தமிழ்நாட்டில் தான் 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது..இதில் 50% பிற்பட்டோருக்கு உரியது…இது நாட்டிலேயே அதிக அளவிலான இட ஒதுக்கீடு என்றாலும் இது மண்டல் கமிஷன் அடிப்படையில் என்பதால் இன்றுபவரையில் பிரச்சினை இல்லை.
ஏன் இன்று வரையில் என்று சொல்கிறேன்?
ஏனென்றால் உச்சநீதிமன்றத்தில், இது குறித்த வழக்கு இறுதி விசாரணை வெகு சீக்கிரம் வரவுள்ளது!!
மராத்தா வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என்று சமீபத்தில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது நினைவில் இருக்கலாம்!!
நிலைமை இப்படியிருக்க, தற்போது சூட்டை கிளப்பி கொண்டிருக்கும் இந்த இட ஒதுக்கீடு விவகாரம் தான் என்ன?
மருத்துவ படிப்புகளில் பிற்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு செய்ததற்கு மத்திய அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன..அந்த உத்தரவை எந்த கட்டாயத்தின் பேரில் போடப்பட்டது என்பது விவரம் அறிந்தவருக்கு தெரியும்.
நீதிமண்ற அவமதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்துக்கொண்டார்கள் .அவ்வளவு தான்…
இப்போது இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் வந்து செய்திருக்கிறது.
செவ்வாயன்று, வந்த அந்த வழக்கு விசாரணையின் போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மாநிலத்தால் ஒப்படைக்கப்பட்ட AIQ இடங்களுக்கு OBC களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கவும், தற்போதுள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் வராதவர்களுக்கு 10% EWS இட ஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. என்றார்.
அதற்கு மெட்றாஸ் உயர்நீதிமன்றம் என்ன சொன்னது தெரியமா?
"தமிழ்நாடு வழங்கும் ஓபிசி பிரிவினருக்கான 50% ஒதுக்கீட்டை , அகில இந்திய ஒதுக்கீட்டிலும் (ஏஐக்யூ) சேர்க்க வேண்டும் என்று தான் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இரண்டுமே தெளிவுபடுத்தியுள்ளன. மத்திய சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளபடி 27% ஆக அது இருக்க முடியாது."
ஆனாலும், திமுக வின் மூத்த வழக்கறிஞர் பி வில்சன் அவர்கள் எடுத்து வைத்த வாதம் ஆணித்தரமானது,
" தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்கள் மற்றும் நியமனங்களில் இட ஒதுக்கீடு) சட்டம், 1993 என்பது, AIQ இடங்களுக்கும் பொருந்தும். என்பதை, ஜூலை 27, 2020 தேதியிட்ட உயர் நீதிமன்ற உத்தரவு, படி, சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொண்டதாக வாதிட்டார்.
அதன்படி, AIQ இடங்களில் OBC களுக்கு மாநிலத்தில் கொடுப்பது போல 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், 27% அல்ல, "
அதையே பதிவுசெய்த உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் கூட தனது உத்தரவில் இதை கவனித்ததை சுட்டிக்காட்டியது: அந்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு சொல்லியுள்ளது
"1993 சட்டத்தை AIQ இடங்களுக்கு பொருந்தும் என்று மேல்முறையீட்டாளர்கள் சமர்ப்பித்ததை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்பதில் சந்தேகமில்லை"
..இதை எதிர்த்து அரசு தரப்பில் வாதிட்டபோது, அதை ஒதுக்கிவைத்த நீதிமன்றம், அவருடைய வாதம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் இரண்டிலும் குறிப்பிடப்பட்ட நோக்கத்திற்கு எதிராக உள்ளது என்றது.
"இந்த மாநிலத்தில் உள்ள AIQ இடங்களுக்கு OBC வேட்பாளர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் முறைகளை கண்டறிய ஒரு குழு உருவாக்கப்பட்டு அது செயல்படும் " என்று அந்த இரண்டு உத்தரவுகளும் சுட்டிக்காட்டுகிறது.
"ஒருவேளை, இது உத்தரவை அமலாக்கும் பிரச்சினையாக இருந்தால், இடஒதுக்கீட்டின் அளவு அல்லது குழுக்களுக்கிடையேயான இடை ஒதுக்கீடு ஆகியவற்றைக் கண்டறியும் கடமை குழுவுக்கு இல்லை." என்றது நீதிமன்றம்.
தொடர்ந்து ஆகஸ்ட் 9 வரை காத்திருப்போம்.
இந்த உத்தரவை சரியாக புரிந்து கொள்ளாத சில பேர் "ஏன் 50% .மொத்தத்தையும் எடுத்து கொடுத்து விடுங்கள்" என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
விவரம் இல்லாத கூற்று இது.
உண்மையில் இந்த 50% இட ஒதுக்கீடு என்பது நம் மாநிலத்தின் கோரிக்கை..
தமிழ் நாடு மட்டும் ஏன் இவ்வளவு அதிகம் இட ஒதுக்கீடு, அதுவும் பிற்பட்டோருக்கு மட்டும் , கேட்கிறது?
ஏனென்றால், தமிழ் நாடு தான் அதிக அளவில் மருத்துவ படிப்பிர்காண சீட்களை, மறுவிநியோகம் செய்ய மத்திய அரசுக்கு உதவுவதற்காக விட்டுக்கொடுத்தது.
ஆனால், அது தான், நியாயமான கோரிக்கை செவிசாய்க்கப்படாமல் , உறுதியான நடவடிக்கையின் எல்லைக்கு வெளியே இத்தனை காலமும்.வைக்கப்பட்ட்டுள்ளது.!!
அதன் கோரிக்கை தான் என்ன என்கிறீர்களா?
AIQ இடங்கள் முதலில் மாநிலங்களைச் சேர்ந்தவை என்பதால், அந்தந்த மாநிலங்களுக்கு பொருந்தும் ஒதுக்கீட்டு கொள்கை அவர்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வாதத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டில் பிற்பட்டோருக்கு உள்ள 50% ஒதுக்கீடு, அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பின்பற்றவேண்டும் என்ற கோரிக்கை தான் அது.
ஆனால் இட ஒதுக்கீடு அனைத்து வகையிலும் சேர்த்து, 50% ஐ தாண்ட முடியாது என்றது மத்திய அரசு.
அதை தான் சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது..அவர்கள் கருத்து மத்திய சட்டங்கள் அடிப்படையிலானது, இந்த விவகாரத்தில் செல்லுபடியாகாது என்றது..
சரி தானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக