கிராமங்களில் உள்ள அரசு நிலங்கள் தான் நத்தம் என்று சொல்லப்படும்.
அதை ஆக்கிரமித்து குடியிருப்புபவர்களுக்கு தோராய மற்றும் தூய பட்டா அரசால் கொடுக்கப்படுகிறது. உங்களுக்கு கொடுக்கப்பட்டது தோராய பட்டா என்று சொல்லியுள்ளீர்கள்.
"தோராய பட்டா" என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டாவாக கொடுக்கப்படுவது.
இதை அரசு கொடுப்பதன் நோக்கவே, அந்த நிலங்களை சரியான முறையில் ஆவணப்படுத்தி, நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் ,அந்த நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கி, அந்த நிலத்தை வரி விதிப்புக்குள் கொண்டு வரூவதற்கே..
"தோராயம்" என்றால் "ஏறக்குறைய" என்று தானே பொருள்..இந்த பட்டாவிற்கு "தோராய பட்டா" என்ற பெயர் வந்த காரணமே, பட்டாவில் உள்ள பெயர்கள், அளவுகள் ஆகியவற்றில் தவறுகள் கண்டறியப்பட்டு அவை தெரிவிக்கப்பட்டால், திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்பதாலேயே..
நிலவரியை கட்டுவதன் மூலம், அரசு நிலத்தில் தான் நாம் குடியிருக்கிறோம் என்பதை அங்கு வசிப்பவர் ஒத்துக்கொள்கிறார்..ஆட்கள் வேண்டுமானாலும் மாறலாம்.அவர்கள் பெயர்கள், பட்டாவில் மாற்றம் செய்து தரப்பட்டாலும், அது எந்த வித உரிமையையும் வசிப்பவருக்கு, ஏற்படுத்தி தராது.
உரிமை உள்ள சொத்தையே ஒருவர் இன்னொருவருக்கு, உரிமை மாற்றம் செய்துக் கொடுப்பது தான் கிரயம்..இங்கு எந்த உரிமையும் இல்லாத தோராய பட்டாவை மட்டும் கொண்டு கிராயம் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அது சட்டப்படி செல்லுபடியாகாது. வங்கியில், அந்த நிலத்திற்கு எந்த கடனும் தர மாட்டார்கள்.அரசு எந்த நேரத்திலும் வெளியேற சொல்லி அறிவிப்பு கொடுத்தால், கிளம்பத்தான் வேண்டும். இத்தனை வருடங்கள் குடியிருந்தோம் என்று உரிமை கொண்டாட முடியாது.
மேலும் மூலப் பத்திரம் என்பது, நமக்கு அந்த சொத்தின் உரிமை எப்படி வந்து சேர்ந்தது என்பதை விவரிப்பது. அது இல்லாமல் அந்த நிலத்தை பொறுத்து, எந்த பாத்திரமும் பதிவு செய்ய முடியாது. இன்னொரு முக்கிய விஷயம்.அரசு நிலம் தானே நத்தம்..அதனால் பதிவுத் துறையிலும், அந்த நிலம் குறித்த எந்த பத்திரத்தையும் பதிய மாட்டார்கள்.
இதில் இன்னொரு சமூக நீதியும் உள்ளது. குடியிருக்க வழியில்லாதோருக்கு, வசிக்க அனுமதி மட்டுமே கொடுத்துள்ள போது, அதில் ஆதாயம் பார்க்க நினைப்பது கூடாதில்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக