சனி, 14 ஆகஸ்ட், 2021

அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க தடைகோரிய மனு தள்ளுபடி ஆனதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 நம் ஆட்களின் பிரச்சினையே இது தான்.மக்கள் பிரதிநிதிக்கும் அரசு அதிகாரிக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் போட்ட வழக்கு இது..

இந்த வழக்கை போட்டவர் கேட்ட பரிகாரம் என்ன?

தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் HR & CE ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் "அவர் இந்து மதத்தை நம்புகிறார்." என்ற உறுதிமொழியை எடுக்காமல், இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் குழுவின் தலைவராக பங்கேற்பதை தடுக்கவேண்டும்" என்பது தான் அது!!

இதற்கு முன்னரும் இந்த மனுதாரர் , சென்னையின் வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீதரன் இதே போன்ற ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.,அதில், "தற்போதைய HR & CE கமிஷனர் மற்றும் பிற அதிகாரிகளால், பிறப்பால் தாங்கள் இந்துக்கள் என்று கட்டாயமாக உறுதிமொழி எடுக்காத அனைத்து அதிகாரிகளையும் பணியில் இருந்து நீக்க வேண்டும் "என்ற கோரிக்கை தான் அது!!

அரசு தரப்பு வழக்கறிஞர் பணியில் இருந்து நீக்க தேவையில்லை. வேண்டுமானால், இப்போது உத்தரவிட்டால் கூட, அனைத்து ஊழியர்கள்/அதிகாரிகள் உறுதிமொழி எடுப்பார்கள்" என்று சொல்ல , உயர் நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு அப்படியே உத்தரவிட்டது!

அதே பாணியில், இப்போது முதல்வரும் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று இந்த பொதுநல வழக்கை போட்டுள்ளார்..

என்ன ஆச்சரியம் என்றால்,

  • வழக்கு போட்டவர் ஒரு வழக்கறிஞர்..
  • அவருக்கு ஏற்கெணவே தான் போட்ட மனுவின் படி ஏன் உயர்நீதிமன்றம், அறநிலையத்துறை அதிகாரிகளையும் ஊழியர்களையும் மேற்படி உறுதிமொழி எடுக்க சொல்லி உத்தரவிட்டது என்று தெரியும்.
  • ஏனென்றால், அவர் தான் தன் பிரமாண பத்திரத்தில், "ஆணையர், கூடுதல் ஆணையர், கூட்டு, துணை அல்லது உதவி ஆணையர் மற்றும் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட அனைத்து அலுவலர்கள் அல்லது பணியாளர்கள் , இந்து மதத்தை பின்பற்றும் நபராக இருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்கள் அந்த பதவியில் இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று 1959 ஆம் ஆண்டின் எச்.ஆர் & சிஇ சட்டத்தின் பிரிவு 10 கூறுகிறது என்று சுட்டிகாட்டியவர்.!!
  • அதே போல, செப்டம்பர் 23, 1961 அன்று வெளியிடப்பட்ட அரசு ஆணையின் படி, ,இந்து மதத்தை பின்பற்றுவதை நிரூபிக்கும் விதிகள், நநடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது ,என்றும் அந்த விதிகளின்படி, அந்த சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் அருகிலுள்ள இந்து மத அமைப்பின் முன்னிலையிலும் அதன் அறங்காவலர் குழுவின் தலைவர்.முன்னிலை வகிக்கும்போதும், உறுதிமொழி எடுக்கவேண்டும் என்று சொலலியுள்ளதை விவரித்ததும் இவரே!!
  • அதன்படி உறுதிமொழி ஏற்காத அனைத்து அதிகாரிகளையும் வேலையை விட்டே தூக்க வேண்டும் என்றார்!!
  • அதன் உண்மைத்தன்மையை உணர்ந்த பின்பே, உயர்நீதிமன்றமும் மேற்படி உத்தரவை போட்டது!

HC directs all HR&CE dept. staff to take the ‘Hindu pledge’

  • இத்தனைக்கும், அறநிலயத்துறை அதிகாரிகளுக்கு அந்த விதிகள் பொருந்தாது என்று அரசுதரப்பில் வாதிட்டு பார்த்தார்கள். ஆனால், உயர் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை..HR&CE சட்டத்தின் பிரிவு 10 ஐப் பற்றி குறிப்பிடுகையில், விதி 2 உடன் வாசிக்கப்பட்டது, "இந்த விதியில், "நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் ..." என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது. எனவே கமிஷனர் மற்றும் பிற உயர் அதிகாரிகளை அதன் வரம்பிலிருந்து விலக்க முடியாது என்பது தெளிவாக இருந்தது."என்று தான் உத்தரவில் தெளிவாக சொல்லவில்லையா?இதை அவரும் தானே தெரிந்து வைத்திருந்தார்?!
  • இப்போது சொல்லுங்கள்.இவ்வளவு விவரம் தெரிந்தவருக்கு, தமிழக முதல்வர், இந்து அறநிலையத்துறை சட்டத்தால் நியமிக்கப்படவில்லை என்றும், அவர் அதன் அதிகாரி என்பதும், அவர் பொது ஊழிடர் மட்டுமே, அவர் அந்த சட்ட விதிகளின் வரையறைக்குள் வரமாட்டார் என்று தெரியாதா?
  • அதனால் தான், அந்த பொது நல வழக்கு மனுவை உயர்நீதிமன்றம், திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. .இதை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசாவலு ஆகியோரின் முதல் டிவிஷன் பெஞ்ச், "முற்றிலும் குறும்புத்தனமானது" என்று கூறி, மனுவை அனுமதிக்க மறுத்துவிட்டது. வழக்கு "மிகவும் மோசமான சுவையில்" இருப்பதாகவும், வழக்குரைஞர் கேட்கும் பிரார்த்தனையில் ஒரு தப்பெண்ணம் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்

அது உங்களுக்கும் தெரிந்திருக்கும்!

  • இத்தனைக்கும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீனடிக்கும் இதுபோண்ற வழக்குகளுக்கு செலவுத்தொகை உத்தரவிடும் மாண்புமிகு நீதிபதிகள், சென்னை வழக்குரைஞர் எஸ்.ஸ்ரீதரன் மீது செலவுகளை விதிப்பதைத் தவிர்த்தாலும், சம்பந்தப்பட்ட பெஞ்சின் வெளிப்படையான அனுமதியைப் பெறாமல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உயர் நீதிமன்றத்தில் எந்த பொதுநல மனு தாக்கல் செய்ய அவருக்கு உரிமை இல்லை என்று உத்தரவிட்டனர்.!!
சரி தானே!!
  • இந்த வழக்கிற்கு மேல் முறையீடு செய்யவேண்டும் என்றால் உச்ச நீதிமன்றம் தான் போகவேண்டும்.நம் கோரா சட்டமேதைகள் சொல்வது போல இங்கேயே அப்பீல் போடவும் முடியாது.அதனால் இங்கேயே ஸ்டே கிடைக்காது!!
  • அதுவும் அரசு ஊழியரிகள், அதிகாரிகள் யார், பொது ஊழியர்கள் யார் என்ற வித்யாசம் கூட தெரியாமல், அல்லது தெரிந்தும் விளம்பரத்திற்காகவோ செய்தது போன்ற ஒன்றிற்கு, இத்தனை கருணை காட்டியதே அதிசயம்..

ஒரு பொது ஊழியர் மட்டுமல்ல யாரும் குறிப்பிட்ட மதத்தை தான் பின்பற்றுகிறார் என்பதை வெளியில் சொல்லவேண்டிய அவசியமில்லை..

எந்த மதத்தையும் இங்கு யாரும் பின்பற்றும் சுதந்திரம் என்பது அடிப்படை சுதந்திரம்..அதை அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுத்துள்ளது..ஒரு மதத்தில் இருந்துக்கொண்டே அவர் இன்னொரு மதத்தை பின்பற்றவும் செய்யலாம்!!

அதனால் தான் உயர்நீதிமன்ற, இதுகூட தெரியாத வழக்கறிங்ஞருக்கு "இது ஒரு மதச்சார்பற்ற நாடு. அரசியல் சாசனம் கூட கடவுளின் பெயரிலோ அல்லது அரசியலமைப்பின் பெயரிலோ பதவிப் பிரமாணம் எடுக்க அனுமதிக்கிறது, ”என்று பாடம் சொல்லி கொடுத்தது!

அப்படியிருக்க, இந்து சமய அறநிலையத்துறையில் மட்டுமே இந்த விதிவிலக்கான விதி!!

ஏனென்றால், இந்து சமயத்தை பின்பற்றாத ஒருவர் அங்கு பணிபுரியும் போது, வேற்று மத துவேஷ எண்ணம் அவருக்கு இல்லையென்றாலும், மற்றவருக்கு அவர் அப்படி நடக்கிறாரோ என்பது போன்ற எண்ணம் வரக்கூடுமோ என்று தான்!!

சரி..இப்படி ஒரு மக்கள் பிரதிநிதி, உறுதிமொழி எடுத்தால் தான், அவர் எந்த மதத்தை பின்பற்றுகிறார் என்று மற்றவருக்கு தெரியுமா?

அப்படி அவர் எடுக்கவில்லையென்றால் அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியுமா? அல்லது, அவர் இந்து அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையிட கூடாது என்று தடுத்து நிறுத்தமுடியுமா?

பெரும்பான்மையான மக்கள் தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து, அரசு நிர்வாகம் செய்ய அனுப்பியவரை, மதத்தின் பெயர் கொண்டு முட்டுக்கட்டை போடுவதென்பது??

இதோ உயர்நீதிமன்றமே "சுளீர்" என்று சாட்டையால் விளாசியிருக்கிறது!!

"எந்த மதமும் குறுகிய மனப்பான்மையையோ அல்லது மற்றவர்களை காயப்படுத்துவதையோ போதிக்கவில்லை"

அதே போல இந்த பொது நல வழக்கை,

இதில் என்ன பொது நலன் இருக்கிறது??

போட்ட . வழக்குரைஞரால் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளை பாராட்ட முடியாது, என்றும் சொல்லியிருக்கிறது!!

ஏனென்றால், நீதிமன்றத்திற்கு நன்றாக தெரிந்திருக்கிறது…இங்கு மதம் பிரச்சினை அல்ல..

வெளிநாட்டில் உள்ள இதே ஆட்கள் அவர்கள் சுற்றம், அங்கு கிரித்துவர்களையும் 
நீக்ரோக்களையும் கூட திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள்..ஆனால் 
இந்தியாவுக்கு வந்து விட்டால் மட்டும் மதத்தின் ரட்சகனாக காட்டிக்கொள்வார்கள்!!☺️

சாதி தான்" என்பது!!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...