சேர்மானம், கடன் தொல்லைக்கு உட்படலாம்
சுக்கிரன் இருந்தால் சுகபோகத்தை அனுபவிக்க முடியாது. மோசமான உடல்நிலை உள்ள மனைவி பெண்களை வெறுப்பார்.
சனி கிரகம் ஆறாம் வீட்டில் இருக்கும்பொழுது எதிரிகளை வெற்றி கொள்வார்
இது மட்டும் இல்லே..
ஆறாம் பாவத்தின் அதிபதி எட்டாம் பாவத்தில் அதிபதியை பார்த்தாலோ, அல்லது சேர்ந்தாலோ ஜாதகரின் உடல் நிலை பாதிக்கப்படும்
அதே போல நாலாம் பாவத்தின் அதிபதி 6 8 9 11 அதிபதியுடன் எந்தவிதத்திலாவது சம்பந்தப்பட்டிருந்தால் அதாவது பார்ப்பது சேர்ந்திருப்பது, பரிவர்த்தனை செய்து இருப்பது போன்றவற்றில் தொடர்பு கொண்டிருந்தால் ஜாதகருக்கு வம்பு வழக்கு சிறையில் அடைப்பு ஆகியவைகளில் சேர்க்க சிக்க நேரலாம்
சில சமயம் அந்த சூழ்நிலை வந்தாலும், சிறைக்கு போகாமல் தப்பிக்கவும் செய்யலாம். அதற்கு அவருடைய ஜாதகத்தில் ஆறாம் பாவத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் சாரம் பெற்றிருக்கிறாரோ, அதன் அதிபதி ஜாதகருக்கு யோகாதிபதியாக இருக்கவேண்டும். முன்ஜாமீன் கிடைத்துவிடும்
சரி இந்த வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்பவர் அதில் இருந்து விடுபட்டு விடுவாரா என்றும் பார்க்கலாம் .
எப்படி?
இந்த ஆறாம் பாவத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் அந்த அதிபதி இவருக்கு நட்பாக இருந்தால் , அவர் அந்த வழக்கு வம்பு வழக்கில் இருந்தும் விடுதலை பெறலாம்
இதை எல்லாம் நேற்று பார்த்துக்கொண்டிருந்தேன்...என்று சொல்ல முடியாது..
குடைந்து கொண்டிருந்தேன். ஏன் தெரியுமா?
ஒரு கேள்விக்கான பதிலை தேடி...
சிலர் மட்டும் எந்த நல்லது செய்தாலும், அவர்கள் இறுதி நேரம் மோசமாக போகுதே..ஏன்?
ஸ்டான் சுவாமி ..
ஒரு சமூக ஆர்வலர். ஒரு சமூக சேவகர் மற்றும் பாதிரியார்,
திருச்சியை சேந்தவர்.
ஜார்க்கண்டில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக பல தசாப்தங்களாக போராடி வரூபவர். .
வந்தவர என்று எழுத முடியவில்லை. தன் கடைசி நாட்களிலும் தன்னுடைய உரிமைகளுக்காக போராடியே உயிரை விட்டதால், என்றும் நம் மனதில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்!!
இடப்பெயர்வுக்கு எதிரான மக்கள் இயக்கமான விஸ்தாபன் விரோதி ஜன் விகாஸ் அந்தோலனின் நிறுவனர்....
ஆதிவாசி மக்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து, பல காலமாக அந்த மக்களுடன் சேர்ந்து போராடுபவர்..
போன அக்டொபரில், பீமா கரோகன் வழக்கில் தொடர்பு கொண்டு, சதி ஆலோசனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஒன்பது மாதங்களாக சிறையில் இருப்பவர்..
சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டவர்....
இந்த சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகளில் வெறும் 2% மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரம் சொல்கிறது..
ஒரு தடவை கூட இவரை போலீசார் விசாரிப்பதற் காக போலீஸ் காவல் கேட்கவில்லை என்கிண்றனர். ஒருவேளை அந்த அளவிற்கு அவருக்கு எதிரான தடயம் கிடைத்ததோ?
அப்படித்தான் சொல்கிறது அந்த விசாரணை அமைப்பு. அதனால் தான் அவர் பிணை மனு போட்டபோதெல்லாம் கடுமையாக எதிர்த்தார்களாம்!!
அவருக்கு எதிராக கூடுதல் ஆவணங்களை, பிணை மனு விசாரணையின் போது, தாக்கல செய்கிறார்கள்!
கடுமையான குற்றம் அவர் மீது இருக்கிறது, வயோதிகத்தை, நோயை காரணம் காட்டி தப்பிக்க பார்க்கிறார் என்று எதிர்க்கிறார்கள்..
நீதி தேவதை தான் கண்ணை கட்டி கொண்டவள் ஆயிற்றே?
நீதீயரசர்களுக்கு அவர் உடல் நிலை மோசம் பற்றி தெரிந்தாலும், ஆவணங்கள் எதிராக காட்டுகிறது..
உடன் மருத்துவ வசதியை அதிகப் படுத்த சொல்லி உத்தரவிட்டு, எதிர்தரப்பை பதில் தாக்கல் செய்ய சொல்கின்றனர்.
நடைமுறை என்று ஒன்று உள்ளதே..
அந்த மனு விசாரணை நடக்கும்போது தான் இடியாக வருகிறது செய்தி..
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டதாகிறதே?!
ஆனாலும் சிறை நிர்வாகம், அவர் சிறையில் போதிய மருத்துவ வசதி இல்லை என்று சொல்லி அவர் மருத்துவமனை சிகிச்சையோ, வீட்டு காவல் கோரிய போது எதிர்க்காமல் இருந்திருக்கலாம்…
அவர் பார்கின்சன் நோயால் அவதிப்படுவதால், தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் சிப்பர் பாட்டில் உள்ள பையை பறிமுதல் செய்த போலீசார், அதை அவர் கேட்ட போதாவது அவரிடம் திரும்பி கொடுத்திருக்கலாம்…
சிறை நிர்வாகமாவது , அவர் கேட்டவுடன் மற்றவர் கொண்டு வந்து கொடுத்த போர்வையையும் சிப்பரையும் தடுக்காமல் இருந்திருக்கலாம்..
எல்லாமே ..லாம் தான்..
கடைசியில் அவர் பயந்தது போலவே தான் ஆனது..
எதுவும் செய்ய இயலாதவர்களாய் நாம்…
எல்லாம் முடிந்த பிறகு, இப்போது இதை பற்றி பேசி என்ன பயன்?
ஆனாலும், நம் வீட்டிலோ பக்கத்து வீட்டிலோ எந்த குழந்தையாவது இதை கையில் வைத்திருப்பதை பார்க்கும்போது, ஸ்டான் ஸ்வாமி அவர்கள் நம் மனக்கண்ணில் கண்டிப்பாக வந்து போவதை நம்மால் தடுக்க முடியாது!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக