எந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும் கடுவுச்சீட்டு பரிசீலனைக்கு அது தொந்தரவாகத் தான் இருக்கும்.
சமீபத்தில் லீனா மணிமேகலை அவர்கள் தனக்கு எதிராக போடப்பட்ட அவதூறு வழக்கை காரணம் காட்டி தன பாஸ்போர்டை முடக்கியதை எதிர்த்து மாண்புமிகு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வந்த தீர்ப்பு உங்களுக்கு தெரிந்திருக்கும்.
"அவதூறு வழக்கு கொடுங் குற்றம் அல்ல. அதற்காக பாஸ்போர்டை முடக்கியது தவறு" என்று சொல்லவில்லையா?
உங்களடையது சிறு வழக்கு என்கிறீர்கள். கொரானா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் இருந்தது தவறு என்று நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்கான அபராதத்தை கட்ட முன்வந்தால் எல்லாம் சுபமே..
காவல் நிலையத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் போய் அந்த சிறு வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை கேளுங்கள். அநேகமாக ஏற்கெனவே உங்களுக்கு கொடுத்திருப்பார்கள். இல்லையென்றால் அதை பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் காலை சரியாக பத்தரை மணிக்கு நீதிபதி இருக்கையில் அமர்ந்தவுடன், ஏதேனும் மனுக்கள் யாரும் கொடுக்க விருப்பம் இருந்தால் வாங்கி கொள்வார். அப்போது அந்த குற்றப்பத்திரிகையின் நகல் மற்றும், உங்களுடைய குற்ற ஒப்புதல் மனு, கோர்ட்டு வில்லையுடன் ஒட்டி, திறந்த நீதிமன்றத்தில் கொடுங்கள். இதற்கு எந்த வக்கீலின் உதவியும் தேவையில்லை. அப்படி தேவையென்றால், அந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தின் உதவியை பெற்று கொள்ளலாம்.
உங்கள் மனு ஏற்றுகொள்ளப்பட்டு, அன்றைய தினமே பிற்பகலில் நீதிமன்றப் பணி உணவு இடைவேளைக்கு பிறகு துவங்கும்போது உங்கள் வழக்கு எடுத்துகொள்ளப்பட்டு, ( சில சமயம், அந்தந்த நீதிமன்ற பணிசுமைக்கேற்ப நேரம் மாறலாம். ஆனால் அன்றைய தேதியிலேயே வழக்கை முடித்து விடுவார்கள்) எவ்வளவு அபராதம் என்று உத்தரவிடுவார்கள். அதை நீங்கள் கட்டி ரசீது பெற்று, காவல் நிலையத்தில் காட்டலாம்.
ஆனால் குற்றப்பத்திரிகையை போலீசார் உங்களுக்கு கொடுக்கவில்லை என்றால், அதையே ஒரு தனி ப்புகார் மனுவாக எழுதி, போதிய நீதிமன்ற விலை ஒட்டி, நீதிபதியிடம் சமர்பிக்கலாம். உடனே இரண்டொரு நாளில் அந்த குற்றப்பத்திர்க்கை கோர்டில் தாக்கல் செய்யப்பட்டு உங்களுக்கு நகல் வழக்கப்பட்டு விடும்.
போலீசார் லஞ்சம் எதிர்பார்த்தே உங்கள் சிறு வழக்கை நிறுத்தி வைக்கிறார்கள்., அதனால் நீங்கள் அதை கொடுத்து விடுங்கள் என்று மற்றவர்கள் உங்களுக்கு அறிவுரை சொல்லலாம்.. ஆனால் நான் அவ்வாறு சொல்ல மாட்டேன்.
போலீசார் செய்யும் தவறான காரியங்களுக்கு உடந்தையாக நாம் இருந்து விட்டு, பிறகு அவர்களை குறை சொல்வது நியாயமல்ல.
நீங்கள் உங்கள் செயல்களில் சரியாக இருந்தீர்கள் என்றால், யாரும், போலீசார் உட்பட , உங்களிடம் சரியாகவே நடந்து கொள்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக