புரோ நோட்டு எழுதப்பட்ட நாளிலிருந்து மூன்று வருடங்\களுக்கு செல்லுபடியாகும் என்றாலும் அந்த கடன் குறித்து அந்த காலகெடுவிற்குள் கடன் பெற்றவர் கடனை ஒப்புக்கொண்டு அந்த புரோ நோட்டில் ஒரு மேற்குறிப்பு செய்தால், அந்த புரோ நோட்டின் காலக்கெடுவை அது நீடிக்கும்.
அந்த கடன் ஒப்புதல் என்பது ஒரு கடிதமாகவும் இருக்கலாம். மொத்தத்தில், கடன் நிலுவையை கடனாளி எழுத்து மூலமாக ஒப்புக்கொண்டிருந்தால், அது அந்த கடன் காலாவதியாவதை தடுக்கும்.
திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு சரி செய்யமுடியாத நிலையில் விரிசல் ஏற்படும் போது அதை தவிர்த்துவிட்டு இன்னொரு துணை வைத்துக் கொள்ளலாமா?
"முடியாது" என்று நமக்கு தெரியும்..அதை நீதிமன்றம் மூலமாக ரத்து செய்த பின்னரேயே இன்னொரு திருமணம் செய்துக் கொள்ள முடியும் தானே?!!.
அப்படி செய்யாமல் இன்னொருவரைத் திருமணம் செய்துக் கொண்டால், அது இருதார மணச் செயல் என்று தண்டிக்கிறது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 494..
அதுவும், அந்த குற்றம் செய்ததாக முதல் கணவனோ அல்லது மனைவியோ போலீசில் புகார் கொடுக்கும்போது தான், அந்த குற்ற நடவடிக்கை தொடங்குகிறது.
முதல் மனைவியின் சம்மதம் பெற்று இரண்டாம் திருமணம் செய்யும் ஆண்களுக்கு மத்தியில், சிலர் மறைத்து இரண்டாம் திருமணம் செய்துவிட்டு, அந்த மனைவியை அழைத்து வந்து காட்டும்போது தான் முதல் மனைவிக்கு விவரம் தெரியும்.கணவனை பொருளாராத ரீதியாக சார்ந்திருக்கும் போது கையறு நிலையில், கள்வனாலும் கணவன்…இல்லையில்லை…கல்லானாலும் கணவன்” என்று ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்தில் அவன் இருக்க, அந்த கணவன்மார்கள் அந்த குற்றத்திலிருந்து தப்பித்து வந்தனர்!!.
இப்போது பெண்களுக்கு சிறப்பு சட்டங்கள், சமஉரிமை என்று வந்துவிட,, போதாதற்கு ஒரு குடும்பத்தையே நடத்த திண்டாடும் நிலையில், இரண்டாவது குடும்பமா என்று யோசிக்கும் நிலைக்கு போயினர் ஆண்கள்.!!.
இதில், அந்த திருமணமும் தோற்று போகும் போது, விவாகரத்து கோரி, உரிய காலத்தில் தாக்கல் செய்தாலும், அவருடைய துணை அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் வழக்கு நீண்டுக் கொண்டே போய் உரிய காலத்தில் விவகாரத்து கிடைக்காமல், இன்னொரு திருமண அமைப்பே ஏற்பட முடியாமல் காலம் தாழ்ந்து விடுகிறது.
இதுவே இருவரும் மணமொத்து சேர்ந்து தாக்கல் செய்தால், ஆறு மாதத்தில் மணவிலக்கு பெற்று விடலாம்..
இந்த இடைப்பட்ட காலத்தில் திருமணம் செய்தாலும் "இரு மணம் செய்த குற்ற"த்திற்கு உள்ளக நேரிடும்!!.
இப்படி ஒரு கடுமையான அமைப்பு இருப்பதன் காரணம், திருமண உறவை சீர்குலையாமல் நீடிக்க வைக்க செய்யும் முயற்சியே…
அப்படியே விவாகரத்து கேட்டு மனு செய்தாலும், இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணவே முயற்சிக்கப்படும்.இதில் தோல்வியுற்ற பின்னரே நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.
இது முடிந்து தீர்ப்பு வந்தாலும், பாதிக்கப்பட்டவர மேல்முறையீடு போய்…
முடிவே இல்லாத தொடர்கதையாகி இளமையை தொலைக்கின்றனர்…அநேகர்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவருக்கு தனி சட்டமும், அதில் விவாகத்தை ரத்து செய்வது எளிது மட்டுமல்லாமல் நான்கு மனைவிகள் வரை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதால் (இப்போது இங்கு யாரும் அதை பின்பற்றுவதில்லை) அந்த மதத்தை சேர்ந்த ஆண்களுக்கு பிரச்சினை இல்லை..இதில் பாதிப்படைவது அந்த பெண்கன் மட்டுமே.!!
கிறித்துவ மதத்தில் அப்போதிருந்தே, விவாகரத்து ஒரு கடினமான நடைமுறை..
விசாரணை நீதிமன்றம் விவாகரத்து வழங்கினாலும், அதை மாண்புமிகு உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் தான் செல்லும்..நல்லவேளை..இது போன்ற விதி இந்து திருமணத்திற்கு இல்லை.
ஆனாலும் இந்த இரு துணை குற்ற சட்டபிரிவு இருக்கிறதே..
இதை குறித்து சில வினாக்கள்..உங்களிடம் கேட்கவா? விடையை மனதில் குறித்து கொண்டே வாருங்கள்.. கடைசியில் பார்க்கலாம்..
இந்திய தண்டனை சட்டம் என்பது சாதி, மதம், பாலினம், , இனம் மற்றும் தேசியம் போன்ற வித்யாசம் இல்லாமல், , 3, 4 மற்றும் 5 பிரிவுகளுக்கு உட்பட்டு, எல்லோருக்கும், பொருந்தக் கூடிய மதச்சார்பற்ற சட்டம் என்னும்போது, . ஒரு செயல் சில பிரிவினருக்குக் குற்றமாகவும் மற்றவர்களுக்கு குற்றம் இல்லாமலும் இருக்க முடியாது இல்லையா?
ஆனால், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 494 இந்து மக்களை மட்டும் தானே தண்டிக்கிறது? இது, அவர்களின் தனிப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி, அதன் அடிப்படையில் இரண்டாவது திருமணத்தின் செயலைத் குற்றமாக்குகிறது. அப்படியானால் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே அது பாகுபாடு காட்டுகிறதே?."
இது, குடிமக்களுக்கு சம உரிமை கொடுக்கும் அரசியலமைப்பபு சட்டப்பிரிவு 14 வது பிரிவை மீறுவதாக உள்ளது தானே?.
பிரிவு 494, கிரிமினல் நோக்கம் இல்லாத குற்றம் தானே?. இது கடுமையான பொறுப்புக் குற்றங்களின் வகைக்குள் எப்படி வரும்?..
"ஒரு குற்றமிழைக்கக்கூடிய மன நிலை இல்லாத குற்றத்திற்காக ஒருவர் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுபவது, தேவையில்லாதது, நியாயமற்றது, சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது, அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 14 மற்றும் 21 வது பிரிவுகளுக்கு எதிரானது அல்லவா?
அந்த குற்ற வழக்குக்கு விதிவிலக்காக தனிப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் முஸ்லிம் செய்யும் இன்னோரு திருமணத்தின் செல்லுபடியை அங்கீகரிக்கிற. அளவிற்கு, சட்டப்பிரிவு 494, இந்து, கிறிஸ்தவம் அல்லது பிற சமூகங்களுக்கு அங்கீகாரம் கிடையாது..இது சமத்துவத்திற்கான அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது தானே?.
இந்த குற்றம் உலகளாவியதும் அல்ல என்னும்போது, இருதாரமணச் செயல் குற்றமாக்கப்படக் கூடாத ஒன்று என்பதைத் தானே குறிக்கிறது?.
சுருக்கமாக, குற்றம் எண்ணம் இல்லாததும் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு இருதார மணம் குற்றமல்ல என்பது, இருதார மணத்தின் செயலில் உள்ளார்ந்த குற்றவியல் எதுவும் இல்லை என்பதை தானே சுட்டிக்காட்டுகிறது ?
இருதார மணம் என்பது விவாகரத்துக்கான காரணமாக கருதப்பட வேண்டுமே தவிர, கிரிமினல் குற்றமாக அல்ல.. இருதார மணம் என்பது திருமண வாழ்க்கை தொடர்பான தனிப்பட்ட விவகாரம் என்பதால், அதை குற்றமாக்குவது திருமண வாழ்க்கையின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்கு உதவாது தானே?
திருமணமான ஒருவர் மற்றொருவருடன் இணைந்து வாழ்வது குற்றமல்ல என்னும்போது, , திருமணம் போன்ற முறையான ஏற்பாட்டிற்குப் பிறகு இதுபோன்ற கூட்டுவாழ்வு ஏற்பட்டால், அந்தச் செயல் எப்படி குற்றமாகும்.?
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, இருதார மணம் ஒரு குற்றமாக தொடர அனுமதிப்பது காலத்துக்கு மாறானது மட்டுமல்ல, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது தானே?
என்ன,..இப்படியெல்லாம் கேட்க முடியுமா? என்று தானே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்..?
இந்த வினாக்களை எல்லாம் நான் கேட்கவில்லை…
தங்கள்.தரப்பு வாதங்களாக வைத்து ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..கல்வியறிவு அதிகம் கொண்ட கேரளத்தின் மாண்புமிகு உய்ரநீதிமன்றத்தில்.!!
என்னவென்று?
"இந்த இரு தார மணம் என்பது குற்றச்செயல் என்னும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 494, குடிமக்களுக்கு சமஉரிமை கொடுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை மீறுவதாகவும், அதை ரத்து செய்யக் கோரியும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
அதுவும் இந்த வழக்கை தாக்கல் செய்தது ஒரு பெண்னின் தந்தை என்று தெரிந்தால் இன்னமும் ஆச்சரியப்படுவீர்கள்
ஆண்களுக்கு கூட இல்லாத அவசரம் அவசியம் அவருக்கு என்ன என்றால், ..இருக்கிறதே..!!
அவரும், அவரது மகள் மற்றும் பிற உறவினர்கள் ஐபிசியின் பிரிவு 34 , பிரிவு 494 இன் கீழ் குற்றங்களைச் செய்ததற்காக கிரிமினல் வழக்கை எதிர்கொள்கின்றனர்.
அவர்கள் மீதான குற்றம் தான் என்ன? என்கிறீர்களா?
விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர் தனது மகளுக்கு இன்னோரு திருமணம் செய்துவைத்துள்ளார் என்பது தான்.!!.
இந்த மனுவை சமீபத்தில் விசாரணைகு ஏற்றுக்கொண்ட கேரள உயர் நீதிமன்றம் கேரள அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது..
நாமும் இந்த வழக்கின் தீர்ப்புக்காக காத்திருப்போம!!
வக்பு வாரியம் அரசின் நிதியால் நடத்தப்படுவது..அதனால் அங்கு அரசிலைமப்பு சட்டத்தின் படி பணியமர்த்துவதில் எந்த பாகுபாடும் காட்டமுடியாது..
ஆனால் இந்த அறநிலைய துறைக்கு கோவில்களில் வரும் பணம் உபயோகம் செய்யப்படுகிறது.. அறநிலைய துறை அதிகாரிகளுக்கு கார் வாங்க கோவில் பணம் செலவழிக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்ததே!!
அதனால் தான் அங்கு இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்படுகின்றனர்!
அனைவரும் தடுமாறும் இடம் இது தான்.மாண்புமிகு உயரநீதிமண்றத்தால் பிணை வழங்க முடியம் என்றால் அமர்வு நீதிமன்றமோ மாஜிஸ்திரேட் நீதிமன்றமோ அதை செய்யாதது ஏன்? என்கிறார்கள்.
அவர்கள் மறந்தது இது தான்.👇
மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அதற்கு மேற்பட்ட அமர்வு நீதிமன்றம் இரண்டும் இந்திய தண்டனை சட்டம், குற்ற விசாரணை நடைமுறை சட்டம் மற்றும் அந்த குறிப்பிட்ட சிறப்பு சட்டம்,.இங்கு போதை தடுப்பு சட்டம் இவற்றின் அடிப்படையிலேயே செயல்பட முடியும்
பிணையில்லா குற்றங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அதன் போக்கை இடைஞ்சல் படுத்தும் வண்ணம், ஜாமீன் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதுவும் அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் போது, பிணை வழங்க முடியாது.
ஆனால் மாண்புமிகு உயர் நீதிமன்றத்திற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் துணை உள்ளது. அதற்கென்றே உள்ள விசேஷ அதிகாரத்தை கொண்டு, ஒரு குடிமகன், போலீஸ் விசாரணை நிலுவையில் உள்ள போது,, தேவையின்றி சிறைக்காவலில் உள்ளார் என்று கருதும் போது, உடன் அவரை விடுவிக்க உத்தரவு இடலாம்.அதன் அடிப்படையில் மாண்புமிகு உயர்நீதிமன்றமும் சில நிபந்தனைகள் கீழ் இந்த பிணை உத்தரவும் இட்டுள்ளது..
அப்படியானால் நேரிடையாக உயர்நீதிமன்றத்தில் பிணை மனு போடலாமே என்றால் கூடாது.
விசாரணை நீதிமன்றங்களில் பிணை மனு போட்டு அங்கு மறுக்கப்பட்டாலேயே உயர்நீதிமன்றத்தில் மனு செய்ய முடியும்
அதை விட, ஒருவருக்கு சொந்தமான இடத்தில் புதையல் கண்டு எடுத்தாலும் அரசுக்கு தான் அது சொந்தம்…அது நியாயமோ இல்லையோ …!!
சென்னை; உயர் நீதிமன்ற வளாகத்தில், தான் அரசு பேராட்சியர் மற்றும் சொத்தாட்சியர் அலுவலகம் உள்ளது. அதை நிர்வகிப்பது மாவட்ட நீதிபதி என்றாலும், அது அரசு அலுவலகம் தான்.வாரிசு இல்லாதவர்களின் சொத்துகளை அரசு தன நிர்வாகத்தில் எடுத்துக் கொள்ளும். அதன் சொத்தாட்சியராக, அந்த மாவட்ட நீதிபதி செயல்படுவார்.
சமீபத்தில் கூட ,பச்சையப்பன் அறக்கட்டளையை அரசு சொத்தாட்சியர் தான் நிர்வகிக்க வேண்டும் என்று மாண்புமிகு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கும். அது போல ஒரு பொது அறக்கட்டளையில் நிர்வாகம் சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தால், அரசே அதை தன நிர்வாகத்தில் எடுத்து கொள்ளும்… சொத்தாட்சியர் தான் அறங்காவளரும் கூட. ஆனால், நடைமுறையில், மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்பவே அவ்வாறு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், தங்கள் உயிலின்படி சில சொத்துகளை ஒதுக்கி, அரசு நிர்வாகம் செய்து, தங்கள் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்று எழுதி வைத்து விட்டு சென்றவர்களின் சொத்துகளும் அங்கு நிர்வகிக்கப்படுகின்றன. இன்றைய தேதியில் சுமார் 200 அறக்கட்டளை சொத்துக்கள் அவ்வாறு நிர்வகிப்படுகின்றன..
.சொத்தாட்சியருக்கு அந்த சொத்துகளை நிர்வகிப்பதில் ஏகபோக உரிமை, அதிகாரம் உள்ளது என்றாலும், அதை நிர்வகிப்பதில் ஒரு ஒழுங்குமுறையை கொண்டு வந்த பெருமை மாண்புமிகு நீதியரசர் ஆதிநாதன் அவர்களையே சாரும்.
அவர் சொத்தாட்சியராக அங்கு பணிபுரிந்த காலத்தில், அந்த எஸடேட்டுகளில சொன்ன, தான தருமங்கள் காலத்திற்கேற்ப ஏற்றம் பெறாமலும், ஆனால் அதன் எஸ்டேட் குமாஸ்தாக்கள் சம்பளம் மட்டும் உயர்ந்துக் கொண்டே வந்ததையும், அறக்கட்டளை சொத்துகள் உரிய முறையில் பராமரிக்கபடவில்லை என்பதையும், அதன் வருவாய் வீனடிக்கப்படுகின்றன என்பதையும் தெரிந்துக்கொண்டு, அதில் மாற்றங்கள் கொண்டு வந்து, அதற்கு மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் பெற்று அமுல்படுத்தினார்.
சொத்தாட்சியர், இதற்கென்றே இருக்கும் மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபயரசரிடம் கலந்து ஆலோசித்து தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நடைமுறையை கொண்டு வந்தார். அந்த நிர்வாக சீர்திருத்தங்கள் எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டன.
உயிலில் சொன்ன தரும காரியங்கள் மட்டுமல்லாமல், கல்வி உதவி பணம் வழங்குதல் போன்ற பொது நலுனுக்கும், , அந்த எஸ்டேட் பணம் வழங்கப்படுகிறது. . சமீபத்தில் கூட முதலமைச்சரின் கொரானா நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அவர்கள் கொடுத்ததாக செய்தி வந்தது நினைவிருக்கலாம்.
அங்கு நிர்வகிக்கப்பட்டு வரும் சொத்துகளின் சொந்தக்காரர்களில் மறைமலை அடிகளார், புகழ் பெற்ற வழக்கறிஞர் எத்திராஜ் போன்றோரும் அடங்குவர். அவர்கள் இது குறித்து தங்கள் கைப்பட எழுதிய உயில் பிரதி அங்கு பாதுகாக்கபட்டு வருகின்றது. ,
வாரிசு இல்லையென்றால் தான் அரசு அந்த சொத்துகளை நிர்வகிக்க எடுத்துக் கொள்ளும் என்றில்லை., அது போல எடுத்துக்கொள்ள சொல்லி உயில் எழுதி வைத்தாலும் கூட , எடுத்து கொள்வது உண்டு என்பது தெரிகிறது அல்லவா…
அப்போதெல்லாம் நாடே தங்கள் வாரிசு என்று நினைத்த மாமேதைகள் இருந்தனர்.
ஆனால் இப்போது, நாடே தங்கள் சொத்து என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர்!!
பின்னே வாரிசுக்கு சாதாரண "சொத்தை!!" "வீட்டை கொடுப்பது கேவலமல்லவா??!!
இவன் வேலை சட்டுனு முடியனும்.அதுவும் மனு போட்ட மத்தவங்களுக்கும் முன்னாடி!!
இல்லேன்னா ..விதிமுறைப்படி அது செய்யக்கூடாத வேலையாய் இருக்கணும்!!
சமீபத்திய செய்தி ஒன்று படித்தேன். தமிழ்நாட்டில் கொரானா தடுப்பூசி போடுவதில் ஆள்மாறாட்டம் அதிகரித்து வருகிறதாம்!!
தடுப்பூசிக்கு உள்ள டிமாண்ட் காரணமாக நிறைய பேர் இன்னமும் போடவில்லை இல்லையா?
ஆனால் நிறைய அலுவலகங்களில் அந்த தடுப்பூசி சான்று கேட்கிறார்கள்..வேலைக்கும் போகவேண்டும் என்பதால் சுகாதார பணியாளர்கள் உதவியுடன், ஆதார் சான்று மூலம் தடுப்பூசி சான்றிதழ் பெற்றுவிடுகிறார்கள்.இந்த பக்கம் காலேஜ்க்கு பிள்ளையை தடுப்பூசி போடாமல் அனுப்ப தயங்கும் பெற்றோர், சான்று தேவையில்லை, ஊசி மட்டும் போட்டால் போதும் என்கின்றனர்..ஆனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவருக்கு இன்னமும் தடுப்பூசி போட வில்லை. இவர்களும், சுகாதார பணியாளரை அணுகி…
எப்படியோ தப்பு செய்ய ஒரு அரசு ஊழியரை தூண்டுபவனும் ஓரு குற்றவாளி தானே..இவன் கொடுப்பதை வாங்குவதால் அவனும் ஒரு குற்றவாளி.ஆனால் சட்டம் அரசு ஊழியரை முதல் குற்றவாளியாகவும், இவனை இரண்டாவது குற்றவாளியாக தான் பார்க்கிறது..
ஏன்?
அரசு ஊழியன், அவனுக்கு என்று வகுக்கப்பட்ட நடத்தை விதிகளை மீறியதால்.
தன்னை பணி அமர்த்திய அரசுக்கு உண்மையாக இல்லாததால்…
அவனுடைய இந்த நடத்தைகெட்டத்தனத்தை புகழ்வது, ஊக்குவிப்பதும் இவன் தான்.
"அவன் ரொம்ப யோக்கியனப்பா..வாங்கின காசுக்கு கரெக்ட்டா வேலையை முடிச்சு குடுத்துடுவான்"ன்னு புகழ்வதும், விதிகளை காட்டி, சரியில்லாதது நியாயமாக இல்லாதவற்றை மறுக்கும் நேர்மையான அரசு ஊழியனை பொய் புகார் கொடுத்து, சிக்கலில் மாட்டிவிடுவதும் சாட்சாத் இவனே..!!
மக்கள் உரிமைகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்..தங்களுக்கு அடிப்படை கடமையும் உண்டு என்பதை மறந்து!!
அதனால் அரசு ஊழியர்களும் ஒரு படி உயர்ந்து தங்கள் கடமையை செய்வதற்கும் கிம்பளம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் உச்சாணிக்கிளைக்கு தாவிவிட்டனர்.
இப்படித்தான் போன மாதம் ஒரு நாள் வாசலில் அழைப்பு மணியோசை..தபால் காரர்.. நான் கதவை திறந்தவுடன், ஒரு ஒப்புதல் அட்டையை நீட்டினார்..என்ன தபால் வந்திருக்கும் என்று யோசித்தபடியே கையெழுத்திட்டேன்.பிறகு ஒரு தாளை நீட்டி அங்கும் கையெழுத்து போடச்சொன்னார்.
"முதலில் தபாலை கொடுங்கள்.பிறகு கையெழுத்து போடுகிறேன்" என்றேன். அது தானே முறை?
"இல்லை. நிறைய பேர் தபாலை வாங்கி பார்த்து விட்டு, "வாங்க முடியாது" என்கிறார்கள்.அதனால் தான் இப்படி…நீங்கள் அப்படி செய்யமாட்டீர்கள்" என்றபடியே தபாலை நீட்டினார்.
"வாங்கவில்லை என்றால் அப்படியே குறித்துக்கொள்வது தானே.அதற்காக தபாலை கொடுக்காமலேயே கையெழுத்து கேட்பது சரியல்ல" என்றபடியே கையெழுத்து போட்டுக்கொடுத்தேன்.
"ஆமாம். அதை படித்துப் பார்த்து சந்தோஷமான செய்தி ஏதும் என்றால் இனாம் கொடுக்கலாம் தான்...அதற்காக தபால் வந்தாலே எப்படி பணம் கேட்கிறீர்கள்..இதை கொடுப்பது தானே உங்கள் வேலையே?"
பேசாமல் நகர்ந்தார்.
இரண்டு வாரம் கழித்து, வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பார்க்கிறேன். வந்திருக்கும் தபால்கள் விசுறியடிக்கப்பட்டு மூலையில் கிடந்தன.
அவர் கடமையை செய்துள்ளாராம்.. !
நானும் என் கடமையை செய்துள்ளேன்!!
யோசித்துப் பார்க்கும்போது, இந்த நிலைக்கு இவர்கள் போனதற்கு மிஸ்டர் பொதுஜனமும் ஒரு காரணம் தானே?!
"உன் கடமையை செய்ய நான் ஏன் எதுவும் கொடுக்க வேண்டும்?" என்று கேட்காமல், தன் வேலை நடந்தால் சரி என்கிற சுயநலம்..
லஞ்சம் கொடுத்தும் வேலை நடக்கவிட்டால், எப்படி போய் புகார் கொடுப்பது என்பது சிலரின் சந்தேகம். .தான் ஏமாந்ததும் இல்லாமல் லஞ்சம் கொடுத்ததற்கு ஏழு வருடம் சிறை என்றால்?
இப்போது தான் சட்டத்தில் திருத்தம் வந்துவிட்டதே!!
லஞ்சம் கொடுக்காமல் தன் கோரிக்கை நிறைவேற "மெனக்கிடும்" நபர்களை "வித்தியாசமாக" பார்ப்பது!!
இல்லையென்றால், சரியில்லாத கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கும் ஒரு நேர்மையான அரசு ஊழியரை "பிழைக்க தெரியாதவன்" என்று பட்டம் கொடுப்பது, பொய் புகார் கொடுத்து, "தான் நேர்மையாய் இருந்ததற்கு இந்த தண்டனையா?!"என்று அவனை நொந்துப் போக வைப்பது,
பொய் புகார் கொடுத்து, அது உண்மையில்லை என்று தெரியவந்தால், புகார்தாரர் மீதே போலீஸ் புகார் கொடுக்கலாம்…ஆனால் ஏற்கெனவே நொந்து போயி, "விட்டால் போதும்" என்ற விரக்திநிலையில் இருப்பவர் அதை செய்வதில்லை..அது இவர்களுக்கு வசதி வேறு!!
லஞ்சம் வாங்குபவன் மீது, எப்போது லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சென்று புகார் அளிக்க மறுக்கின்றனர் தெரியுமா?
"என்னத்தை அவன் பெரிசா கேட்டுட்டான்..ஊரிலே நடக்காததையா செஞ்சுட்டான்" என்று எப்போது அவனுக்கு வரிந்துக்கட்டிக்கொண்டு வருகின்றனர்?
1.தன்னுடைய சாதி சனத்தில் ஒருவன்
2."ஆளுக்கு மேல்மட்டத்திலே நிறைய பழக்கம். பெரிய இடத்து பொல்லாப்பு எதுக்கு?°
3. நாளே பின்னே அவனாலே நமக்கும் ஏதாவது காரியம் ஆகும்"
4. "அவன் தான் வாங்குற காசுக்கு கரெக்ட்டா வேலையை முடிச்சு குடுத்துடுறானே?"
5. எத்தனையோ பேரு கிட்டே வாங்குறான்.நான் மட்டும் ஏன் புகார் கொடுக்கணும்?"
.பணத்தின் பின்னால் ஒடுபவரின் கதி என்னாகும் என்று விளக்குகிறார் ஓஷோ.
" அதிகாரம், கவுரவம் இவற்றால் கவரப்படும் மக்கள் இழப்பது வேறொன்றுமில்லை.. வாழ்க்கையைத் தான்”
.அட போங்கப்பா..லஞ்சம் வாங்குறவன் தான் வசதியாயிருக்கான்"னு உங்க மைண்ட்வாய்ஸ் சொன்னதை நானும் கேட்டுட்டேன்!!
உண்மை தான். இரண்டு மாதம் முன்பு மாண்புமிகு கர்நாடகா உயர் நீதிமன்றம் கூட இது சம்பந்தமான ஒரு முக்கிய தீர்ப்பை சொன்னது..
அரசு ஊழியர் மட்டும் தானே இந்த லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வருவார்கள் என்று நினைத்திருந்தோம்?
"அரசு ஊழிடர் மட்டுமல்ல பொது கடமையாற்றும் தனி நபரும் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர். அவரும் லஞ்ச ஒழிப்பு சட்டம் கீழ் வருவார் "என்றது.
அந்த வழக்கில் மனுதாரர், தான் அரசு ஊழியர் அல்ல என்பதால் தனக்கு இந்த சட்ட. பொருந்தாது என்று வாதிட்டார்..ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம், அவர் பணி செய்யும் அமைப்பிற்கு அரசு நிதி தருவதால் அவரும் அந்த சட்டத்தின் வரையறைக்குள் வருவார்" என்றது!!
இந்த தீர்ப்பில்,
"நம் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையாக ஊழல் கருதப்படுகிறது. இது ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் குறைத்து மதிப்பிட வைக்கிறது .மேலும் மனித உரிமைகளையும் அது மீறுகிறது.
ஊழல்வாதிகள் சட்ட அமைப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அதனால்தான் இது "குறைந்த ஆபத்து ஆனால் அதிக லாபம் " தரும் வணிகமாக மாறியுள்ளது. தவறான காரியத்தைச் செய்வதற்கு லஞ்சம். என்பது போய், ஒரு குடிமகனுக்கு சட்டப்படி உரிமையான சரியான விஷயங்களைச் செய்யவும் லஞ்சம் என்ற நிலையை அடையும் போது, சமூகத்தின் தார்மீக அமைப்பே அழிக்கப்படுகிறது" என்று தன் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது.
பொய் அதிகம் பேர் சொல்வதாலேயே உண்மையாகிவிடாது.
அது போல, தவறை அதிகம் பேர் செய்வதாலேயே அது சரியானது ஆகிவிடாது இல்லையா!!
"எப்போதெல்லாம் பெருமான்மையில் ஒருவராக நம்மை உணர்கிறோமோ அந்த தருணம் தான், நாம் சற்று நிதானித்து பிரதிபலிக்கும் நேரம் என்பதை உணரவேண்டும்" என்கிறார் மார்க் ட்வைன்.
ஆனால்..
"நேற்று நான் புத்திசாலியாக இருந்தேன்.அதனால் இந்த உலகத்தை மாற்ற நினைத்தேன். இன்று ஞானியாகி விட்டேன்.அதனால் என்னை மாற்றி கொண்டுவிட்டேன்" என்று ரூமி சொன்னதை மக்கள் தவறாக புரிந்துக் கொண்டுவிட்டார்களோ?!!
விளம்பரத்துக்காக போடப்பட்ட வழக்கு என்று வழக்கை தள்ளுபடி செய்ததும் அல்லாமல் 5000 ரூபாய் செலவுத்தொகை போட்டு, மேலும் இரண்டு வருடங்களுக்கு பொது நல வழக்கு என்று எதுவும் மனுதாரர் போடக்கூடாது என்றும் அப்படியம் போடவேண்டும் என்றால் நீதிமன்றத்தின் முன்னனுமதி வாங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது..
அப்படி நீதிமண்றத்தை எரிச்சல் மூட்டிய வழக்கின் சாராம்சம் தான் என்ன?
சமீபத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59லிருந்து 60 ஆக அரசு உயர்த்தியது அல்லவா? அப்படி உயர்த்தியதால் நாட்டில் ஏற்கெனவே உயர்ந்து வரும் வேலையில்லா திண்டாடத்தை இது அதிகப்படுத்தும் என்று அதை எதிர்த்த "பொது நல" வழக்கு.!!
நீதிமண்றம் எரிச்சல் அடைய இதில் என்ன இருக்கிறது? நல்ல வேலை தானே செய்திருக்கிறார் என்று நினைப்பீர்கள்.
ஆனால் நடந்தது தெரிந்தால் உயர்நீதிமமன்றம் அதன் நேரம் வீனடிக்கப்பட்டதாக ஏன் எரிச்சல் அடைந்தது சரி தான் என்பீர்கள்.
ஆனால் இந்த பரிகாரம் கேட்க என செய்யவேண்டும்? எந்த விதத்தில் வேலையில்லா திண்டாட்டதோடு அது தொடர்புடையது என்று விளக்க வேண்டாமா? குறைந்த பட்சம், டேட்டாவாவது சேகரித்து கொடுக்கவேண்டாமா? ஒன்றுமேயில்லை…
இப்போது ஏதேனும் வகையில் பரபரப்பாகவேணும் செய்தியில் அடிபட்டு தான் பிரபலம் ஆக துடிக்கின்ற மனோபாவம் அதிகரித்து உள்ளது. அது எதிர்மறையாக இருந்தாலும் சரி என்று.. அதற்கு காரணம் ஆர்ப்பரிக்கும் ஆசை.
"ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு"
என்று தானே வள்ளுவர் சொன்னார்.. அதை தானே செய்கிறார்கள் என்கிறீர்களா?
ஆனால் எந்த விதமான புகழ் சம்பாதிக்கவேண்டும் என்றும் சொல்கிறாரே…
இந்த நேர்பட வாழ்தல் இல்லாதோருக்கு கிடைக்கும் பேர் எதிர்மறையானது .அப்படிப்பட்ட பேர வாங்குபவர்கள் தான் தன்னை நொந்துக் கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
புகழ்பட வாழாதார் தந் நோவார்
தமமை
இகழ்வாரை நோவது எவன்.
இதற்கு கலைஞர் உரை எழுதுகிறார் பாருங்கள்..
"உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் தம்மை நொந்துகொள்ளவேண்டுமே தவிர தமது செயல்களை இகழ்வோரை நொந்து கொள்வது எதற்காக? என்கிறார்.
இன்னொரு வகையினர் இருக்கிறார்கள் "நீங்க நல்லவருங்க. வல்லவருங்க" என்று துதி பாடுவதில் மயங்கி தன்னுடையதை இழப்பவரும் உண்டு.. அவர்களுக்கெல்லாம் லக்கினத்தில் குரு இருப்பார்!!
அப்படி அண்டி வாழ்ந்து புகழ்வோரையும் அவ்வையார் விட்டு வைக்கவில்லை.
"பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர்விடுகை சால உறும்"
நல்ல குடியில் பிறந்தவர்கள் வயிறு வளர்பதற்காக அடுத்தவரை அண்டி, அவரை புகழ்ந்து பிச்சை வாங்கி வாழ்வது சீச்சீ என்று கூறும் அளவிற்கு இழிவான செயலாகும். இப்படி மானம் விட்டு உயிர் வாழ்வதை விட இறப்பது மேல்.
என்று வசை பாடுகிறார்..
அப்படியானால் எப்படியாவது புகழ் பெறும் ஆசை தவறு இல்லையா?
அப்படியானால் நல்ல ஆசை, கெட்ட ஆசை என்று எப்படி பிரித்து அறிவது?
ஆசை தானே உயிரின் அடிப்படை. அது நாம் வளர வளர வயதுக்கு ஏற்றது போல அதுவும் பரிணாம வளர்ச்சி அடைகிறது. பருவ வயதில், எதிரினத்தின் மீது ஆசை, நல்ல வேலை/ தொழில் செய்ய ஆசை , கோடீஸ்வரனாக ஆசை, அந்த காலத்து ஒனிடா டிவி விளம்பரம் வருமே "சொந்தக்காரரின் பெருமை, அண்டை வீட்டுக்காரரின் பொறாமை"..அது போன்ற அழகான மனைவி..அமைய ஆசை ..இப்படி ஆசைக்கு தான் அளவேது..!!
இது எல்லாம் கிடைத்தாலும் மனது சும்மா விடுகிறதா?
பணத்தின் மீதான ஆசை அது எவ்வளவு நிறைந்தாலும் நின்று விடுகிறதா? பணத்தை குவிப்பதில் ஆசை கொண்ட ஒருவனுக்கு எந்நாளும் அது அடங்கப் போவதில்லை..
அதிகாரம் ..அதுவும் ஒரு போதை தான்.
பணத்தையும் அதிகாரத்தையும் கொண்டவன் நின்று நிதானிக்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறான்.
அந்த ஓட்டத்தில் தான் , நம் உள்ளே உள்ள வெற்றிடத்தை உணர்கிறோம்... அந்த காலியிடத்தை நிரப்ப எடுக்கும் முயற்சி..இந்த பணம், புகழ்சேர்க்கும் வேகம். ஆனால் எத்தனைக்கு எத்தனை . முயற்சி செய்தாலும், ..இவர்கள் போட்டுக்கொண்டே இருக்க…உள்ளே போட்டதெல்லாம் மாயமாகி போகிறது
சிறிது சிறிதாக ஆசையும் அவனுடன் வளர்கிறது.. " நான்" என்னும் அகங்காரமகவும் "எனது" என்னும் மமகாரமாகவும்..
பணம் சேர்நதது போலவே, கருமித்தனம், பொறாமையையும் தன்னுடன் சேர்த்துக் கொண்ட மனது, யாருக்கும் சற்றென்று தன்னிடம் உள்ளதை பகிர்ந்துக் கொள்ள மறுக்கிறது.அப்படியே கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு ஆதாயம் என்ன என்று தேடுகிறது..
"நீ என்னை மெச்சி பேசுவாயா" என்று எதிர்பார்க்கிறது. தான் சம்பாதித்த பணம், அதிகாரம் கொண்டு அதை சம்பாதிக்க பார்க்கிறது.
புகழுக்கு ஆசைப்படாத ஜீவன் இருக்கிறதா என்ன? வீட்டில், வேலை செய்யும் இடத்தில், நண்பர்கள் நடுவில் தான் பாரட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் இருப்பவன் தானே சாமானிய மனிதன்.!!
அத்தனைக்கும் ஆசைப்படுகிறோமோ இல்லையோ.. தான் புகழப்பட வேண்டும் என்ற ஆசை..இருக்கிறதே, அது ஒரு கட்டத்தில், ஆசை என்பதிலிருந்து பேராசையாக மாறி , வெறியாக உருமாற்றம் கொண்டிருக்கும்..
இங்கே தான் அது உருமாற்றம் அடைவதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
அதற்காக ஆசையை விட்டு விடவேண்டும் என்ற பொருளல்ல. ஆசை தான் மனிதனின் முன்னேற்றத்திற்கு அடிப்படை..
அதுவும் புகழ் எனும் போதையின் மாய வலையை பற்றி ஓஷோ இப்படி சொல்கிறார்
"உங்களை நல்லவனாகவோ கெட்டவனாகவோ பிறர் மாற்ற முடியாது..அவர் அபிப்ராயத்திற்கும் அவன் சக்தி மிக்கவனாக ஆகிறான். அவர் புகழ்ச்சியை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நீங்கள் தான் அவனுக்கு இரையானவன்.இப்போது அவன் உங்களை தன் பிடியில் வைத்துக் கொள்ளலாம்.அவன் உங்கள் குருவாகவும் நீங்கள் அவன் அடிமையாகவும் இருப்பீர்கள்"
அதை சரியாக புரிந்துக் கொள்வது மட்டுமே இப்போதைய தேவை. ஆனால் அதை தேடி, ஓடிக் கொண்டே போகும்போது, பேராசையாக உருமாற்றம் அடைந்துக் கொண்டிருப்பதை உணர்ந்துக் கொண்டால் தான் , அதிலிருந்து விடுபட முடியும்..
சக மனிதனிடம் அன்பு பாராட்டுவது இருக்கட்டும். இந்த புகழ் போதை கொண்டவர் எல்லாம் தன் மீதே அன்பு செலுத்துபவராகவா இருப்பார்கள்?
ஏன் உடலை கச்சிதமாக தானே வைத்திருக்கிறார்கள் என்கிறீர்களா? இல்லை..அது வெளிக்காட்சிக்கு தான்..
இந்த பேராசை, பொறாமை போன்றவை சூழ, இருக்கும் நம் மனதை திறந்துக் கொண்டு உள்ளே ஆழமாக போனால் தான் நம் மனதின் ஆசையை தெரிந்துக் கொள்ள முடியும்..
இறந்த உடலுக்கு போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவர் போல, நம்மில் உள்ள குறைகளை ஈவு இரக்கம் இல்லாமல், உண்மையாக கண்டறிந்து அதை சரி செய்தோ, முடியாததை ஒதுக்கி கொண்டோ போனால .அதன் தேவையை நியாயமான ஆசையை காது கொடுத்துக் கேட்க ஆரம்பிக்கலாம்..அதை தான் தியானம் என்கிறார்கள்.
அதற்கு முன் செய்ய வேண்டியது ஒன்றும் உள்ளது.., ஓடும் ஓட்டத்தில், என்றாவது நம் உடலின் தேவையை உணர்ந்திருக்கிறோமா..??
இப்படி நம் உடலின்,மனதின் நியாயமான ஆசையை நிறைவேற்ற முயற்சிகும்போது, .நம் உடலும் மனதும் நட்பாகி விடும்.
அப்போது தான் ஆசை என்னும் ஒரு மாய சூழலிருந்து விடுபடுவது.கடினமாக இருக்காது.., நம்மை நாமே முழுதாக நம்ப ஆரம்பிக்கலாம்.
ஆனால் உள்ளே உள்ள காலியிடத்தை தன் தியானம் மூலம் உணர்ந்தவன் தான் ஜெயிக்கிறான். என்கிறார் ஓஷோ.
இப்படி தியானம் செய்துக்கொண்டிருந்தால் எல்லாம் கிடைத்துவிடுமா? என்கிறீர்களா??
ஏன் சிலர் அதையெல்லாம் கடவுள் தூக்கி கொடுத்துவிடுவார் என்று கோயில், மசோதா, சர்ச்சுகளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?.
கடவுள் எங்கே தான் இருக்கிறார்? அவர் வேண்டியதை கொடுத்து விடுவாரா? அதற்கும் ஒரு சூட்சமம் உள்ளது என்கிறார் அவ்வையார்.
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும் வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும் தரும் சிவந்த தாமரையாள் தான்
பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு நல்ல நீர்வளம், நிழல் தரும் மரங்கள், நெல் வளம், பேரும், புகழும், சிறப்பான வாழ்க்கையும், நல்ல வீடும், தேவையான செல்வமும், நீண்ட ஆயுளும் செந்தாமரையில் அமரும் மஹாலக்ஷ்மி அருளுவாள்.
அதாவது பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு தான் கடவுள் அருளுவார் என்பது தானே மறை பொருள்..
ஆரவாரம் இல்லாமல் அமைதியாக எந்த சிறு செயலையும் அதன் பொருள் உணர்ந்து எந்த குறிக்கோளும் இல்லாமல் இந்த உலகத்திலோ வேறு உலகத்திலோ எதையும் பெறும் ஆசை இல்லாமல் செய்துக் கொண்டு இருந்தால், அதுவே தேன் உள்ள மலரை தேடி வரும் வண்டை போல புகழ் உன்னை தேடிவரும் என்கிறார்கள்.
.எந்த குறிக்கோளும் இல்லாமல் செய்வதா? அது எப்படி என்கிறீர்களா?
அதை தானே நாம் அனைவரும் செய்கிறோம்!! .நமக்கு பிடித்த நாம் அன்பு பாராட்டும் மனைவி/கணவனுக்கு, பிள்ளைக்கு என்று தான், தனக்கு என்று வைத்துக்கொள்வதை நம் அன்பு கொண்ட உள்ளங்களுக்கு பகிர்கிறோம் தானே...
எதையும் எதிர்பார்க்காமல் பகிர்வது தான் உண்மையான அன்பு..
உண்மையில் அப்படி கொடுப்பவன் தான் நன்றியோடு இருக்கவேண்டும் என்கிறார் ஓஷோ
அதுவே விரிவடைந்து உறவு, உற்றம், சுற்றம் என பெருகி, நாளடைவில் தெரியாதவர் மீதும் அன்பு வளரும் போது அது "அருள்" ஆகிறது.
நாம் அவர்களிடம் காட்டும் அன்பு, இரண்டு மடங்காக நமக்கே திரும்பிவரும் தன்மை கொண்டது.
சில உள்ளங்களில் இது போல பிரதிபலிக்காத தன்மை இருக்கும்..!!
சூரியனின் ஒளியை வாங்கி திருப்பி கொடுக்கும் கிராகங்களின் துணையை தான் உயிர்கள் நாடுகிண்றன…
எத்தனையோ மைல் தொலைவில் உள்ள குரு கிரகம், அப்படி தான் பெற்ற ஒளியை, இரட்டிப்பாக தன் சுப கதிர் வீச்சையும் சேர்த்துக்கொடுப்பதால் தானே அது கொண்டாடப்படுகிறது!!
ஆனால் அதுபோல பிரதிபலிக்கும் தன்மை இல்லாத இருள் கிரகம் ஆன சனியை யார் தான் விரும்புவார்?
அன்பு பாராட்டும் போது புகழ் வளர்கிறது..
அது போன்ற புகழ் தான் நிலையானது.
ஆனால் இது எல்லோருக்கும் அமைந்து விடுமா? என்றால் இல்லை.
ஒருவர் பேர் பெற்றவர் ஆவாரா கீர்த்தி பெற்ற பேறு பெருவாரா என்பதை அவர் ஜாதகத்தின் மூன்றாம் பாவமே சொல்லும்.அதோடு அதற்கு தேவையான தன் செயல்களில் முயற்சி எடுப்பாரா என்பதையும் அதுவே காட்டும்.
"சமூகம் ஒரு தனிமனிதனுக்குக் கொடுக்கும் மரியாதை, கௌரவம் எல்லாம்,"மிகவும் மென்மையான முகமூடி." அந்த நாள் முதல், இந்த நாள் வரை... இந்த சமூகம் ஒவ்வொருவரையும் ஏமாற்றியே வந்திருக்கிறது. அது கொடுக்கும் மரியாதை மற்றும் கௌரவத்திலேயே, உங்கள் கவனம் எப்பொழுதும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. அதுதான் உங்கள் தனித்தன்மை என அது உங்களை நம்ப வைக்கிறது.
சமூகம் கொடுக்கும் மரியாதை, அந்தஸ்து, கௌரவம் மிகவும் மேலோட்டமானது, மாறக்கூடியது
"உங்களுடைய தனித்தன்மை என்பது... உங்கள் கூடவே பிறந்தது, இயல்பாக வளருவது, அதை யாரும் கொடுக்க முடியாது. அதை யாரும் எடுக்கவும் முடியாது." என்கிறார் ஓஷோ.
கடைசியாக ரூமி சொன்ன கதை ஒன்று.
ஒரு முதியவரை சந்திக்கிறான் ஒரு இளைஞன்.
"என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
"இல்லை"
"நான் உங்கள் மாணவன்
"அப்படியா.இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
"ஆசிரியராக இருக்கிறேன்."
"நல்லது…என்னை போலவே"
"ஆமாம் நீங்கள் தான் நான் உங்களை போன்ற ஆசிரியராக நினைத்ததற்கு காரணம்"
"அப்படியா எப்போது அப்படி நினைத்தாய்?"
இளைஞன் பள்ளிக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல ஆரம்பிக்கிறான்.
"ஒருநாள் என் தோழன் ஒருவன் ஒரு புது வாட்ச் பள்ளிக்கு கொண்டு வந்தான். அது பாரககவே அழகாக இருந்தது. எனக்கு ரொம்ப பிடித்து போய் விட்டது.அவனுக்கு தெரியாமல் நான் எடுத்து என் டிரவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன்.
கொஞ்ச நேரத்தில் வாட்ச் காணாமல் போனதை அறிந்து, அவன் வகுப்பு ஆசிரியரானஉங்களிடம் வந்து புகார் செய்தான்.
.நீங்களும் வகுப்பில் எல்லோரிடமும் சொன்னீர்கள்…"வகுப்பில் இருக்கும்போது காணாமல் போயுள்ளது.யார் எடுத்தார்களோ திருப்பிக் கொடுத்து விடுங்கள்" என்று.
ஆனால் அந்த வாட்ச் எனக்கு ரொம்ப பிடித்ததால், திருப்பிக் கொடுக்க மனம் இல்லை.
நீங்கள் வகுப்பின் கதவை மூடினீர்கள்.
எல்லோரையும் வட்டமாக நிற்க சொன்னீர்கள். எங்கள் எல்லோரையும் கண்களை மூட சொன்னீர்கள்.அப்போது தான் ஒவ்வொருவராக சோதனை போடுவேன் என்றீர்கள்..
நீங்கள் சொன்னபடியே செய்தோம். நீங்களும் ஒவ்வொருவர பாக்கெட்டில் சோதனை செய்ய செய்ய, .நான் பயந்தது போலவே என் முறை வந்தது. நீங்கள் என் பாக்கெட்டில் கைவிட்டு வாட்சை எடுத்தீர்கள். அடுத்து மற்றவர்களையும் சோதனை செய்வதை தொடர்ந்தீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லோரையும் சோதித்து முடித்துவிட்டு, நீங்கள் சொன்னீர்கள்
நீங்கள் அதற்கு மேல் அது பற்றி எதுவும் பேசாமல் பாடம் நடத்த ஆரம்பித்தீர்கள்.நான் திருடியதை நீஙகள் சொல்லவேயில்லை. என்னை தனியாக கூப்பிடூவீர்கள் என்று நினைத்தேன் அதுவும் நடக்கவில்லை.என் மரியாதையை காப்பாற்றினீஈகள். நான் அவமானகரமாக உணர்ந்த நாள் அது.
நீங்கள் திட்டவில்லை.ஏன் எதுவும் சொல்லவில்லை.ஆனாலும் நீங்கள் சொன்னதை நான் புரிந்துக் கொண்டேன்.
ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்து, புரிந்து கொண்டேன்.உங்களுக்கு அது நினைவிருக்கிறதா?"
"ஆமாம்.எனக்கு அது நினைவுக்கு வருகிறது..காணாமல் போன வாட்சை தேடி கண்டுபிடித்தது நினைவிருக்கிறது..ஆனால் அதை நீ தான் எடுத்தாய் என்று அப்போது எனக்கும் தெரியாது.நானும் கண்ணை மூடிக்கொண்டிருந்தேன்!!"