வியாழன், 16 செப்டம்பர், 2021

என் உடல் என் உரிமை எனும் பெண்ணியவாதிகள் சமூக சீர்திருத்தவாதிகளா?

 அவரவர் உடல் அவரவரின் உரிமை. இதில் ஆண் பெண் என வேறுபாடு என்ன? நீங்கள் சொல்வதை பார்த்தால் பெண் தன் உடலை தான் உரிமை கொண்டாடக் கூடாது என்கிறீர்களா? சுத்த அபத்தமாக இருக்கிறது..

இது சம்பந்தமான ஒரு வழக்கு எனக்கு நினைவுக்கு வந்தது.

நடிகை சரிதாவை நமக்கு தெரியும் தானே?

இவர் தாக்கல் செய்த ஒரு மனு இன்றளவும் ஒரு முக்கிய வழக்காகப் பார்க்கபடுகிறது.

கேரள நீதிமன்றத்தில் நடிகை சரிதாவின் ் கணவர் வெங்கட சுப்பாராவ் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அவர் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் தன உடல் தன உரிமை என்றும் அதனை தனக்கு விருப்பமில்லாதவரோடு பகிர சொல்வது தனது அடிப்படை உரிமையை மீறுகிறது என்று வாதிட்டார். இதனை கேரளா உயர்நீதிமன்றமும் ஏற்றுகொண்டது.

ஆனால் இதே போன்ற இன்னொரு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த கருத்தை ஒத்துக்கொள்ளவில்லை.இரண்டு வேறுபட்ட தீர்ப்புகளால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அந்த வாதம் எற்றுகொள்ளத்தக்கது என்றாலும், குடும்பத்தின் நிலையை சீராக்கவே ஒன்றாக வசிக்க இந்து திருமண சட்டப் பிரிவு 9 ன் கீழ், சேர்ந்து வசிக்க உத்தரவிடப்படுகிறதே தவிர, அவர் விரும்பாதவரோடு சேர்ந்து அவர் உடலை பகிரத் தேவையில்லை என்று தீர்ப்பளித்து, அதனால் ஏற்பட்ட குழப்பத்தை சரி செய்தது.

இப்போது உங்களேக்கெல்லாம் ஒரு கேள்வி….. குடும்ப வன்முறை மற்றும் திருமண கற்பழிப்பு அதிகமாக நடக்கும் நம் நாட்டிலே,மனசு வேறுபட்டாலும், ஒரு நீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க ஒரே வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி தங்கள் விருப்பம்போல வாழ முடியுமா?

ஸ்ரீஜா சுப்ரமணியன் இன் தற்குறிப்பு போட்டோ
கருத்து தெரிவி…

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...