செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

மோட்டார் சைக்கிளை இயக்கும் போது கிடைக்கும் பேரானந்தம் பி.எம்.டபிள்யூ கார் இயக்கினாலும் கிடைப்பதில்லை, அது ஏன்?

 வண்டியோட்டுவதில் அவனை பெரிய ஜித்தன் என்று தான் அவன் நண்பர்கள் சொல்வார்கள்..

எத்தனை நண்பர்களிடம் கடன் வாங்கி வண்டியோட்டி அதில் வித விதமாக சாகசம் செய்வதில் அவனுக்கு நிகர் இல்லை தான்.. ஆனால் என்ன. ...அப்பாவிடம் கேட்டு கேட்டு பார்த்தும் அவனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கித் தர அவர் ஒத்து கொள்ளவே இல்லை.

அவனுக்கு பொறுப்பே இல்லையாம். வேகமாக ஓட்டுகிறானாம்..இப்படி ஏதோதோ சொல்லி தட்டி கழித்து கொண்டே வந்தார்.

கடைசியாய் ஒரு வழியாய் அவரை சமாளித்து, கெஞ்சி, கொஞ்சி, வண்டி வாங்கியாகிற்று.

அதுவும் அவன் ஆசைப்பட்ட மாதிரியே....

இந்த வண்டி தான் வேனும்னு  வாங்கித் தரச் சொன்னால் அப்பா அதற்கு கூட ஒரு  விமர்சனம் செய்தார்..."இதென்னடா ஏதோ மாடிக்கு ஏறுற மாதிரி இருக்கே"ன்னு

எப்படியோ வாங்கியாயிற்று.//

இன்று தான்  முதல் முதலாக வண்டியை எடுத்து கொண்டு கல்லூரிக்கு போகப் போகிறான்.

ஆனந்த கனவுகளில் நுழைந்தபடி, வண்டியை இயக்கினான். வழக்கமான பாதையில் வந்து கல்லூரியை நெருங்கும் சமயம் தான் அவளைப்  பார்த்தான்..

அவளும் அதே கல்லூரி தான். எத்தனையோ நாள் அவள் முன்னால,  வண்டியை ஒட்டிக் கொண்டு வேகமாக போனாலும், அவள் அவனை கவணித்ததாகவே தெரியவில்லை. மற்ற பென்கள் எல்லாம் இவன் வண்டியில் அமர்ந்து முன் சக்கரத்தை தூக்கியபடி வண்டியோட்டுவதை பார்த்து ஆச்சரியப்பட்டு வாய் பிளந்து நிற்கும்போது அவள் மட்டும் அதை பார்த்தது போலவே இருக்காது.

இன்று எப்படியும் அவளை திரும்பிப்  பார்க்க வைத்து விடுவது என்ற முடிவுடன் கியரை முறுக்கினான். வண்டி வேகமெடுத்தது...சரியாக அவள் அருகில் நெருங்கும்போது. வண்டியின் முன்சக்கரத்தை தூக்க எத்தனித்த போது...ஐயோ ... ஏதோ தவறாகி விட்டதே என்று இவன் நினைக்கும்போதே...பெரும் சத்தத்துடன் வண்டியுடன் சேர்ந்து இவன் தூக்கி வீசப்பட்டான்...

அவள் அனிச்சையாய் திரும்பி பார்த்தாள்...

மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது கிடைக்கும் த்ரில் இருக்கே ...யாரும் செய்யத் தயங்குவதை நாம் செய்கிறோம் என்பதும் அது எல்லோரின் கவனத்தை கவர்வதும்......அது தான் இளையவர்களை கவர்வது.

அதுவும் இந்த சென்னையில் ஏற்கெனவே நெரிசல் மிகுந்த சாலையில்,சர்... புர்ர்ரென்று இவர்கள் அதிவேகமாக புகுந்து ஓட்டிப் போவதை பார்க்கும் போது உண்மையிலேயே பயமாக இருக்கும். பார்க்கும் நமக்கு இவ்வளவு பயம் இருக்கிறதே. அதெப்படி ஓட்டும் இவர்களுக்கு இருப்பதில்லை என்று யோசித்து பார்த்திருக்கிறேன். 

"இளங்கன்று பயமறியாது" என்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை.

நானும் முன்னர் வண்டியை வேகமாக ஓட்டியிருக்கிறேன் தான். இப்போது குறைத்திருக்கிறேன்.. வேறு எதற்கு...அடிபட்டால் ஏற்படும் விளைவை எண்ணி...😇

அதுவெல்லாம் இவர்களுக்கு தெரியாமலா இருக்கும்...இருந்தும் ஓட்டுகிறார்கள் என்றால்...அதி வேகமாக  காற்றை கிழித்து கொண்டு ஓட்டும்போது, முகத்தில் அறையும் அந்த காற்று....அது தான் அவர்களுக்கு பேரானந்தத்தை கொடுக்கிறது போல...

அது ஒரு வித மாதிரியான போதை மட்டுமல்ல. அவர்களின் இயல்பே அதுவாகத் தான் இருக்கும். 

உண்மை தான்...

அந்த விளையாட்டு(??) வீரர்கள் எல்லாரின் ஜாதகத்தை பார்த்தால் அவர்கள் மிதுனம், துலாம், கும்பம்  காற்று ராசிகள் லக்கினமாகவோ ராசியாகவோ கொண்டவர்களாக இருப்பார்கள்.

நமக்கே தெரியும்.....

பஞ்ச பூதங்களை கிரகங்கள் தான் ஆட்சி செய்கின்றன என்பது விஞ்ஞான அடிப்படையில் நிரூபிக்கபட்டுள்ளனது. மேஷம், சிம்மம்,தனுசு நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி,மகரம் நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள். கடகம் , விருச்சிகம் , மீனம் நீர் ராசிகள்,

இந்த பஞ்சப் பூதங்களை உள்ளடக்கிய நம் உடலில் நம் பிறந்த லக்கினத்திற்கேற்ற பூதமே ஆட்சி அதிகம் புரியும் என்பதும் உண்மை தானே..

அதனால் தான் காற்று இராசியான மிதுனம், துலாம், கும்பம் ராசிகளை இலக்கினமாக கொண்டவர்களுக்கு காற்றில் வேகமாக போக அல்ல... பறக்கப் பிடிக்கும்.

நான் சிம்ம லக்கினம் . நெருப்பு இராசி.  மற்றவர்கள் எல்லாம் "ஐயோ கொதிக்குதே|ன்னு சொல்லிப் பிடிக்க முடியாமல் காபி டம்ளரை கீழே வைத்து விட்டு நிமிர்வதற்குள் நான் குடித்தே முடித்து விட்டு கீழே வைப்பேன்..நெருப்பு கோழி போல...😅

அந்தந்த  இலக்கினங்களின் குணாதிசயம் இயல்பாகவே நமக்கு அமைய பெற்றிருக்கும்.

கார் எந்த விலை உயர்ந்ததாக இருந்தால் என்ன...அதை  ஓட்டுவதை விட மோட்டார் சைக்கிளில் அப்படி ஓட்டுவது தான் இந்த வகை ஆட்களுக்கு பிடிக்கும் என்றேனே..

அது மற்றவரின் கருத்தை கவரவேண்டும் என்பதற்காக சைலென்சரை எடுத்து விட்டு விடுவது, வினோதமான ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை பொருத்திக்கொள்வது, ஜிக் -ஜாக்கென்று ஓட்டுவது என்று யாரை கவர்கிறார்கிலோ இல்லையோ, போக்குவரத்து போலிசாரின் கண்ணில் படத் தவறுவதில்லை!!

ஆனால் ..இது போன்ற சிறு சிறு தவறுகள் தானே என்று விளையாட்டிற்காக செய்வது, ஏதேனும் ஒரு சாலை விபத்தில், அது ஒரு உயிரின் பலி கொள்வதில் கொண்டு போய் நிறுத்தும்.  எப்போது ? 

ஜாதகத்தில் ஆறுக்குடைய  அதிபதி சுபத்துவமோ சூட்சம வலுவோ இல்லாது இருக்கும்போது , அதன்   அல்லது அதனுடன் தொடர்பு கொண்ட கிரகத்தின் தசா புத்தி நடந்துக் கொண்டிருக்கும்போது ..

பழைய காலம் போலில்லை...நான் ஒட்டி மாட்டிக்கொண்டால், வேறு ஒருத்தரை கொண்டு போய் நிறுத்திவிடலாம் என்பதற்கு.  எல்லோர் கையிலும் காமிராவுடன் கூடிய போன் இருக்கிறதே!! அத்தோடு ஆறாம் அதிபதி தன் காரகத்துவமான வம்பு, வழக்கு என்று சிவப்பு கட்டிடத்திற்கு நம்மை இனிதே அழைத்து செல்வார்!!

அப்போதும் பேரானந்தம் இருக்குமா??

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...