புதன், 23 ஜூன், 2021

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பற்றி 2020 உச்ச நீதிமன்ற தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது? இந்தத் தீர்ப்பினால் ஏற்கனவே உள்ள 2005 இந்து வாரிசு சட்டத்திற்கு மாறான வேறு விளைவுகள் ஏற்படுமா?

 குடும்ப சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உள்ளது என்று திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் ௨௦௦5 அதன் முந்தைய காலக் கட்டத்திற்கும் பொருந்துமா என்ற கேள்விக்குத் தான் சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

அதன் படி, இந்த திருத்த சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே பெற்றோர் இறந்திருந்தாலும் அவர்களது சொத்தில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சம பாதி சொத்து உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.

பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக sசெயல் பட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.

1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு.

பெண்களுக்கான உரிமைகள்

  • முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.
  • ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.
  • ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.
  • கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.
  • அதேபோல் அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.
  • பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.
  • பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

'ஆனாலும் அந்த திருத்தச் சட்டத்திண் படி அது இயற்றப்பட்ட காலத்திற்கு பிறகு தான் பெண்களுக்கு சம சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆண் மகனுக்கு அந்த வித்யாசம் இல்லை. இந்த வேற்றுமையை நீக்கித் தான் அந்த சட்டம் அதற்கு முந்திய காலக் கட்டத்திற்கும் பொருந்தும் எனத் தீர்ப்பளிக்கபட்டுள்ளது.

ஒரு பெண் திருமணமானாலும் அவள் தகப்பனாருக்கு என்றும் அன்பிற்கு உரியவள் தான் என்று தீர்ப்பில் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


  • பெண்ணுக்கு கணவன் மற்றும் மாமனார் மூலமாக வரும் சொத்துகள் எப்படி கணவனின் வாரிசுகளுக்கு போகும் எனக் கருத்துப் பகுதியில் கேட்கப்பட்டுள்ளது. உயில் எதுவும் எழுதாமல் அவருக்கு வந்தால் அதை முழு உரிமையுடன் பயன்படுத்த முடியாது. அவர் காலம் வரை அனுபவித்த பின்னர் மீண்டும் கணவரின் வாரிசுகள் என்ற முறையில் அவர் சகோதரர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு போய்விடும். அவர்கள் குடும்ப சொத்து அவர்களுக்கே போய் சேரும்.
பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டென்பது பழைய சட்டமாயிற்றே. புதிதாக என்ன மாற்றம் செய்தார்கள் என்று பெருமை கொள்கிறார்கள்?
ஸ்ரீஜா சுப்ரமணியன் இன் தற்குறிப்பு போட்டோ

குடும்ப சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உள்ளது என்று திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் ௨௦௦5 அதன் முந்தைய காலக் கட்டத்திற்கும் பொருந்துமா என்ற கேள்விக்குத் தான் சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

அதன் படி, இந்த திருத்த சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே பெற்றோர் இறந்திருந்தாலும் அவர்களது சொத்தில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சம பாதி சொத்து உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளது.

பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக sசெயல் பட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.

1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு.

பெண்களுக்கான உரிமைகள்

  • முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.
  • ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.
  • ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.
  • கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.
  • அதேபோல் அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.
  • பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.
  • பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

'ஆனாலும் அந்த திருத்தச் சட்டத்திண் படி அது இயற்றப்பட்ட காலத்திற்கு பிறகு தான் பெண்களுக்கு சம சொத்து உரிமை கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆண் மகனுக்கு அந்த வித்யாசம் இல்லை. இந்த வேற்றுமையை நீக்கித் தான் அந்த சட்டம் அதற்கு முந்திய காலக் கட்டத்திற்கும் பொருந்தும் எனத் தீர்ப்பளிக்கபட்டுள்ளது.

ஒரு பெண் திருமணமானாலும் அவள் தகப்பனாருக்கு என்றும் அன்பிற்கு உரியவள் தான் என்று தீர்ப்பில் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


  • பெண்ணுக்கு கணவன் மற்றும் மாமனார் மூலமாக வரும் சொத்துகள் எப்படி கணவனின் வாரிசுகளுக்கு போகும் எனக் கருத்துப் பகுதியில் கேட்கப்பட்டுள்ளது. உயில் எதுவும் எழுதாமல் அவருக்கு வந்தால் அதை முழு உரிமையுடன் பயன்படுத்த முடியாது. அவர் காலம் வரை அனுபவித்த பின்னர் மீண்டும் கணவரின் வாரிசுகள் என்ற முறையில் அவர் சகோதரர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு போய்விடும். அவர்கள் குடும்ப சொத்து அவர்களுக்கே போய் சேரும

பரம்பரை சொத்தை உயில் மூலம் மகனுக்கே அளிக்கமுடியுமா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. சுய சம்பாத்தியத்தில் உள்ள சொத்துக்கள் மட்டுமே உயில் மூலம் எழுதி வைத்தல் செல்லுபடி ஆகும். ஒரு இந்து குழந்தை வயிற்றில் ஜனிக்கும்போதே பரம்பரை சொத்திற்கு உரிமை உடையது ஆகிறது. அதை உயில் மூலம் தடுக்க முடியாது.

படித்தற்கு நன்றி .புதிய உபயோகமான தகவலை தெரிந்துக் கொண்டீர்கள் எனில், ஆதரவு வாக்கிடுங்கள்

மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றம். இம்மூன்று நீதிமன்றங்களுக்கும் சட்டங்கள் மாறுபாடு உள்ளதா. ஏன் இப்படி மூன்றாக பிரித்தனர்?

 குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்களே. நம்முடைய குற்றவியல்/சிவில் விசாரணை நடைமுறை சட்டப்படி நீதிமன்றங்கள் மூன்று அடுக்கு கொண்டவை. வழக்குகளை குற்றவியல் நீதிமன்றம் அல்லது உரிமையியல் நீதிமன்றம் விசாரித்தால், அதற்கான மேல்முறையீடு அடுத்த கட்டமாக சார்பு நீதிமன்றத்திலும் அதற்கு அடுத்த கட்ட மேல்முறையீடு மாவட்ட நீதிமன்றத்திலும் நடக்கும். அதுவே சார்பு நீதிமன்றமோ அல்லது தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தினால், அதற்கான மேல்முறையீடு மாவட்ட நீதிமன்றத்திலும், அடுத்து உயர் நீதிமன்றத்திலும் நடக்கும். ஆனால், மாவட்ட நீதிமன்றம் விசாரணை நீதிமன்றமாக இருக்கும்போது, அதற்கான மேல்முறையீடு உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நடக்கும். அனைத்து கீழமை நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளில் சீராய்வு செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் மாண்பிமிகு உயர் நீதிமன்றத்திற்கு உண்டு. அனைத்து மாநில நீதிமன்றங்களுக்கு தலைமையாக மாண்புமிகு உச்ச நீதிமன்றம் உள்ளது.

எந்த நீதிமன்றம் விசாரணை நீதிமன்றமாகும் என்பது குற்றம்/வழக்கின் தன்மையை பொறுத்து குற்ற விசாரணை சட்டத்திலும், சிவில் விசாரணை நடைமுறை சட்டத்திலும் சொல்லப்பட்டுள்ளது. . சட்டம் அனைத்து நீதிமன்றத்திற்கும் பொதுதான்.

மேலும் நமது அரசியலமைப்புச் சட்டம் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தையும் உயர் நீதிமன்றங்களையும் தான் இந்த நாட்டு குடிமக்களுக்கு வழங்கியுள்ள/உறுதிபபடுத்தியுள்ள அடிப்படை உரிமைகளுக்கான பாதுகாவலனாக காட்டியுள்ளது. உயர்நீதிமன்றங்களுக்கு அந்த சட்டத்தின் உறுப்பு ௨௨6 படியும் உச்ச நீதிமன்றத்திற்கு உறுப்பு 3௨படியும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்குகளோடு பொருத்தப்பட்டுள்ள சட்டங்கள் குறித்தே, அதாவது அவை வழக்கு சம்பவங்களோடு சரியாகத்தான் பொருததபபட்டுள்ளனவா இல்லையா, அந்த சட்டங்களும் அரசிய லமைப்பு சட்டத்துடன் பொருந்தி உள்ளதா இல்லையா என்பது குறித்துத் தான் உச்ச நீதிமன்றம் பொதுவாக விசாரிக்கும்.

குற்றவியல் நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றம் சார்பு நீதிமன்றம் என்றால் என்ன?

குற்றவியல் நீதிமன்றம் (மாஜிஸ்திரேட் கோர்ட்) என்பது தான் இந்திய நீதித் துறையில் உள்ள கடைநிலை நீதிமன்றமாகும். அந்த நீதிமன்றம் தலைமை நீதித்துறை நடுவர் கட்டுப்பாட்டிலும் ஒட்டுமொத்தமாக அந்த மாவட்ட நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.

மேலும் எந்த குற்ற வழக்காக இருந்தாலும், அது சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கை, வழக்கு ஆவணங்கள் மற்றும் குற்றவாளியும் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தான் தாக்கல்/ஆஜர் செய்யப்பட வேண்டும். நீதித்துறை நடுவர் வழக்குகளை விசாரித்து ரூபாய் பத்தாயிரம் அபராதத்திற்கு மிகாமலும், மூன்று வருட சிறை தண்டனையும் அளிக்க அதிகாரம் பெற்றவர்.

உரிமையில் நீதிமன்றம் என்கிற முன்சீப் கோர்ட் பெரும்பாலான சிவில் வழக்குகளை விசாரிக்கும். அது ரூபாய் ஒரு லட்சம் வரை யிலான பணவியல் அதிகார வரம்பு கொண்டது. அதற்க்கு மேலும் ரூபாய் பத்து லட்சம் வரையிலான அதிகாரம் கொண்டது சார்பு நீதிமன்றம் என்கிற சப் கோர்ட். இங்கு முன்சீப் நீதிமன்றம் வழங்கிய தீர்பிற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்படும். மேலும் குடும நல நீதிமன்றங்கள் இல்லாத மாவட்டங்களில் விவாகரத்து வழக்குகளும் விசாரிக்கப்படும். மேலும் சார்பு நீதிமன்றங்கள் குற்ற வழக்குகளை விசாரித்து ஏழு வருடங்கள் வரை சிறை தண்டனையும் அளிக்கக் கூடிய அதிகாரம் கொண்டது.

சிவில் வழக்கு கிரிமினல் வழக்கு என்று வழக்குகளை ஏன் இரண்டாகப் பிரிக்கிறார்கள்?

நீதிமன்ற ந்களில் வழக்குகளை விசாரிக்கும் நடைமுறைகளை சொல்லும் இரண்டு சட்டங்கள் தான் குற்ற விசாரணை நடைமுறை சட்டம் மற்றும் சிவில் விசாரணை நடைமுறை சட்டம். இவற்றின் படி தான் விசாரணை நீதிமன்றங்களில் விசாரணை நடக்கிறது.

எனவே தான் சிவில் கிரிமினல் என இரண்டு பிரிவாக வழக்குகள் பிரிக்கப்பட்டு அந்த சட்ட நடைமுறைகளை பின்பற்றுகின்றனர்.


இந்திய நீதிமன்றங்களில் ஏன் ஆங்கிலம் மொழியில் வழக்குகள் நடக்கின்றன. இதற்கு ஏதாவது காரணங்கள் உண்டா?

ஆங்கிலேயர் காலத்தில் நீதிமன்ற மொழியாக ஆங்கிலம் கொண்டுவரபட்டது. அதன் பின்னர் அந்தந்த மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் பிராந்திய மொழியே நீதிமன்ற மொழியாக தொடர்ந்தாலும் ஆங்கிலமும் நீதிமன்ற மொழிகளில் ஒன்றாக உள்ளது. மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழை நீதிமன்ற மொழியாக அறிவிக்க சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டது ஞாபகத்தில் இருக்கும். உயர் நீதிமன்றங்களில் பல மாநிலத்திலிருந்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருப்பார்கள். எனவே பிராந்திய மொழியை உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. ஏற்கெனவே விசாரணை நீதிமன்றங்கள் தமிழில் தீர்ப்பு வழங்கும்போது, அது கட்சிதாரர்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், அந்த வழக்கு மேல்முறையிட்டிற்காக உயர் நீதிமன்றம் போகும்போது, வழக்கு ஆவனங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன.

பாதையை பஞ்சாயத்துக்கு எழுதி வைக்க வழிமுறைகள் என்ன?

 வரப்புக்காக சண்டைபோட்டவங்க நிலத்தையே வித்து கேசு நடத்துனாங்குலாம்"ன்னு கிராமத்திலே ஒரு பேச்சு வழக்கு இருக்கு.

இந்த பொது பாதை, வாய்க்கால் வரப்பு மீதான உரிமை இவைஎல்லாம் கிராமங்களில் ஒரு உரிமையோடு கூடிய கவுரவப் பிரச்சினையாக மாறி அதுவே சண்டை சச்சரவுகளுக்கு காரணமாகி, கொலையிலும் போய் முடிந்து விடுகிறது.

அரூவா மீசை….. கொடுவா பார்வை… ஆறுமுகம் தான் கைய வச்சா தூள் ….…….ன்னு நம் ஊர்களில் முன்பு பட்டைய கிளப்பிக்கிட்டு இருந்த இதெல்லாம் குறைந்து, இப்போது தான் மக்கள் சுய உனர்வுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.

என் பாதை என் உரிமை என்பதெல்லாம் கிடையாது……இன்னொருவரின் நிலமாக இருந்தாலும், அதில் ஒருவருக்கோ, அல்லது, பொதுவாகவோ நடந்து செல்லும் உரிமையை தருவது தான் இந்திய வசதியுரிமைகள் சட்டம், 1882

நன்றி கூகிள் அண்ணா..

இந்த உரிமை கிடைக்கவேண்டும் என்றால், சில நிபந்தனைகள் உண்டு.என்னென்ன?

  • காலம் காலமாக அந்த ஊரே அந்தப் பாதையை தான் பயன்படுத்துதுனால்.
  • அப்படியில்லை சம்பந்தப்பட்ட நிலத்துக்காரர் கிட்ட அனுமதி வாங்கி, (அது எழுத்து மூலமா இருந்தால் நல்லது) உபயோகம் பண்ணினோம் என்றால்.
  • நாங்க எங்க முப்பாட்டனார் காலத்திலே இருந்து அது வழியாதான் போறோம்ங்கிரீங்களா? குறைஞ்சது ௨௦ வருஷமாவது அப்படி உபயோகம் பண்ணியிருக்கணும். இந்த ௨௦ வருஷம்ன்கிறது தொடர்ச்சியா இருக்கணும்.

இதுலே ஒன்னை டிக் அடிச்சீங்கன்னாலும் , அந்த பாதை வசதி உரிமை உங்களுக்கு வந்துடுது.

இன்னொரு முக்கியமானது அந்த பாதையை தவிர்த்து வேறு பாதை உங்கள் நிலத்துக்கு போறதுக்கு இருந்தா, இந்த உரிமையை கேட்க முடியாது.

பொதுவாக நிலங்களை பிரித்து பிளாட் போடுபவர்கள், அதில் ஒரு பொது பாதை எனக் குறிக்கப்படுவதை அந்த ஊர் பஞ்சாயத்துக்கு எழுதி கொடுப்பது வழக்கம். அதை ஒரு செட்டில்மென்ட் பத்திரம் மூலமா செய்யலாம்.

இன்னொன்னும் இங்கே சொல்லனும். பாதை அவங்களோடது , பயணம் மட்டும் தான் நம்மோடதுன்னு இருந்தால் மேற்கொண்டு வம்பும் இல்ல, வழக்கும் இல்ல.

ஆமாஞ சொல்லிட்டேன்.அப்புறம் என்னை வந்து குத்தம் சொல்லப்படாது………

மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப்பூர்வமான அடிப்படை உரிமைகள் என்னென்ன?

 நம்முடைய அடிப்படை உரிமையை பாதிக்கூடிய வகையில் உள்ள காவல்நிலைய கைதும் காவலில் வைப்பது மற்றும் ஜாமீனில் விடுவிப்பது போன்ற அடிப்படை நடைமுறைகளைபற்றியும் அறுவர் பொலிசாரால் கைது செய்யபட்டால் அவருக்குள்ள அடிப்படை உரிமைகளை பற்றியும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்


கைது, காவல், பிணை

மாண்புமிகு உச்ச நீதிமன்றம், கைது நடவடிக்கையின் போது, காவல் அதிகாரிகள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துமாறு உத்தரவிட்டும் இன்று வரை அது முறையாக அமுலாக வில்லை. தற்போது பிரிவு 41 B ஆக கு.வி.மு.ச வில் இனைக்கப்பட்டுள்ளதின்படி, கைது செய்யும்போது, காவல் அதிகாரி தன்னுடைய பெயர் தெளிவாக தெரியுமாறு பார்த்துகொள்ளுமாறும், அதே இடத்தில் கைது குறிப்பானையை தயார் செய்தும், அதில் குடும்ப உறுப்பினர் ஒருவர் சான்றோப்பம் இடவேண்டும். என்றும் அவ்வாறு குடும்ப உறுப்பினர் அங்கு இல்லையேன்றால் கைது நடக்கும் இடத்தில் உள்ள ஒரு மதிப்பான நபரின் சான்றொப்பம் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கைது குறித்த தகவல் தெரியப்படுத்த வேண்டிய உறவினர் அல்லது நண்பரை தேர்ந்து எடுக்கும் முடிவை குற்றவாளியிடம் கொடுத்து, அவரிடம் கைது செய்த தகவல் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்ப உறுப்பினர் கைது செய்யும் சமயத்தில் உடன் இருந்தால் அவரின் சான்றோப்பத்தை கைது குறிப்பாணையில் பெறவேண்டும். அதே போல், கு,வி,மு.ச பிரிவு 50A படி காவலை கைது செய்யப்பட்ட தகவலையும், அவர் வைக்கப்பட்டுள்ள இடத்தையும், அவர் குறிப்பிடும் நபருக்கு தெரியப்படுத்த வேண்டும். என வலியுறுத்’தியுள்ளது

ஆனால் நடைமுறையில் அந்த குடும்ப உறுபினருக்கு தகவல் அனுப்புவது என்பது ஓர வெற்று சம்ரதாயமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. குற்றவாளியின் தாய்க்கு தகவல் சொல்லப்பட்டது என குறிப்பிட்டிருந்ததை ஆராய்ந்த பொது, அது, குற்றவாளியின் கை பெசிக்கே ஒரு குறுந்தகவலாக காவல் அதிகாரியால் அனுப்பட்டுள்ளதும அந்த கைபேசியும் குற்றவாளியிடமே இருந்தது தெரியவந்தது. இது ஒரு தவறான நடைமுறையாகும்.


காவல் நிலயத்தில் அத்துமீறல் நடந்தால் கீழ்கண்ட வழிமுறைகளை கையாளலாம்

  1. காவலத்துறை மாவட்ட தலைவர் SP
  2. மனித உரிமை ஆணையம்
  3. நீதித்துறை நடுவரிடம் தனி புகார்
  4. உயர்நீதிமன்றத்தில் நீதி விசாரணை கோரி மனு

இந்த தகவல் எத்தனை பேருக்கு தெரியும்?

மாண்புமிகு உச்ச நீதிமன்றம் கைதிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க கீழ்கண்ட உத்தரவுகளை இட்டுள்ளது:

1. காவலில் இருக்கும் கைதி கோரினால், அவருடைய ஒரு நண்பர், உறவினர் அல்லது அவருக்கு தெரிந்தவரோ அல்லது அவர் நலத்தில் அக்கறை உள்ளவரோ அவருக்கு, கைது செய்யப்பட்டதையும் காவலில் வைக்கப்பட்டுள்ள இடத்தையும் தெரிவிக்க உரிமை உண்டு. 2. இந்த உரிமை குறித்து கைதி காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன தெரிவிக்க வேண்டியது காவல் அதிகாரியின் கடமை ஆகும். 3. வழக்கு குறிப்பேட்டில் கைது குறித்த தகவல் யாருக்கு தெரிவிக்கப்பட்டது என்று பதிவு செய்ய வேண்டும்.

உங்களுக்கு தெரியுமா?

கட்டாயமாக ஜாமீன் பெறும் உரிமை கைதிக்கு கீழ்கண்ட சமயத்தில் உள்ளது. நடுவர் முன்பு முதன்முதலாக கைது செய்யப்பட்டவர் ஆஜர்படுத்தப்பட்ட நாள் முதலாக 60/90 நாட்கள் முடிவடையும்போது காவலில் அடைக்கும் அதிகாரமும் முடிவடைகிறது. அந்த 60/90 நாட்கள் முடிவடைந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத போது, பிணையில் விடுவிக்கலாம். இந்த 167(2) பிரிவை கடைபிடிப்பது அவசியாமானது ஆகும். இந்த சட்டபிரிவு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே விசாரணையை எதிர்பார்த்து போலிசாரால் கைது செய்யப்பட்ட ஒருவர், தேவையில்லாமல் சிறையில் அலைகழிக்கபடவேண்டாம் என்பதற்கே. போலீசார் தங்களின் அதிகாரங்களை துஷ்ப்ரயோகம் செய்வதை தடுக்கும் விதத்திலேயும் இந்த விதி கொண்டு வரப்பட்டது[1]. இது குடிமக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு வரப்பட்டதல்ல. நாட்டு நலனையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டுதான் கொண்டுவரப்பட்டது

சமூகத்துக்கு எதிரானவன் யார் ? உணர்வு ரீதியான குற்றவாளியா? சட்ட ரீதியான குற்றவாளியா? சமூகத்துக்கு எதிரானவன் யார் ? உணர்வு ரீதியான குற்றவாளியா? சட்ட ரீதியான குற்றவாளியா?

 


தவறு நடக்கும்போது அதைக் கண்டு கோபம் வரும்…வர வேண்டும். அப்படி கோபம் வந்தால் தான் அவன் மனிதத்துவத்துடன் இருக்கிறான் என பொருள். .

அதனால் தான் "ரௌத்திரம் பழகு " என்று கற்று கொடுக்கிறான் பாரதி.

அதற்காக.எதற்கு எடுத்தாலும் கோபபட்டுக் கொண்டிருக்க முடியுமா?

அதை கற்றோர்கள் ரசிப்பார்களா?

எந்த கோபம் அவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய கோபமாக இருக்கும்?

உணர்வு ரீதியான தவறையோ சட்ட மீறல் என்ற தவறையோ செய்திருந்தால் அதனால் வரும் கோபம் இயற்கையானது தான். ஆனால் சமூகத்திற்கு கேடு விளைவிக்க கூடியது எதுவோ அதற்கு எழும் கோபம் தான் கற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஏன்?

அப்படிப்பட்ட கோபம் வரும்போது தான் அந்த தவறை சரி செய்ய முனைப்பு ஏற்படும்.செய்தவர்கள் தனடிக்கப்படுவர். சமூக ஒழுங்கு வரும்.

சரி

எது சமூகத்திற்கு கெடுதல் தரக்கூடியது?

உணர்வு ரீதியான தவறா, சட்ட மீறல் என்ற தவறா?

பொய் சொல்லுதல் கூடாது என்னும் வள்ளுவரே பொய்மையும் வாய்மையிடத்து என்கிறார்.அப்படியெனில் அது நன்மையை சமூகத்திற்கு கொடுக்கும் எனில் குற்றம் ஆகாது.என்றாகிறது.

அதே போல ஒரு பெண் கொலை செய்வது சட்ட ரீதியான குற்றம்.ஆனால் அதுவே தன்னை காத்துக்கொள்ள செய்கிறாள் என்றால் குற்றமாகாது.

அப்படி என்றால் எப்படி ஒரு குற்றம் சமூகத்திற்கு எதிரானது என்று கண்டுகொள்வது?

இங்கே பலவிதமான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளது.

இதில் எது சரியானது?

இதில் எது அதிக பாதிப்பை சமூகத்திற்கு கொடுக்கும்?

வேறெங்கும் தேட வேண்டாம்.இதற்கு விடை நம் இராமாயணத்திலேயே உள்ளது.

ஏன் இராமாயணத்தை உதாரணமாக எடுக்க வேண்டும்?

இராமாயனம், மஹா பாரதம் இரண்டுமே நமக்கு வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவதுதான்.ஆனால் நாம் அதிகம் மேற்கோள் காட்டி பேசுவது இராமாயணத்தை தான்.

ஏன்?

இராமனும் அவன் சகோதரர்களும் போல, கௌரவர்களும் பாண்டவர்களும் சகோதரர்கள் தானே?

சகோதரர்கள் எப்படி இருக்கக்கூடாது என்று சொல்வது மஹாபாரதம்.என்றால், எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவது இராமாயணம்.

சுருக்கமாக சொல்லின், எப்படி வாழக் கூடாது என்று பாரதம் சொல்கிறது, எப்படி வாழவேண்டும் என்று சொல்வது இராமாயணம்.

எனவே இராமாயணத்தில் உள்ள ஒரு அம்சத்தை பார்ப்போம்.

அதிலே, கோபமே படாத லக்ஷ்மணன் மூண்று பேர்களிடம் கோபம் கொண்டதாக வரும்.. இதில் யாரிடம் கொண்ட கோபம் கற்றோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோபம்?

ஒருவன் பரதன்.இரண்டாவது கைகேயி. அதற்கு காரணம் நமக்கு தெரியும். தன் அண்ணன் இராமன் பட்டாபிஷேகம் கொள்ள முடியாமல் தடுத்தவர்கள் என்ற கோபம்.

ஆனால் லட்சுமணன் அவர்கள் மீது கொண்ட கோபத்தை இராமன் தட்டிவிடுகிறான். .தன் தாய், சகோதரன் என்பதால் மன்னிக்கிறான் என்று அதை நம்மால் ஏற்றுக கொள்ளமுடியாது. அதுவும் அவன் அளவுக்கு யாருக்கு தயாள மனம் வரும்?

கூர்ந்து ஆராயும்போது, பரதன் ஒரு பாவமும் அறியாதவன். கைகேயியின் செயல் தெரிய வந்தபோது, தன் தாயையே , " ‘ஒழுக்கத்தில் சிறந்த இந்த குலத்திற்கு பெரும் கேடு விளைவித்து விட்டாயே! உன் பாபத்திற்கு நீ நரகத்திற்கு தான் போவாய். ராமன் உனக்கு என்ன தவறிழைத்தான்? எனக்கு அழியாத பழியை தேடித் தந்து விட்டாய். அண்ணன் இராமன் கோபம் கொள்வான் என்பதால் உன்னை கொலலாமல் விட்டேன்" என்றவன் .

அப்படிப்பட்ட பரதனை °நின்னிலும் நல்லன்” என்று புகழ்ந்து இராமனிடத்துச் சொன்ன கோசலையே ஒரு இடத்தில் சந்தேகம் கொண்டு கேட்கிறாள்."நீ அறிந்திலை போலுமால்?'

இதைக் கேட்டு பரதன் துடித்து போய்

நான் அறிந்து இந்த கொடுஞ் செயல் நடந்திருக்குமேயானால் இவர்களுடைய பாவஙகள் எல்லாம் என்னை வந்து சூழட்டும்" என்று ..புலம்புகிறான்

"கைகயர் கோமகள் இழைத்த கைதவம்,ஐய! .அறம் கெட முயன்றவன், அருள் இல் நெஞ்சினன்,பிறன்கடை நின்றவன், பிறரைச் சீறினோன்,மறம்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன்,துறந்த மா தவர்க்கு அருந் துயரம் சூழ்ந்துளோன். 98

அவன் கதறுவதை பார்த்து கோசலையே வருந்தி அவள் மேல் தவறு இல்லை என உணருகிறாள்.

அதன்படி பார்க்கும்போது, பரதன் மீது உணர்வு ரீதியான குற்றம் இல்லை.அவன் தாய் செய்த தவறுக்கு அவனை பொறுப்பாளியாக்க முடியாது. என்பதால் அவனை சட்ட ரீதியாகயம் குற்றம் சொல்ல முடியாது.

அடுத்து லக்ஷ்மணன் கோபம் கொண்டது கைகேயியின் மீது.

அவளும் தன் மகன் நாடாள வேண்டும் என்று நினைத்தாளே தவிர , இராமன் மீது அதிக பாசம் கொண்டவள்.அதனால் தான் இராமன் பட்டம் சூட்ட அறிவித்தவுடன் தன் தாயிடம் கூட முதலில் போகாமல், கைகேயியை காண வந்தவன். எனவே அவள் செய்தது உணர்வுபூர்வமாகவும் சட்டரீதியாகவும் குற்றமல்ல.அவளுக்கு கொடுக்கப்பட்ட வரத்தை பெற்று கொண்டாள் அவ்வளவு தான்.

ஆனால் மூத்தவன் பட்டத்திற்கு இருக்க, இளையவனுக்கு பட்டம் சூட்ட வைத்ததால், அவள் சட்ட ரீதியாக குற்றம் செய்தாள் எனலாம்.

அப்படியானால் தசரதன் குற்றவாளியா என்றால் அதுவும் கிடையாது. மனைவி மீது வைத்த அதீத அன்புடன் கூடிய நம்பிக்கை, அது போன்ற வரத்தை கொடுக்க வைத்தது.

எனவே உணர்வு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பரதன் குற்றம் செய்யவில்லை ஆனால் கைகேயி சட்ட ரீதியாக குற்றம் செய்கிறாள். ஆனால் அது சமூகத்திற்கு கேடு உண்டாக்கியதா என்றால் எதிர்மறையாகத் தான் சொல்லவேண்டும்.

அடுத்து லக்ஷ்மனன் கோபம் கொண்டது சூர்பனகை மீது.

சூர்ப்பனகை ஸ்ரீராமனைக் கண்டு மோகம் கொள்கிறாள். அடைய வேண்டும் என்று நினைக்கிறாள். தான் அரக்கியாய் இருப்பது அதற்குத் தடை என்று நாணுகிறாள். அழகியாய் உருமாறி அண்ணலின் முன் நடக்கிறாள். அண்ணலுக்கும், இளவலுக்கும் இடையில் நகைபகடையாய் உருட்டி விளையாடப் படுகிறாள் அவள் மீது கொண்ட கோபத்தின் காரணமாக அவள் மூக்கை வெட்டி எரிகிறான் லக்ஷ்மணன்.

சூர்ப்பனகை அத்தகைய இழி குலப்பெண்ணா?

அவளை கம்பர், அன்பானவள், மென்மையானவள்.என்று தான் வர்ணிக்கிறார். அந்த இடத்திற்கு அவள் வரும் போது கூட, தாமரை யொத்த மலர் பாதத்தை மெல்ல அடி எடுத்து வருவதாகத் தான் கம்பர் பாடுகிறார்..

சகோதர ரூபத்தில் விதி அவள் மகிழ்ச்சியான வாழ்வில் சூறாவளியை ஏற்படுத்திவிட்டது. சமயமும் சந்தர்ப்பமும் அவளை எதிர்நிலையில் நிற்கவைத்துவிட்டது.

அவள் அண்ணன் இராவணன் காட்டிய மணவாளனை மணம் செய்து, வாழ்ந்தபோது சூழ்ச்சி செய்து அவனை தங்கை கணவன் என்றும் பாராமல் கொல்கிறான் இராவணன். அவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறாள். அதே சமயம் பழி தீர்க்கும் எண்ணமும் நெஞ்சில் கொழுந்து விட்டு எரிகிறது.

சீதையை கவர்ந்து வந்தால் தன் மனைவியைக் காப்பாற்ற ராமன் போர் புரிந்து ராவணனை அழித்து அவளை மீட்டுச் செல்வான். அதே சமயம் கற்புக்கரசி சீதையை கவர்ந்து வந்து அவளை அடைய பலவந்தப்படுத்தினால் ரம்பையின் சாபப்படி ராவணனே தலை வெடித்துச் செத்து விடுவான். எது எப்படி நடந்தாலும் ராவணனின் மரணம் உறுதி என்ற கணக்கைப் போட்டே காய் நகர்த்தினாள் சூர்pபனகை.

சூர்பனகையின் பதிபக்தியும், தன் வாழ்வை நாசமாக்கியதால் பழி தீர்த்த மன உறுதியும் அதற்காக அவள் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட களங்கமும், எப்பெண்ணும் இழக்க தயாராகாதவற்றை தன் இலக்குக்காக இழந்ததும், அவளின் மதியூகமும் கவனிக்கப்பட வேண்டியவை.

ராவண வதம் நடக்க வேண்டும் என்ற விதிக்கு காரணியாக இருந்தவளே சூர்ப்பனகைதான். அவள் தன்னையொத்த பெண்ணான சீதையின் துயரை நினைக்காமல் தனது பழிவாங்குதல் நோக்கு ஒன்றே பெரிதாக நினைத்தமையால், எதிர்மறை குணசித்திரமாகவே இன்றளவும் அறியப்படுகிறாள் சூர்ப்பனகை.

நல்லவை, தீயவை சேர்ந்து தானே மனிதர்கள்! தீமையெனும் மலரினைச் சூடியவர்களை காலம் தோறும் தவறான முன்னுதாரணமாகவே அறியப்படுகிறார்கள் என்பதற்கு சூர்ப்பனகை சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.

எனவே உணர்வு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் குற்றம் செய்தவள் சூர்ப்பனகையே என்பதால் லக்ஷ்மணன் அவள் மீது கொண்ட கோபம் தான் கற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.. அவளை பெண் என்றும் பாராமல் சிதைத்ததும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன் படி பார்க்கும் போது,ஒரு செயல் உணர்வு மற்றும் சட்ட ரீதியாகவும் குற்றமாக இருந்தால் மட்டுமே, அதை செய்பவன் சமூகத்திற்கு எதிரானவன் என்றுக கூறி கொண்டு...

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...