குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த செலவுத் தொகையை ஏன் கட்டமுடியாமல் போயிற்று என்பதை தகுந்த ஆதாரத்துடன் மனு செய்ய வேண்டும். நீதிமன்றம் அந்த பதிலில் திருப்தியடைந்தால் மனுவை ஏற்றுக்கொண்டு கூடுதல் கால அவகாசம் கொடுக்கும். இல்லையென்றாலும், காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், மேல்முறையீடு செய்யலாம். இரு தரப்பினருக்கும் தங்கள் தரப்பு கட்சியை நிரூபிக்க தகுந்த காலவகாசம் வழங்கப்படவேண்டும் என்ற நியதிப்படி, தங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் செலவு தொகையை கட்டாதது, வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் அல்ல என்பதை நீதிமன்றத்தில் எடுத்துரைப்பதில் தான் வழக்கறிஞரின் திறன் உள்ளது.
நான் பார்த்த வழக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. அது ஒரு கற்பழிப்பு வழக்கு. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அந்த பெண்ணை சீரழித்து விட்டார் என்று குற்ற வழக்கு அவர் மீது பதிவு செய்பட்டு வழக்கு நடந்து வந்தது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அப்போது தான், குற்றவாளி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்கிறார்கள்.. பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று.
இத்தனைக்கும், அந்த பெண் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு சில வருடங்கள் கடந்து விட்டது. அவரும் சிறு தயக்கமும் இன்றி குற்றவாளியை அடையாளம் காட்டி தெளிவாக அவர் தனக்கு செய்த தீங்கை எடுத்துச் சொல்லியிருகிறார்.
குற்றவாளி தரப்பும், குறுக்கு விசாரணை என்ற பெயரில் இரண்டு மூன்று நாட்கள் குறுக்கு கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறார்கள்.. அந்த பெண்ணும் அசராமல் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்.
வழக்கு குற்றவாளிக்கு எதிராக ஸ்ட்ராங்காக உள்ளது. நீதிபதியோ படு ஸ்ட்ரிக்டாக இருக்கிறார். இப்படியே போனால் தண்டனை நிச்சயம் என்ற நிலையில் தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
சில முக்கியமான கேள்விகளை அந்த பெண்ணிடம் கேட்காமல் விட்டுவிட்டதாகவும் இப்போதைய புது வழக்கறிஞர்{?} தான் அதை கண்டுபிடித்து உள்ளார் என்றும், அந்த கேள்விக்கான பதில்களை பெறுவது மிகவும் முக்கியம் என்பதால் அந்த பெண்ணை திரும்பவும் விசாரணைக்கு அழைக்கவேண்டும் என்றும் கேட்டு இருந்தார்கள்.
நீதிபதியும் இந்த மனுவில் உள்ள சங்கதிகள் உண்மையா என்று விசாரித்தார். அப்போது தான் ஒரு உண்மை தெரிய வந்தது. வருடங்கள் ஆனபடியால், அந்த பெண்ணின் வீட்டாருடன் பேரம் நடந்திருக்கிறது, இனிமேல் இந்த நபருக்கு தண்டனை வாங்கி தருவதால் அவர்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிட போகிறது என்ற ரீதியில் பேசி, பெண்ணின் திருமண செலவுக்கு என்று சில ஆயிரங்களை கொடுப்பதாகவு,ம அதன்படியே நீதிமன்றத்திற்கு அந்த பெண் வந்து சாட்சியத்தை மாற்றி சொல்லவேண்டும் என்று பேசி, பேரமும் படிந்துவிட்டதாக தெரிந்து கொண்டார்.
அந்த பெண்ணின் குடும்பமும் ஏழ்மையானது என்பதால் வேறு வழியில்லாமல் இணங்கி இருகிரார்கள் என்று புரிந்து கொண்டார். இப்போது மனுவின் நோக்கம் புரிந்து விட்டது. இதை காரணம் காட்டி மனுவை தள்ளுபடி செய்யமுடியாது. செவி வழி செய்தி என்பதால்....அத்தோடு எந்த காரனமும் சொல்லி மனுவை தள்ளுபடி செய்தால், அவர்கள் மேல்முறையீடு செய்ய போய்விடுவார்கள். அதனால் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுவிடும் என்று தெரிந்துக்கொண்டவர், அந்த மனுவை அனுமதித்து, அந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்தார். அவர் சாட்சியமும் பதிவு செய்யப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, அந்த பெண்ணும், அன்று சம்பவத்தில் ஈடுபட்டது இந்த நபர் இல்லை என்று சாட்சியம் அளித்தது.
வழக்கு விசாரணையும் முடிந்து, தீர்ப்புக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
குற்றவாளி தரப்பில் கண்டிப்பாக விடுதலை ஆகிவிடுவோம் என்று ஏக எதிர்ப்பார்ப்பில் இருக்க, நீதிபதி, அவருக்கு குற்றவாளி என்று தீர்பளித்தார். அந்த பெண்ணின் சாட்சியம் ஏற்கெனவே சொன்ன சாட்சியத்திலிருந்து மாற்றி பல வருடங்கள் கழித்து வந்து சொல்லியுள்ளதால், அது நம்புவதற்கு இல்லை என்று காரணம் சொல்லி அதை நிராகரித்து முன் சொன்ன சாட்சியத்தை ஏற்று தீர்ப்பு அளித்திருந்தார்!!.
அந்த மனு போல இல்லாமல், உங்கள் வழக்கில், உண்மையிலேயே செலவு தொகை கட்ட கால தாமதம் ஆனா நியாயமான காரணம் சொல்லி அதனால் தான் கால தாமதம் ஆகியது என்று நிரூபித்தால் உங்கள் மனு ஏற்றுக்கொள்ளப்படலாம்..
நிரூபிப்பத் என்பது சமயத்தில் சங்கடமான ஒன்று ...அது ஒவ்வொரு தரப்புக்கும் ஏற்றவாறு மாறக்கூடியது.!!
ஆனால் உண்மை மட்டுமே மாறாதது!! வாய்மையே வெல்லும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக