புதன், 4 மே, 2022

ஆக்கிரமிப்பு என்றால் என்ன? உதாரணம் கூறமுடியுமா?

சென்னை மைலாப்பூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற சமயம், ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி சாவு.......

மக்கள் ஆவேசம்....வீட்டை இடிக்கவிடாமல் தடுத்தனர்

அதிகாரிகள் அங்குள்ள மக்களை வசைபாடியாடியே தொடர்ந்து அங்குள்ள வீடுகளை இடித்து வருகின்றனர்..... .

''திங்கட் கிழமை நாங்கள் உச்ச நீதிமன்றம் போக உள்ளோம். அதற்குள் இந்த ஞாயிற்றுக் கிழமை அன்று வீட்டை இடிக்கின்றனர்

இத்தனைக்கும் காரணம் ஒருவர் போட்ட பொதுநல வழக்கு தான் '

நாங்கள் பல தசாப்தங்கலாக இங்கு தான் வாழுகிறோம் சொத்து வரி கட்டியும் ஆதார் கார்டு பெற்றும் எங்களை இவ்வளவு மோசமாக நடத்துகின்றனர்" .

என்று அங்குள்ள மக்கள் குமுற,....

நீதிமன்றம் கோடை விடுமுறையில் இருக்கும் போது அரசு இப்படி செய்யலாமா ' ஏன், இந்த அவசரம்?' என்ற கேள்வி உள்ளுக்குள் எழ '

ஏற்கெனவே அந்த பகுதியை 'சேரி' என்ற குடிசைப்பகுதி என்று 1973 லேயே அரசு ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையி;ல் இது போன்று வீடுகளை பொதுப் பணித்துறை இடிப்பது தவறு . "

என்று அவர்கள் கூறுவதை கேட்டபோது என்ன தான் நிலவரம் என்று அறிய தேடியபோது, இந்த கேள்வியும் கண்ணில் பட்டது.

எது ஆக்கிரமிப்பு?

தனக்கு சொந்தமில்லாததை தன்னுடையதாக எண்ணுவது மட்டுமல்லாமல், அதில் உரிமை கோரும் விதத்தில், அதன் உரிமையாளர் அனுமதியின்றி தன்னுடைய அனுபவத்தில் அதை வைத்திருத்தல்....

௨௦௦ ஆ ண்டுகளுக்கும் மேலான பழமையான பக்கிங்ஹாம் கால்வாய பற்றி இன்று அதிகம் அறியப்படவில்லை. ""மதராஸ் பட்டினம்:: வந்து புண்ணியம் கட்டிக்கொண்டது!!

இதை பற்றி அதிக விவரங்கள் தெரியாதவர்களுக்கு………அப்படியே அந்தப்பாட்டின் பின்னணி இசையை மனதுக்குள் இசைத்துக் கொண்டே மேலும் படியுங்கள்!!

பக்கிங்ஹாம் கால்வாய் உப்பு நீர் கொண்ட முக்கியமான நீர்வழிப் பாதைகளில் ஒன்று..

இது கோரமண்டல் கடற்கரைக்கு இணையாக உள்ள து

ஆந்திராவில் உள்ள பெட்டகஞ்சத்தில் இருந்து தொடங்குகிறது

பக்கிங்ஹாம் கால்வாய் இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் புதுச்சேரி அருகே மரக்காணம் மற்றும் தமிழ்நாடு வழியாக நீளும்

இது நகர எல்லைக்குள் வடக்கு கால்வாய், தெற்கு கால்வாய் மற்றும் மத்திய கால்வாய் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது வாமிநகர், கிரீன்வேஸ், ராஜா அண்ணாமலை புரம், முண்டககன்னியம்மன், லைட் ஹவுஸ், திருவல்லிக்கேணி , மந்தவெளி, மயிலாப்பூர், சேப்பாக்கம், கேசவபெர்மாள்புரம் என்று நகரின் மையப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

வெள்ளம் வரும் போது தடுப்பானை போன்று செயல்படும் இது,

சமூகத்தின் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர், குடிசைவாசிகள் என்று ஆரம்ப ஆண்டுகளில் இந்த கால்வாயில் இருந்தவை , காலப்போக்கில் பெரிய அளவில் வளர்ந்து. பக்கிங்ஹாம் கால்வாயின் கரையில் பல சேரிகள் வந்துவிட்டன. சில சேரிகளில கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் முன்பாகவே வந்தவை.

இந்த கால்வாய் கிழக்கிந்திய கம்பெனியின் காலத்தில் ஆங்கிலேயர்களால் பிரிட்டிஷ் தொழிலதிபரின் வர்த்தக நலன்களுக்காக அவர்கள் வழிசெலுத்தலுக்காக உருவாக்கப்பட்டது, ஆனால் தற்போது சென்னை எல்லைக்குள் சாக்கடை நீர் மற்றும் குப்பைகளை மட்டுமே கொண்டு செல்கிறது ஆங்கிலேயர் காலத்தில் 60 மீட்டராக இருந்த கால்வாயின் அகலம், வீடுகள், தொழிற்சாலைகள் என்று சில பகுதிகள். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், வெறும் ஆறு மீட்டராக பரப்பளவு குறைந்துள்ளது

அதற்கு காரணம்…… தமிழ்நாடு அரசின் சரியான கால்வாய் மேலாண்மை இல்லாமை.!!

நீர் நிலைகளை எந்த காரணம் கொண்டும் அது காய்ந்த நிலையில் இருந்தாலும் யாருக்கும் தாரை வார்த்து கொடுக்க கூடாது என்று நமது உயர் நீதிமன்றமும் சரி உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி சொல்லி வருகின்றன.

அப்படியிருக்க பொதுப்பணித்துறையின் வசம் இருக்கும் இந்த கால்வாயானது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது!!

2015ல் ஒரு பெரு வெள்ளம் சென்னையில் வந்ததே நினைவிருக்கிறதா? அப்போது ஒரு ரிட் மனு சென்னை உயர் நீதியான்றத்தில் பொது நல வழக்காக பதியப்பட்டு, ' இந்த அசம்பாவிதத்துக்கு யார் காரணம்/? என்று ஒரு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு உயர் மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரித்து குறைகளை சரி செய்ய வேண்டும் என்று ராஜீவ் ராய் என்பவரால் போடப்பட்டது. அப்போது இந்த கால்வாயின் கரையில் இருந்த 408 ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டு மற்ற சுமார் முன்னூறு ஆக்கிரமிப்புதார்களின் ஏக எதிர்ப்பின் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது. அப்படி அகற்றியும். கால்வாயின் முகப்பு பகுதியி]லிருந்து வெறும் நாற்பது அடிகள் மட்டுமே கிடைக் கின்றன என்றும் இப்போதைய ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால் மட்டுமே அதன் முழு விஸ்தீரணம் கிடைக்கும் என்கிறது இந்த ஆக்கிரம்மிப்புகளை அகற்றும் பொதுப் பணித்துறை.

ஆனால் 'சேரி' என்று அரசு உத்தரவு இருக்கும் போது, அங்குள்ள சேரிவாசிகளை குடிசைப்பகுதி மாற்று வாரிய சட்டபப் பிரிவு 11 படி அறிவிப்பானை கொடுத்து தானே அகற்ற வேண்டும் என்றால் அதற்கும் ஒரு பதில் வைத்துள்ளது அரசு தரப்பு.

அரசு ஆணை அப்படி போடப்பட்டாலும், இதுநாள் வரை பொதுப்பணி துறை, அந்த நிலத்தை குடிசை பகுதி மாற்று வாரியத்திடம் ஒப்படைக்கவில்லை. அப்படியிருக்கும் போது, அந்த சட்டம் இவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது" என்கின்றனர். ஆனால் அரசு தானே அதை சேரி என்று ஆணை பிறப்பித்தது. பிறகு அந்த சட்டப் பிரிவின்படி தானே அது நடக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்…..

, பொது இடத்தில் உள்ள நீர் நிலையை சேரி என்று அரசு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தின் முழு பெஞ்ச், டி. கே. சண்முகம் எதிர் தமிழக அரசு வழக்கில் (2015) 5 LW 397 (FB), நீர் நிலைகள், யாருக்கும் மாற்ற முடியாதது யாராலும் மாற்ற முடியாதது என்ற தீர்ப்பை சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் ஒரு பகுதியை சேரி என்று அறிவிப்பதே அதில் அடிப்படை வசதியை கொண்டு வந்து மேம்படுத்த முடியுமா என்று முயல்வதற்கே. ஆனால் கால்வாயின் கரையில் உள்ள இந்த பகுதிக்கு அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் தான், 1973 ல் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், அதன் பிறகு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் அது கிடப்பில் போடப்பட்டது என்று தெரிய வருகிறது. . மேலும் டவுன் நில அளவீடு பதிவேடுகளின்படி பக்கிங்காம் கால்வாய் என்ற வகைப்பாட்டில் தான் இந்த வீடுகள் வருகின்றன .இதை ஆக்கிரமிப்பு செய்தவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர்……

இங்கல்ல…... சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு!!

அரசு தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று இவர்கள்மனு செய்து விட்டு அதை பின்னர் வாபஸ் வாங்கியுள்ளனர். மேலும் இந்த அரசு ஆணையை தவிர குடிசை மாற்று வாரியம் இவர்களுக்கு அந்த இடத்தை ஒதுக்கீடு செய்ததாக எந்தவித ஆவணமும் இவர்கள் வசம் இல்லை. மேலும் இந்த இளங்கோ தெரு என்பதும் இவர்களே உருவாக்கியது தான் என்றும் அரசு அந்த தெருவை அமைக்கவில்லை என்றும் ஒத்துக்கொண்டுள்ளனர். அதனால் தான் உயர் நீதிமன்றம் கூட இவர்களில் நூற்றுக்கனக்கானோர் உயர் நீதிமன்றத்தை அணுகிய போது, இந்த அரசு ஆணையை வைத்துக் கொண்டு, பொது நிலத்தில் அதிலும் நீர் நிலையில் எந்த உரிமையும் கொண்டாட முடியாது என்றும் இந்த அரசு ஆணையினால் மட்டுமே, இவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற மாற்றமுடியாத உரிமை ஏதும் கிடைத்து விடவில்லை என்றும் தெளிவு படுத்தியது

மேலும் .Sarvepalli Ramaiah (Died) vs. The District Collector [Civil Appeal No.7461 of 2009] decided on 14.03.2019, என்ற வழக்கில் கூட, நீர்நிலைகள் பாதுகாக்க, புனரமைக்க சொன்னதோடு அல்லாமல், காய்ந்த நிலைக்கு போனாலும், அவற்றை யாருக்கும் மாற்றம் செய்து கொடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .

நீர்நிலைகளை எந்த விதத்திலும் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது, அதை அரசும் அனுமதிக்க கூடாது என்று சொன்ன தீர்ப்புகளில் சில…. (1) Susetha vs. State of Tamil Nadu, reported in (2006) 6 SCC 543; (2) M.C.Mehta (Badkhal and Surajkund Lakes Matter) vs. Union of India, reported in (1997) 3 SCC 715 and (3) Intellectuals Forum v. State of Andhra Pradesh, reported in (2006) 3 SCC 549.”

நமது உயர் நீதின்றம் கூட, , நிலப்பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம், "இந்த நிலம், நீர் நிலை வகைப்பாட்டில் வரவில்லை" என்ற உறுதியை பத்திர பதிவு அலுவலகங்கள் பெற வேண்டும் என்றும் அதே போல நீர்நிலைகள் பட்டியலை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் டான்ஜெட்கோ விற்கு அனுப்ப, அது அங்கு வீடு கட்டி மின்வசதி கோருபவருக்கு அனுமதி அளிக்க கூடாது என்கின்றது.

இந்த விவகாரத்தில் கூட, உயர் நீதிமன்றம் கொடுத்த கால கெடுவிற்கு பிறகும் காலி செய்யாதவர்களின் வீடுகளில் மின் இனைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த நிலை தான் இன்றைய தேதி வரையில் நிலவுகிறது. இப்படி ஒவ்வொரு அடியாக தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும், இவர்கள் சொல்வது போல திடீரேன ஒரு நாளில் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் தெரிகிறது.

'தனி நபர் தொடர்ந்த பொது நல வழக்கில் போடப்பட்ட உத்தரவுக்கு இவ்வளவு மரியாதை செய்கின்றனர் அதிகாரிகள்; என்று ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. உண்மையில் 2008 ல் முதன் முதலில் போடப்பட்டது பொது நல வழக்கு அல்ல. ஆனால் அதில் கோரப்பட்ட பரிகாரம், பொது நலன் சம்பந்தப்பட்டது என்பதால் அவ்வாறு மாற்றப்பட்டது. அதன்பிறகு உயர்நீதிமன்றம் போட்ட தீர்ப்பை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றம் போயினர். 2011 ல் இந்த எஸ்.எல்.பி யில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது இதற்கிடையே அரசு தரப்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. சென்னை மாநகராட்சியிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு ஆக்கிரமிப்புகளை அப்புறப் படுத்த சொல்லி கடிதம் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து நடவடிக்கை தாமதம் ஆகவும் , உச்ச நீதிமன்ற உத்தரவு அமுலபடுத்தவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டது. இன்னொன்று… 11.02.2011 லேயே உச்ச நீதிமன்றம், உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று சொல்லியுள்ளது. அதுவே இறுதி நிலை என்னும்போது, அதன் பிறகு வெவவேறு காரணங்களை சொல்லி மனுக்கள் போடப்பட்டு காலம் தாழ்த்தப்பட்டு வந்தன. இதற்கிடையே சென்னையில் பெரு வெள்ளம் வந்து, நிறைய பேரின் உயிரை பறிக்க, உயர்நீதிமன்றத்தின் கோபத்தை தாங்க முடியாமலும், உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இணங்கியும், 408 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆனாலும் கடுமையாக எதிர்த்த மற்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் 2018ல் வழக்கு தொடுக்கின்றனர். அதில் உச்ச நீதிமன்றம் இட்ட உத்தரவையும் மறைக்கின்றனர். பல சங்கதிகள் உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட மனுவில் இடம்பெறவில்லை. இருந்தாலும், உயர் நீதிமன்றம், பெருந்தன்மையோடு அதை மன்னித்து, மனுதாரர்கள் ஆக்கிரப்பாளர்கள் என்பது முடிவாகியுள்ளதால், அவர்கள் இங்கு தொடர்ந்து தங்க வசிக்க முடியாது. என்றும் இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் குடிசை பகுதிமாற்று வாரியம் கொடுக்கும் மாற்று இடத்தை வாங்கி கொண்டு பள்ளிப் படிப்பு படிக்கும் அவர்கள் குழந்தைகள் சிரமப்படாமல் இருக்க, 2018 சூன் 15 க்குள் அங்கு குடி செல்லவேண்டும் என்றது /https://indiankanoon.org/doc/191133807/

ஆனால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர். அவர்களும் இந்த தீர்ப்பை உறுதி செய்தனர்.. அதே வேளையில், தாங்கள் ஆக் கிரப்பாளர்கள் அல்ல என்ற இவர்கள் வாதத்தை உயர்நீதிமன்றத்தில் கொண்டு முன் வைக்க அனுமதி அளித்தது. திரும்பவும் 2019ல் உயர்நீதிமன்றத்தில் முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி ரிட்\ மனு. அதில் தான் நீதியரசர்கள் வேணுகோபால் அவர்களும் நீதியரசர் வைத்தியநாதன் அவர்களும், மேலும் இந்த கால அளவை 10.06.2019 வரை நீடித்து தீர்ப்பு அளிக்\கின்றனர். https://indiankanoon.org/doc/15274525/

இந்த காலக் கெவிற்குள் ஒத்துழைக்காத ஆக்கிரப்மிப்பாளர்களின் வீட்டை இடித்துக்கொள்ள அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கு போதிய போலிஸ் பாதுகாப்பு வழங்க சொல்லி உத்தரவும் வருகிறது. போன வருடம் சுமார் முந்நூறு பேர்களை அகற்றி மாற்று இடம் கொடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் சொல்கின்றனர்.

பக்கிங்ஹாம் கால்வாய் நீர்நிலை முழுவதையும் தேசிய நீர்வழிப் பாதையாக (காக்கிநாடா-புதுச்சேரி கால்வாய்கள் மற்றும் களுவேலி குளம், பத்ராசலம் ராஜமுந்திரி நீட்சி, கோதாவரி நதி மற்றும் வஜீராபாத் விஜயவாடா நீட்சி ஆகியவை தேசிய நீர்வழிப் பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.. தேசிய நீர்வழிச் சட்டம், 2016 வந்தபிறகு, கிருஷ்ணா நதி) சட்டம், 2008, ரத்து செய்யப்பட்டது, ஆனால் உள்நாட்டு நீர்வழிச் பாதையின் நோக்கத்திற்காக முழு பக்கிங்ஹாம் கால்வாயும் தொடர்ந்து தேசியமயமாக்கப்பட்டது. எனவே, பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் உள்ள அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் அல்லது ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனப்படுகிறது..

மத்திய நீர் ஆணையத்தின் வெள்ள முன்னறிவிப்பு நிலையம் 14 அமைக்க முன்மொழியப்பட்டது. ஆனால் தமிழகத்தில் ஒன்று கூட இல்லை, மேலும் வெள்ளஅபாயம் ஏற்ப்படும் போது, அதை தடுப்பதற்கான போதிய நீண்ட கால திட்டங்கள் ஏதும் நம் கைவசம் இல்லை.

நீர்நிலைகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் மேம்படுத்தவும் உதவும் நோக்கில் தமிழ்நாடு தொட்டிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம், 2007 ஐ அரசு இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தின் நோக்கமே, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நீர்த்தேக்கத்தின் சரியான எல்லையைக் கண்டறிவதும், அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின்படி, ஆக்கிரமிப்புகளைக் கண்டறிவதும் அகற்றுவதற்கானதும் ஆகும். .. துரதிர்ஷ்டவசமாக, மேற்குறிப்பிட்ட அரசு ஆணைகளை நிறைவேற்றுவதன் மூலம், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்களை அரசு தீவிரமாக ஊக்குவிக்கிறது மேலும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கும் அவர்களின் உடைமைகளை முறைப்படுத்தவும் முனைகிறது என்று தான் சொல்லவேண்டும்.

மாற்று இடம் கண்டறிந்து ஆக்கிரப்பாளர்களை அங்கு குடியேற்றுவது என்பது அரசின் கடமை அதை செய்யாமல், நீர்நிலை ஆக்கிரப் புகளை களைவதை காலம் தாழ்த்த கூடாது என்ற நமது உயர் நீதிமன்றத்தின் கெடுபிடியான தீர்ப்பின் அடிப்படையிலேயே, தற்போதும் ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்கிறது. நாட்டில் நிலவும் சூழலையும் வழக்கின் தன்மையையும் நன்கு அறிந்த முன்னாள் துணை முதல்வரும் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையிலேயே இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடைபெறுகின்றன என்பதை நன்கு அறிந்தும் மாற்று கருத்து சொல்லியிருப்பது. துரதிர்ஷ்டமானது என்று தான் சொல்லவேண்டும்

அரசுக்கு மட்டுமா நீர்நிலைகளை காப்பாற்றும் கடமை உள்ளது.? நமக்கும் தான்.

காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட தேசியச் சூழலைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும், உயிரினங்களிடம் கருணை காட்டுவதும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51-ஏ அறிவுறுத்துகிறது. மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது 19 மற்றும் 21 பிரிவு பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள்,உட்பட அரசியலமைப்பு சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் நோக்கத்தைப் மனதில் கொள்ள வேண்டும்.

தற்போது நமது தமிழக முதல்வர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதியின் , தற்போது கட்டப்பட்டு வரும் அரசு குடியிருப்பில் வீடு வழங்கப்படும் என்றும் சொல்லியிருப்பது நல்ல செய்தி தானே !

அது சரி …….அசையா பொருளை மட்டும் தான் ஆக்கிரமிப்பு செய்ய முடியுமா?

அப்படியானால், தனக்கு சொந்தமான மனைவியை/கணவனை ஆக்கிரமிப்பு செய்வது ??

https://m.youtube.com/channel/UCVWEar2R5mwMTP7YBlbRL3Q

https://www.youtube.com/watch?v=a9UMpqZbr6I












சனி, 30 ஏப்ரல், 2022

வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரமா? சாபமா?










மனைவியை விவாகரத்து செய்தால் ஒரு பைசா கூட ஜீவனாம்சம் தர தேவையில்லை என்றால் தமிழ்நாட்டில் விவாகரத்து வழக்குகள் ஒரே நாளில் ஒரு கோடி தொடும் அல்லவா?

 மனைவியை விவாகரத்து செய்தால் ஒரு பைசா கூட ஜீவனாம்சம் தர தேவையில்லை எனபது இப்போதும் சட்டத்தில் இருக்கிறது. என்ன...அதற்க்கு தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் நிரூபிப்பது.

  1.  மனைவி திருமண உறவை தாண்டிய உறவில் உள்ளார் என்று  அவள் கள்ளத்தொடர்பு  கொள்வது குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியபோத்து, பொங்கி எழுந்த ஆண் குலம், அதற்க்கு முன்னர் தாங்கள் அதை அனுபவித்து வருவதை வசதியாக மறந்து போனார்கள்!!  ஆனாலும் ஒன்று  அந்த காலத்திலிருந்து ஒரு ஆணை இகழ்வாக பேச வேண்டும் என்றால் அவன்  வீட்டில் உள்ள பெண்ணின் ஒழுக்கத்தை தான் தரக்குறைவாக பேசுவது இன்றும் நடக்கிறது. திருமண உறவில் விரிசல் தொடங்கும் பொத்து ஆண் உபயோகப்படுத்தும் முதல் அஸ்திரமே இது தான்.... பெரும்பான்மையான பெண்கள் இந்த அடியிலேயே 'விழுந்து'விடுவார்கள்!1 இன்னொன்றும் கூட..இந்த திருமணத்திற்கு வெளியேயான இந்த உறவை நிரூபிப்பதும் சற்று கடினம்...
  2. தன் வருமானத்தை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறாள் என்னும்போது 
  3. வாழ்க்கை துன்னை இன்னொரு திருமணம் செய்தது கொள்ளும் போது.
  4. ஜீவனாமச  உத்தரவு போட்ட பின்பு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றத்தால், அதாவது வேலையை இழப்பது, நொடித்து போவத்து போன்ற நிலையில், அதனை தெரிவித்து நீதிமன்றத்தில் உத்தரவில் மாற்றம் கோரலாம். அடகே போல மனைவியும், இந்த நிரந்தர வாழ்க்கை  பராமரிப்பு தொகை உத்தரவு போட்டபின்பு, கணவரின் ஊதியத்தில் உயர்வு ஏற்பட்டால், தனக்கு உள்ள பரமாரிப்பு சிக்கலை விவரித்து, ஏற்கனவே நிர்ணயத்த தொகையை உயர்த்த கோரலாம்.

  5. ஒரு மனைவி மற்றவரை விட அதிகமாக சம்பாதிக்கும் போது, ​​அதிக வருமானம் ஈட்டும் மனைவி மற்றவருக்கு நிதிப் பொறுப்பாக இருப்பார்.உதாரணமாக, அவள் வாழ்வதற்கு மட்டுமே போதுமான பணம் சம்பாதிப்பாள், ஆனால் திருமணத்தின் போது சிறந்த வாழ்க்கை முறையை வழிநடத்துகிறாள் என்றால், அந்த வாழ்க்கைத் தரத்தை பராமரிப்பதற்காக அவளுடைய சம்பாதிப்பிற்கு கூடுதலாக பணம் செலுத்துமாறு கணவனை நீதிமன்றம் கேட்கலாம்.
  6.  ஜீவனாம்சத் தொகையைப் பெறும் முன்னாள் மனைவி மறுமணம் செய்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் இறக்கும் வரை அல்லது பணம் செலுத்தும் மனைவி மறையும் வரை கொடுப்பனவுகள் தொடரும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணம் செலுத்துபவர் அவர்களின் இயற்கையான வாழ்நாள் முழுவதும் செலுத்த முடியும். பணம் பெறுபவர் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாத குறிப்பிடத்தக்க மற்றவருடன் வாழ்ந்தாலும், அவர்கள் தொடர்ந்து பணம் பெறலாம். இது அதிகமாக நடக்கும் ஒன்று.குறிப்பாக அந்த ஊனம் முன்னாள் மனைவி வேலையிலிருந்து பணம் பெறுவதைத் தடுக்கிறது அல்லது வேலை செய்யும் திறன் குறைவாக இருந்தால்.

இந்தியாவில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்களின் மதத்திர்கேற்ப அவர்களின் சட்டங்களும் மாறுகின்றன

எப்போதும் கணவர் மட்டுமே நிரந்தர வாழ்க்கை படி கொடுக்க வேண்டுமா?

பொதுவாக, கணவன் தன் மனைவியை அவள் வாழ்நாள் வரை பராமரிக்க வேண்டும் என்றாலும் இந்து திருமண சட்டத்தின் படி, கணவனோ மனைவியோயருவரில் யார் வேண்டுமானாலும், தன்னை தானே பாதுகாத்து கொள்ள இயலா

சமீபத்தில் பாக்யஸ்ரீ v ஜகதீஷ் மேற்கோள் : 2022 லைவ் லா (போம்) 112 என்ற வழக்கில் , கணவர் தன மனைவி மாதம் பதினைதாயிரம் ரூஒபாய் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று இந்த சட்டபிரிவின் கீச்ழ் வழக்கு தொடர்ந்தார். தன மனைவி கலூரி பெராரிசிரியராக இருப்பாதாக சினார். கணவருக்கு ஒரு மளிகை கடை வைத்திரோதாகவும், ஆட்டோ வைத்து இதன் மூலம் வருமானம் ஈடுவதாக மனைவி தரப்பில் சொல்லப்பட்டாலும், இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இத்தனைக்கும் விவாகரத்து பெறப்பட்ட்ட 23 வருடங்கள் கழித்து இந்த மனுவை தைகள் செய்தார்.





த பொது, மற்றவரிடம் இருந்து இந்த தொகையை கோரி பெறலாம்..இதுவே இருவரும் மனமொத்து விவாகரத்தி கோரும்போது, இருவருக்கும் இடையில் ஏற்படும் ஒப்பந்தப்படி யாருக்கு யார் கொடுப்பது என்பது தீர்மானிக்கப்படும். 
இதுவே இரண்டு தரப்பும் எதிர்த்து வழக்கு நடத்தும்போது, நீதிமன்றம் இந்த தொகையை முடிவு செய்யும். 

அப்போது என்னவெல்லாம் கணக்கில் கொள்ளும் தெரியுமா? 

  1. கணவரின் நிலை அவரது வருமானம், அவரது சொத்துக்கள் மற்றும் அவரது வாழ்க்கை முறை
  2. மனைவியின் நியாயமான தேவைகள்\
  3.  நீதிமன்றம் கணவரின் நிலை மட்டுமல்ல, மனைவியின் நிலை மற்றும் சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும். மனைவி வேலை செய்து நல்ல சம்பளம் வாங்கும் பட்சத்தில், நீதிமன்றம் அதை கணவரின் வருமானத்துடன் கருத்தில் கொண்டு, வழக்கின் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனைவிக்கு ஜீவனாம்சம்  வழங்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும்.  


ஆனால்.....சிறப்பு திருமண சட்டம் .  1954 படி மனைவி மட்டுமே இத கோரி பெறலாம்.\\ 
இதுவே ஜீவனாம்சம் சரியான நேரத்தில் வழங்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றியதும், துணை வாழ்க்கைத் துணைக்கு ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படாவிட்டால், விளைவுகள் உள்ளன; தண்டனைகள் போன்ற மனைவிக்கு எதிராக நீதிமன்றம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம்


புதன், 27 ஏப்ரல், 2022

எனது தந்தை சொத்தின் மீது நான் எனக்கு (பணம் கட்டியவர்) உரிமை உள்ளதா? என் தந்தை வாங்கிய அடமான விட்டு கடன் கூட்டு வட்டி மற்றும் அசல் என முழு கடனையும் என் சுய சம்பாத்தியம் முலம் அடைத்து அடமான கடன் பத்திரத்தை மீட்டேன்


 https://www.youtube.com/channel/UCVWEar2R5mwMTP7YBlbRL3Q                   நண்பர்களுக்கு  வணக்கம். 

பெரும்பான்மையான நபர்களின் மனதில் உள்ளது  தான் இந்த கேள்வி.  ஆனால்  இது பற்றி கேட்டால் எங்கே நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ, சொத்திற்கு ஆசைப்படுகிறான் என்ற பேர்  கெட்டு விடுமோ என்று  கேட்காமலும், உள்ளுக்குள்ளே இந்த கேள்வி மனதை அரித்துக் கொண்டும் இருக்கும்.

நம் கூட பிறந்தவர் சிலர் இருப்பார்கள்.  ஆனால் நாம் மட்டுமே அப்பாவின் கடனை அடைத்து, வீட்டை கடனிலிருந்து மீட்டிருப்போம். இதற்கு உரிய முன்னுரிமை,  வீட்டின் சொத்து உரிமை மாறும்போது, கிடைக் குமா ? என்ற கேள்வி உள்ளுக்குள் இருக்கும்.  அப்படி கிடைக்காமல் போனால்.... என்ன செய்வது? நீதிமன்றத்திற்கு போகலாமா என்ற தடுமாற்றம் இருக்கும்....

அதுவும்  பரம்பரை சொத்து என்றாலாவது பரவாயில்லை உறுதியாக நம் பங்கு கிடைக்கும், ஆனால் அப்பாவின் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்து என்றால்... அதை அவர் விருப்பம் போல யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். என்று சட்டம் சொல்லும் போது ...!!

இதே போன்று, எனக்கு தெரிந்தவர் வீட்டில் நடந்தை சொல்கிறேன். 

அந்த குடும்பத்தின் வருமானம் ஈட்டக்கூடிய ஒரே நபரான அந்த குடும்பத்  தலைவர்   இறந்து விடுகிறார்.  பிள்ளைகள் எல்லாம் பள்ளிப் பருவத்தில் தான் உள்ளனர். இருக்கும் ஆண் பிள்ளைகளில் மூத்தவன் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். அடுத்து என்ன செய்ய...?  அவன் படிப்பு நிறுத்தப் படுகிறது.... அப்பா பார்த்துக் கொண்டிருந்த  கடையை இவன் பார்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். வீடு ஓட்டு வீடு என்றாலும் சொந்த வீடு.  வாடகை பிரச்சினை இல்லை.  ஏதோ வாழ்க்கை வண்டி மெதுவாக அசைந்து நகர ஆரம்பிக்க, , இவனும் கடையை நன்றாக நடத்த ஆரம்பித்து, அதில் வரும் இலாபத்துடன் வீட்டின் பேரில் கடனும் வாங்கி,  இரண்டு மாடி வீடாக கட்டுகிறான். அடுத்து திருமணம் ....ஒவ்வொருவருக்காக நடக்க ஆரம்பிக்க. வீட்டின் உரிமை பிரச்சினை தலை எடுக்கிறது. 

வீட்டின் தற்போதைய நிலைக்கு மூத்தவன் காரணம் என்றாலும், அப்பாவின் கடையால தானே அந்த பணமே வந்தது, அதனால் அதிகபட்ச உரிமை எடுத்துக்  கொள்ள முடியாது, எல்லோருக்கும் சம பங்கு தான் என்கிறார்கள் மற்றவர்கள்...

இவன் நினைத்தால்,  இதை பெரும் பிரச்சினை ஆக்கி, சண்டை யிட்டு, அதிக பங்கு கேட்டு கோர்டுக்கு மற்றவர்களையும் இழுத்து, வருடக்கணக்கில் இழுத்தடித்து இருக்கலாம்.  அதற்கு மாறாக அவன் எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொண்டான். மூத்த  ஆண் பிள்ளையாக, தன்  கடமையைத் தான் செய்தேன் என்றான்.   தனக்கு கொடுத்த பங்கை வாங்கிக் கொண்டு, தனியே வீடு வாங்கி  தன் குடித்தனத்தை தொடர்ந்தான்.  சட்டத்தின் பார்வையில் இது தான் நடக்கும்.  ஆனால் தர்மம் என்று ஒன்றுள்ளதே...அதன் பார்வையில், அவன் பிள்ளைகள் இன்று நன்றாக படித்து, பெரிய உத்தியோகத்தில் உள்ளனர். மற்றவர்களின் குடும்பம் பற்றி ..........ஒன்றும்  சொல்ல வேண்டாம்.

இதை எதற்கு இங்கு சொல்கிறேன் என்றால், சிலவற்றிற்கு கணக்கு பார்க்கக்  கூடாது.."உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது"  என்பார்கள் அதைத்  தான் இங்கு நான் சொல்ல வருவது.  பெற்ற தாய், தந்தை, எந்த குழந்தைக்கும் குறைவில்லாமல் பராமரிப்பது அவர்கள் கடமை என்றால், 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்" என்னும்  குறள் நி னைவிற்கு வருகிறதா? 

தந்தையின் கடமை என்று வரும் போதே மகனுக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது தானே...மற்ற பிள்ளைகள் தங்கள் கடமையை செய்தார்களா என்ற கேள்வி வேண்டாம். நாம் சரியாக நம் கடமையை செய்தோமா?  அப்பா வாங்கிய கடனை பிள்ளை அடை ப்பது அவன் கடன் தானே? அப்பா நம்மை வளர்ப் பதற்கு ஆன செலவை நம்மிடம் எதிர்பார்த்தாரா? இல்லையே ..... அது போலத்  தான் இதுவும்....

 "இது எப்படி சரியாகும்," கடனை அடைக்க உதவாத மற்ற பிள்ளைகளும் கடனை அடைத்த நானும் ஒரே பங்கு தான்  பெற வேண்டுமா?   எனக்கு கூட எழுதி வைக்காமல் வேறு ஒரு பிள்ளைக்கு அப்பா எழுதி வைத்தால் என்ன செய்வது| ? செலவு செய்த பணத்திற்கு கூட கொஞ்சம் கொத்தில் பங்கு  கிடைப்பது தானே நியாயம்? எ ன்று கேட்கலாம்.  ஆனால்  நீதி தேவதை கண்ணை மூடிக்  கொண்டிருக்கிறாள் தானே?  . அவளுக்கு நீங்கள் செலவு செய்தது தெரியாது.    பரம்பரை சொத்து என்றால், அனைத்து பிள்ளைகளுக்கும் சம உரிமை என்பதும்  சுய சம்பாத்திய சொத்து என்றால் அப்பா அவருக்கு பிடித்த யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம் என்பது மட்டும்  தான் தெரியும்.  வேண்டுமானால் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு , அந்த சொத்திற்காக நாம் செலவு செய்ததை காட்டி , கூட கொஞ்சம் பங்கு கேட்கலாம் தான்,,,அல்லது மொத்த சொத்தும்  நமக்கே சொந்தம் என்று வழக்கு போட்டு வாதாடலாம் தான். ..நீதி தேவதை அதையெல்லாம் குறித்து கொள்வாள்...அதற்கேற்ப தன நிலைப் பாட்டை  மாற்றி தீர்ப்பு  சொல்லலாம் தான் ...

ஆனால் ...நம் நாட்டின் தலை நீதிமன்றமான மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் கொள்கை என்ன தெரியுமா??

யதோ தர்மஸ்ததோ ஜயா


"எங்கு தர்மம் இருக்கறதோ அங்கு ஜெயம் (வெற்றி) உண்டு".

உச்ச நீதிமன்றத்தின் நோக்கமே இது வென்றால் நீதி வழங்குவது இல்லையா என்ற கேள்வி வரலாம்.  நீதி எண்பது சூழ்நிலைக்கேற்ப மாறக்  கூடியது.  கொலை செய்வது குற்றம் என்றால் அதை தன்  தற்காப்புக்காக செய்தால் அது குற்றம் அல்ல என்கிறது சட்டப்  புத்தகம்.  ஆனால் தர்மம் என்பது என்றும் நிலைத்தது. அதனால் தான் ,  நீதியின் வழியில் சென்று தர்மத்தை அடைவதே நீதிமன்றங்களின் தலையாய பணி  எனப்படுகிறது.   அதன் அடிப்படையில்சொத்து உரிமையை அப்பா மாற்றி எழுதும்போது,  நமக்கு வேண்டுமானால்,  நாம் செலவு செய்த பணம் நமக்கு கிடைக்காமல் போகலாம்.  ஆனால் அதை அமைதியுடன் ஏற்றுக் கொண்டால், தர்மம் தலை காக்கும்.  நம் குடும்பத்தின் தலையும் நிமிரும்.. இது அனுபவ பூர்வமாக நான் கண்டுணர்ந்த  உண்மை. 

எல்லாவற்றிற்கும் நீதிமன்றத்தின்  கதவை தட்டி, நம் கைப் பொருளையும் நேரத்தையும் வீணாக்கி,மனம் நொந்து அலைக்கழிக்கப் படுவதை விட,  மாறக்கூடியது எது,  மாறாதது எது ,இரண்டிற்கும்  உள்ள வித்யாசம் என்ன என்பதையும் உணர்ந்து செயல் படுவது தான் விவேகம் உள்ளவரின் வழி. 

நாமும் அந்த வழியை சார்ந்தவர்கள் தானே?


ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

கணக்கில் பணம் இல்லையென காசோலையை திருப்பினால் சட்டப்படி குற்றம் என்பதை மத்திய நிதி அமைச்சகம் ஏன் குற்றமில்லை என திருத்துகிறது ?

 இந்தியாவில் தொழில் செய்வதை சுலபமாக்கவும், நீதிமன்றகளிலும் சிறையிலும் உள்ள வழக்கு தேக்க நிலையை குறைக்கவும் நிதித்துறை அமைச்சகம் சமீபத்தில் , வெவவேறு சட்டங்களில் உள்ள 39 குற்றப்பிரிவுகளை குற்றத்தன்மையிலிருந்து நீக்க ஆலோசனை /கருத்து கேட்டு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் தான் செலாவணிச் சட்டம்… அதாங்க Negotiable Instruments Act, பிரிவு 138 தான் அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.

இந்த சட்டம் 1881 இயற்றப்பட்டாலும். இந்த குற்றப் பிரிவுகள் 138 முதல் 142 ஆகியவை 1988 ஆண்டு ஒரு சட்டத்திருத்தம் மூலம் கொண்டு வரப்பட்டது..

அப்படி என்ன முக்கியத்துவம் அந்த பிரிவு 138 ல் உள்ளது?

காசோலை பணம் இல்லை அல்லது வேறு குறிப்பிட்ட காரணத்தினால் திருப்பப பட்டால், தவறிழைத்தவர் இரண்டு வருடம் வரை நீளக்கூடிய சிறைத் தண்டனையோ, காசோலைப் பணத்தைப்போல இரு மடங்கு விதிக்ககூடிய அபராதமோ, அல்லது இரண்டுமோ தண்டனையாகப் பெற வேண்டும். .

நன்றி கூகிள்

சரி திடீரென இந்த குற்றத்தன்மை நீக்கம் குறித்த ஆலோசனை எதற்கு?

சட்டக் கமிசனின் சமீபத்திய அறிக்கையின்படி 38 லட்சத்திற்கும் மேற்பட்ட காசோலை மோசடி வழக்குகள் நாடெங்கிலும் உள்ள பல்வேறு நீதிமன்றகளில் நிலுவையில் உள்ளது என்றும் 7.6 லட்சம் வழக்குகள் டெல்லியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மட்டும் நிலுவையில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

(1) இந்த அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் உள்ளது, நம்முடைய தொழில் முன்னேற்றத்தில் பெரும் தேக்க நிலையை உருவாக்கி உள்ளது.

(௨) அதோடு இல்லாமல், அவை மற்ற முக்கியமான, சீரியசான வழக்குகள் பின் தள்ளப்பட்டு அதனால் பொதுமக்களுக்கும வழக்கு நடத்துபவர்களுக்கும் நீதித்துறையின் மேல் நம்பிக்கை குறைய காரணமாகிறது என்றும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

எனவே சிறு வழக்குகள் என்ற தரம் பிரிக்ககூடிய குற்றப் பிரிவுகள் குறித்து பட்டியல் தயார் செய்யப்பட்டது.

  1. இந்த 138 பிரிவு என்பது குற்றத்தன்மைக் கொண்டு பார்க்கும்போது, சிறிய குற்றமாகும். மேலும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 420 (Cheating) கீழும் பாதிக்கப்பட்டவர் புகார் மனு கொடுக்கலாம் என்று இருக்கும்போது இன்னொரு குற்றப் பிரிவு அதே குற்றத்திற்கு தேவையில்லை எனக் கருதப்பட்டது.
  2. மேலும் இந்த குற்றப் பிரிவின் தீவிரத்தன்மையானது ஏற்கெனவே, இந்த சட்டத்தில் பிரிவு 147 புகுத்தப்பட்டபோது , குறைக்கப்பட்டுவிட்டது. அது என்னவென்றால், இரண்டு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்திக் கொண்டால், குற்றவாளி மீதிருக்கும் குற்றம் விலக்கி கொள்ளலாம் என்பதே.
  3. அடுத்து, இந்த குற்றப் பிரிவு பெரும்பாலும் சிவில் தன்மை கொண்ட பிரச்சினைகளுடன் இனைந்து வருகிறது என்னும்போது அதற்கான தீர்வு சிவிலிலேயே கிடைக்கிறது.
  4. எனவே சிவில் தன்மை கொண்ட நடவடிக்கைகளுக்கு சிறைத் தண்டனை போன்றவை சொல்லப்படும்போது, அது அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே சிவில் தன்மை கொண்ட ஒரு வழக்கை குற்றத் தன்மை கொண்டதாக காணும்போது, நியாயமான நீதி விசாரணை என்பதும் அடிபடுகிறது.

இவையெல்லாம் தான் இந்த அறிவிப்பு வெளியாகக் காரணம்.

ஆனால் அதே சமயம், ஒரு சிவில் சட்டத்திற்கும் குற்றவியல் சட்டத்திற்கும் உள்ள வேறுபாடே, சமூகத்தில் 'குற்றவாளி' என்ற அடைமொழி கொடுப்பதால், ஏற்படும் பாதிப்பு ஆகும். அந்த பெயருடன், வேலை கிடைப்பதில் உள்ள சிரமம், பொதுப் பணியில் ஈடுபட உள்ள தடை, ……இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் தான் இந்த காசோலை மோசடி வழக்கினை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினை குற்றவாளிக்கு கொடுப்பது. ஆனால் சிவில் தன்மை கொண்ட வழக்கு நிலுவையில் இருந்தால் எந்த வித கெட்ட பெயரும் ஒருவருக்கு ஏற்படுவதில்லை.

இன்னொரூ முக்கிய விஷயம் குற்ற வழக்குகளை பொறுத்து, அவர் குற்றவாளி என்பதை நிரூபிப்பது அரசுத் தரப்பை சேர்ந்தது. ஆனால், சிவில் வழக்கைப் பொறுத்து யார் எந்த கட்சி செய்கிறாரோ அவரை பொறுத்தது.

இவையெல்லாம் காசோலை மோசடி வழக்கின் குற்றத் தன்மையை மாற்றும் முன் கவனிக்க வேண்டியது.

எந்த வித மாற்றம் கொண்டு வந்தாலும், அது தெளிவாகவும், ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், துரித பலன் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதே நம்முடைய அவா.

சனி, 19 மார்ச், 2022

ஜோடிக்கப்பட்ட வரதட்சணை வழக்கிலிருந்து அப்பாவி ஆண்களை காப்பாற்றுவது எப்படி?

         உண்மை தான் ..இன்றைய காலக் கட்டத்தில் அப்பாவி ஆண்கள் சிக்கிக் கொள்வது அதிகரித்துக்  கொண்டு தான் வருகிறது. 

          மற்ற நாடுகளை போல இல்லாமல், நம். நாட்டில் திருமணம் என்ற அ மைப்பு மிகவும் மதிக்கப்படுகிறது. ஆனால் சமீப காலங்களில், திருமணத்தை ஒட்டிய தகராறுகள் அதிகரித்து வருகின்றன. . பெண் அவளது கணவர் மற்றும் அவரது உறவினர்களால் துன்புறுத்தல் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு உரிய பாதுகாக்கும் கருவியாக தான், IPC இன் 498A பிரிவு ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்று வகைப்படுத்தபட்டு , அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை மாறி , அதிருப்தியடைந்த மனைவிகளால் அது ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது .

         கைது நடவடிக்கை என்பது ஒருவருக்கு அவமானத்தைத் தருகிறது, அவருடைய சுதந்திரத்தைத் தடுக்கிறது மறக்க முடியாத வடுக்களை என்றென்றும் ஏற்படுத்துகிறது. என்பதால், கணவர் மற்றும் அவரது உறவினர்களை இந்த விதியின் கீழ்  கைது செய்வதே அவர்களை துன்புறுத்துவதற்கான எளிய வழியாக கையாள்கின்றனர். .  பல வழக்குகளில், பல வருடங்களாக வெளிநாட்டில் வசிக்கும் கணவர்களின் சகோதரிகள், ஏன் படுக்கையில் இருக்கும் தாத்தா, பாட்டிகள் கூட கைது செய்யப்படுகிறார்கள்



                                                      ~!!.

            நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தால் வெளியிடப்பட்ட “இந்தியாவில் குற்றங்கள் 2012 புள்ளிவிவரங்கள்” படி,

  • 2012 ஆம் ஆண்டில், இந்த ஐபிசி 498-A பிரிவின் கீழான குற்றத்திற்காக இந்தியா முழுவதும் 1,97,762 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய 2011 ஆம் ஆண்டை விட 9.4% அதிகம்
  • 2012 இல் இந்த விதியின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் அதாவது 47,951 பேர் பெண்கள், கணவர்களின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் தாராளமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்ட மொத்த நபர்களில் இது 6% ஆகும்.
  • இது குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் செய்யப்படும் மொத்த குற்றங்களில் 4.5% ஆகும்,
  • திருட்டு மற்றும் காயம் தவிரத்த மற்ற குற்றங்களை விட இது அதிகம்.
  • பிரிவு 498A, IPC இன் கீழ் வழக்குகளில் குற்றப்பத்திரிகை விகிதம் 93.6% அதிகமாக உள்ளது, அதே சமயம் தண்டனை விகிதம் 15% மட்டுமே!!,
  • விசாரணை நிலுவையில் உள்ள 3 ,72,706 வழக்குகளில் கிட்டத்தட்ட 3,17,000 குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. !!

    இந்த புள்ளி விவரமே சொல்லும் வரதட்சணை கொடுமை தடுப்பு குற்றப் பிரிவு, எவ்வளவு தவறாக பிரயோகிக்கப்படுகிறது என்று!!

         இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், ஒரு பெண் வரதட்சணை புகார் கொடுத்தவுடன், அவள் கணவனின் குடும்பத்தாரை கைது செய்யும் மனப்பான்மை, காவல்துறைக்கு அதிகம் இருக்கிறது.

        போலிசாரின் இந்த போக்கை " குற்றவியல் நடைமுறை சட்டத்தின் உள்ளுறைந்த பாடத்தை காவல்துறை இன்னமும் கற்கவில்லை என்று தான் தெரிகிறது; .சுதந்திரம் பெற்று ஆறு தசாப்தங்களான போதிலும், அது அதன் காலனித்துவ பிம்பத்திலிருந்து வெளிவரவில்லை, அது பெரும்பாலும் துன்புறுத்தல், அடக்குமுறை ஆகியவற்றின் கருவியாகக் கருதப்படுகிறது. நிச்சயமாக பொதுமக்களின் நண்பனாகக் கருதப்படுவதில்லை. இந்த கைது செய்யும் அதிகாரம் போலிசின் ஆணவத்திற்கு பெரிதும் உதவுகிறது, மாஜிஸ்திரேட்டும் அதை சரி பார்க்கத் தவறுகிறார். . இது மட்டுமின்றி, . முதலில் கைது செய்து விட்டு பிறகு விசாரணையை தொடரும் அணுகுமுறை வெறுக்கத்தக்கது. " என்று அர்னேஷ் குமார் எதிர் பீகார் மாநில அரசு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் கூட தன் அதிருப்தியை காட்டியுள்ளது.

        ஒருவரின் சுதந்திரத்தை பறிக்கக்கூடிய, அவரை அவமானப் படுத்தக்கூடிய இந்த கடுமையானதான கைது அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை என்பது நீதிமன்றங்களால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் போதிய பலனைத் தரவில்லை. சட்ட கமிஷன்கள், போலீஸ் கமிஷன்கள் மற்றும் நீதிமன்றம் ஏராளமான தீர்ப்புகளில், கைது செய்யும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் போது தனிமனித சுதந்திரம் மற்றும் சமூக ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

        இந்த சட்ட நிலை இருந்தும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையவும் இல்லை.எனவே கடைசியாக நாடாளுமன்றம் தலையிட்டு, 2001 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட சட்டக் கமிஷனின் 177வது அறிக்கையின் பரிந்துரையின் பேரில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41 (சுருக்கமாக 'Cr.PC), தற்போதைய வடிவத்தில் இயற்றப்பட்டது. . 1994 ஆம் ஆண்டு சமர்பிக்கப்பட்ட 152வது மற்றும் 154வது அறிக்கையில் சட்டக் கமிஷன் அத்தகைய பரிந்துரையைச் செய்தது குறிப்பிடத்தக்கது.

      காவல் துறை எப்போது பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம் -என்று   அந்த பிரிவு 41 சொல்கிறது. இதிலிருந்து நாம் தெரிந்துக் கொள்வது என்னவென்றால்

  • அபராதத்துடனோ அல்லது இல்லாமளோ ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை நீட்டிக்கக்கூடிய ஒரு குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர அதை செய்தார் என்று திருப்தி அடைந்தால் மட்டுமே, அவரை ஒரு காவல்துறை அதிகாரி கைது செய்ய முடியாது.
  • அவ்வாறு கைது செய்வதற்கு முன், அந்த வழக்கில் அந்த நபர் மேலும் எந்த குற்றமும் செய்யாமல் தடுக்க, அத்தகைய கைது அவசியம் என்றும் திருப்தி அடைய வேண்டும்;
  • அல்லது வழக்கின் முறையான விசாரணைக்காக அவர் ஆஜராக மாட்டார் என்றோ
  • அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்திற்கான ஆதாரங்களை மறைத்து விடாமல் தடுக்கவோ
  • அல்லது அவர் அத்தகைய ஆதாரங்களை எந்த விதத்திலும் சிதைத்து விடாமல் தடுக்கவோ
  • அல்லது அவர் அந்த வழக்கின் ஒரு சாட்சி நீதிமன்றத்திற்கோ அல்லது காவல்துறை அதிகாரிக்கோ உண்மைகளை வெளிப்படுத்துவதிலிருந்து அவரைத் தடுக்கவோ தூண்டியோ , அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதியை வழங்குவதைத் தடுப்பதற்காக,
என்று சம்பவங்களின் அடிப்படையில் முடிவு செய்து கைது செய்யும் போது, ​​மேற்கூறிய ஏதேனும் விதிகளின் கீழ் முடிவெடுத்த காரணங்களை எழுத்துப் பூர்வமாக பதிவு செய்யவும் காவல்துறை அதிகாரியை சட்டம் கட்டாயப்படுத்துகிறது.  ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகவும் , அடையாளம் காணக்கூடியதுமான குற்றமாகவும் (Cognizable OFENCE) இருப்பதாலேயே , கைது செய்வது சட்டப்பூர்வமானது என்று செய்யக் கூடாது/ அதே போல, ரு நபரைக் கைது செய்யத் தேவையில்லாத போதும் அதற்கான காரணங்களையும் அந்த வழக்கில் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும்     ஆனாலும் அவர்கள், தங்களுக்கு ஏதோ அதிகாரம் இருப்பதாக நம்பிக் கொண்டு கைது செய்கிறார்கள்.

           காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை தேவையில்லாமல் கைது செய்யாமல் இருக்கவும் மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாகவும் காவலில் வைப்பதற்கு அங்கீகாரம் அளிப்பதையும் தவிர்க்கவும் உச்ச நீதிமன்றம் மேலே சொன்ன அர்னேஷ் குமார் வழக்கில் சில வழிமுறைகளை சொன்ன போது, "  கைது செய்யும் அதிகாரம் என்று இருந்தாலும் அதைச் செயல்படுத்துவதற்கான நியாயம் வேறு.. கைது செய்யும் அதிகாரத்தைத் தவிர, காவல்துறை அதிகாரிகள் அதற்கான காரணங்களை நியாயப்படுத்த வேண்டும். ஒரு நபருக்கு எதிராகச் செய்யப்படும் குற்றச்சாட்டின் பேரில் இயந்திர கதியில் கைது செய்ய முடியாது.' என்றது

அந்த தீர்ப்பின் படி,   போலிசாரின் கடமை எனப் பட்டவை

  •   குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை குறித்து சில விசாரணைகளுக்குப் பிறகு நியாயமான திருப்தி இல்லாமல் யாரும் கைது செய்யப்படுவதில்லை என்று செயல்படுவது ஒரு போலீஸ் அதிகாரிக்கு விவேகமாகவும் புத்திசாலித்தனமானதாகவும் இருக்கும்.  

  • கைது செய்வதற்கு முன் போலீஸ் அலுவலர தனக்குள்ளேயே ஒரு கேள்வியை வைக்க வேண்டும், "ஏன் கைது செய்ய வேண்டும்? இது உண்மையில் தேவையா? அது என்ன நோக்கத்திற்காக உதவும்? அது என்ன முடிவை அடையும்? இந்தக் கேள்விகளுக்குத் தீர்வு காணப்பட்டு, மேலே குறிப்பிட்டுள்ள ஒன்று அல்லது மற்ற நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே, கைது செய்வதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

  • காவல்துறையால் வாரண்ட் இல்லாமல் கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 22(2) மற்றும் பிரிவு 57, Cr.PC இன் கீழ், தேவையற்ற கால தாமதமின்றி, பயணத்திற்காக.தேவையான நேரத்தைத் தவிர்த்து 24 மணி நேரத்திற்குள், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த வேண்டும்
  • ஒரு வழக்கின் விசாரணையின் போது, ​​பிரிவு 167 Cr.PC இன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாஜிஸ்திரேட்டால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க முடியும்.

  • அந்த நபரை மேலும் குற்றம் செய்வதைத் தடுக்க அல்லது வழக்கின் முறையான விசாரணைக்காக கைது செய்வது அவசியம் என்று காவல்துறை அதிகாரி கருதினால். அதற்கான ஆதாரத்தை மாஜிஸ்திரேட்டிடம் அளிக்க வேண்டும்.
தடுப்புக் காவலை அங்கீகரிக்கும் அதிகாரம் மிகவும் புனிதமான செயல்பாடாகும். இது குடிமக்களின் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பதால் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதற்குத் தகுந்த தீவிரத்துடன் அது பிரயோகிக்கப்படவில்லை  என்பது பல சந்தர்ப்பங்களில், தடுப்புக் காவல் வழக்கமான, சாதாரண முறையில் அனுமதிக்கப்படுகிறது என்பதில் இருந்து தெரிகிறது.  

  மாஜிஸ்திரேட் கடமை என்பது      

  •  Cr.PC, பிரிவு 167 இன் கீழ் காவலில் வைக்க அங்கீகாரம் அளிக்கும் முன்,  காவல் அதிகாரியால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவனங்களை ஆராய வேன்டும்,
  •  
  • அவர் கைது செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு உட்பட்டது தானா ,  சட்ட நடைமுறைகளின் படியே  கைது செய்யப்பட்டுல்லாரா , அந்த  நபரின் அனைத்து அரசியலமைப்பு உரிமைகளும் திருப்திப்படுத்தப்பட்டதா என்று  முதலில் அவர் திருப்தி அடைய வேண்டும்.  
  • அதை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த பின்னரே, குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைக்க அங்கீகாரம் அளிக்கவேண்டும். .  
  • அது சுருக்கமாக இருக்கலாம் ஆனால் அந்த திருப்தி அதன் உத்தரவில் இருந்து பிரதிபலிக்க வேண்டும். காவல்துறை அதிகாரியின் முடிவின் அடிப்படையில் அது ஒருபோதும் இருக்கக்கூடாது.
  • ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அனுமதிப்பதற்காக தன் முன் ஆஜர்படுத்தப்பட்டால், கைது செய்ய குறிப்பிட்ட காரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான விடையை மாஜிஸ்திரேட் ஆராய வேண்டும், அப்படி இருந்தால் அந்த காரணங்கள் முதன்மையானவை, இரண்டாவதாக நியாயமான முடிவுக்கு வர மேலே கூறப்பட்ட ஒன்று அல்லது மற்ற நிபந்தனைகள் காவல்துறை அதிகாரி முடிவு எடுக்க வைத்ததையும் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்யவேண்டும்.  
  • காவல்துறை அதிகாரியின் கைது சட்டத்தின் பிரிவு 41 இன் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், மாஜிஸ்திரேட் அவரை மேலும் காவலில் வைப்பதற்கு அதிகாரம் அளிக்கக் கூடாது.., உடனே குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யவேண்டும்.

             தேவையற்ற கைது   என்பது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு  பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில், (2009 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டு சேர்க்கப்பட்ட பிரிவு 41A,  Cr.P விதி யாராலும் கடைப்பிடிக்கப்படாமலேயே இருந்தது.   இது பின்வருமாறு கூறுகிறது:

  • ஒரு நபரைக் கைது செய்யத் தேவையில்லாத வழக்குகளில், . போலீஸ் அதிகாரி முன் ஆஜராவதற்கான அறிவிப்பு.-பிரிவு 41 (1) இன் விதிகளின் கீழ் அந்த நபருக்கு ஒரு நோட்டிஸ் அனுப்பப்படும்.
  • அதில், அவர் மீது ஒரு நியாயமான புகார் செய்யப்பட்டுள்ளது என்றோ , நம்பகமான தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்றோ , அவர் அறியக்கூடிய குற்றத்தைச் செய்ததாக நியாயமான சந்தேகம் உள்ளது என்றோ குறிப்பிட்டு , அதை ஒத்து அந்த காவல்துறை அதிகாரி முன் அல்லது நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களில் ஆஜராக வேண்டும். என்று ஒரு அறிவிப்பு அனுப்பப்படும்..
  • இந்த அறிவிப்பை, வழக்குத் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்க வேண்டும், இந்த காலத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் நீட்டிக்கப்படலாம்;.
  • எந்தவொரு நபருக்கும் அத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டால், அறிவிப்பின் விதிமுறைகளுக்கு இணங்குவது அந்த நபரின் கடமையாகும்.
  • அத்தகைய நபர் நோட்டீசுக்கு இணங்கியும் , தொடர்ந்து இணங்கினால், நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்தைப் பொறுத்தவரையில், அவர் கைது செய்யப்பட மாட்டார், வேறு காரணங்களுக்காக, அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று காவல்துறை அதிகாரி கருதுகிறார் என்றால் அந்த காரணங்களை பதிவு செய்ய வேண்டும்.
  • அந்த நபர், எந்த நேரத்திலாவது நோட்டீஸின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் அல்லது தன்னை அடையாளம் காட்ட விரும்பவில்லை என்றால், காவல்துறை அதிகாரி, இது தொடர்பாக ஒரு தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு உட்பட்டு, நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்திற்காக கைது செய்யலாம்.

  • இது போன்ற நிலையிலும், பிரிவு 41 Cr.PC இன் கீழ் எதிர்பார்க்கப்படும் கைதுக்கான முன்மாதிரி நிபந்தனைபடியே கைது இருக்க வேண்டும் ;அதையும் மாஜிஸ்திரேட்டால் அதே ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்
  • குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைக் கைது செய்யக்கூடாது என்ற தீர்மானம், வழக்குத் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் மாஜிஸ்திரேட்டுக்கு ஒரு நகலுடன் அனுப்பப்பட வேண்டும்.;

         இந்த விதியை சுட்டிக்காட்டிய    மான்புமிகு உச்ச நீதிமன்றம், இதுபோல, குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை மாஜிஸ்திரேட்டின் உத்தரவு இல்லாமல், கைது செய்ய காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு 41, Cr.PC ன் விதிகள் துல்லியமாக அமல்படுத்தப்பட்டால், காவல்துறை அதிகாரிகள் வேண்டுமென்றோ அறியாமலோ செய்யும் தவறு திரும்பப் பெறப்பட்டு, முன்ஜாமீன் வழங்குவதற்காக நீதிமன்றத்தில் வரும் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்றது. .

        இந்த வழக்கை ஒரு முன்னோடி வழக்காக எடுத்துக் கொண்டு, இதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், " ஏழு வருடத்திற்கு குறையாத சிறை தண்டனை விதிக்கக் கூடிய குற்றம் தொடர்பான அனைத்து வழக்கிலும் பின்பற்ற வேண்டும். அதே போல, அனைத்து மாநில அரசுகளும், IPC இன் பிரிவு 498-A இன் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்படும் போது தன்னிச்சையாக கைது செய்ய வேண்டாம் என்று தனது காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும், என்றும்

        மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறினால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளாக்குவது தவிர, அந்த     பிராந்திய அதிகார வரம்பைக் கொண்ட உயர்நீதிமன்றத்தின் முன் நீதிமன்ற அவமதிப்புக்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். என்றும்

        சம்பந்தப்பட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மேற்கூறிய காரணங்களை பதிவு செய்யாமல் காவலில் வைப்பதை அங்கீகரிப்பது, உரிய உயர் நீதிமன்றத்தின் துறை ரீதியான நடவடிக்கைக்கு பொறுப்பாகும். என்றது

            இந்த தீர்ப்பு வந்தது 2014ல். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் போலிசாரின் இந்த தீர்ப்பு குறித்த அலட்சிய போக்கு இன்னமும் தொடர்கிறது என்பதை, சமீபத்தில் ஜகதீஷ் ஸ்ரீவஸ்தவா என்பவர் மகாராஷ்டிரா மாநில போலிசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் தெரிந்தது. இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றாமல், அதுவும் உச்ச நீதிமன்றத்தில் பிணை மனு விசாரணை நிலுவையில் இருந்த போது மனுதாரரை கைது செய்த மும்பை பொலிசாரின் நடவடிக்கையை மாண்புமிகு உச்ச நீதிமன்றம், கண்டித்தது. (ஜகதீஷ் ஸ்ரீவஸ்தவா v மகாராஷ்டிரா மாநில அரசு & ஒருவர் மேல்முறையீட்டுக்கான சிறப்பு விடுப்பு (Crl.) எண்(கள்). 1758/2022)

             இன்னும் ஒரு படி மேலே போய் , டெல்லி உயர்நீதிமன்றம், அவ்வாறு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றாமல் கைது செய்த போலிஸ் அதிகாரிக்கு ஒரு நாள் சிறை தனடனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்த போது . "கைது நடவடிக்கை, சிறைவாசம் ஒரு நபரை அழிக்கிறது. அதற்கு இணையாக பல அப்பாவி உறவினர்களை பாதிக்கிறது", என்றது . .அதை உணர்ந்து கொள்ளாத போலீசாருக்கும் தான் சிறை வாசம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரியட்டுமே!! தெலுங்கானா உயர் நீதிமன்றம் கூட இந்த வழிகாட்டுதலை பின்பற்றாமல் கைது செய்த போலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க , குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, அனுமதி வழங்கியது.


         எனவே அதிகாரம் உள்ள போலிசாரும், மாஜிஸ்திரேட்டுகளும் நீதி வழியில் நடந்து தர்மத்தை காத்தால், ,ஜோடிக்கப்பட்ட பொய்யான வழக்குகள் கொடுப்பது குறையும்..

         தர்மமும் நீதியும் வேறா என்ற கேள்வி நமக்குள் எழலாம்.. ஆமாம்......... நீதி மாறக் கூடியது .பெண் வலிமையற்றவள். அவள் பாதுகாக்கப்பட வேண்டியவள், என்பதால் தான் சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட்டன..ஆனால் அவளே அதற்கு எதிராக மாறும் போது, நீதியும் அவளுக்கு எதிராக மாறுகிறது அல்லவா? அப்படி நீதி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறக் கூடியது. ஆனால் தர்மம் என்றுமே நிலைத்தது. அதனால் தர்மத்தை காத்து நீதி வழி நடக்க வேண்டும். அதனால் தான் உச்ச நீதிமன்றமும் , "எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றியும் இருக்கும்" என்ற பொருளில் "யதோ தர்மஸ் ததோ ஜயாஹ் ' என்ற நோக்கத்தை முன்னிறுத்துகிறது.


              இது போன்று மணவாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை கண்டு  'இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?"  என்ற பட்டிமன்றம் நமக்குள் எழலாம்.

            இதே போன்ற ஒரு சந்தேகம் இரண்டு சீடர்களுக்குள் எழுந்தது. இவர்கள் அது குறித்து விவாதித்துக் கொண்டு இருக்கும் போது,  அங்கு வந்த அவர்கள் குருவிடம் அதற்கான பதிலை கேட்டனர்.  அவரோ அங்கிருந்த புளிய மரத்தை காட்டி, சில  நாள் அதன் அடியில் இருந்து தியானம் செய்யுமாறு சொல்லி சென்றுவிட்டார். இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.  "நாம் கேட்டது என்ன? இவர் சொல்வது என்ன...இருந்தாலும் அவர் சொல் படியே  செய்தனர்.   சிறிது   நாடகள் கழித்து அங்கு வந்த குரு, "புளிய மரத்தின் அடியில் இருந்தீர்களே ..உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்ததா?"  என்றார். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.\\\

    அப்போது குரு சொன்னார்  " புளியங்காய் ஆக இருக்கும் போது அதன்  எடை கனமாக இருக்கும்.  அதுவே பழமாக மாறும்போது, அதன் ஓட்டிலிருந்து விலகி இருக்கும். அது போல இந்த ஆத்மாவானது , பற்றற்ற தன்  உயரிய  நோக்கத்தை அடைய உதவக்கூடிய விதமாய்  அந்த உடல் என்னும் கூட்டை உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும். .  அது இல்லறமாக  இருந்தால் என்ன துறவறமாக  இருந்தால் என்ன.....நோக்கம் ஒன்று தானே அது தானே  அறம்  " என்றார்.   

நன்றி நண்பர்களே...............


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...