நீதிமண்றத்திற்கு செல்லாமல்?
ஒரு பிரச்சினையை தீர்க்க, சாம தான பேத, தண்ட முறைகளை பயன்படுத்த சொல்லினர் சான்றோர்.இன்றளவும் நிறைய பிரச்சினைகள், நீதிமன்றம் போகமலேயே தீர்க்கப்பட்டுள்ளன.
இதில் முதல் வகையான சாமம்…அதாவது சமாதானம் பேசுவது என்பதை ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் உள்ள இலவச சட்ட சேவைகள் மையம் செய்கிறது.அவர்கள் செய்யும் சேவைகள் குறித்து தகவல் பெற,
http://www.tnlegalservices.tn.gov.in/pdfs/TNSLSA_Information_Booklet.pdfநீங்கள் உரிய தகவலுடன் மனு செய்தால், அதை பரிசீலித்து, குத்தகை தாரருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். மேலும் ஒரு வழக்கறிஞரை மத்தியஸ்தம் செய்து வைக்க நியமிப்பார்கள். இதற்கு நீங்கள் பணம் எதுவும் செலுத்த வேண்டாம்.இது ஒரு இலவச சேவை.இரண்டு தரப்பு பக்கமும் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து, ஒரு நல்ல முடிவு சமாதானமாக எடுக்க வைப்பார்கள்..அதற்கு சட்ட அங்கீகாரம் உண்டு. இரண்டு தரப்பிலலும் சமாதானமாக எடுக்கப்பட்டதால், மேல்முறையீடு எதுவும் செய்ய முடியாது.இரண்டு தரப்பிலும் வின் வின் நிலை என்பதால் உறவும் சீர்கேடாது.
இதன் தலைமையகமான தமிழ்நாடு ஸ்டேட் லீகள் சர்வீஸ் அத்தாரிட்டி வலைத்தளதளத்திற்கு சென்று, நாம் பெறக்கூடிய இலவச சேவைகள் குறித்து அறியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக