அது பேருக்கு தான் அவருக்கு..மறைமுகமா, தலைவனும் வருஙகால முதல்வர்ன்னும் சொல்ற இளைஞர்களுக்கு தான்…அது..
இப்படி வந்து சுற்றுசூழலுக்கு ஆதரவா காட்டிட்டு போஸ் கொடுத்தவர் இல்லையா?
நம்ம ஆட்களும் தலைவானு பின்னாடியே ஓடலை?
எங்க தளபதியை மாதிரி உண்டான்னு கேட்கலை?
உண்மையான ஹீரோக்களாக தங்கள் ரசிகர்களால் பார்க்கப்படும் நடிகர்கள் “ரீல் ஹீரோக்களாக இருக்க முடியாது.” ங்கிறது தானே அந்த உத்தரவின் அடிநாதம்.
நீங்களும் நானும் இப்படி ஒரு காரை வாங்க முடியுமா? ஆறு கோடி ரூபாய்க்கு சொகுசு கார் வாங்க அவரால் முடியுதுன்னு சொன்னால் அது யாரால்?
முதல் நாள் முதல் ஷோவுக்கு போய் பார்த்தா தான் ஆச்சுன்னு போய் பண்டிகைக்கு முந்தின நாளே தியேட்டர் வாசலில் காத்து கிடந்து டிக்கெட் வாங்கி பார்த்து புளகாங்கிதப்படுறாங்க ளே, அந்த கோடிக்கணக்கான ரசிகர்களின் பணத்தில் தானே இந்த காரை வாங்கியிருக்கார்?
அப்ப அவங்க உணர்வுகளுக்கு மரியாதை குடுக்க வேண்டாமா? இல்லே இவங்களுக்காவது புத்தி தெளிய வேண்டாமா? அதற்கு தான் இந்த காரசாரமான தீர்ப்பு!💐.
அட. ஆறு கோடி ரூபாய் குடுத்து வெளிநாட்டு காரை வங்கிறவருக்கு, உள்நாட்டுக்கு…மூச்சுக்கு முன்னூறு தரம் என் உயிர் தமிழநாட்டுக்குனு சொல்லும்போது, அதுவும் ஒட்டு மொத்த ரசிகர் பட்டாளமே கேள்வி கேட்காம, வரி கட்டி வண்டி எடுக்கும்போது, இவர்க்கு மட்டும் எதுக்கு வரி விலக்கு வேண்டுமாம்? ஒரு 20% வரி கட்ட முடியாதாமா? அது கூட இறக்குமதி செய்யப்பட்ட கார் என்பதால் தான் அவ்ளோ வரி!.அதை கட்ட பிடிக்கலையா, உள்ளூர் காரை வாங்க வேண்டியது தானே?
இது போன்ற நடிகர்கள் தானே ஆட்சியாளர்களாக மாறி இருக்காங்க.அந்த ஆசை அவருக்கும் இருக்க போயிதானே அரசியல் நெடி கலந்த பன்ச் டயலாக்கு அடிக்கிறதும், அவங்கப்பா கட்சி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கிறதும், இவர் அது வேனா..ம்ன்னு சொல்ற மாதிரியே..
அதுனால தான் நீதியரசரும், "தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில், அவர்கள் ‘ரீல் ஹீரோ’ போல நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதில்லை. வரி ஏய்ப்பு என்பது ஒரு தேசிய விரோத பழக்கம், அணுகுமுறை மற்றும் மனநிலை மற்றும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது என்று கருதப்பட வேண்டும், ”னு காட்டமா கடிச்சு துப்பிட்டார்.!!
இவர் வெளிநாட்டிலேயிருந்து பிளைட் பிடிச்சு நேரா ஓட்டு போட வரமாதிரி , சமுக கடமை ஆத்துணமாதிரி வந்த படத்தையம், லஞ்ச லாவண்யம் எல்லாத்தையம் எதிர்த்து கழுத்து நரம்பு புடைக்க பேசின வீர வசனத்தை எல்லாம் ஜட்ஜும் பார்திருப்பாருள்ளே..
அதான்."இந்த நடிகர்கள் சமூக நீதியைக் கொண்டுவருவதற்காக தங்களை சாம்பியன்கள் போல சித்தரிக்கின்றனர். அவர்களின் திரைப்படங்கள் சமூகத்தில் ஊழலுக்கு எதிரானவை. ஆனால் அவர்கள் வரியைத் தவிர்த்து, சட்டங்களின் விதிகளுக்கு இணங்காத வகையில் செயல்படுகிறார்கள்" , ”என்று செவிட்டிலேயே நாலு சாந்து சாத்திட்டார!!
இப்ப அந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் வந்த நேரம், கூட ஒரு லட்சம் ருபாய் தெண்ட செலவுனு சொல்ல முடியாது..
ஏன்னா ஏற்கெனவே 2020ல் கோரனாவுக்கு என்று முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்த 50 லட்சம் ரூபாய், இப்ப தான், சரியா, மொய் எழுதுற மாதிரி "51 லட்சம்ன்னு ரவுண்டா ஆகும்! அதுவும் வேற.. புது முதல் அமைச்சரிடம் டொனேஷன் இன்னும் குடுக்களையே ..இதையே சாக்கா வச்சிக்கிட்டு, போயி தியேட்டர் திறக்க கேட்டுக்கலாம்..
இதுலே ஆச்சரியம் என்னன்னா, கோர்ட்டில் போட்ட கேசில தான் நடிகரணனே சொல்லல!!
ஏற்கெனவே இதே போல ஒரு கேஸ் போட்டு அது "டிஸ்மிஸ்" ஆச்சு..எதுவும் வம்பா போகலை..அதுனால தான் இந்த தடவையும் "கல்லை எரிஞ்சு பார்ப்போம்..விழுந்தா பழம்"னு போயிருக்காங்க..ஆனா குறி தவறி தலையிலேயே விழுந்துடுச்சு!!
ஆனா, இது அவருக்கு மட்டும் கிடைச்ச அறிவுரையா எடுத்துக்க கூடாது..
கவர்ச்சியான முகத்துக்கு பின்னாடி ஓடுற நமக்கு கிடைச்சது இது!
வரிசையா நம்ம தமிழ்நாட்டில் தான் நடிகர்களை வெறும் நடிப்புக்கு மட்டும் கொண்டாடாம, நாட்டுக்கே தலைவரா ஆக்கும் மனோபாவம் இருக்கு.
இது மாதிரி, சுதந்திரம் அடைந்த காலத்திலும், அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வெறும் கவர்ச்சியை மட்டும் அடிப்படையா வச்சு அரசியலுக்கு வர்றதை வெறுத்த சட்ட மேதை அம்பேத்கர் அரசியலுக்கு வர விரும்புவோருக்கு என்றே ஒரு பள்ளி ஆரம்பிச்சார்..
என்னது.ஸ்கூளான்னு கேட்காதீங்க..இன்னிக்கு நிறைய யூனிவேர்சிட்டியிலேயே நிறைய டிபார்ட்மெண்ட்களை ஸ்கூல்ன்னு தான் சொல்றாங்க!!
அது அவர் இறந்த பிறகு மோடியாச்சு..சாரி.. மூடியாச்சு!!
நல்ல தலைமைக்குணம் என்னன்னு நாம கத்துக்கொள்ளும் வரையில் இந்த மாதிரி ஜிகினாக்களை தங்கம்னு ஏமாந்து போவது அதிகமாத் தான் இருக்கும்~~
அதுக்கு நான் மட்டும் என்ன செய்ய முடியம்? ஊரே மோசமா கிடக்குதுன்னு சொல்வோமா…அப்ப ஒரு சின்ன கதை..
ஒரு கடற்கரையில் நின்றிருந்த குருநாதர் கரையில் ஒதுக்கப்பட்டிருந்த நட்சத்திர மீன்களை ஒவ்வொன்றாகப் பிடித்து கடலில் விட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த இளைஞன் ஒருவன் அவரிடம் ஏளனமாக 'என்ன செய்கிறீர்கள்?' எனக் கேட்டான்.
'அலைகள் இந்த மீன்களைக் கரையில் ஒதுக்குகின்றன. சூரிய ஒளிபட்டு இவை இறந்துவிடும். அதனால் தினமும் காலையில் வந்து அவற்றை மீண்டும் நீரில் விடுகிறேன்' என்றார் அவர்.
'அதனால் என்ன பயன்? ஒவ்வொரு நாளும் எவ்வளவோ மீன்கள் இப்படி இறக்கின்றன. அவை அனைத்தையும் உங்களால் காப்பாற்ற முடியுமா?' என எகத்தாளமாகக் கேட்டான். அவனுடைய எண்ணம் அவரைச் சீண்டிப் பார்க்க வேண்டுமென்பது.
ஆனால் குருநாதர் சிறிதும் சலனப்படவில்லை. அமைதியாக 'என் செயலால் மீன்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. இருந்தாலும் இதோ என் கையிலுள்ள இந்த மீனுக்கு மரணத்திலிருந்து வாழ்வு என்ற மாற்றம் கிட்டும் அல்லவா?' என்றார்.
அந்த பதில் இளைஞனுக்கு ஓர் உண்மையை உணர்த்தியது.
அதாவது ஒரு தனி மனிதன் சமூகத்தில் பெரிதாக எந்த மாற்றத்தை உண்டாக்கிவிட முடியும் என நாம் நினைக்கலாம். ஆனால் நல்ல மாற்றங்களை நம்மைச் சுற்றி இருப்பவர்களிடையே, நம்மைச் சார்ந்தவர்களிடையே கொண்டு வர முயற்சித்தால் போதும், ஒரு நல்ல குடிமகன் என்ற முறையில் நமது பங்கை ஆற்றியவர்கள் ஆவோம்.💐💐
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக