வியாழன், 2 செப்டம்பர், 2021

குத்தகைதாரர் தனது வாடகையை செலுத்தவில்லை. அக்கம் பக்கத்தினருக்கும் அவர் தொல்லை. வன்முறையைப் பயன்படுத்தாமல் அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லாமல் அவரைக் காலி செய்ய என்ன முறைகள் பயன்படுத்தப்படலாம்?

 நீதிமண்றத்திற்கு செல்லாமல்?

ஒரு பிரச்சினையை தீர்க்க, சாம தான பேத, தண்ட முறைகளை பயன்படுத்த சொல்லினர் சான்றோர்.இன்றளவும் நிறைய பிரச்சினைகள், நீதிமன்றம் போகமலேயே தீர்க்கப்பட்டுள்ளன.

இதில் முதல் வகையான சாமம்…அதாவது சமாதானம் பேசுவது என்பதை ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் உள்ள இலவச சட்ட சேவைகள் மையம் செய்கிறது.அவர்கள் செய்யும் சேவைகள் குறித்து தகவல் பெற,

http://www.tnlegalservices.tn.gov.in/pdfs/TNSLSA_Information_Booklet.pdf

நீங்கள் உரிய தகவலுடன் மனு செய்தால், அதை பரிசீலித்து, குத்தகை தாரருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். மேலும் ஒரு வழக்கறிஞரை மத்தியஸ்தம் செய்து வைக்க நியமிப்பார்கள். இதற்கு நீங்கள் பணம் எதுவும் செலுத்த வேண்டாம்.இது ஒரு இலவச சேவை.இரண்டு தரப்பு பக்கமும் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து, ஒரு நல்ல முடிவு சமாதானமாக எடுக்க வைப்பார்கள்..அதற்கு சட்ட அங்கீகாரம் உண்டு. இரண்டு தரப்பிலலும் சமாதானமாக எடுக்கப்பட்டதால், மேல்முறையீடு எதுவும் செய்ய முடியாது.இரண்டு தரப்பிலும் வின் வின் நிலை என்பதால் உறவும் சீர்கேடாது.

இதன் தலைமையகமான தமிழ்நாடு ஸ்டேட் லீகள் சர்வீஸ் அத்தாரிட்டி வலைத்தளதளத்திற்கு சென்று, நாம் பெறக்கூடிய இலவச சேவைகள் குறித்து அறியுங்கள்.

Tamil Nadu State Legal Services Authority

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...