கண்டிப்பாக ..கல்வி தனி மனதனின் வாழக்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்..
அதற்கு உதாரணம் இந்த மனிதர் …முஹம்மத் சாஜித் மகபூப் அன்சாரி…
ரொம்ப பெரிதாக கற்பனை செய்துக்கொள்ளாதீர்கள் ஆள் ஹீரோ போல ஏதும் செய்தாரா என்று…
ஒரு விதத்தில் ஹீரோ தான்….ஆனால் ஆண்டி ஹீரோ…கல் நாயக்..
2006 மும்பை தொடர் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதாகி குற்றவாளி என்று தீர்பளிக்கப்பட்டு தற்போது ஆயுள் கைதியாக சிறை வாசம் அனுபவ்ப்பவர் தான் இவர்!
சிறையில் இருக்கும் போதே, கல்வியால் எல்லோரையும் திரும்பி பார்க்க வைதுருக்கிறார் இவர்….
அவர் என்ன செய்தார் என்று போகும் முன்,
கல்வியால் பொதுவாக என்ன செய்து விட முடியும்? ன்ற வினாவுக்குள் போவோம்…
இன்று நம் மாநிலத்தில் கல்வியறிவின் விகிதம் கூடி கொண்டே போகிறது.
மகிழ்ச்சி…..ஆனால் குற்றங்களும் அதே அளவுக்கு உயர காரணம் என்ன?
முழுதாக கல்வி அறிவில்லை என்றால் மோசம். ஆனால் அதை விட மோசமானது அரைகுறையாக, புரிந்தும் புரியாமல் கல்வி பயில்வது.
அதுவும் புரிந்து படித்து, அக உழாமல் ஆழமாக உழுவது போல் கற்பது அவன் எண்ணவோட்டத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரத்தான் செய்யும். ஆனால் கல்வியை இன்றைக்கு எதற்கு உபயோகமா என்று பார்க்கிறோம்?
தன பொருளாதார உயர்வுக்கு, குறுக்கு வழியில் பயன்படுத்துவது.
படித்தவர்கள் தான் அதிக அளவில் நூதனமான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். பாலியல் குற்றங்கள்..ஒன்றும் வேண்டாம்…. சாலை விதிகளை மீறி வண்டி ஓட்டுபவர் பெரும்பாலும் படித்தவர்களே.
இன்னொருவனின் வீழ்ச்சியில் தான் உயர்வு அடைய நினைக்கும், எப்படியாவது வாழ்க்கை படிக்கட்டில் மேலேற நினைக்கும் ஒருவனின் கல்வியால் சமூகத்திற்கு என்ன பயன்?
உதாரணதிற்கு ஒரு புள்ளி விவரத்தை சொல்லலாம்.
கேரளா தான் கல்வியறிவில் முன்னேறிய மாநிலம் என்று தெரியும். கடந்த, 2016-ம் ஆண்டின், தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிபரப்படி, தமிழகத்தின், கிரைம் ரேட் 672. ஆனால் கேரளாவின் கிரைம் ரேட், 1,980!!!அதாவது .தமிழகத்தை காட்டிலும், கேரளாவில், மூன்று மடங்கு அதிகம் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று தான்,நாம் நினைப்போம்.
ஆனால் உண்மை அது அல்ல. நம் காவல் நிலையத்திற்கு போய் புகார் கொடுத்தால் அதை பதிந்தால் தானே.??
ஏன்?
உள்ளதை உள்ளபடியே காட்டினால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டது என்று எதிர்கட்சியினர் குறை சொல்ல காரணமாக அமைந்து விடுமாம்.
ஆனால் கேரளாவில் இது போல புகார் கொடுத்து காவல் த்துறையினர் மறுக்க முடியுமா?
அங்கு கொரானாவை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கையும் அரசு மேற்கொள்கிறது!! வீடுகளுக்கு தேவையான அத்த்யாவாசிய பொருட்களை பகிர்கிறது…
ஆனால் இங்கேயோ…விலையில்லா பொருள் வாங்கவும், இரண்டாயிரம் ரூபாயை வாங்கவும் படித்தவர், படிக்காதவன் வித்தியாசமின்றி வரிசையில் நின்று வாங்குவோம்.!!
அதன் பயன் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் இரண்டு லட்சம் ரூபாய் கடன் இருக்கிறதாம். !!
இதற்கெல்லாம் காரணம்…சுயநலம் சார்ந்த எண்ணம்…
இதை மாற்றக் கூடியது சிறந்த கல்வி மட்டுமே…
அதனால் தான் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர் அங்கிருந்து கல்வி கற்றால், அவர் சிறை காலத்தையே குறைக்கும் வழி வகையை சிறை விதிகள் வைத்துள்ளன.
ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட சிறை விதிகளில் பெருமளவில் மாற்றமில்லை!!.
ஆனால் அது பொது மக்கள் அறிதலுக்கும் வ்ளிவராது.
இது போல மேற்கல்வி கற்றால் சிறை தண்டனை குறைக்கப்படும் என்ற விவரத்தை சிறை நிர்வாகமே தருவதில்லை.
ஜி. டபிள்யு.எப். ஹீகேள் போன்ற சிந்தனையாளர்கள் குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டும், தண்டனையை வழங்கும்போது அவர்களை பகுத்தறிவுள்ள மனிதர்களாக அதிகாரிகள் மதிக்க வேண்டிய உரிமை உண்டு.என்று வாதிடுவர்.
உலகெங்கிலும் உள்ள குற்றவியல் நீதி அமைப்பு எல்லாம் , பயத்தை தூண்டுவதற்காக தண்டனையைப் பயன்படுத்துவதில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டன., தற்போது, தண்டனையை குற்றவாளிகளின் மனமாற்றம், சுய ்-சீர்திருத்தம் மற்றும் சமரசம் செய்ய வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவும் அதை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறது..
இப்போது தான் "மக்களை தேடி மருத்துவம்" என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது..!
ஆனால் ஏற்கெனவே கைககெட்டும் தூரத்தில் நீதியை கொண்டு வந்த பெருமை இந்திய நீதித்துறைக்கு உண்டு.
இலவச சட்ட உதவி முகாம்களும், சட்ட ஆலோசனை மையங்களும், சமரச மையங்களும் மக்கள் நீதிமன்றங்களும் எத்தனையோ நிலுவையிலுள்ள கோடிக்கணக்கான வழக்குகளை தீர்த்தது மட்டுமல்லாமல், வரவிருந்த வழக்குகளையும் சமரச முறையில் தீர்த்து வைத்துள்ளனர்!!
ஆனால்……
அதை பெறக கூடிய அளவில் கல்வி கற்று இருந்தால் தானே பயனடைய முடியும்?!
சிறை தண்டனை குறைப்பிற்கு அருகதை உள்ள எத்தனையோ சிறைவாசிகள் அது குறித்து விழிப்புணர்வு இல்லாமலேயே உள்ளனர்.
சிறை அதிகாரிகளும் அது குறித்து அக்கறை கொள்வதில்லை.
இந்த கோவிட் தொற்று காலத்தில், தகுதியுடைய சிறைவாசிகளுக்கு தண்டனையை குறைத்து சிறைக்கு வெளியே அனுப்புவதில் மாநில அரசுகள், நம் மாநிலம் உட்பட போதிய அக்கறை காட்டவில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே வருததப்படுள்ளார்.
சிறை தண்டனையின் காலத்தை குறைக்கக்கூடிய விதிகளை பற்றி நான் பேச ஆரம்பித்ததும் நிறைய பேருக்கு , பேரறிவாளன் மற்றும் பலர் தான் நினைவுக்கு வருகிறார்கள். நான் அந்த விஷயத்திற்குள் போகவில்லை.
நம்மில் எத்தனை பேருக்கு, சிறை வாசிகள் அங்கிருந்து உயர் கல்வி பயின்றால், தண்டனை காலம் குறைக்கப்படும் என்று தெரியும்?!!
அதை முஹம்மத் சாஜித் மகபூப் அன்சாரி…தெரிந்து வைத்துள்ளார். அவருடைய பதினாறு வருட சிறைககாலத்தில், அவர் பெற்றது பல பல்கலைகழக பட்டங்கள், சான்றிதழ்கள்…
அதுவும் அவரின் பொலிடிகல் சயின்ஸ் மேற்படிப்பும், மனித உரிமைக்கான பட்டய படிப்பும் நீண்ட இருண்ட சிறை வாழ்ககையை கடக்க அவருக்கு உதவியதாம்…
அது மட்டுமல்ல இந்த கல்வி தகுதிகள், அவருடைய தண்டனை காலத்தில் மூன்று மாதத்தை குறைத்தும் விட்டுருககிறது!!
இப்படி ஒரு சிறை விதி இருப்பதே யாருக்கும் தெரியாமல் இருந்த போது, இவர் தன்னுடைய இடைவிடாத மனுகளாலும், தைகள் அறியும் சத்தின் மூலமும், இந்த சிறை தண்டனை குறைப்பிற்குரிய விவரங்களை பெற்று, அதற்கு தகுதியுடையவர் ஆகியிருக்கிறார்!!
அவர் இருக்கும் மகாராஷ்டிரா மாநில சிறை விதிகளின் படி அதிகபட்சமாக தொண்னூறு நாட்கள், கல்விக்கான தண்டனை குறைப்பு உண்டாம்… அதே போல தமிழ்நாட்டிலும் உண்டு….
சிறைவாசத்தின் பொது, கைதிகள் நிறைய பேர் மேற்கல்வி பயில்வது உண்டு. அதை சிறை அதிகார்கள் ஊக்குவிப்பதும் உண்டு.
ஏன் அன்சாரியை போலவே அந்த வழக்கில் தண்டனை பெற்றவர்களும் சிறையிலேயே கற்கிறார்கள் தான். அதில் ஒருவருக்கு சட்டக கலூரியில் பயில நுழைவு தேர்வு எழுதி தேர்வும் ஆகி விட்டாராம். ஆனால் அவர் அதன் பிறகு, குற்றவாளி என்று தீர்ப்பு வந்தவுடன், மும்பை சிறையிலிருந்து நாசிக் சிறைக்கு மாற்றப்பட்டுவிட்டார் என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது….
ஆனால் யாரும் யோசிக்காத வகையில் , இப்படியொரு சிறை விதி இருப்பதை அறிந்து , அந்த தகவலை வெளிககொனரவே முடியாத சிறை துறையிலிருந்து பெற்றது தான் எல்லோரையும் பேச வைத்துள்ளது!
அவருக்கு கிடைத்த ஆயுள் தண்டனையின் படி அவர் குறைந்த பட்சம் பதினான்கு வருடம் சிறை தண்டனை பெற வேண்டும். ஏற்கெனவே அவர் பதினாறு வருடங்களாக அங்கிருககிறார். அவர் தண்டனை குறைப்பிர்கான விசாரணை இனி தான் எடுத்துக்கொள்ள இருக்கிறது…
அதனால் கனவான்களே …நமக்கிருக்கும் உரிமைகளை தெரிந்துக கொள்ளவும் கல்வி அவசியம் தான்….ஆனால் அந்த கல்வியும், தான் இருக்கும் படி நிலையை புரிந்துக கொண்டு வாதிடுவதற்கே பயன்படுத்த வேண்டும்…
அது தெரியாமல்…'நீயும் நானும் ஒன்னு"ன்னு வாதிட்டால், நம தலையில் போட்டுக்க வேண்டியது மண்ணு" தான்!!.
1 கருத்து:
These rules are unknown to me,Thanks for providing me with new information.
கருத்துரையிடுக