ஆன்லைன் நீதிமன்ற விசாரணையின் போது பெண்ணுடன் நெருங்கி இருந்த நிலையில் இருந்ததாக தெரிந்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.பற்றிய செய்தியை படித்திருப்பீர்கள். கூடுதலாக ஒழுக்கக்கேடான முறையில் நடந்தற்காக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கும் உத்தரவு இடப்பட்டது தெரிந்திருக்கலாம்.
இந்த ஆன் லைன் நீதிமன்ற விசாரணையின் போது , வழக்கறிஞர்கள் எப்படி எப்படியெல்லாம் இருந்து வழக்கு நடத்துகிறார்கள் தெரியுமா?
கார், ஸ்கூட்டரில் போகும் போது
வீட்டின் படுக்கை அறையில் .
மலையேற்றத்தின் போது
பீச்சில் அமர்ந்துள்ளபோது
ஜுஹி சாவ்லா பாடலை பாடிக்கொண்டே
ஏறக்குறைய நிர்வாண நிலையில்......
சமீபத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் ஆஜரான ஒரு வழக்கறிஞர் வெறும் பனியனுடன் இருந்துள்ளார்.
இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களின் அலுவலர்கள் தாங்கள் என்பதை மறந்து விட்டார்களோ என்று தான் நினைக்க தோன்றுகிறது....வழக்கறிஞர்கள் தங்கள் உடை விஷயத்தில் காட்டும் ஒழுங்கீனம் இப்போது தான் நடக்கிறாதா என்றால், எதிர்ப் பதமாகத் தான் பதிலளிக்க வேண்டும்.
திறந்த நீதிமன்றங்களில் வாதாடும் போது கூட சில வழக்கறிஞர்கள் வெள்ளை காலர் மட்டும் வைத்து தைத்த கலர் சட்டையை போட்டு மேலே கருப்பு கோட்டை மாட்டிக்கொண்டும், காலில் செருப்பு அணிந்தும், கோட் அனிந்தாலும் வழக்கறிஞர் கவுன் அணியாமலும், அல்லது கழுத்தில் ரோப்ஸ் என்பதை கழுத்து பட்டை இல்லாமல் அணிவதையும் பார்த்திருக்கிறேன். இன்னும் சில பெண் வழக்கறிஞர்கள் சுத்த மோசம்..... வெளியில் தான் கோ ட்டும் கவுனும் மாட் டுகிறோமே என்று வெறும் நைட்டியை உள்ளே அணிந்துக்கொண்டு நீதிமன்றத்திற்குள் நுழையும் பெண் வழக்கறிஞரையும் பார்த்துள்ளேன். இவையெல்லாம் எதை காட்டுகின்றன?
ஆடைக்கு என்ன முக்கியத்துவம் மற்றும் புனிதம் இருக்கிறது? என்ற கேள்வி எழலாம்.
"ஆள் பாதி ஆடை பாதி" என்பது தானே சொல் வழக்கு?!!
ஆடை விஷயத்தில் உள்ள நம் கவனம் இன்று நேற்றல்ல ....பண்டைய எகிப்தியர்களின் ஆடைகளிலிருந்து ஹென்றி VIII மன்னரின் கவசம் வரையம் நம் படைப்பு திறனே காட்டப்பட்டுள்ளது.
இப்படியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட இன சீருடை என்று நியமிக்கப்பட்ட காரணம் என்ன?
சீருடை தான் அந்த குழுவை கண்ணியமாகவும், மிக முக்கியமாக ஆள்மாறானதாகவும் ஆக்குவது. அது தான் உயர்ந்த குணாதிசயமுள்ள மனிதர்கள் கொண்டது அந்த குழு என்று தனித்து காட்டுவதாகவும், இருக்கும்.
என்ன வெயில் காலம் என்றாலும், சீருடையில் இருப்பதன் சிறப்பே தனி. எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்திருப்பதை பார்க்க முடியுமா? அப்படி அவர் இருந்தால், அவருக்கு தானாகவே கொடுக்கப்படும் மரியாதை தான் கிடைத்து விடுமா?
டாக்டர் தனக்கு வசதியாக இருக்கிறது என்று பெ ர்முடாஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் அறுவை சிகிச்சை செய்தால் நோயாளிக்கு எப்படி இருக்கும்?
இன்னொன்றும்....கூட...
சீருடை ஒரு சமநிலையாக செயல்படுகிறது. சீருடையில் இருக்கும் போது , பணக்காரர், ஏழை, தொழிலில், அல்லது பணியில் வெற்றிகரமானவர அல்லது ஆரம்பநிலையில் உள்ளவர் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கும்.நீதிமன்றத்தில் ஒவ்வொரு வழக்கறிஞரும் ஒரே மாதிரியாக தான் தெரிவார்கள்.
வழக்கறிஞர் சீருடையை பார்த்தாலே,யே , கருப்பு மற்றும் வெள்ளை ஆடைக் குறியீடு ஏன் ? வெள்ளை கழுத்து பட்டையின் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வி நிறைய பேருக்கு உள்ளது .
வரலாற்று ரீதியாக, கருப்பு என்பது அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தின் நிறமாக கருதப்படுகிறது. இந்த நிறம் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பாரம்பரியமாக பார்த்தோமேயானால், நிறங்கள் எப்போதும் எதையாவது குறிப்பதை கவனிக்கலாம். மஞ்சள் என்றால் மங்களம், வெண்மை என்றால் தூய்மை, இப்படி......
ரோமில் உள்ள பாதிரியார்கள் கடவுளுக்கு அடிபணிவதைக் காட்ட கருப்பு ஆடை அணிவதைப் போல, வழக்கறிஞர்கள் நீதிக்கு அடிபணிவதைக் காட்ட கருப்பு ஆடையை அணிவார்கள். பொய் சொல்வதை பிழைப்பாக கொண்டாலும், அது மற்றவரின் உயிர் மற்றும் உடமையை காக்க தானே .... சனியின் நிறமும் கருப்பு தான் அவருக்கு பிடித்த உடையும் கருப்பு தான். அதனாலோ என்னவோ அவர் தான் சட்டம் என்னும் காரகத்துவத்துக்கு உரியவர்.. கறாரான நீதிமான்!!
வெள்ளை கழுத்து பட்டையை குற்றமற்ற தன்மையாக விவிலிய வரலாறு குறிக்கிறது.
வக்கீல் பாண்ட் டை உருவாக்க இரண்டு வெள்ளைத் துணிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன இல்லையா? இது எப்படி வந்தது என்று வரலாற்றை பார்க்கும்போது, , விவிலிய வரலாற்றின்படி, மோசேயால் சினாய் மலையில் எரியும் புதரிலிருந்து இதை பெற்றதாக நம்பப்படுகிறது., ஒரே மாதிரியான குறியீட்டு சட்டத்தின் முதல் உதாரணம் என்று பத்து கட்டளைகளை தான் சொல்வார்கள்.. அந்த பத்துக் கட்டளைகளை எழுதுவதற்காக அவரா ல பயன்படுத்தப்பட்டவை இவை, எனப்படுகிறது. .இப்படி அந்த வெள்ளை நிற வக்கீல் பாண்டுகள், கடவுள் அளித்த சட்டம் மற்றும் மனிதர்களின் சட்டங்களை நிலைநிறுத்துவதைக் குறிக்கின்றன.
அப்படிப்பட்ட சிறப்பான ஒரு வழக்கறிஞர்களின் சீருடையில் வழக்கறிஞர் இல்லாதது) போன்ற நிகழ்வுகள் மற்ற நாடுகளில் நடந்திருக்கிறதா, என்று பார்க்கும்போது தான் நம் உச்ச நீதிமன்ற சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹத்தா அவர்கள் எழுதிய கட்டுரையையை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன்படியே இது போன்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என்று வரலாற்றின் பக்கங்களை ஆராயும்போது தான், இந்த , பரிந்துரைக்கப்பட்ட சீருடையைத் தவிர வேறு ஆடைகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களின் சட்டபூர்வமான தன்மை அல்லது உரிமையை நீதித்துறை ரீதியாக பரிசீலிக்க கிடைக்கும் சந்தர்ப்பம் இந்தியாவில் வெகு அரிதாக தான் கிடைத்துள்ளது.
ஆனால் வெளிநாடு என்னும் போது, எதைப் பற்றியும் கவலைப்படாத வாழ்க்கை முறையை கொண்ட அமெரிகாவில் உள்ள நீதிமன்றங்களில் இத்தகைய கோரமான நிகழ்வுகள் அதிகம் காணப்படுவது தெரிகிறது,
அமெரிக்கர்கள் தான் அதிக கற்பனைத்திறன் கொண்டவர்கள் ஆயிற்றே?
அல்லது அமெரிக்க நீதிமன்றங்கள் அத்தகைய உரிமை கோரல் குறித்து விசாரிப்பதற்கு நேரமும் விருப்பமும் காரணமாக இருக்கலாம்.
அந்த வகையில் இரண்டாவது கட்ட மேல்முறையீடு வரை அட்டர்னி டாட் சி. பேங்க்கின் இந்த வழக்கு நீண்ட தால், இது முக்கித்துவம் வாய்ந்ததாக செல்லலாம்.குயின்ஸில் உள்ள சிவில் கோர்ட்டில் நீல நிற ஜீன்ஸ் மற்றும் பட்டன்-டவுன் ஷர்ட் அணிந்து "ஆபரேஷன் டெசர்ட் ஸ்டாம்" என்று எழுதப்பட்ட பேஸ்பால் தொப்பியுடன் இவர் ஒரு முறை ஆஜரானார். அவரது பொருத்தமற்ற உடை யை சரி செய்யுமாறு நீதிபதி அன்னே காட்ஸ் அவரை அறிவுறுத்தினார். ஆனாலும், தன கட்சிக்காக தானே ஆஜராவதால், தன உடை குறித்த நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் , அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தனக்குள்ள உரிமையை பாதிப்பதாக கூறி மாவட்ட நீதிமன்றத்தை அணுகினார். அப்போது அவர் வைத்த வாதம்,
" "தன்னுடைய உடை என்பது தன கருத்தை வெளிப்படுத்தும் குறியீடு என்றும் நீதிபதியின் வேலையே, தன முன் உள்ள வழக்கை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவது மட்டுமே.. வழக்கு தொடுத்தவர் என்ன உடை அணிந்துள்ளார் என்பது தேவையில்லாதது"
ஆனால் இதை மாவட்ட நீதிபதி ஏற்கவில்லை. 2009ல் அவர் வழங்கிய தீர்ப்பில், "சொந்த கருத்துக்களை வெளிப்படுத்த நீதிமன்றம் ஒரு பொது இடம் அல்ல" என்றும் ..."விதிகள் நியாயமானதாகவும் பார்வைக்கு நடுநிலையாகவும் இருக்க வேண்டும்" என்றார்.
நீதிமன்றத்தில் ஆ டை அணிவது என்பது "நீதிமன்றத்தின் நாகரீகத்தைப் பராமரிப்பது மற்றும் நீதித்துறை செயல்முறைக்கான மரியாதை ஆகியவற்றுடன் நியாயமான முறையில் தொடர்புடையது" என்று மாவட்ட நீதிபதி கூறினார்.
இவரும் விடாமல் மேல்முறையீடு செய்ய, அங்கும் 2011ல் எதிரான தீர்ப்பே கிடைத்தது. நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவர் தனது பேஸ்பால் தொப்பியை அகற்ற வேண்டும் என்ற நீதிபதியின் அறிவுறுத்தல், நீதிமன்ற அறையில் ஒழுங்கையும் மாண்பையும் காக்கும் நீதிமன்றத்தின் நியாயமான நோக்கத்துடன் தொடர்புடையவை என்றும் . மாவட்ட நீதிமன்றம் சரியாக தான் நிராகரித்தது என்றும் கூறி .
"உடையைத் தேர்ந்தெடுப்பது பாதுகாக்கப்பட்ட உரிமை என்று வாதிட்டால், நீதிமன்றத்தில் பேசுவதற்கான கட்டுப்பாடு இருக்கும் வரை நியாயமான மற்றும் நடுநிலை.நிலைநிறுத்தப்படும்." என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர் .
இதே போன்ற இன்னொரு முக்கிய வழக்கு, கெல்லி vs ஜான்சன் [425 U.S. 238 (1976)] என்ற அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வந்தது. , இது காவல்துறையினர் வைத்துக் கொள்ளவேண்டிய முடி ஒழுங்கு பற்றியது.
ஒரு நபர் தனது தனிப்பட்ட தோற்றத்தில் அரசியலமைப்பு சட்ட ரீதியாக எந்த அளவிற்கு உரிமை கொண்டிருக்கிறார் என்பது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்ட முக்கியமான கேள்வி.. .நீதிமன்றம் காவலர்களுக்கான முடி ஒழுங்கை உறுதி செய்ததும் அல்லாமல், ஒரு போலீஸ் அதிகாரியின் வேலை நிலை மற்றும் போலீஸ் படையில் "ஒழுக்கம், மற்றும் சீரான தன்மை ஆகியவற்றின் தேவை" உள்ளதை வலியுறுத்தியது.
இதே போன்ற நிலையில் தான் ஒரு வழக்கறிஞரோ அல்லது நீதிபதியோ உள்ளனர். ஏனெனில் இரண்டிலும் குறைந்தபட்சம் ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை தேவை.
2003 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு வழக்கு எழுந்தது, இது உடையைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமையாக எழுந்தது, நியூயார்க்கின் சல்லிவன் கவுண்டியில் டிரைவராகப் பணிபுரியும் ஜலேவ்ஸ்கா என்றஒரு பெண்மணி, அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் சீருடையின் ஒரு பகுதியாக பேன்ட் அணிவதைக் கட்டாயப்படுத்திய ஆடைக் குறியீட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். . இந்த விவகாரம் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், 2வது சர்க்யூட் வரை சென்றது.
10.01.2003 தேதியிட்ட ஜலேவ்ஸ்கா V. கவுண்டி ஆஃப் சல்லிவன், நியூயார்க்கின் வ ழக்கில், "பாவாடை அணிவது ஆழ்ந்த கலாச்சார மதிப்பின் வெளிப்பாடாகும்" என்ற மனுதாரரின் வாதத்தை நிராகரித்தது.
"மேல்முறையீட்டாளரின் முதல் வாதம், பாவாடை அணிவது என்பது அவரது "ஆழமான கலாச்சார மதிப்பின் வெளிப்பாடு" என்ற கூற்றில் உ ள்ளது. தனது கலாச்சார விஷயங்களை வெளிப்படுத்தும் அவரின் விருப்பம் மிகவும் வலுவாக உள்ளது, அவர் ஒரு போதும் பேன்ட் அணிந்ததில்லை என்கிறார்.
பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரை - ஆடை அணிபவரைப் பற்றிய எண்ணங்கள் மற்றும் தகவல்கள் அவர் அணியும் ஆடை மற்றும் தனிப்பட்ட தோற்றம் பொறுத்தது. கன்னியாஸ்திரி முதல் நீதிபதியின் அங்கிகள் வரை, ஆடைகள் பெரும்பாலும் ஆடை அணிந்த நபரைப் பற்றி ஏதாவது சொல்லக்கூடும். இருப்பினும், ஏதோ ஒரு வகையில் தன எண்ணத்தை வெளிப்படுத்துவது என்பது மட்டுமே என்பது தானாகவே அதற்கு அரசியலமைப்புப் பாதுகாப்பை அளிக்காது." என்றார்கள்.
.பரிந்துரைக்கப்பட்ட சீருடையைத் தவிர வேறு ஆடைகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களின் சட்டபூர்வமான தன்மை அல்லது உரிமையை நீதித்துறை ரீதியாக பரிசீலிக்கும் சந்தர்ப்பம் எப்போதாவது தா கிடைத்துள்ளது.
1997 ஆம் ஆண்டில்சேத் பெர்னர் என்ற ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில், தனது உடையில் அரசியல் பொத்தான்களை அணிவதற்கு பாதுகாக்கப்பட்ட முழுமையான உரிமை இருப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்த போது எழுந்தது. பெர்னர் v. டெலாஹன்டி என்ற இந்த வழக்கில் . யுனைடெட் ஸ்டேட்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர் கோரிக்கையை நிராகரித்தது:
"அனைத்து அமெரிக்கர்களைப் போலவே ஒரு வழக்கறிஞர் அரசியல் உணர்வுகளை வைத்திருக்க சுதந்திரமானவர். இருப்பினும், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தங்கள் சட்டைகளில் (அல்லது மடிப்பில், அத்தகையவற்றை அணிவதற்கு முழுமையான உரிமை இல்லை" என்றது..பெர்னர் வி. டெலஹந்தி 1997
நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தது டேவிட் பர்ன்ஸ் என்ற மற்றொரு புளோரிடா வழக்கறிஞரிடமிருந்து வந்தது. அவர் ஒரு வழக்கின் நீதிமன்ற விசாரணையில், அனைவரையும் காத்திருக்க வைத்து சரியான நேரத்தில் நீதிமன்றத்திற்கு வராமல், . திடீரென கதவுகள் திறக்கப்பட்டு கோர்ட்டுக்குள் நுழைந்தார். வழக்கறிஞரின் உடையை அணியாமல், பைஜாமாக்களை அணிந்து ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டார். புளோரிடாவின் உச்ச நீதிமன்றம் இந்த நடத்தையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை,
"நீதிமன்றத்தில் ஸ்ட்ரெச்சரில் தோன்றுவதும், படுக்கையில் இருப்பதும், சரியில்லாத ஆடை அணிவதும் நீதி நிர்வாகத்திற்கு பாதகமான நடத்தையை உருவாக்குகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தகுதியை எதிர்மறையாக பிரதிபலிக்கிறது." என்று கூறி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக 30 நாள் தடை விதித்தது.
இந்தியாவில், மாண்புமிகு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பிரயாக் தாஸ் எதிராக சிவில் நீதிபதி, புலந்த்ஷாஹர் (AIR 1974 அலஹாபாத் . 133) வழக்கில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் எழுந்தது. அவர் தனது மனுவில், நீதிமன்றங்களில் தான் வேஷ்டி சட்டையில் ஆஜராக அனுமதிக்க கோரினார்.!! நல்லவேளையாக, அது ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்ப ட்டது.
காலம் சென்ற மாண்புமிகு நீதியரசர் ஸ்ரீனிவாசன் அவர்கள், தன கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும் தவறவில்லை. அதேசமயம், சீ ருடையின் மாண்பையும் கைவிடவில்லை....
அவர் புகைப்படத்தை பதிவிட தேடியபோது இணையத்தில் இல்லை!! ஏன்?
நீதிமன்றமோ , வீடியோ கான்ஃபரன்ஸிலோ எதுவாக இருந்தாலும், வழக்கறிஞர் சீருடை முக்கியம் அல்லவா?
- வழக்கறிஞரின் உடை கம்பீரத்தையும், தனித்துவத்தையும், சிறப்பையும், கொண்டது,
- அதை அணிபவருக்கு ஒரு தனித்துவமான ஆளுமையை அளிக்கிறது.
- ஒரு வக்கீலின் கோட், கவுன் மற்றும் கழுத்து பட்டை போன்றவை மதிப்பில்லாதவை..
- அந்த உடையில் தான் உள்ளது தனித்துவமான ஒற்றுமை, தொழில் கண்ணியம் மற்றும் மகத்துவம்!!
அதை உணர்ந்தவருக்கே அதன் மகத்துவம் புரியும்.