ஒரு வாரம் முன்பு வீட்டின் முன்பகுதியில் உட்கார்ந்து இருந்தேன்.வழக்கம் போல, காய்கறி விற்கும் பெண்மணி, தள்ளுவண்டியில் கொண்டு வந்து நிறுத்தினார். இவர் நிறுத்திய இடத்தில் பக்கத்து அபார்மென்டின் வாசல் பக்கம். அதனால் அந்த வாட்ச்மேன் அவரை சற்று தள்ளி நிறுத்த சொன்னார்..அதற்குள் வியாபாரத்தில் மும்முரமாகி விட்ட காய்கறிகாரம்மா அதை சட்டை செய்யவில்லை.. சிறிது நேரத்தில், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்ற, அவர் திட்ட, இவர் திட்ட என்று போய்.. கடைசியில், இந்த பெண்மணி அவரை 'போடா பொட்டை" என்று விட்டு வண்டியை நகர்த்திக் கொண்டு போனார்…
அடுத்த முறை அவர் வீட்டிற்கு காய்கறி கொண்டு வந்த போது கேட்டேன்..
"ஏம்மா.. அவரை கடுமையா திட்டனும்னு நினைச்சீங்க சரி….ஆனா உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கிட்டீங்களே!"
"என்ன சொல்றேம்மா…"
"ஒரு ஆணுக்கு அவன் ஆண்மையை தாக்கி பேசினால் வலிக்கும்ன்னு தான் அவனை விட கீழே இருக்கிறதா அப்ப அவன் நினைசுகிட்டு இருந்த பெண்ணாக அவனை ஏசுவாஙக. நீங்களும் அப்டி சொன்னா என்ன அர்த்தம்.?"
"….."
நிறைய பேருக்கு இது தான் பிரச்சினை…
எதிராளியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவோ அதற்கு மறுமொழி சொல்லவோ முடியவில்லை என்றால், அவரை தாக்க அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம், அவர் ஒழுக்கத்தை விமர்சனம் செய்வது தான்… அப்போது பிரயோகிக்கும் வார்த்தைகள் பூமராங் போல தன்னையே தாக்கக்கூடும் என்று நினைப்பதில்லை!!
காலம் காலமாக பெண்கள் சந்தித்து வரும் பிரச்சினையும் அது தான்…
ஒருவரை வசை பாட வேண்டும் என்றால் சம்பந்தேமேயில்லாமல் அவன் தாய், சகோதரி என்று அனைவரும் இவன் வாயில் மென்று துப்புவான்.!! கூட கொஞ்சம் அவனிடம் உள்ள கெட்ட பழக்கங்களும் எள்ளி நகையாடப்படும்.. இதில் வேடிக்கை என்னவென்றால் இவனிடமும் அந்த பழக்கம் இருக்கும். ஆனால் அதை மறைத்து வைத்திருப்பான்!!
அதுவே எதிராளி பெண் என்றால் கேட்கவே வேண்டாம்…
அவள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு அவள் முன் பேச முடியாமல் திணறுபவர்கள், உடன் கையிலெடுப்பது அவள் நடத்தை குறித்து தான்.
அது அரசியல்வாதியாக இருந்தாலும் கூட…
இரும்பு மனுஷி ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, புதுவை கவர்னர் தமிழிசை …………இப்படி பெண் அரசியல்வாதிகள் சந்தித்த அவதூறுகள், இழி பேச்சுகள் தான் எத்தனை எத்தனை…..
இந்த படத்தை போட்டதன் காரணம் உங்களுக்கே தெரியும்!!
என்ன சொல்லப் படுகிறது என்று பார்க்கப் படுவதேயில்லை. யார் சொல்கிறார்கள் என்று தான் பார்க்கப்படுகிறது….
அதை நேரிடையாக எதிர்க்க நேர்மையான வாதங்கள் இல்லாதபோது, சொல்பவரை இழிவுபடுத்த துணிகிறோம்.
இது போல மற்றவர்களை உலவியல் ரீதியாக காயப்படுத்த எண்ணும் எண்ணம் ஏன் ஏற்படுகிறது?
அதற்கு காரணம் பெரும்பாலும் நம் மீது ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்த விரும்புகிறார்கள் என்று பொருள்.
இதைச் செய்வதற்கான எளிதான வழியாகத்தான் , நம்மை பற்றிய தனித்துவமான ஒன்றில், அது நல்ல பழக்கமோ, கெட்டதோ அதில் கவனம் செலுத்தி ...உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ நம்மை காயப்படுத்தும் நோக்கத்துடன் செய்து , நம்மை நாம் தற்காத்துக்கொள்ள இயலாத நிலையை உருவாக்குதல்.
சரி… இது போல மற்றவரை இழிபடுத்தும் எண்ணம் கொண்டவர்களின் மனோ நிலை தான் என்ன?
இதை பற்றி .உலகளாவிய இளைஞர் தொண்டு நிறுவனமான டிச் தி லேபிள் என்ற அமைப்பு பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களிடம் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.
அதில் அவர்கள் கண்டு அறிந்தது:
இது போன்ற நபர்கள்
1. அதிக மன உளைச்சாலில் உள்ளவர்கள்
2. இந்த வகையான சீண்டல் 66 சதவீதம் ஆண்களுக்கு தான் இருக்கிறது என்றும கண்டுபிடிதுள்ளன்னர். இதற்கு என்ன காரணம்?
ஆண் பெரும்பாலும் தன உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்ளக் கூடாது என்ற முறையிலேயே வளர்க்கபடுகிறான். ஆனால் பெண் குழந்தைகளை அவர்கள் தன் உணர்வுகளை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுத்தப்படுகின்றனர்.
ஆண் பிள்ள என்றால் அழக் கூடாது என்று சொல்லி சொல்லி அவன் தன மன உணர்வுகளை வெளிப் படுத்த வழியின்றி இது போன்ற சீண்டல்களில் இறங்குகிறான். ஆண்கள் சட்டென்று கைகலப்பில் இறங்கக் காரணமும் இது தான்.
3. தங்களைப் பற்றி அவர்கள் உண்மையில் எப்படி உணருகிறார்கள் என்பதை மறைக்க, சிலர் வேறொருவரை கொடுமைப்படுத்தும் செயலில் கவனம் செலுத்துகிறார்கள். இது போல திசை திருப்புவதன் மூலம் அவர்கள் மீது எதிர்மறையான கவனத்தைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்
ஊரெல்லாம் மீட்டிங் போடுவார்கள். ஆனால் தன மனதோடு மட்டும் நோ மீட்டிங் …!! ஏனென்றால் வீட்டில் தனியே கண்ணாடியில் தன் முகம் பார்த்து தாங்கள் பார்க்கும் விதத்தை வெறுக்கக்கூடும் என்பதை அறிவார்கள் !!
௪. குறைந்த சுய மரியாதை கொண்டவர்கள்
அழகு மற்றும் உடற்தகுதி தரத்திற்கு ஏற்ப வாழ முடியாமல், இவர்களுக்கு நிறைய அழுத்தம் உள்ளது, தம்முடைய சொந்த அழகைத் போற்றுவதற்குப் பதிலாக,தம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்!!.
5. கொடுமைப்படுத்துதலை அனுபவித்தவர்கள் தான் மற்றவர்களை இரு மடங்கு அதிகம் கொடுமைப்படுத்துகிறார்கள். கடந்த காலத்தில் அவர்கள் குழந்தைகளாக கொடுமைப்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது இப்போது அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கலாம்.
6. பெரும்பாலும் இது ஒரு தற்காப்பு வழி முறையாகப் பயன்படுத்தப்படுகிறது, மற்றவர்களை கொடுமைப்படுத்துவதன் மூலம், அவர்கள் தங்களைத் தாங்களே கொடுமைப்படுத்துவதில் இருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறார்கள். உண்மையில், இது எதிர்மறையான விளைவையே கொடுக்கும்.
7. இவர்களில் 3 ல் 1 பேர், தங்கள் பெற்றோர் / பாதுகாவலர்கள் அவர்களுடன் செலவழிக்க போதுமான நேரம் இல்லை என நினைக்கிறார்கள். தனிமை தான் இந்த நிலைக்கு அவர்களை கொண்டு சென்றுள்ளது.
8. நிபந்தனையின்றி அவர்களை நேசிக்க வேண்டிய மக்களிடமிருந்து நிராகரிப்பு உணர்வுகளை தான் பெரும்பாலும் பெற்றிருப்பார்கள்.
9. குறைந்த கல்வியறிவு
கல்விக்கான சரியான அணுகல் இல்லாமல், மற்றவர்களுடன் வெறுப்பு அடிப்படையிலான பேச்சு மட்டுமே வழக்கமாக இவர்களுக்கு இருக்கலாம். வெறுக்கத்தக்க பேச்சு என்றால் என்ன, மக்களை இழிவான முறையில் பேசுவது ஏன் பொருத்தமானதல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.
1௦. சீர்கெட்ட உறவுநிலை :
இறுதியாக, இவர்கள் தங்கள் நட்பு மற்றும் குடும்ப உறவுகள் மிகவும் பாதுகாப்பானவை அல்ல என்று உணர வாய்ப்புள்ளது. நட்பைப் பேணுவதற்காக, ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொள்ளும்படி அவர்களுடைய உறவு, நட்புகளால் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கப்படலாம். தங்களுக்கு அவர்கள் மிகவும் ஆதரவாகவோ அல்லது அன்பாகவோ இல்லை என்று நினைக்கலாம்.
எனவே இத்தககையோரை நேரிலோ வலைத்தளத்திலோ கண்டால் நாம் தான் அவர்களுக்காக இரக்கப்பட்டு அவர்களின் மனோநிலை மாற ஒத்துழைக்கலாம். !!
எப்படி?
பொதுவாக, இத்தகையோரின் விமர்சனங்கள் நம்மை வெகுவாக பாதிக்கின்றன. நம்மை அறியாமலேயே அதை உள்வாங்கத் தொடங்குகிறோம், உடனே நம்மை நாமே சுயவிமர்சனம் செய்ய துவங்குவோம். நம்மை ஏன் குறி வைக்கிறார்கள் என்ற காரணங்களை தெரிந்து கொள்ள விரும்புவோம். .
அடுத்து அதை தவிற்பதற்கு,, அந்த குணங்களை, குறைகளை அல்லது பழக்கங்களை மறைக்க முயல்வோம்.
இது கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களும் இளைஞிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினை. .அவர்கள் உடலின் நிறத்தை வெளுப்பாக்க முயல்வது… ஏதோ நம் உடல் வெறுக்கப்படக்கூடிய ஒன்று போல அதை மூடி மறைக்க முயல்வது…
மூத்த தலைமுறையினர் என்றால் தலைமுடிக்கு சாயம் போடுவது… நமக்கு விரூப்பமில்லாத நபர்களோடு உறவு கொள்ள முயல்வது .
இது நாளடைவில் நம் நடத்தை மற்றும் நாம் நம்மைப் பார்க்கும் வழிகளைப் பாதிக்கத் தொடங்குகிறது, கடைசியில் நம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதில் போய் முடியும்…
அதனால் தான், நாம் விமர்சனம் செய்யபடுவதை இந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. என்கிறார்கள் உளவியலாளர்கள்.
மற்றவர்கள் நம்மை உற்று நோக்கி விமர்சனம் செய்யும் வகையில் நாம் ஏதோ வகையில் வித்தியாசமானவர்கள்.என்று எடுத்துகொண்டு போய் விட வேண்டும்.
நீதிமன்றத்திலேயே ஒரு சாட்சியின் நம்பகத்தன்மையை குறைக்க இது போன்ற எள்ளி நகையாடுதலை குறுக்கு விசாரணையின் போது நீதிமன்றம் அனுமதிப்பது உண்டு. ஆனால் அதற்கு ஒரு வரையறை உண்டு…..
இது குறித்த பதிவு இங்கே…Blogger
நீதிமன்றங்களில் சாட்சியின் குறுக்கு விசாரணை செய்வது என்பது ஒரு கலை. அதில் மறைந்த பிரபல வழக்கறிஞர் எத்திராஜ் அவர்கள் பிரபலம்.
சேதிர் தரப்பு சாட்சியை சீண்டி விட்டு, கோபத்தில் அவரிடம் தனக்கு வேண்டிய பாயிண்டுகளை வாங்குவதில் அவர் கில்லாடி!!
இப்படிதான் ஒரு தடவை தனக்கு கட்டி கொடுத்த வீட்டில் தரம் சரியில்லை, கட்டிய சிறிது நாளிலேயே அதில் விரிசல் விட்டு விட்டது என்று கூறி அந்த பில்டர் மீது ஒருவர் வழக்கு போட்டார். பில்டருக்காக இவர் ஆஜர்…
புகார் தாரர் சாட்சி கூண்டில் ஏறி நிற்கிறார்..
எத்திராஜ் நிதானமாக நடந்து வந்து அந்த கூண்டின் அருகில் வந்து நின்றார்.
சாட்சிக்கு வியர்க்க ஆரம்பித்தது..
இவர் முதல் கேள்வியே இப்படித் தான் ஆரம்பித்தது
'ம்ம்ம். …சொல்லுங்கள்.. உங்களோடு சேர்த்து, உங்கள் வீட்டில் எத்தனை க்ராக்குகள்?"
…………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக