சனி, 25 டிசம்பர், 2021

மாப்பிள்ளைக்கு சொந்தமாக வீடு இருந்தால்தான் பெண் தருவோம் என்கின்றனர் பெண் வீட்டார். இது வரதட்சணையில் வராதா? இதற்கென ஏதாவது சட்டம் உள்ளதா?

 


மாப்பிள்ளையின் பெயரில் தானே இருக்கிறது? பெண்ணின் பெயருக்கு மாற்றி தர சொல்லி கேட்டால் தான் அது "வரதட்சணை".

.நிறைய வீடுகளில் பார்த்திருக்கிறேன்.. மாப்பிள்ளை வீட்டை லோன் போட்டு வாங்கியிருப்பார்..மனைவி வேலைக்கு போய் வரும் சம்பளத்தில் குடும்ப நிர்வாகம் நடக்கும். இவர் லோன் கட்டி முடித்துவிடுவார்.சொத்து அவர் பெயரில். ஆனால் அதற்கு துணை நின்ற மனைவிக்கு?

இது வரை பெண்கள் இது குறித்து கேட்டதில்லை..இப்போது தான் சொத்து விவரங்களை கேட்க ஆரம்பித்துள்ளனர்..

"சொந்த வீடு வேண்டும் என்று கேட்டால், 25களில் இருக்கும் ஆண், எங்கே போவான்? பெண்கள் தான் துணிந்து மனமாற்றம் கொள்ளவேண்டும் " என்று ஒரு பெண் கருத்து தெரிவித்திருந்தார். அப்படி ஒரு பெண் சொல்ல வேண்டுமாயின், அவள் அவனை காதலித்திருக்க வேண்டும். அப்போது தானே அவன் திறன் அவளுக்கு தெரியும்? "நானும் அவனுமாய் சேர்ந்து, எங்கள் இல்லத்தை உருவாக்கி கொள்கிறோம்" என்று சொல்லுவாள்.

  1. இப்போதெல்லாம் காதல் திருமணத்திலும். வரதட்சணை இல்லாமல் இல்லை.அது தனி கதை. 

நிலைமை இப்படி இருக்க, பெற்றோர் பார்க்கும் வரனை பற்றி அவள் என்ன சொல்ல முடியும்? போட்டோவை பார்த்தவுடனே, "அப்பா நான் இவருடனேயே போய் கொள்கிறேன்.வாடகை வீடு என்றாலும் பரவாயில்லை. " என்று சொல்ல "கண்டதும் காதல்" வந்துவிடுமா?!

அப்டியேயானாலும், மாப்பிள்ளை வீட்டார் இது வரை கேட்காததையா பெண் வீட்டினர் கேட்டுவிட்டனர்?? ஆண் பிள்ளை வைத்துள்ளோம் என்ற கொட்டம் அதிகரித்து, பெண் சிசுக்கொலை செய்வதிலிருந்து, வரதட்சணை சாவு வரை அதிகரித்ததால் தானே அதை தடுக்க சட்டமே வந்தது? மேலே போன சக்கரம் கீழே வந்து தானே ஆக வேண்டும்?

இப்போது ஆண்களுக்கு நிகராக பெண்கள் வந்துவிட்டார்கள் என்று சொன்னாலும் உண்மை நிலவரம் அப்படியா இருக்கிறது??

சுவிஸ் சைக்கியாட்ரிஸ்ட் கார்ல் ஜங் "யோசிப்பது நிறைய பேருக்கு கடினம்.அதனால் தான் தீர்ப்பு எழுத உட்கார்ந்துவிடுகிறார்கள்! என்று. சொல்லியிருக்கிறார்...

இந்த வினாவை பார்த்து, எனக்கு அது தான் நினைவுக்கு வருகிறது!

இதற்கு என்ன தான் தீர்வு?



கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...