வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

காணாமல் (15வருடம்) போனவரின் சொத்தை முறைப்படி அவர் சகோதரர்களிடம் எவ்வாறு எழுதி வாங்குவது, அவருக்கு திருமணம் ஆகவில்லை குழந்தைகள் கிடையாது, காவல்துறை ரசிது இல்லை?

 அவருக்கு தனியாக குடும்பம் இல்லை என்றால், கேட்பது யார்?

காணாமல் போனவர் உங்கள் அப்பாவின் தம்பி என்றால், சகோதரன் சொத்தில் உரிமை கேட்பது உங்கள் அப்பா தானே?

அவர் மற்ற சகோதரர்களிடம், காணாமல் போன தம்பியின் சொத்தை தனக்கு எழுதி தர தனிப்பட்ட உரிமை கோர முடியாது.

முதலில் காணாமல் போன நபர் ஏழு வருடங்கள் காணவில்லை என்று நீதிமன்ற தீர்ப்பு வாங்கவேண்டும். அதற்கு காவல் நிலைய புகார் அவசியம். அதை பற்றிய விவரங்களை என் பிளாக்

சங்கடம் தவிர்க்கும் சட்டம்
அன்றாட வாழ்வில் சட்ட சந்தேகங்கள் மற்றும் அதன் தீர்வு.

யில் விரிவாக சொல்லியுள்ளேன்..இதை பார்த்துக்கொள்ளவும்.

அவ்வாறு காணாமல் போனவரின் வாரிசு தாங்கள் தான் என்று நீதிமன்ற உத்தரவு பெற்ற பின், வட்டாட்சியரிடம் மனு செய்து சொத்து உரிமையை மாற்றிக்கொள்ளலாம்.நன்றி.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...