செவ்வாய், 12 அக்டோபர், 2021

வாரிசு சான்றிதழ் ஏன், எதற்காக தேவை?

 ஒருவர் இறந்த பின் அவருடைய வாரிசுகள் இன்னின்னார் என்று சுட்டிக்காட்டும் சான்று தான் இந்த வாரிசு சான்றிதழ்.

இது எதற்காக தேவை?

ஒருவரின் சொத்து மற்றும் கடன், அவருக்கு பிறகு யாருக்கு போய் சேரும் என்பதை இந்த வாரிசு சான்று தான் நிர்ணயிக்கும

அவர் உயிருடன் இருக்கும்போது, இந்த வாரிசு சான்று கொடுக்கப்படுமா? என்றால், எப்போது அவரின் வாரிசு யார் என்பதை அறியும் தேவை ஏற்படுகிறது?

நாம் வாழும் காலத்தில், நமக்கு உரிமைப்பட்டவற்றை நாம் தான் அனுபவிக்கிறோம். மற்றவருக்கு கொடுக்கிறோம்..நாம் இருக்கும்போது, மற்றவருக்கு, நம்மை மீறிய உரிமைகள் வந்துவிடுவதில்லை.

ஆனால் நம் காலத்திற்கு பிறகு, அந்த உரிமை யாருக்கு போய் சேரவேண்டும் என்று முடிவு செய்யவேண்டிய தேவை வருகிறது..

அதனால் தான் இறந்தவரின் வாரிசு இன்னார் என்று அடையாளம் காட்டக்கூடியவகையில், பேரன் தான் நெய்ப்பந்தம் பிடிக்கவேண்டும் என்று சாஸ்த்திர சம்பிரதாயம் வகுத்திருந்தனர்.

பொதுவாக இறந்தவருக்கு கொள்ளி வைப்பவர் தான் அன்னாரின் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவார். அதாவது இறந்தவரின் வாரிசு தான் கொள்ளி வைப்பார்.

அப்படியிருக்க, நம் பிள்ளைகள் தானே நம் வாரிசு என்று ஊரறிய தெரியும்போது, அதற்கு என்று தனியாக சான்றிதழ் தேவையா? என சிலர் யோசிக்கலாம்.

"வாரிசு" என்று பார்த்தால், சட்டப்படி, பிள்ளைகள் மட்டுமல்ல, கணவன்/மனைவி, சார்ந்திருக்கும் பெற்றோர், முன்னரே இறந்துவிட்ட பிள்ளையின் வாரிசுகள், இவர்கள் யாரும் உயிருடன் இல்லையெனில், உடன் பிறந்த சகோதர, சகோதரிகள், அவர்கள் வாரிசுகள் என்று நீண்ட பட்டியல் உள்ளது.

இவர்களில் யாருக்கு முன்னுரிமை என்று பார்க்க வேண்டுமே?

அந்த வேளையில், இன்னாருடைய வாரிசு என்பதற்கு அரசு அளிக்கும் அத்தாட்சி தான் தாசில்தாரால் தரப்படும் வாரிசு சான்று . அதுவே இறுதியானது..

ஆனால், இந்த வாரிசு சான்றை ஏற்காமல் மறுக்கும் இடமும் உண்டு.!!

வங்கியில் லாக்கரை வைத்திருப்பவரின் மரணத்திற்கு பிறகு, வங்கியில் , இறந்தவரின் பெயரில் உள்ள பெட்டகததை திறக்க, நீதிமன்றம் அளிக்கும் வாரிசு சான்று பெற்று வர, சட்டப்பூர்வ வாரிசுகள், வங்கிகளால் நிர்பந்திக்கப்படுகிந்தணர்.. .

இந்த இரண்டு சான்றிதழுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

தான் பெற்ற கடன்களுக்கு கடன்தாரர் வழங்கும் இழப்பெதிர்காப்பு எனப்படும் இன்டெம்னிட்டி பத்திரம் தெரியுமல்லவா? அது போன்றது தான் இந்த நீதிமன்றம் வழங்கும் வாரிசு சான்றிதழ் என சொல்லலாம்.[1]

ஏற்கெனவே தாசில்தார் கொடுத்த வாரிசு சான்றிதழ் இருந்தாலும், இந்த குறிப்பிட்ட வாரிசு சான்றிதழ் பெறுவதில் அதிகப் பணத்தை செலவழிக்க வேண்டிய கடினமான சூழ்நிலையில் சட்டப்பூர்வ வாரிசுகளை, வங்கி வைக்கிறது .இது ஒருவிதத்தில் பார்த்தால் நியாயமாகப்படவில்லை.

ஏன் என்றால், கடனுக்கு கடன்பட்டவர் கொடுக்கும் இந்த இன்டெமனிட்டி பத்திரம் போன்றது இந்த நீதிமன்றம் வழங்கும் வாரிசு சான்று என்னும்போது, அதை பெற்று வர வங்கிகள் ஏன் கட்டாயப்படுத்துகின்றன?

இறந்தவர் பெயரில் உள்ள லாக்கரும் அதில் உள்ளவையும் கடனாக கருதமுடியுமா?

"முடியாது" தானே?!

அதனால் வங்கிகள் கேட்கும் வாரிசு சான்றிதழ் வழங்க முடியாது என்று நம் மாண்புமிகு உயர் நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளில் சொல்லியுள்ளன.

1925 வாரிசுரிமை சட்டப் பிரிவு 370 முதல் 381 வரை பயன்படுத்தப்பட்ட " வாரிசு சான்றிதழ்"வார்த்தைக்கு உண்டான அர்த்தத்தை பொருத்தினால், லாக்கரில் உள்ளவை கடன்கள் அல்ல, என்பதால், வாரிசு சான்றிதழைப் பெறுவதற்கு எந்த தேவையும் இல்லை. என்றுள்ளன

அப்படியும் ஏன் கேட்கிறார்கள்?

உண்மையை சொல்லப்போனால், வங்கிகள் தங்களின் பொறுப்பை பாதுகாத்துக் கொள்ளவே, இந்த சான்றை கேட்கிண்றனர்

வேறு யாரேனும், லாக்கரில் உள்ளவைக்கு தாங்கள் தான் வாரிசு என்று உரிமை கொண்டாடினால், அதனால் வரும் பிரச்சினையிலிருந்து விடுபடவே இவ்வாறு செய்கின்றனர்.

அவர்கள் பாதுகாப்புக்கு " எதற்கும் இருக்கட்டும்"என்று வாங்கி வைத்துக் கொள்கின்றனர்!

நம்மில் எத்தனை பேர், வங்கியில் கடன் வாங்கப்போகும்போது, அவர்கள் கொடுக்கும் பாரம்களில் உள்ள வெற்றிடத்தை நிரப்பாமலேயே கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டு வருகிறோம்?!

படித்தவர், படிக்காதவர் வித்தியாசமின்றி, நீட்டிய பேப்பரில் என்ன எழுதியுள்ளது, கோடிட்ட இடங்களில் நிரப்பாமலேயே, கொடுக்கிறார்களே, என்று எந்த கேள்வியும் கேட்காமல் தானே கையெழுத்து போட்டுவிட்டு பணத்தை வாங்கி வருகிறோம்!!

சமீபத்தில் வந்த ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பும் கூட…[2] இதே போன்று அளித்ததோடு இல்லாமல், இந்த சிக்கலை தவிர்க்க சில பரிந்துரைகளையும் செய்துள்ளது.

  • எந்தவொரு நபராலும் லாக்கரைத் திறக்கும் நேரத்தில், வங்கி ஒரு பரிந்துரையை அதாவது நாமினியை நியமிக்க சொல்லி பெறுவதற்கான நடைமுறையை பின்பற்றுவது எப்போதும் விரும்பத்தக்கது.
  • லாக்கரை வைத்திருக்கும் நபர் இறந்தால், வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் பட்டியலை வழங்கி, லாக்கரை இயக்க நாமினியை வங்கி அனுமதிக்கலாம்
  • அவ்வாறு செய்யும்போது, நடந்தவற்றை பதிவு செய்து அது குறித்து, வேறு எந்த நபராலும் உரிமை கோரபட்டால்,. மேற்கண்ட நாமினியிடம் உத்தரவாதம் பெறலாம்.
  • இந்த எளிய நடைமுறை அமல்படுத்தப்பட்டால்,சம்பந்தப்பட்ட வாரிசுகள் தேவையில்லாமல் பெரும் செலவு செய்வதை தடுக்கலாம்.

சட்டத்தில் வாரிசுகளை இப்படி நிர்ணயிகக்கலாம்.

சொத்துபத்துக்கள் உள்ள ஓரு கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் "யோகம்" வெகு சிலருக்கே அமையும். அதுவும் ஒருவர் ஜென்ம ஜாதகத்தில் நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார். முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பர்.

ஆனால் ஒரு இராஜங்கத்தை ஆளும் வாரிசாக யார் ஆக வேண்டும் என்பதை "விபரீத ராஜ யோகம்" ஏற்கெணவே முடிவாகியிருக்கும்…!!

"கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் அடிமட்ட நிலையில் இருக்கும் ஒருவன் கோபுரத்தில் போய் அமர்வான்..

பேரரசன் இராஜராஜன் மட்டுமா இதற்கு உதாரணம்?,

மக்களை சந்தித்து வோட்டு கேட்டு, பெரும்பான்மை ஓட்டில் ஜெயித்து, மந்திரிசபை அமைத்து, "லட்டு" போல தட்டில் வைத்துக் கொடுக்கவில்லையா அந்த யோகம்?

"யோகம்" என்றவுடன் ஆன்மீகத்தில் கடவுளை அடைவதில் உள்ள நான்கு படிகளில் ஒன்றாக அதை. சொல்வது நினைவுக்கு வருகிறது.

.சரியை, கிரியை யோகம் , ஞானம். என்ற அவற்றில், கடவுளை வெளியே காண்பது சரியை.தனக்கு உள்ளேயும் வெளியேயும் காண்பது கிரியை.. தன் உள்ளேயே கடவுள் இருக்கிறான் என்று உணர்வது தான் யோகம்.

"யோகா " என்பதன் உள் அர்த்தம் இப்போது விளங்குகிறதா?

அந்த கடைசி படியான ஞானத்திற்கு முந்தின படியான யோகத்தை அடைபவனே "யோகி"

அதற்காக ஜாதகப்படி யோகத்தை அடைந்தவன் எல்லாம் யோகி அல்ல☺️

கடவுளை எங்கும் காணும் ஞானத்தில் சிறந்த குருமார்கள் கூட, தங்கள் "வாரிசை" தேர்வு செய்வது கடின பரிட்சை வைத்தே.!!.

மரணப்படுக்கையில் இருந்த ஒரு குரு தனக்குப் பிறகு அந்த ஆசிரமத்தி1ற்கு யாரைத் தலைவராக்குவதென யோசித்தார். தன் சீடர்களைப் பற்றி எண்ணிப் பார்க்கையில் அவர்களில் இருவர் சிறந்தவர்களாகத் தெரிந்தனர். இருவரும் சமமாக தகுதி படைத்து இருந்ததால் எவரைத் தேர்ந்தெடுப்பது என்பதற்காக ஒரு யுக்தி செய்தார்.. இருவரிடமும் ஆளுக்கொரு பழம் தந்து 'யாரும் பார்க்காத இடத்தில் போய் சாப்பிட்டு வாருங்கள் என்றார்.

ஒரு சீடன் ஓர் அறைக்குள் நுழைந்து எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு பழத்தைச் சாப்பிட்டான். வெகு நேரத்திற்குப் பிறகு கையில் பழத்துடன் இரண்டாவது சீடன் திரும்பி வந்தான். குரு அவனிடம் ஏன் பழத்தைச் சாப்பிடவில்லை எனக் கேட்டார். அதற்கு அவன் 'குருவே, என்னை மன்னித்து விடுங்கள். எங்கு போனாலும் கடவுளின் பார்வை அங்கு படிந்திருப்பதால் யாரும் பார்க்காத இடம் என்ற ஒன்றை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை, பழத்தையும் சாப்பிட முடியவில்லை' என பதிலளித்தான்.

அவனுடைய குருபக்தியையும் கடவுள் நம்பிக்கையும் கண்டு அவனையே தன் வாரிசாகத் தேர்ந்தெடுத்தார் அந்த குரு..

ஆனால் ஜெகத்குருவுக்கே தன் வாரிசை தேர்வு செய்வதில் பிழை ஏற்படவில்லையா?

எல்லாம் கர்மா தான்!!

அது சரி… எப்போதும் வாரிசுகள் தான் சொத்து அடையக்கூடுமா?

அவர் தந்தைக்கு இந்த வாரிசால் அடையக்கூடிய சொத்து ஏதும் உண்டா?

அதைத் தான் திருவள்ளுவரே சொல்லுகிறாரே!

இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் !

இதோ சமீபத்தில் நாம் கண்ட ஒரு செய்தி

இவர் தந்தை இவரைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தாரோ என்ற சான்றிதழ் போதாதா இவர் பேருலகம் செல்ல!

இப்படி வாரிசுகளால் பெருமை அடைபவரும் உண்டு.."சிறுமை" அடைவோரும் உண்டு!

எல்லோருக்கும் ஒரு நாளில் இறப்பு வரும்..

ஆனால் நிறைய பேருக்கு, தம் "வாரிசுகளால்" மனதளவில் இறந்தது எண்றைக்கோ இருக்கும்.!

நான் சமீபத்தில் வாசித்ததில் பிடித்தது:

அவர் இறந்து விட்டார்

அடக்கம் செய்யணும்

சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!

மெல்ல எட்டிப் பார்த்தேன்

மூச்சு இல்லை - ஆனால்

இப்போதுதான் இறந்திருந்தார்

என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!

இருபது வருடங்கள்

முன்னாடி - அவர் மனைவி

இறந்த பிறகு - சாப்பிட்டாயா..!!

என்று யாரும் கேட்காத

நேரத்தில் - அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை....!!

பொண்டாட்டி போனதுமே

போய்த் தொலைய வேண்டியதுதானே - என்று

காதுபட மருமகள் பேசியபோது

அவர் இறந்திருந்தார் அப்போதும்

யாருமே கவனிக்க வில்லை...!!

தாய்க்குப் பின் தாரம்

தாரத்துக்குப் பின் ..

வீட்டின் ஓரம் ...!!!

என்று வாழ்ந்த போது - அவர்

இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை ...!!

காசு இங்கே

மரத்திலேயா காய்க்குது - என்று

மகன் அமிலவார்த்தையை

வீசிய போது..!!

காசு இங்கே

மரத்திலேயா காய்க்குது - என்று

மகன் அமிலவார்த்தையை

வீசிய போது..!!

அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை...!!

என்னங்க...!!

ரொம்ப தூரத்திலே இருக்குற

முதியோர் இல்லத்திலே விட்டு

தலை முழுகிட்டு வந்திடுங்க...!!!

என்று காதிலே விழுந்த போதும்

அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை....!!

உனக்கென்னப்பா...!!

பொண்டாட்டி தொல்லை இல்லை

என்று வாழ்த்துவது போல

கிண்டலடிக்கப் பட்ட போது

அவர் இறந்திருந்தார்..!!

அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

இப்போதுதான்

இறந்தாராம் என்கிறார்கள்..!!

எப்படி நான் நம்புவது...???

நீங்கள் செல்லும் வழியில்

இப்படி யாராவது

இறந்து கொண்டிருப்பார்கள்...

ஒரு வினாடியாவது நின்று

பேசி விட்டுச் செல்லுங்கள்..!!

இல்லையேல்....!

அடிக்குறிப்புகள்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...