விபத்தில் இறந்த குடும்பத் தலைவரால் நிலைகுலைந்து நிற்கும் குடும்பத்திற்கு, அது மேற்கொண்டு இயங்க கொடுக்கப்படுவது அந்த விபத்து நஷ்டஈடு தொகை.
அதை இப்போது கடனை அடைக்க எடுத்துக்கொடுப்பதை விட வேறு வழியில் அதை அடைக்க முயற்சிக்கவும்
இன்னொன்று, அந்த நஷ்டஈடு தொகை எப்போது கிடைக்கும் என்பதை உத்தரவாதமாக சொல்லமுடியாது. நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாதா? மக்கள் நீதிமன்றம் என்னும் லோக் அதாலத்தில் வழக்கை முடிக்க முயலலாம்.இதில் நஷ்டஈடு தொகை சிறிது குறையலாம் என்றாலும் கிடைக்கும் காலத்தை கணக்கு போட்டால் லாபம் தான்.இன்னொரு சிறப்பாக,வழக்கு போட கட்டிய நீதிமன்ற கட்டணம் முழுதாக திருப்பி கிடைக்கும்.
அடுத்து, இறந்தவர் வாங்கிய கடனை திரும்ப கட்டும் விஷயத்தை பார்ப்போம்.எந்தவித உத்தரவாதம் இல்லாமல் கடனை வங்கி கொடுத்திருக்காது..அதை பற்றிய விவரங்களை சேகரிக்கவும்..
கடன் வாங்குவதற்கு உத்தரவாதம் கொடுத்த நபருடன் பேசியபிறகு, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் குடும்ப நிலையை சொல்லி கடன் மற்றும் வட்டியை குறைக்க சொல்லலாம்.இல்லையென்றால் மக்கள் நீதிமன்றத்தில் கூட முறையிடலாம்.இங்கு பாதிக்கப்பட்டவரே வங்கியுடன் நேரிடையாக நீதிபதி முன்பு, பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வதால், மேலமுறையீடு கிடையாது..பிரச்சினை அன்றொடு முடிவுக்கும் வந்துவிடும்.
எனக்கு தெரிந்த ஒருவர் வங்கியில் கடன் வாங்கியிருந்தார்.நடுவில் அவரால் கடனை திருப்பி செலுத்தவோ வட்டியை கட்டவோ முடியவில்லை சிறிது காலத்தில் வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது.
எப்படி பணத்தை கட்டுவது என்று அவர் மண்டையை உடைத்துக்கொண்டிருந்த போது, இன்னொரு நீதிமன்ற செய்தியும் வந்தது."அந்த நிறுவனம் வங்கி தொழிலை செய்தாலும் அதை வங்கியாக .கருதமுடியாது" என்ற தீர்ப்பு தான் அது!! அது பற்றிய மேற்கொண்ட தகவலை இந்த பிளாக்கில் தேடவும்
அவருடைய ஜாதகத்தில் ஆறாம் பாவத்தின் ஆறாம் பாவமான பதினொன்றாம் பாவம் வலுத்து இருந்திருக்கும். நிலையில், கடனை இப்படித் திருப்பி செலுத்த தேவையில்லாத நிலை தானாகவே அமைந்து விடும். !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக