பட்டாவில் நீங்கள் யாரிடம் வங்கினீர்களோ அவர் பெயர் இல்லை.
ஆனால் அவர் எழுதி குடுத்த பத்திரத்தில் மட்டும் சர்வே எண் உள்ளது இல்லையா?
பட்டாவை வழங்குவது அரசு தரப்பு..ஆனால் பத்திரம எழுதுபவர் தனி நபர்.
யாருடைய ஆவணம் செல்லுபடியாகும்?
கண்டிப்பாக அரசு தரப்புடையதே..
இல்லையா பின்னே..தனி நபரின் ஆவணம் தான் செலலக்கூடியது என்றால் யார் வேண்டுமானாலும், யாருடைய சொத்தையும் எழுதி கொடுத்து விடலாமே?!!
பட்டாவில் சர்வே எண் விடுபட்டுவிட்டது என்கிறீர்கள்.
ஏனென்றால் அது வேறு ஒருவரின் பெயரில் உள்ளது..அதாவது அந்த சர்வே எண்ணுக்குரிய நிலததின் உரிமையாளர் அவர் என அரசு ஆவணம் காட்டுகிறது.
இந்த நிலையில், பத்திரத்தில் சர்வே எண் குறிப்பிட்டு விட்டாலேயே உங்களுக்கு நில உரிமை வந்துவிட்டது என்று அர்த்தமல்ல.
ஏனெனில் பத்திரம எழுதி கொடுத்தவருக்கே அந்த உரிமை, அந்த தேதியில் இல்லை என்பதால்..
உண்மையிலேயே, அவருக்கு தான் அந்த நிலம் உரிமையானது என்றால், எந்த காலத்தில் பட்டா வேறொருவரின் பெயருக்கு மாற்றப்பட்டது என்று பார்க்க வேண்டும்.
அரசு தரப்பில் ரீ.சர்வே செய்யும்போது, தவறு நடந்திருந்தாலும, அதற்கான பல வருடம் கடந்து வந்து விட்டோம்.
அது, இவருக்கு இத்தனை காலமும் ஏன் தெரியாமல் போனது என்பதும் தெரிய வேண்டும்.
காரணங்கள் ஏற்று கொள்ளதககதாக இருக்க வேண்டும்.நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்."சட்டம் தூங்குபவருக்கு உதவாது" என்று.
நீங்கள் கேட்கலாம்.."நாம் காலக்கெடுவில் மனு கொடுத்திருந்தாலும், அதை உடனேவா பைசல் செய்துவிடுகிறார்கள்?" என்று.
சட்டம், நம் குறையை, முறையீடு, எதிர்ப்பை ஒருவர் தெரிவிக்க கால வரையறை வைத்திருக்கிறதே தவிர, அதை தீர்வு காண்பதற்கு கெடு விதிக்கவில்லை!
அதனால் தான் பல தசாப்தம் கடந்தும் தீர்வை எட்டாத கோரிக்கைகள், அரசிடம் நிலுவையில் இருக்கிண்றன!
இன்னொன்று சொல்ல வேண்டும்.தவறு அரசுதரப்பில் இருந்தாலும், விற்றவர் தரப்பில் இருந்தாலும், அதை சரி செய்து, தன் பெயருக்கு நிலத்தின் பட்டாவில் மாற்றிக்கொண்டு, அதன் பிறகு தான், அந்த நில உரிமையை பத்திரம் மூலம் மாற்ற முடியும்.
அதற்கு முன்னரே பதிவு செய்யப்பட்ட இந்த பத்திரம் செல்லாது.. எந்த நில உரிமையையும் மாற்றி தராது!!
இதற்கேற்பட்ட செலவுகளை, நிலம் விற்றவர் தான் ஏற்க வேண்டும்.ஏனெனில் அந்த வில்லங்கம் அவரால் உருவானது என்பதால் அதை சரி செய்ய வேண்டிய கடமையும் அவருக்கே..இதற்கான ஸரத்து ஒன்று பொதுவாக பத்திரத்திலேயே இருக்கும்.
ஆனாலும் இந்த வில்லங்கம் இருப்பதை, வாங்கும் முன்பே சான்றிதழ் எடுத்து, பார்த்து தெரிந்திருக்கலாம்.
வாங்குபவர் தான் கவனமாக இருக்க வேண்டும். இல்லாத போது, விற்றவரிடம் இழப்பீடு கேட்கலாம். மறுக்கும் போது,
தனக்கு உரிமை யில்லாத நிலத்தை ஏமாற்றி விற்றுவிட்டதாக நீதிமண்றத்தை அணுகி, இழப்பீடு கேட்கலாம்.
தர்மமே வெல்லும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக