ஒருவர் இறந்தபின், அவருக்கு இன்னின்னார் தான் வாரிசுகள் என்று அரசு கொடுக்கும் சான்றிதழ் தான் சட்டப்படி செல்லுபடியாகும்.
உங்கள் தந்தைக்கான வாரிசு சான்றிதழ் பெற அவரின் வாரிசு என்ற முறையில் பெற, உங்களுக்கு முழு உரிமை உண்டு. அதற்கு வேறு நபரின், அது உங்கள் பெரியப்பா என்றாலும் அவரின் சம்மதம் தேவையில்லை.
ஒருவேளை உங்கள் தாத்தாவின் வாரிசு சான்று பற்றி கேட்கிறீர்கள் என்றால் அதை பெற உங்கள் பெரியப்பா ஒத்துழைக்க வில்லையென்றால் உங்கள் தந்தை வடடாட்சியர் அலுவலகத்தில் மனு செய்யலாம்.அவர்களே சம்பந்தப்பட்டவரை விசாரித்து சான்று வழங்குவர்.
வாரிசு சான்று பெறுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி, தாசில்தார் அலுவலகத்தில் மனு செய்து அதை பெறலாம்.