சில வாரங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் ஔ பள்ளி சிறுவன் தன சக மாணவிக்கு ஒரு கயிறை அவள் கழுத்தில் கட்டுவது போன்ற ஒரு வீடியோவை பார்த்திருப்பீர்கள்...
என்ன நடந்திருக்கும் என்ற ஊகத்துடன், அந்த வீடியோ சில மணி நேரத்தில் வைரளாகிப் போனது.
இதன் பின் விளைவு தெரியாமல், அந்த பள்ளி சிறுமி அதில் சிரித்துகொண்டிருக்க, சிறிது நாளில் அவள் மற்றும் அவளின் பெற்றோரின் சிரிப்பே காணாமல் போனது.
வீடியோ வெளியானவுடன் துரிதமாக களத்தில் இறங்கிய போலீசார், இந்த செயலில் ஈடுபட்ட சிறுவனை பிடித்து அவனுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். அத்தோடு நின்றாலாவது பரவாயில்லை. சம்பந்தப்பட்ட பள்ளி மாணவியை அவள் பெற்றோரிடமிருந்து பிரித்து கொண்டு வந்து, குழந்தை நல குழு முன்னர் ஆஜர்படுத்தியது.
யார் இந்த குழந்தை நல குழு என்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். ..
இந்த cwc எனப்படும் Child WelfareCommittee தான் அது அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றுக்கு பொறுப்பானது என்பதால் அது சம்பந்தமாக cwc எடுக்கும் முடிவே இறுதியானது. இதில் ஏதும் குறை இருந்தால், அந்த மாவட்ட முதன்மை மாவட்ட நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும்.
இதை படிக்கும்போது, நமக்கு உடன் எழும் கேள்வி...குழந்தை நலனை பாதுகாக்கும் இந்த அதிகாரத்தை இந்த குழுவிற்கு கொடுத்தது யார் என்றால்,
https://www.youtube.com/watch?v=IlNN1iOmrq4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக