சனி, 28 ஆகஸ்ட், 2021

அர்ச்சகர் நியமனத்தில் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது தொடர்ந்து புதிய அர்ச்சகர்கள் பணியமர்த்துவது நீதிமன்ற அவமதிப்பாகாதா?

 எத்தனையோ கால கனவு அது தி.மு.க அரசுக்கு...

அதுவும் தந்தையின் திட்டத்தை நிஐஐவேற்ற கிடைத்த அரிய வாய்ப்பாக தான், இதை பார்க்கிறது.

விருப்பமுள்ள அனைத்து சாதியினரையும் கோவில் பூசாரிகளாக நியமிக்கும் தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தி,  அரசு சமீபத்தில்  பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 24 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை கோவில்களில்  நியமித்தது.


 இந்த நியமனம் செய்ய  நாளிதழகளில் விளம்பரம் வெளியான உடனேயே அதை எதிர்த்து  கோயில்களில் பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். வழக்கில் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு, ஒத்திவைக்கப்பட்டது. இது நடந்தது ஆகஸ்ட் 9.. ஆனால் அதில் இருந்து ஒரு வாரம் கழித்து  சுமார்   58 பேருக்கு அர்ச்சகர், ஓதுவார் பணி நியமன உத்தரவுகளை முதல்வர் வழங்கியுள்ளார்..இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா என்ற கேள்வி தான் எல்லோரையும் சுற்றி வருகின்றது.

உண்மையில், இது போன்ற நியமனம் செய்த விவரத்தை அரசும் அந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது தெரிவித்து உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை அரசே மீறியதும் இல்லாமல், அதை நீதிமன்றத்திலேயே தேர்வித்துள்ளதே  நீதிமன்ற உத்தரவை அவமரியாதை செய்த தண்டனைக்குள்ளாகாதா..ஏன் நீதிமன்றமும் உடன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று கேள்வி எழலாம்.

இங்கே தான் சட்ட நுண்ணிய கூராய்வு தேவைப்படுகிறது. அரசு தாக்கல் செய்த அறிக்கையில், அர்ச்சகர் ஆக முறையாக பயிற்சி பெற்று முடித்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று சொல்லியுள்ளது

.அந்த பயிற்சியும், வேத பாடசாலையிலோ அல்லது அரசு நடத்தும் மையங்களிலோ முடித்திருக்கவேண்டும் என்ற தகுதி கொண்டவர்கள் தான் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரத்தில் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசை பொறுத்த வரை, பிராமணர்களின் கைகளுக்குள் இருந்து விடுப்பதன் ஒரு அங்கமாக, அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது என்ற தந்தை பெரியாரின் கனவை நிறைவேற்றுவது தங்கள்  கொள்கை என்ற நிலைப்பாடு உள்ளவர்கள். அதுவும் இது முதல்வருக்கு அவர் தந்தையால் கூட நிறைவேற்ற முடியாமல் தவற விட்ட ஒரு அம்சம் என்பதால்,  மாநிலம் முழுவதும் உள்ள இந்து கோவில்களில், இந்த பணி நியமனம் செய்தது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கின்றனர்..

1970 களில் கலைஞர் தன் பதவிக் காலத்தில், கொண்டு வந்த திட்டம் இது..இப்போது தான் அது நிறைவேறும் நிலையை எட்டியுள்ளது.அவர் பிள்ளை முதல்வர் ஸ்டாலின் சொல்வது போல, "பெரியாரின் இதயத்தில் குத்தியிருந்த முள்" இது.

, அப்போதைய மு தல்வர் களைஞரால் கொண்டு வரப்பட்டு அந்த சட்டம், இரண்டு வருடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. மாண்புமிகு உச்ச நீதிமன்றம், அது செல்லாது என்று விட்டது..

ஏன்?

அதை  பற்றி தெரிந்துக் கொள்ள, சற்று பின்னோக்கி போவோம்.

தமிழ்நாடு இந்து மத மற்றும் அறநிலையச் சட்டம் 1959 இல் இயற்றப்பட்டது.. அதன் மூலம் இந்து கோவில்கள் அரசின் நிர்வாகத்தின் கீழ கொண்டுவரப்பட்டது.. எந்த மதத்திற்கும் பொதுவாக இருக்கவேண்டிய ஒரு அரசு, அதுவும் மதசார்பின்மையை தன் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பிலேயே கொண்ட ஒரு நாட்டின் மாநில அரசு, ஒரு குறிப்பிட்ட மதம், அதுவும் பெருன்பான்மை மக்கள் பின்பற்றும் மதத்திற்கு உரிய கோயில்களை நிர்வகிக்க ஏன் முடிவு செய்தது? அதை நீதிமண்றங்களும் எப்படி அனுமதிக்கின்றன? அது தனி வரலாறு.அதை இநன்னொரு பதிவில் பார்ப்போம்.

இந்த தமிழ்நாடு இந்து மத மற்றும் அறநிலையச் சட்டம் 1959,  வந்த போது, இந்து கோவில்களில் பூசாரிகள் பரம்பரையாக பூஜை செய்து வந்தனர். அவர்களை அப்படியே நியமனம் செய்ய சட்டம். அனுமதித்தது.  

இதை தான், 1971 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அ ரத்து செய்து, இந்து கோவில்களில் சாதி வேறுபாடின்றி யாரையும் அர்ச்சகராக அனுமதித்து சட்டத்தை திருத்தியது.  

இதை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் (1972), சட்டத்தில் செய்யப்பட்ட  மாற்றங்களை  ரத்து செய்தது.  அத்தொடு பூசாரிகளின் பரம்பரை நியமனங்களையும்  ரத்து செய்தது.  இருப்பினும், கோவிலை நிர்வகிக்கும் ஆகம விதிகளின் அடிப்படையில் அந்த நியமனங்களை நீதிமன்றம் அனுமதித்தது.  பின்னர், ஆதித்தாயன் வழக்கில் (2002), உச்சநீதிமன்றம், மத ரீதியான பதவிகளுக்கான நியமனங்களில் சாதி ஒரு காரணியாக இருக்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்தியது.

2006 ல் ஜெயலலிதாவை தோற்கடித்து  ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி, இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தார். இந்த முறை,  வெகு கச்சிதமாக, " சாதி, மதம், பழக்கம் அல்லது பயன்பாடு பாகுபாடு இல்லாமல் "தகுந்த பயிற்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த இந்துக்கள்" தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் கோவில்களுக்கு அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம்." என்றது அவசர சட்டம்.  .கூடவே போடப்பட்ட நிர்வாக உத்தரவு ஒன்று " தேவையான தகுதி மற்றும் பயிற்சி பெற்ற எந்த இந்து நபரும் இந்து கோவில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படலாம்." என்றதுஇதற்காக பயிற்சி வகுப்புகள் அரசின் மையங்களில் தொடங்கப்பட்டன.

ஆனால் அந்த அவசர சட்டம்,  சட்டசபையில் வைத்து சட்டமாக்கப்படாமல் விடுபட்டது. அந்த நிர்வாக உத்தரவை மட்டும் எதிர்த்து போடப்பட்ட வழக்கில்,  ஏறக்குறைய ஒரு பத்து வருட கால சட்டப் போருக்குப் பிறகு, மாண்புமிகு உச்சநீதிமன்றம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு அனுமதி அளித்தது ஒரே நிபந்தனை..

அவர்கள், பயிற்சியின் மூலம்  உறுதி செய்யப்பட்டால்.

ஆனாலும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அந்த உத்தரவு தமிழ்நாட்டில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. இப்போது இந்த பணி நியமனங்கள் ஏற்பட்டபிறகு தான் பெரிய விவாதங்கள் ஆரம்பித்துள்ளன.

இத்தனைக்கும் முந்தைய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையலான அரசே , அர்ச்சகர் பயிற்சி முடித்த பத்து வருடங்களாக பணிநியமனம் இல்லாமல் இருந்த இந்த 207 நபர்களில் சிலருக்கு பணி உத்தரவு போட்டுள்ளது. 2018ல் நியமிக்கப்பட்ட மதுரை மாரிச்சாமி தான் அரசால் கொடுக்கப்பட்ட  பயிற்சி பெற்று நியமனமான முதல், பிராமணரல்லாத அர்ச்சகர்.

இன்றைய தேதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும்போது, அரசு மேற்கொண்டு பணிநியமனங்களை செய்துக்கொண்டு போவதற்கு, அவர்கள் காட்டும் அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?

இப்போது மனு போட்ட   ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் தான் அப்போதைய வழக்கிலும் மனுதாரர்கள். தமிழக அரசையும் அறநிலையத்துறையையும்  எதிர் பார்டியாக உள்ள வழக்கு அது.

 அவர்கள், சேஷம்மாள் வழக்கில் தீர்ப்பு இட்டது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் என்பதால், அந்த பெஞ்சின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பட வேண்டும் என்று               வாதிட்டனர்.  

அவர்களின் கூற்றுப்படி, அர்ச்சகர்களை  நியமிப்பது என்பது புனிதமான ஒன்று, ஆகமங்களில் அது சம்பந்தமான தொகுதிகளில் இருந்து விலகுவது என்பது அந்த மதத்தை பின்பற்றும் அவர்களுக்கு உள்ள அரசியலமைப்பு  சட்டப்பிரிவு 25 மற்றும் 26 ன் கீழ் அவர்களின் உரிமைகளை என்று வாதிட்டனர்.

சேஷம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம்,  ஒரு சைவ அல்லது வைஷ்ணவர் கோவிலில் அர்ச்சகரின் நியமனம் அந்த கோவில்களை நிர்வகிக்கும் ஆகமங்களின் வழிகாட்டுதல்களின்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினர், பிரிவு அல்லது குழுவிலிருந்து செய்யப்பட வேண்டும்." 

"அவ்வாறு செய்யத் தவறினால் அது, பிரிவு 28 (1) Hr&ce சட்டத்திற்கு  முரணானது மட்டுமல்லாமல், ஒரு மத நடைமுறையில் தலையிடுவதாகவும், இதன் தவிர்க்க முடியாத மோசமான விளைவு ஏர்படுத்தும்"என்றது

தன் தரப்பு நியாயமாக, மேலே சொன்ன ஆதித்தாயன் வழககை அரசு  மேற்கோள் காட்டியது அந்த வழக்கில் கேரள அரசு அப்போது அங்கிருந்த ஒரு சிவன் கோவிலில் பிராமணர் அல்லாத ஒருவரை அர்ச்சகராக நியமித்ததை எதிர்த்து போடப்பட்ட வழக்காகும்  அதன்படியும் சமூக நீதி மற்றும் நாட்டு நலன் என்னும் அரசியல் சாசன கடமையின்படி தான் அந்த உத்தரவு இடப்பட்டது.அதில் தவறு ஏதும் இல்லை என்று வாதிட்டனர்..

அந்த வழக்கின் தீர்ப்பு தான், அரசுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய டிரம்ப் கார்டு. 

வழக்கின் தீர்ப்பில், அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் கோகாய் தலைமையிலான பெஞ்சு, 

  • ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த/ அல்லது வழிபாட்டுமுறை கொண்டவர்கள் தான் பூஜை  செய்யும் அர்ச்சகராக நிடமிக்கப்படவேண்டுமா, அவர்களுக்கு தான் அது தனிப்பட்டஉரிமையா என்பது குறித்து  ஆகமங்கள் ஏதும் சொல்கின்றனவா  என்பது குறித்து சேஷம்மாள் வழக்கில் ஏதும் குறிப்பாக இல்லை.
  • ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவரை விடுத்து, மற்ற ஒரு பிரிவை அர்ச்சகராக நியமிப்பதற்கு, அவர் பிறப்பு மற்றும் இனம் மட்டும் காரணமில்லை  எனில், அரசியல் அமைப்பு சட்டத்தின் சமஉரிமை கொடுக்கப்படவில்லை என்று கோர முடியாது.
  • இருந்தாலும் ஆகம்விதிகளுக்கு உட்பட்டு பயிற்சி பெற்றவர் தான் நியமிக்கப்படவேண்டும்.
அதனால் தான் அரசு, திரும்ப திரும்ப இந்த நியமனங்கள் அனைத்தும் ஆகமப்படியே நடக்கின்றது என்கின்றது. 

அப்படியானால் ஆகமம் தான் என்ன? என்ற கேள்வி நமக்குள் எழுகிறது இல்லையா?

ஆகமம் என்பது, இந்து கோவிலின் மதசடங்குகள்   விவகாரங்களை நடத்தும் புனித நூல்களின் தொகுப்பு என்கின்றனர்..



இந்த பணி நியமங்களை எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணம் என?
அர்ச்சகர்கள் தீட்சை பெற்ற  பிறகே தங்கள் குருவிடம் இருந்து பயிற்சி பெறுவர்.இந்த தீட்சை அளிப்பது என்பது "ஆகமங்கள்"  படியென்பர். 
இந்த நியமனங்கள் ஆகமப்படியானது அல்ல என்கின்றனர்.

நீதிபதி மஹாராஜன்  கமிட்டி 1982ல் கொடுத்த அறிக்கையில், "கோயிலில் பூசை செய்பவர்கள் ஊதியம் பெறக்கூடாது, அது ஆகம  விதிக்கு எதிரானது" என்று சொல்லியுள்ளதாக கூறுகிண்றனர்.

எவை எல்லாம் ஆகமம் என்பது குறித்து தெளிவான விதிமுறைகள் இல்லை..

எனவே  ஆகமவிதிகளின் படி தான் நியமனங்கள் நடந்துள்ளனவா என்று நீதிமன்றம் தான் சொல்லவேண்டும்.

..




செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

மோட்டார் சைக்கிளை இயக்கும் போது கிடைக்கும் பேரானந்தம் பி.எம்.டபிள்யூ கார் இயக்கினாலும் கிடைப்பதில்லை, அது ஏன்?

 வண்டியோட்டுவதில் அவனை பெரிய ஜித்தன் என்று தான் அவன் நண்பர்கள் சொல்வார்கள்..

எத்தனை நண்பர்களிடம் கடன் வாங்கி வண்டியோட்டி அதில் வித விதமாக சாகசம் செய்வதில் அவனுக்கு நிகர் இல்லை தான்.. ஆனால் என்ன. ...அப்பாவிடம் கேட்டு கேட்டு பார்த்தும் அவனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கித் தர அவர் ஒத்து கொள்ளவே இல்லை.

அவனுக்கு பொறுப்பே இல்லையாம். வேகமாக ஓட்டுகிறானாம்..இப்படி ஏதோதோ சொல்லி தட்டி கழித்து கொண்டே வந்தார்.

கடைசியாய் ஒரு வழியாய் அவரை சமாளித்து, கெஞ்சி, கொஞ்சி, வண்டி வாங்கியாகிற்று.

அதுவும் அவன் ஆசைப்பட்ட மாதிரியே....

இந்த வண்டி தான் வேனும்னு  வாங்கித் தரச் சொன்னால் அப்பா அதற்கு கூட ஒரு  விமர்சனம் செய்தார்..."இதென்னடா ஏதோ மாடிக்கு ஏறுற மாதிரி இருக்கே"ன்னு

எப்படியோ வாங்கியாயிற்று.//

இன்று தான்  முதல் முதலாக வண்டியை எடுத்து கொண்டு கல்லூரிக்கு போகப் போகிறான்.

ஆனந்த கனவுகளில் நுழைந்தபடி, வண்டியை இயக்கினான். வழக்கமான பாதையில் வந்து கல்லூரியை நெருங்கும் சமயம் தான் அவளைப்  பார்த்தான்..

அவளும் அதே கல்லூரி தான். எத்தனையோ நாள் அவள் முன்னால,  வண்டியை ஒட்டிக் கொண்டு வேகமாக போனாலும், அவள் அவனை கவணித்ததாகவே தெரியவில்லை. மற்ற பென்கள் எல்லாம் இவன் வண்டியில் அமர்ந்து முன் சக்கரத்தை தூக்கியபடி வண்டியோட்டுவதை பார்த்து ஆச்சரியப்பட்டு வாய் பிளந்து நிற்கும்போது அவள் மட்டும் அதை பார்த்தது போலவே இருக்காது.

இன்று எப்படியும் அவளை திரும்பிப்  பார்க்க வைத்து விடுவது என்ற முடிவுடன் கியரை முறுக்கினான். வண்டி வேகமெடுத்தது...சரியாக அவள் அருகில் நெருங்கும்போது. வண்டியின் முன்சக்கரத்தை தூக்க எத்தனித்த போது...ஐயோ ... ஏதோ தவறாகி விட்டதே என்று இவன் நினைக்கும்போதே...பெரும் சத்தத்துடன் வண்டியுடன் சேர்ந்து இவன் தூக்கி வீசப்பட்டான்...

அவள் அனிச்சையாய் திரும்பி பார்த்தாள்...

மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது கிடைக்கும் த்ரில் இருக்கே ...யாரும் செய்யத் தயங்குவதை நாம் செய்கிறோம் என்பதும் அது எல்லோரின் கவனத்தை கவர்வதும்......அது தான் இளையவர்களை கவர்வது.

அதுவும் இந்த சென்னையில் ஏற்கெனவே நெரிசல் மிகுந்த சாலையில்,சர்... புர்ர்ரென்று இவர்கள் அதிவேகமாக புகுந்து ஓட்டிப் போவதை பார்க்கும் போது உண்மையிலேயே பயமாக இருக்கும். பார்க்கும் நமக்கு இவ்வளவு பயம் இருக்கிறதே. அதெப்படி ஓட்டும் இவர்களுக்கு இருப்பதில்லை என்று யோசித்து பார்த்திருக்கிறேன். 

"இளங்கன்று பயமறியாது" என்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை.

நானும் முன்னர் வண்டியை வேகமாக ஓட்டியிருக்கிறேன் தான். இப்போது குறைத்திருக்கிறேன்.. வேறு எதற்கு...அடிபட்டால் ஏற்படும் விளைவை எண்ணி...😇

அதுவெல்லாம் இவர்களுக்கு தெரியாமலா இருக்கும்...இருந்தும் ஓட்டுகிறார்கள் என்றால்...அதி வேகமாக  காற்றை கிழித்து கொண்டு ஓட்டும்போது, முகத்தில் அறையும் அந்த காற்று....அது தான் அவர்களுக்கு பேரானந்தத்தை கொடுக்கிறது போல...

அது ஒரு வித மாதிரியான போதை மட்டுமல்ல. அவர்களின் இயல்பே அதுவாகத் தான் இருக்கும். 

உண்மை தான்...

அந்த விளையாட்டு(??) வீரர்கள் எல்லாரின் ஜாதகத்தை பார்த்தால் அவர்கள் மிதுனம், துலாம், கும்பம்  காற்று ராசிகள் லக்கினமாகவோ ராசியாகவோ கொண்டவர்களாக இருப்பார்கள்.

நமக்கே தெரியும்.....

பஞ்ச பூதங்களை கிரகங்கள் தான் ஆட்சி செய்கின்றன என்பது விஞ்ஞான அடிப்படையில் நிரூபிக்கபட்டுள்ளனது. மேஷம், சிம்மம்,தனுசு நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி,மகரம் நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள். கடகம் , விருச்சிகம் , மீனம் நீர் ராசிகள்,

இந்த பஞ்சப் பூதங்களை உள்ளடக்கிய நம் உடலில் நம் பிறந்த லக்கினத்திற்கேற்ற பூதமே ஆட்சி அதிகம் புரியும் என்பதும் உண்மை தானே..

அதனால் தான் காற்று இராசியான மிதுனம், துலாம், கும்பம் ராசிகளை இலக்கினமாக கொண்டவர்களுக்கு காற்றில் வேகமாக போக அல்ல... பறக்கப் பிடிக்கும்.

நான் சிம்ம லக்கினம் . நெருப்பு இராசி.  மற்றவர்கள் எல்லாம் "ஐயோ கொதிக்குதே|ன்னு சொல்லிப் பிடிக்க முடியாமல் காபி டம்ளரை கீழே வைத்து விட்டு நிமிர்வதற்குள் நான் குடித்தே முடித்து விட்டு கீழே வைப்பேன்..நெருப்பு கோழி போல...😅

அந்தந்த  இலக்கினங்களின் குணாதிசயம் இயல்பாகவே நமக்கு அமைய பெற்றிருக்கும்.

கார் எந்த விலை உயர்ந்ததாக இருந்தால் என்ன...அதை  ஓட்டுவதை விட மோட்டார் சைக்கிளில் அப்படி ஓட்டுவது தான் இந்த வகை ஆட்களுக்கு பிடிக்கும் என்றேனே..

அது மற்றவரின் கருத்தை கவரவேண்டும் என்பதற்காக சைலென்சரை எடுத்து விட்டு விடுவது, வினோதமான ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை பொருத்திக்கொள்வது, ஜிக் -ஜாக்கென்று ஓட்டுவது என்று யாரை கவர்கிறார்கிலோ இல்லையோ, போக்குவரத்து போலிசாரின் கண்ணில் படத் தவறுவதில்லை!!

ஆனால் ..இது போன்ற சிறு சிறு தவறுகள் தானே என்று விளையாட்டிற்காக செய்வது, ஏதேனும் ஒரு சாலை விபத்தில், அது ஒரு உயிரின் பலி கொள்வதில் கொண்டு போய் நிறுத்தும்.  எப்போது ? 

ஜாதகத்தில் ஆறுக்குடைய  அதிபதி சுபத்துவமோ சூட்சம வலுவோ இல்லாது இருக்கும்போது , அதன்   அல்லது அதனுடன் தொடர்பு கொண்ட கிரகத்தின் தசா புத்தி நடந்துக் கொண்டிருக்கும்போது ..

பழைய காலம் போலில்லை...நான் ஒட்டி மாட்டிக்கொண்டால், வேறு ஒருத்தரை கொண்டு போய் நிறுத்திவிடலாம் என்பதற்கு.  எல்லோர் கையிலும் காமிராவுடன் கூடிய போன் இருக்கிறதே!! அத்தோடு ஆறாம் அதிபதி தன் காரகத்துவமான வம்பு, வழக்கு என்று சிவப்பு கட்டிடத்திற்கு நம்மை இனிதே அழைத்து செல்வார்!!

அப்போதும் பேரானந்தம் இருக்குமா??

புதன், 18 ஆகஸ்ட், 2021

ஜோதிடம் என்பது ஒரு அறிவியலா?

 இதே சந்தேகம் உங்களுக்கு மட்டுமல்ல பி.எம்.பார்கவாவிற்கும் வந்தது..அதுவும் அவர் எப்பேர்ப்பட்டவர் ..தெரியுமா?

டாக்டர் பார்கவா, செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையததின் தோற்றுவித்தவர்/இயக்குனர்..எண்ணற்ற விருதுகள் வாங்கியவர்.இதை எல்லாம் விட முக்கியம் , ஆராய்ச்சிகள் மூலம் அறிவியலில் அவர் ஆற்றிய பங்கிற்காக, 1986ல் பத்ம பூஷன் அவார்டு வாங்கியவர்..

2000 வருட வாக்கில் யு.ஜி.சி ஜோதிட அறிவியல் " என்ற பி.எஸ்.சி., எம்.எஸ்.சி.எண்ற புது கோர்ஸை 2001 கல்வியாண்டில் வர இருப்பதாக அறிமுகப்படுத்தி, நிதி ஒதுக்கீடு செய்ததை பார்த்து பொறுக்காமல், உடனே ஆந்திரா உயர்நீதிமண்றத்தில், "ஜோதிடம் ஒரு அறிவியல் கிடையாது..அதனால் அந்த கோர்ஸை துவக்க தடை விதிக்க வேண்டும்" என்று ஒரு ரிட் போட்டார்.அவருடன் அதில் இணைந்தவர்களில் ஒருவர் உஸ்மானியா பல்கலைக்கழக அரசியல் அறிவியல்(?!) துறையின் பேராசிரியர் சுபாஷ் சந்திர ரெட்டி..

அவர் வைத்த வாதங்களையே பாருங்கள்..

  • வேத ஜோதிடத்தின் பாடத்திட்டத்தை அறிவியல் படிப்பு என்று அழைக்க முடியாது, ஏனெனில் ஜோதிடம் ஒருபோதும் அறிவியலாக கருதப்படவில்லை. அறிவியல் என்பது அறிவியல் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெறப்பட்ட அறிவு என வரையறுக்கப்படுகிறது அத்தகைய அறிவின் பண்புகளில் தவறுகள் சரிபார்ப்பு மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய தன்மை அடங்கும். விஞ்ஞான உண்மைகள் தனிநபர்களின் விருப்பங்களையும் விருப்பங்களையும் சார்ந்தது அல்ல.
  • அது தவிர அறிவியல் என்பது சர்வதேசமானது. கருத்து வேறுபாடுகள் எழும் போது, ​​உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் அவற்றைத் தீர்க்க நேர்மையாகவும் விடாமுயற்சியுடனும் வேலை செய்கிறார்கள்.
  • மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்கள் இல்லாததால், ஜோதிடத்தை ஒரு விஞ்ஞானமாக கருத முடியாது. கடுமையான அறிவியல் நடைமுறையின்படி நடத்தப்பட்ட எந்த அறிவியல் ஆராய்ச்சியோ அல்லது ஆய்வோ அதை ஆதரித்ததில்லை..
  • "ஜோதிர் விக்யான்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவது, கல்வியை காவி மயமாக்குவதற்கும், உயர் கல்வியில் இந்துத்வா மதிப்புகளை திணிப்பதற்கும் அவர்களின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலைத் தூண்டுவதற்கான ஒரு தெளிவான முயற்சியே.
  • தூய அறிவியல் துறைகளில் நிதி தேவைக்காக ஆராய்ச்சி பாதிக்கப்படுவதாகவும், எனவே வேத ஜோதிடம் என்ற போலி அறிவியலுக்கு பெரும் தொகையை செலவழிப்பதில் எந்த நியாயமும் இல்லை, இது ஒரு பெரிய பாய்ச்சலாகும்."

இது தான் அவர்கள் முன்வைத்த வாதங்கள்..ஆனால் ஆந்திர உயர்நீதிமண்றம், "மேற்கொண்டு இந்த பாடம் சம்பந்தப்பட்ட அறிதல் மாணவருக்கு தேவை என நிபுணர் குழு கருத்துக்கு பின்னே அரசு எடுத்திருக்கும் இந்த கொள்கை முடிவில், அதுவும் இன்னமும் முடிவாகாத நிலையில் தலையிட முடியாது" என்று தள்ளுபடி செய்துவிட்டது..

நம் விடாக்கண்டன் டெல்லிக்கு போனார்.மத்திய அரசிடம் அல்ல. உச்ச நீதிமன்றத்துக்கு..அங்கு அமெரிக்கா போன்ற பல நாடுகளின் நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இறையாண்மை தத்துவத்துக்கு எதிராக இந்த "போலி "அறிவியலை புகுத்தி, தங்கள் இந்துத்துவா கொள்கையை மாணவர் மனதில் பதிக்க விடக்கூடாது என்றனர்.

அப்போது நடந்த வாதப்போரின் சமயம்,ஜோதிடம் என்றால் அகராதிகள் தரும் விளக்கம் ஆராயப்பட்டது.

  • "விண்மீன்களின் அறிவியல் அல்லது கோட்பாடு, முன்பு வானியலுக்கு சமமாகப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது போலி அறிவியலுக்கு அர்த்தத்தில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இது மனித விவகாரங்களில் சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் ஒப்பீட்டு நிலைகளின் செல்வாக்கைப் படிப்பதன் மூலம் எதிர்காலத்தை முன்னறிவிப்பதாகக் கூறுகிறது. " [வெப்ஸ்டரின் புதிய சர்வதேச அகராதி]
  • "பூமி மற்றும் நிலையான நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்கள் ஆகியவற்றை கவனிப்பதன் மூலம், சில நேரங்களில் விரிவான மற்றும் சில சமயங்களில் செயல்பட்டுள்ள. மனித நிகழ்வுகளை முன்னறிவிக்கும் ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் அல்லது போலி அறிவியல்",
  • ஒரு விஞ்ஞானமாக, ஜோதிடம் என்பது "பூகோள விவகாரங்களில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் செல்வாக்கைப் பற்றிய சரியான புரிதல் என்று நம்பப்படுவதன் மூலம் தனிநபர்கள், குழுக்கள் அல்லது நாடுகளின் தலைவிதியை கணிக்க அல்லது பாதிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • ஒரு போலி விஞ்ஞானமாக, ஜோதிடம் நவீன மேற்கத்திய அறிவியலின் கண்டுபிடிப்புகள் மற்றும் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று கருதப்படுகிறது.

அறிவியல். [என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா (2 வது பதிப்பு)] "

பின்.உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சாராம்சம் இதோ.

  • மேற்கூறிய நிலையான புத்தகங்களின்படி, ஜோதிடம் என்பது ஒரு விஞ்ஞானமாகும், இது எதிர்காலத்தை முன்னறிவிப்பதாக அல்லது மனித விவகாரங்களில் சந்திரன், சூரியன், கிரகங்கள் மற்றும் பிற நட்சத்திரங்களின் தொடர்புடைய நிலைகளின் செல்வாக்கைப் படிப்பதன் மூலம் கணிப்புகளைக் கூறுகிறது. ஆகையால், அவற்றின் நிலைகள், அளவுகள், இயக்கங்கள் மற்றும் தூரங்கள் போன்றவற்றைப் படிக்க வேண்டும். வானியல் ஒரு தூய அறிவியல். இது பண்டைய இந்தியாவில் ஒரு பாடமாகப் படிக்கப்பட்டது மற்றும் மேற்கத்திய உலகில் எவரும் ஒரு பாடமாகப் படிப்பதற்கு முன்பே இந்தியா சிறந்த வானியலாளர்களை உருவாக்கியுள்ளது. ஜோதிடம் என்பது சூரியன், பூமி, கிரகங்கள் மற்றும் பிற வான கிரகங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது ஓரளவாவது அறிவியலின் படிப்பாகும்."
  • நிபுணர்களின் கருத்து படியே இந்த கல்வி தொடங்கப்பட்டுள்ளது.. நீதிமன்றம் நிபுணர் அல்ல.
  • 'ஜோதிர் விக்யான்' கற்பித்தலை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் போதனையுடன் எந்த சூழ்நிலையிலும் சமப்படுத்த முடியாது. எனவே, அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கருத்தை மீறும் அல்லது பாதிக்கும் என்ற அடிப்படையில் ஜோதிர் விக்யானை ஒரு பாடநெறியாகச் சேர்ப்பதை எதிர்பதற்கான எந்த தகுதியும் இல்லை, நிராகரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். .
  • இதே போன்ற ஒரு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் எதிர்கொண்டுள்ளது.டாக்டர் நடராஜன் தொடர்ந்த இதே போன்ற வழக்கில், "சம்பந்தப்பட்ட மாணவர் தனது எதிர்கால வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையையோ அல்லது பாடத்தையோ தேர்ந்தெடுக்கக் கூடிய சுதந்திரம் வேண்டும், ஒரு பாடத்தின் அடிப்படையோ அல்லது சில வழிபாட்டு முறையினர அதை கண்டுபிடித்ததாலோ, அது குறிப்பிட்ட மதத்தின் பிரச்சாரத்தை மட்டுமே விளைவிக்கும் என்று கருத முடியாது. என்று ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் எடுத்த கருத்துடன் நாங்கள் உடன்படுகிறோம்."
https://indiankanoon.org/search/?formInput=astrology%20is%20science

இந்த தீர்ப்பு வந்தது 2004ல்..

2011ல் ஒரு பொதுநல வழக்கு ஒன்று ஒரு என்.ஜி.ஓவால், பம்பாய் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது..

என்னவென்று?

போலியான நியுமரால்ஜிஷ்ட, வாஸ்து நிபுணர், தாந்தரீகர்கள், கைரேகை நிபுணர், ஜோசியர் என்று. அவர்கள் சொல்வது போல, பெயரை, இடத்தை மாற்றினால், உடனே அவர்கள் வாழ்வில் மேஜிக் நடக்கும் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.. அவர்கள் மீது மருந்துகள் மற்றும் மருத்துவ தீர்வுகள் சட்டம் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று!!

ஆனால் மத்திய அரசு அதை மறுத்து, "இந்த சட்டம் மருந்துகள் மற்றும் மாய பரிகாரங்கள் தொடர்பான தவறான விளம்பரங்களை தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜோதிடம் மற்றும் கைரேகை, வாஸ்து சாஸ்திரம் போன்ற தொடர்புடைய அறிவியல்களுடன் தொடர்புடையது அல்ல, அதைக் கருத்தில் கொண்டு, மனுதாரரால் கோரப்பட்ட ஜோதிடம் மற்றும் தொடர்புடைய அறிவியலை ஊக்குவிக்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க முடியாது" என்று சொல்லியதோடு நில்லாமல், "ஜோதிடம் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் அது 4000 ஆண்டுகள் பழமையானது " என்றது..

மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஜோதிடம் தொடர்பான பிரார்த்தனையைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இந்த பிரச்சினையை பரிசீலித்து "ஜோதிடம் ஒரு அறிவியல்" என்று தீர்ப்பளித்துள்ளது.அத்தோடு ஜோதிட அறிவியலை பாடத்திட்டத்தில் சேர்க்கலாமா என்று பரிசீலிக்குமாறு 2004 இல் நீதிமன்றம் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்த நீதிமன்றம் கட்டுப்பட்டது" என்று,

Astrology is a science: Bombay HC | India News - Times of India

இவ்வளவு கற்றறிந்தவர்களே "ஜோதிடம்" ஒரு அறிவியல் தான் என்று சொன்னபிறகு நான் வேறு என்னத்தை சொல்ல?

சனி, 14 ஆகஸ்ட், 2021

அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க தடைகோரிய மனு தள்ளுபடி ஆனதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 நம் ஆட்களின் பிரச்சினையே இது தான்.மக்கள் பிரதிநிதிக்கும் அரசு அதிகாரிக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் போட்ட வழக்கு இது..

இந்த வழக்கை போட்டவர் கேட்ட பரிகாரம் என்ன?

தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் HR & CE ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் "அவர் இந்து மதத்தை நம்புகிறார்." என்ற உறுதிமொழியை எடுக்காமல், இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் குழுவின் தலைவராக பங்கேற்பதை தடுக்கவேண்டும்" என்பது தான் அது!!

இதற்கு முன்னரும் இந்த மனுதாரர் , சென்னையின் வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீதரன் இதே போன்ற ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.,அதில், "தற்போதைய HR & CE கமிஷனர் மற்றும் பிற அதிகாரிகளால், பிறப்பால் தாங்கள் இந்துக்கள் என்று கட்டாயமாக உறுதிமொழி எடுக்காத அனைத்து அதிகாரிகளையும் பணியில் இருந்து நீக்க வேண்டும் "என்ற கோரிக்கை தான் அது!!

அரசு தரப்பு வழக்கறிஞர் பணியில் இருந்து நீக்க தேவையில்லை. வேண்டுமானால், இப்போது உத்தரவிட்டால் கூட, அனைத்து ஊழியர்கள்/அதிகாரிகள் உறுதிமொழி எடுப்பார்கள்" என்று சொல்ல , உயர் நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு அப்படியே உத்தரவிட்டது!

அதே பாணியில், இப்போது முதல்வரும் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று இந்த பொதுநல வழக்கை போட்டுள்ளார்..

என்ன ஆச்சரியம் என்றால்,

  • வழக்கு போட்டவர் ஒரு வழக்கறிஞர்..
  • அவருக்கு ஏற்கெணவே தான் போட்ட மனுவின் படி ஏன் உயர்நீதிமன்றம், அறநிலையத்துறை அதிகாரிகளையும் ஊழியர்களையும் மேற்படி உறுதிமொழி எடுக்க சொல்லி உத்தரவிட்டது என்று தெரியும்.
  • ஏனென்றால், அவர் தான் தன் பிரமாண பத்திரத்தில், "ஆணையர், கூடுதல் ஆணையர், கூட்டு, துணை அல்லது உதவி ஆணையர் மற்றும் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட அனைத்து அலுவலர்கள் அல்லது பணியாளர்கள் , இந்து மதத்தை பின்பற்றும் நபராக இருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்கள் அந்த பதவியில் இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று 1959 ஆம் ஆண்டின் எச்.ஆர் & சிஇ சட்டத்தின் பிரிவு 10 கூறுகிறது என்று சுட்டிகாட்டியவர்.!!
  • அதே போல, செப்டம்பர் 23, 1961 அன்று வெளியிடப்பட்ட அரசு ஆணையின் படி, ,இந்து மதத்தை பின்பற்றுவதை நிரூபிக்கும் விதிகள், நநடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது ,என்றும் அந்த விதிகளின்படி, அந்த சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் அருகிலுள்ள இந்து மத அமைப்பின் முன்னிலையிலும் அதன் அறங்காவலர் குழுவின் தலைவர்.முன்னிலை வகிக்கும்போதும், உறுதிமொழி எடுக்கவேண்டும் என்று சொலலியுள்ளதை விவரித்ததும் இவரே!!
  • அதன்படி உறுதிமொழி ஏற்காத அனைத்து அதிகாரிகளையும் வேலையை விட்டே தூக்க வேண்டும் என்றார்!!
  • அதன் உண்மைத்தன்மையை உணர்ந்த பின்பே, உயர்நீதிமன்றமும் மேற்படி உத்தரவை போட்டது!

HC directs all HR&CE dept. staff to take the ‘Hindu pledge’

  • இத்தனைக்கும், அறநிலயத்துறை அதிகாரிகளுக்கு அந்த விதிகள் பொருந்தாது என்று அரசுதரப்பில் வாதிட்டு பார்த்தார்கள். ஆனால், உயர் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை..HR&CE சட்டத்தின் பிரிவு 10 ஐப் பற்றி குறிப்பிடுகையில், விதி 2 உடன் வாசிக்கப்பட்டது, "இந்த விதியில், "நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் ..." என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது. எனவே கமிஷனர் மற்றும் பிற உயர் அதிகாரிகளை அதன் வரம்பிலிருந்து விலக்க முடியாது என்பது தெளிவாக இருந்தது."என்று தான் உத்தரவில் தெளிவாக சொல்லவில்லையா?இதை அவரும் தானே தெரிந்து வைத்திருந்தார்?!
  • இப்போது சொல்லுங்கள்.இவ்வளவு விவரம் தெரிந்தவருக்கு, தமிழக முதல்வர், இந்து அறநிலையத்துறை சட்டத்தால் நியமிக்கப்படவில்லை என்றும், அவர் அதன் அதிகாரி என்பதும், அவர் பொது ஊழிடர் மட்டுமே, அவர் அந்த சட்ட விதிகளின் வரையறைக்குள் வரமாட்டார் என்று தெரியாதா?
  • அதனால் தான், அந்த பொது நல வழக்கு மனுவை உயர்நீதிமன்றம், திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. .இதை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசாவலு ஆகியோரின் முதல் டிவிஷன் பெஞ்ச், "முற்றிலும் குறும்புத்தனமானது" என்று கூறி, மனுவை அனுமதிக்க மறுத்துவிட்டது. வழக்கு "மிகவும் மோசமான சுவையில்" இருப்பதாகவும், வழக்குரைஞர் கேட்கும் பிரார்த்தனையில் ஒரு தப்பெண்ணம் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்

அது உங்களுக்கும் தெரிந்திருக்கும்!

  • இத்தனைக்கும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீனடிக்கும் இதுபோண்ற வழக்குகளுக்கு செலவுத்தொகை உத்தரவிடும் மாண்புமிகு நீதிபதிகள், சென்னை வழக்குரைஞர் எஸ்.ஸ்ரீதரன் மீது செலவுகளை விதிப்பதைத் தவிர்த்தாலும், சம்பந்தப்பட்ட பெஞ்சின் வெளிப்படையான அனுமதியைப் பெறாமல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உயர் நீதிமன்றத்தில் எந்த பொதுநல மனு தாக்கல் செய்ய அவருக்கு உரிமை இல்லை என்று உத்தரவிட்டனர்.!!
சரி தானே!!
  • இந்த வழக்கிற்கு மேல் முறையீடு செய்யவேண்டும் என்றால் உச்ச நீதிமன்றம் தான் போகவேண்டும்.நம் கோரா சட்டமேதைகள் சொல்வது போல இங்கேயே அப்பீல் போடவும் முடியாது.அதனால் இங்கேயே ஸ்டே கிடைக்காது!!
  • அதுவும் அரசு ஊழியரிகள், அதிகாரிகள் யார், பொது ஊழியர்கள் யார் என்ற வித்யாசம் கூட தெரியாமல், அல்லது தெரிந்தும் விளம்பரத்திற்காகவோ செய்தது போன்ற ஒன்றிற்கு, இத்தனை கருணை காட்டியதே அதிசயம்..

ஒரு பொது ஊழியர் மட்டுமல்ல யாரும் குறிப்பிட்ட மதத்தை தான் பின்பற்றுகிறார் என்பதை வெளியில் சொல்லவேண்டிய அவசியமில்லை..

எந்த மதத்தையும் இங்கு யாரும் பின்பற்றும் சுதந்திரம் என்பது அடிப்படை சுதந்திரம்..அதை அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுத்துள்ளது..ஒரு மதத்தில் இருந்துக்கொண்டே அவர் இன்னொரு மதத்தை பின்பற்றவும் செய்யலாம்!!

அதனால் தான் உயர்நீதிமன்ற, இதுகூட தெரியாத வழக்கறிங்ஞருக்கு "இது ஒரு மதச்சார்பற்ற நாடு. அரசியல் சாசனம் கூட கடவுளின் பெயரிலோ அல்லது அரசியலமைப்பின் பெயரிலோ பதவிப் பிரமாணம் எடுக்க அனுமதிக்கிறது, ”என்று பாடம் சொல்லி கொடுத்தது!

அப்படியிருக்க, இந்து சமய அறநிலையத்துறையில் மட்டுமே இந்த விதிவிலக்கான விதி!!

ஏனென்றால், இந்து சமயத்தை பின்பற்றாத ஒருவர் அங்கு பணிபுரியும் போது, வேற்று மத துவேஷ எண்ணம் அவருக்கு இல்லையென்றாலும், மற்றவருக்கு அவர் அப்படி நடக்கிறாரோ என்பது போன்ற எண்ணம் வரக்கூடுமோ என்று தான்!!

சரி..இப்படி ஒரு மக்கள் பிரதிநிதி, உறுதிமொழி எடுத்தால் தான், அவர் எந்த மதத்தை பின்பற்றுகிறார் என்று மற்றவருக்கு தெரியுமா?

அப்படி அவர் எடுக்கவில்லையென்றால் அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியுமா? அல்லது, அவர் இந்து அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையிட கூடாது என்று தடுத்து நிறுத்தமுடியுமா?

பெரும்பான்மையான மக்கள் தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து, அரசு நிர்வாகம் செய்ய அனுப்பியவரை, மதத்தின் பெயர் கொண்டு முட்டுக்கட்டை போடுவதென்பது??

இதோ உயர்நீதிமன்றமே "சுளீர்" என்று சாட்டையால் விளாசியிருக்கிறது!!

"எந்த மதமும் குறுகிய மனப்பான்மையையோ அல்லது மற்றவர்களை காயப்படுத்துவதையோ போதிக்கவில்லை"

அதே போல இந்த பொது நல வழக்கை,

இதில் என்ன பொது நலன் இருக்கிறது??

போட்ட . வழக்குரைஞரால் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளை பாராட்ட முடியாது, என்றும் சொல்லியிருக்கிறது!!

ஏனென்றால், நீதிமன்றத்திற்கு நன்றாக தெரிந்திருக்கிறது…இங்கு மதம் பிரச்சினை அல்ல..

வெளிநாட்டில் உள்ள இதே ஆட்கள் அவர்கள் சுற்றம், அங்கு கிரித்துவர்களையும் 
நீக்ரோக்களையும் கூட திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள்..ஆனால் 
இந்தியாவுக்கு வந்து விட்டால் மட்டும் மதத்தின் ரட்சகனாக காட்டிக்கொள்வார்கள்!!☺️

சாதி தான்" என்பது!!

புதன், 11 ஆகஸ்ட், 2021

கல்வி சமூகத்தை மாற்றுமா?

கண்டிப்பாக ..கல்வி தனி மனதனின் வாழக்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்..

அதற்கு உதாரணம் இந்த மனிதர் …முஹம்மத் சாஜித் மகபூப் அன்சாரி…

ரொம்ப பெரிதாக கற்பனை செய்துக்கொள்ளாதீர்கள் ஆள் ஹீரோ போல ஏதும் செய்தாரா என்று…

ஒரு விதத்தில் ஹீரோ தான்….ஆனால் ஆண்டி ஹீரோ…கல் நாயக்..

2006 மும்பை தொடர் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதாகி குற்றவாளி என்று தீர்பளிக்கப்பட்டு தற்போது ஆயுள் கைதியாக சிறை வாசம் அனுபவ்ப்பவர் தான் இவர்!

சிறையில் இருக்கும் போதே, கல்வியால் எல்லோரையும் திரும்பி பார்க்க வைதுருக்கிறார் இவர்….

அவர் என்ன செய்தார் என்று போகும் முன்,

கல்வியால் பொதுவாக என்ன செய்து விட முடியும்? ன்ற வினாவுக்குள் போவோம்…

இன்று நம் மாநிலத்தில் கல்வியறிவின் விகிதம் கூடி கொண்டே போகிறது.

மகிழ்ச்சி…..ஆனால் குற்றங்களும் அதே அளவுக்கு உயர காரணம் என்ன?

முழுதாக கல்வி அறிவில்லை என்றால் மோசம். ஆனால் அதை விட மோசமானது அரைகுறையாக, புரிந்தும் புரியாமல் கல்வி பயில்வது.

அதுவும் புரிந்து படித்து, அக உழாமல் ஆழமாக உழுவது போல் கற்பது அவன் எண்ணவோட்டத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரத்தான் செய்யும். ஆனால் கல்வியை இன்றைக்கு எதற்கு உபயோகமா என்று பார்க்கிறோம்?

தன பொருளாதார உயர்வுக்கு, குறுக்கு வழியில் பயன்படுத்துவது.

படித்தவர்கள் தான் அதிக அளவில் நூதனமான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். பாலியல் குற்றங்கள்..ஒன்றும் வேண்டாம்…. சாலை விதிகளை மீறி வண்டி ஓட்டுபவர் பெரும்பாலும் படித்தவர்களே.

இன்னொருவனின் வீழ்ச்சியில் தான் உயர்வு அடைய நினைக்கும், எப்படியாவது வாழ்க்கை படிக்கட்டில் மேலேற நினைக்கும் ஒருவனின் கல்வியால் சமூகத்திற்கு என்ன பயன்?

உதாரணதிற்கு ஒரு புள்ளி விவரத்தை சொல்லலாம்.

கேரளா தான் கல்வியறிவில் முன்னேறிய மாநிலம் என்று தெரியும். கடந்த, 2016-ம் ஆண்டின், தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிபரப்படி, தமிழகத்தின், கிரைம் ரேட் 672. ஆனால் கேரளாவின் கிரைம் ரேட், 1,980!!!அதாவது .தமிழகத்தை காட்டிலும், கேரளாவில், மூன்று மடங்கு அதிகம் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று தான்,நாம் நினைப்போம்.

ஆனால் உண்மை அது அல்ல. நம் காவல் நிலையத்திற்கு போய் புகார் கொடுத்தால் அதை பதிந்தால் தானே.??

ஏன்?

உள்ளதை உள்ளபடியே காட்டினால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டது என்று எதிர்கட்சியினர் குறை சொல்ல காரணமாக அமைந்து விடுமாம்.

ஆனால் கேரளாவில் இது போல புகார் கொடுத்து காவல் த்துறையினர் மறுக்க முடியுமா?

அங்கு கொரானாவை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கையும் அரசு மேற்கொள்கிறது!! வீடுகளுக்கு தேவையான அத்த்யாவாசிய பொருட்களை பகிர்கிறது…

ஆனால் இங்கேயோ…விலையில்லா பொருள் வாங்கவும், இரண்டாயிரம் ரூபாயை வாங்கவும் படித்தவர், படிக்காதவன் வித்தியாசமின்றி வரிசையில் நின்று வாங்குவோம்.!! 

 அதன் பயன் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் இரண்டு லட்சம் ரூபாய் கடன் இருக்கிறதாம். !!

இதற்கெல்லாம் காரணம்…சுயநலம் சார்ந்த எண்ணம்…

இதை மாற்றக் கூடியது சிறந்த கல்வி மட்டுமே…

அதனால் தான் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர் அங்கிருந்து கல்வி கற்றால், அவர் சிறை காலத்தையே குறைக்கும் வழி வகையை சிறை விதிகள் வைத்துள்ளன.

ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட சிறை விதிகளில் பெருமளவில் மாற்றமில்லை!!.

ஆனால் அது பொது மக்கள் அறிதலுக்கும் வ்ளிவராது.

இது போல மேற்கல்வி கற்றால் சிறை தண்டனை குறைக்கப்படும் என்ற விவரத்தை சிறை நிர்வாகமே தருவதில்லை.

ஜி. டபிள்யு.எப். ஹீகேள் போன்ற சிந்தனையாளர்கள் குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டும், தண்டனையை வழங்கும்போது அவர்களை பகுத்தறிவுள்ள மனிதர்களாக அதிகாரிகள் மதிக்க வேண்டிய உரிமை உண்டு.என்று வாதிடுவர்.

உலகெங்கிலும் உள்ள குற்றவியல் நீதி அமைப்பு எல்லாம் , பயத்தை தூண்டுவதற்காக தண்டனையைப் பயன்படுத்துவதில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டன., தற்போது, தண்டனையை குற்றவாளிகளின் மனமாற்றம், சுய ்-சீர்திருத்தம் மற்றும் சமரசம் செய்ய வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவும் அதை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறது.. 


இப்போது தான் "மக்களை தேடி மருத்துவம்" என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது..!

ஆனால் ஏற்கெனவே கைககெட்டும் தூரத்தில் நீதியை கொண்டு வந்த பெருமை இந்திய நீதித்துறைக்கு உண்டு.

இலவச சட்ட உதவி முகாம்களும், சட்ட ஆலோசனை மையங்களும், சமரச மையங்களும் மக்கள் நீதிமன்றங்களும் எத்தனையோ நிலுவையிலுள்ள கோடிக்கணக்கான வழக்குகளை தீர்த்தது மட்டுமல்லாமல், வரவிருந்த வழக்குகளையும் சமரச முறையில் தீர்த்து வைத்துள்ளனர்!!

ஆனால்……

அதை பெறக கூடிய அளவில் கல்வி கற்று இருந்தால் தானே பயனடைய முடியும்?!

சிறை தண்டனை குறைப்பிற்கு அருகதை உள்ள எத்தனையோ சிறைவாசிகள் அது குறித்து விழிப்புணர்வு இல்லாமலேயே உள்ளனர். 

 சிறை அதிகாரிகளும் அது குறித்து அக்கறை கொள்வதில்லை.

இந்த கோவிட் தொற்று காலத்தில், தகுதியுடைய சிறைவாசிகளுக்கு தண்டனையை குறைத்து சிறைக்கு வெளியே அனுப்புவதில் மாநில அரசுகள், நம் மாநிலம் உட்பட போதிய அக்கறை காட்டவில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே வருததப்படுள்ளார்.

சிறை தண்டனையின் காலத்தை குறைக்கக்கூடிய விதிகளை பற்றி நான் பேச ஆரம்பித்ததும் நிறைய பேருக்கு , பேரறிவாளன் மற்றும் பலர் தான் நினைவுக்கு வருகிறார்கள். நான் அந்த விஷயத்திற்குள் போகவில்லை.

நம்மில் எத்தனை பேருக்கு, சிறை வாசிகள் அங்கிருந்து உயர் கல்வி பயின்றால், தண்டனை காலம் குறைக்கப்படும் என்று தெரியும்?!!

அதை முஹம்மத் சாஜித் மகபூப் அன்சாரி…தெரிந்து வைத்துள்ளார். அவருடைய பதினாறு வருட சிறைககாலத்தில், அவர் பெற்றது பல பல்கலைகழக பட்டங்கள், சான்றிதழ்கள்…

அதுவும் அவரின் பொலிடிகல் சயின்ஸ் மேற்படிப்பும், மனித உரிமைக்கான பட்டய படிப்பும் நீண்ட இருண்ட சிறை வாழ்ககையை கடக்க அவருக்கு உதவியதாம்…

அது மட்டுமல்ல இந்த கல்வி தகுதிகள், அவருடைய தண்டனை காலத்தில் மூன்று மாதத்தை குறைத்தும் விட்டுருககிறது!!

இப்படி ஒரு சிறை விதி இருப்பதே யாருக்கும் தெரியாமல் இருந்த போது, இவர் தன்னுடைய இடைவிடாத மனுகளாலும், தைகள் அறியும் சத்தின் மூலமும், இந்த சிறை தண்டனை குறைப்பிற்குரிய விவரங்களை பெற்று, அதற்கு தகுதியுடையவர் ஆகியிருக்கிறார்!!

அவர் இருக்கும் மகாராஷ்டிரா மாநில சிறை விதிகளின் படி அதிகபட்சமாக தொண்னூறு நாட்கள், கல்விக்கான தண்டனை குறைப்பு உண்டாம்… அதே போல தமிழ்நாட்டிலும் உண்டு….

சிறைவாசத்தின் பொது, கைதிகள் நிறைய பேர் மேற்கல்வி பயில்வது உண்டு. அதை சிறை அதிகார்கள் ஊக்குவிப்பதும் உண்டு. 

 ஏன் அன்சாரியை போலவே அந்த வழக்கில் தண்டனை பெற்றவர்களும் சிறையிலேயே கற்கிறார்கள் தான். அதில் ஒருவருக்கு சட்டக கலூரியில் பயில நுழைவு தேர்வு எழுதி தேர்வும் ஆகி விட்டாராம். ஆனால் அவர் அதன் பிறகு, குற்றவாளி என்று தீர்ப்பு வந்தவுடன், மும்பை சிறையிலிருந்து நாசிக் சிறைக்கு மாற்றப்பட்டுவிட்டார் என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது….

ஆனால் யாரும் யோசிக்காத வகையில் , இப்படியொரு சிறை விதி இருப்பதை அறிந்து , அந்த தகவலை வெளிககொனரவே முடியாத சிறை துறையிலிருந்து பெற்றது தான் எல்லோரையும் பேச வைத்துள்ளது!

அவருக்கு கிடைத்த ஆயுள் தண்டனையின் படி அவர் குறைந்த பட்சம் பதினான்கு வருடம் சிறை தண்டனை பெற வேண்டும். ஏற்கெனவே அவர் பதினாறு வருடங்களாக அங்கிருககிறார். அவர் தண்டனை குறைப்பிர்கான விசாரணை இனி தான் எடுத்துக்கொள்ள இருக்கிறது…

அதனால் கனவான்களே …நமக்கிருக்கும் உரிமைகளை தெரிந்துக கொள்ளவும் கல்வி அவசியம் தான்….ஆனால் அந்த கல்வியும், தான் இருக்கும் படி நிலையை புரிந்துக கொண்டு வாதிடுவதற்கே பயன்படுத்த வேண்டும்…

அது தெரியாமல்…'நீயும் நானும் ஒன்னு"ன்னு வாதிட்டால், நம தலையில் போட்டுக்க வேண்டியது மண்ணு" தான்!!.

சனி, 7 ஆகஸ்ட், 2021

நில பத்திரத்தில் உள்ள சர்வே எண் பட்டாவில் அந்த சர்வே எண் விடுபட்டுவிட்டது, அந்த சர்வே எண் வேறு ஒருவர் நபரில் பெயரில் உள்ளது, இதை எவ்வாறு மாற்றுவது?

 பட்டாவில் நீங்கள் யாரிடம் வங்கினீர்களோ அவர் பெயர் இல்லை.

ஆனால் அவர் எழுதி குடுத்த பத்திரத்தில் மட்டும் சர்வே எண் உள்ளது இல்லையா?

பட்டாவை வழங்குவது அரசு தரப்பு..ஆனால் பத்திரம எழுதுபவர் தனி நபர்.

யாருடைய ஆவணம் செல்லுபடியாகும்?

கண்டிப்பாக அரசு தரப்புடையதே..

இல்லையா பின்னே..தனி நபரின் ஆவணம் தான் செலலக்கூடியது என்றால் யார் வேண்டுமானாலும், யாருடைய சொத்தையும் எழுதி கொடுத்து விடலாமே?!!

பட்டாவில் சர்வே எண் விடுபட்டுவிட்டது என்கிறீர்கள்.

ஏனென்றால் அது வேறு ஒருவரின் பெயரில் உள்ளது..அதாவது அந்த சர்வே எண்ணுக்குரிய நிலததின் உரிமையாளர் அவர் என அரசு ஆவணம் காட்டுகிறது.

இந்த நிலையில், பத்திரத்தில் சர்வே எண் குறிப்பிட்டு விட்டாலேயே உங்களுக்கு நில உரிமை வந்துவிட்டது என்று அர்த்தமல்ல.

ஏனெனில் பத்திரம எழுதி கொடுத்தவருக்கே அந்த உரிமை, அந்த தேதியில் இல்லை என்பதால்..

உண்மையிலேயே, அவருக்கு தான் அந்த நிலம் உரிமையானது என்றால், எந்த காலத்தில் பட்டா வேறொருவரின் பெயருக்கு மாற்றப்பட்டது என்று பார்க்க வேண்டும்.

அரசு தரப்பில் ரீ.சர்வே செய்யும்போது, தவறு நடந்திருந்தாலும, அதற்கான பல வருடம் கடந்து வந்து விட்டோம்.

அது, இவருக்கு இத்தனை காலமும் ஏன் தெரியாமல் போனது என்பதும் தெரிய வேண்டும்.

காரணங்கள் ஏற்று கொள்ளதககதாக இருக்க வேண்டும்.நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்."சட்டம் தூங்குபவருக்கு உதவாது" என்று.

நீங்கள் கேட்கலாம்.."நாம் காலக்கெடுவில் மனு கொடுத்திருந்தாலும், அதை உடனேவா பைசல் செய்துவிடுகிறார்கள்?" என்று.

சட்டம், நம் குறையை, முறையீடு, எதிர்ப்பை ஒருவர் தெரிவிக்க கால வரையறை வைத்திருக்கிறதே தவிர, அதை தீர்வு காண்பதற்கு கெடு விதிக்கவில்லை!

அதனால் தான் பல தசாப்தம் கடந்தும் தீர்வை எட்டாத கோரிக்கைகள், அரசிடம் நிலுவையில் இருக்கிண்றன!

இன்னொன்று சொல்ல வேண்டும்.தவறு அரசுதரப்பில் இருந்தாலும், விற்றவர் தரப்பில் இருந்தாலும், அதை சரி செய்து, தன் பெயருக்கு நிலத்தின் பட்டாவில் மாற்றிக்கொண்டு, அதன் பிறகு தான், அந்த நில உரிமையை பத்திரம் மூலம் மாற்ற முடியும்.

அதற்கு முன்னரே பதிவு செய்யப்பட்ட இந்த பத்திரம் செல்லாது.. எந்த நில உரிமையையும் மாற்றி தராது!!

இதற்கேற்பட்ட செலவுகளை, நிலம் விற்றவர் தான் ஏற்க வேண்டும்.ஏனெனில் அந்த வில்லங்கம் அவரால் உருவானது என்பதால் அதை சரி செய்ய வேண்டிய கடமையும் அவருக்கே..இதற்கான ஸரத்து ஒன்று பொதுவாக பத்திரத்திலேயே இருக்கும்.

ஆனாலும் இந்த வில்லங்கம் இருப்பதை, வாங்கும் முன்பே சான்றிதழ் எடுத்து, பார்த்து தெரிந்திருக்கலாம்.

வாங்குபவர் தான் கவனமாக இருக்க வேண்டும். இல்லாத போது, விற்றவரிடம் இழப்பீடு கேட்கலாம். மறுக்கும் போது,

தனக்கு உரிமை யில்லாத நிலத்தை ஏமாற்றி விற்றுவிட்டதாக நீதிமண்றத்தை அணுகி, இழப்பீடு கேட்கலாம்.

தர்மமே வெல்லும்!!

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு எவ்வளவு சதவீதம்?

 தமிழ்நாட்டில் தான் 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது..இதில் 50% பிற்பட்டோருக்கு உரியது…இது நாட்டிலேயே அதிக அளவிலான இட ஒதுக்கீடு என்றாலும் இது மண்டல் கமிஷன் அடிப்படையில் என்பதால் இன்றுபவரையில் பிரச்சினை இல்லை.

ஏன் இன்று வரையில் என்று சொல்கிறேன்?

ஏனென்றால் உச்சநீதிமன்றத்தில், இது குறித்த வழக்கு இறுதி விசாரணை வெகு சீக்கிரம் வரவுள்ளது!!

மராத்தா வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என்று சமீபத்தில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது நினைவில் இருக்கலாம்!!

நிலைமை இப்படியிருக்க, தற்போது சூட்டை கிளப்பி கொண்டிருக்கும் இந்த இட ஒதுக்கீடு விவகாரம் தான் என்ன?

மருத்துவ படிப்புகளில் பிற்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு செய்ததற்கு மத்திய அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன..அந்த உத்தரவை எந்த கட்டாயத்தின் பேரில் போடப்பட்டது என்பது விவரம் அறிந்தவருக்கு தெரியும்.

நீதிமண்ற அவமதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்துக்கொண்டார்கள் .அவ்வளவு தான்…

இப்போது இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் வந்து செய்திருக்கிறது.

செவ்வாயன்று, வந்த அந்த வழக்கு விசாரணையின் போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மாநிலத்தால் ஒப்படைக்கப்பட்ட AIQ இடங்களுக்கு OBC களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கவும், தற்போதுள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் வராதவர்களுக்கு 10% EWS இட ஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. என்றார்.

அதற்கு மெட்றாஸ் உயர்நீதிமன்றம் என்ன சொன்னது தெரியமா?

"தமிழ்நாடு வழங்கும் ஓபிசி பிரிவினருக்கான 50% ஒதுக்கீட்டை , அகில இந்திய ஒதுக்கீட்டிலும் (ஏஐக்யூ) சேர்க்க வேண்டும் என்று தான் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இரண்டுமே தெளிவுபடுத்தியுள்ளன. மத்திய சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளபடி 27% ஆக அது இருக்க முடியாது."

ஆனாலும், திமுக வின் மூத்த வழக்கறிஞர் பி வில்சன் அவர்கள் எடுத்து வைத்த வாதம் ஆணித்தரமானது,

" தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்கள் மற்றும் நியமனங்களில் இட ஒதுக்கீடு) சட்டம், 1993 என்பது, AIQ இடங்களுக்கும் பொருந்தும். என்பதை, ஜூலை 27, 2020 தேதியிட்ட உயர் நீதிமன்ற உத்தரவு, படி, சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொண்டதாக வாதிட்டார்.

அதன்படி, AIQ இடங்களில் OBC களுக்கு மாநிலத்தில் கொடுப்பது போல 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், 27% அல்ல, "

அதையே பதிவுசெய்த உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் கூட தனது உத்தரவில் இதை கவனித்ததை சுட்டிக்காட்டியது: அந்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு சொல்லியுள்ளது

"1993 சட்டத்தை AIQ இடங்களுக்கு பொருந்தும் என்று மேல்முறையீட்டாளர்கள் சமர்ப்பித்ததை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்பதில் சந்தேகமில்லை"

..இதை எதிர்த்து அரசு தரப்பில் வாதிட்டபோது, அதை ஒதுக்கிவைத்த நீதிமன்றம், அவருடைய வாதம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் இரண்டிலும் குறிப்பிடப்பட்ட நோக்கத்திற்கு எதிராக உள்ளது என்றது.

"இந்த மாநிலத்தில் உள்ள AIQ இடங்களுக்கு OBC வேட்பாளர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் முறைகளை கண்டறிய ஒரு குழு உருவாக்கப்பட்டு அது செயல்படும் " என்று அந்த இரண்டு உத்தரவுகளும் சுட்டிக்காட்டுகிறது.

"ஒருவேளை, இது உத்தரவை அமலாக்கும் பிரச்சினையாக இருந்தால், இடஒதுக்கீட்டின் அளவு அல்லது குழுக்களுக்கிடையேயான இடை ஒதுக்கீடு ஆகியவற்றைக் கண்டறியும் கடமை குழுவுக்கு இல்லை." என்றது நீதிமன்றம்.

தொடர்ந்து ஆகஸ்ட் 9 வரை காத்திருப்போம்.

இந்த உத்தரவை சரியாக புரிந்து கொள்ளாத சில பேர் "ஏன் 50% .மொத்தத்தையும் எடுத்து கொடுத்து விடுங்கள்" என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

விவரம் இல்லாத கூற்று இது.

உண்மையில் இந்த 50% இட ஒதுக்கீடு என்பது நம் மாநிலத்தின் கோரிக்கை..

தமிழ் நாடு மட்டும் ஏன் இவ்வளவு அதிகம் இட ஒதுக்கீடு, அதுவும் பிற்பட்டோருக்கு மட்டும் , கேட்கிறது?

ஏனென்றால், தமிழ் நாடு தான் அதிக அளவில் மருத்துவ படிப்பிர்காண சீட்களை, மறுவிநியோகம் செய்ய மத்திய அரசுக்கு உதவுவதற்காக விட்டுக்கொடுத்தது.

ஆனால், அது தான், நியாயமான கோரிக்கை செவிசாய்க்கப்படாமல் , உறுதியான நடவடிக்கையின் எல்லைக்கு வெளியே இத்தனை காலமும்.வைக்கப்பட்ட்டுள்ளது.!!

அதன் கோரிக்கை தான் என்ன என்கிறீர்களா?

AIQ இடங்கள் முதலில் மாநிலங்களைச் சேர்ந்தவை என்பதால், அந்தந்த மாநிலங்களுக்கு பொருந்தும் ஒதுக்கீட்டு கொள்கை அவர்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வாதத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டில் பிற்பட்டோருக்கு உள்ள 50% ஒதுக்கீடு, அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பின்பற்றவேண்டும் என்ற கோரிக்கை தான் அது.

ஆனால் இட ஒதுக்கீடு அனைத்து வகையிலும் சேர்த்து, 50% ஐ தாண்ட முடியாது என்றது மத்திய அரசு.

அதை தான் சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது..அவர்கள் கருத்து மத்திய சட்டங்கள் அடிப்படையிலானது, இந்த விவகாரத்தில் செல்லுபடியாகாது என்றது..

சரி தானே!

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...