வெள்ளி, 2 ஜூலை, 2021

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், இது குறித்து உங்கள் கருத்து என்ன?

 என் கருத்து இருக்கட்டும்..

இதோ, இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து போட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த,போது, எடுத்து வைத்த வாத்ங்களை பாருங்கள்..

  • அனைத்து சட்டமன்ற விதிமுறைகள், தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறை, சட்டத்தின் சரியான செயல்முறை எல்லாவற்றையம் மீறி, ஒரு குறிப்பிட்ட சாதியினரிடமிருந்து தேர்தல் ஆதாயங்களை வென்றெடுப்பதற்காக தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறி, இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
  • எந்தவிதவுகளும் இல்லாமல் வன்னியர் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது
  • இந்த தரவுகள் திரட்ட அமைக்கப்பட்ட குலசேகரன கமிட்டி இன்னமும் அறிக்கையே கொடுக்கவில்லை. அதற்குள் இந்த அறிவிப்பு?
  • இந்த உத்தரவால் 20% இட ஒதுக்கீட்டில் தகுதி பெற்றிருக்கவேண்டிய மாணவி மனுதாரருக்கு வெறும் 10.5% மட்டும் பெற வேண்டியதாயிற்று.இது அரசியல் சாசன சட்ட பிரிவு 14க்கு எதிரானது
  • தமிழ்நாடு பின்தங்கிய வகுப்புகள், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்களில் இடங்களை ஒதுக்குதல் மற்றும் மாநிலத்தில் சேவைகளில் நியமனங்கள் அல்லது பதவிகள்) சட்டம், 1993 மற்றும் தமிழ்நாடு பின்தங்கிய வகுப்புகள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (தனியார் கல்வி நிறுவனங்களில் இடங்களை ஒதுக்குதல்) சட்டம், 2006, இரண்டுக்கும் எதிரானது
  • பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் துணை வகைப்பாடு என்பதில் பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள தீர்க்கப்பட்ட சட்டத்திற்கு எதிரானது
  • ஏற்கெனவே உச்சநீதிமன்றம் : எஸ்.சந்தீப் குமார் எதிர் சட்ட செயலாளர், தமிழக அரசு மற்றும் இன்னொருவர்; ஜே.முத்துகுமார் Vs சட்ட செயலாளர், தமிழக அரசு மற்றும் இன்னொருவர் வழக்குகளில் சொன்ன தீர்ப்புகளுக்கு எதிரனது

தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...