சனி, 7 மே, 2022

பாதிக்கப்பட்டோர் நஷ்டஈட்டு நிதி ..ஒரு கண்ணோட்டம்

  1.   இந்திய சிறைகளில் கைதிகளுக்கு வேலை கொடுப்பது என்பது   ஆரம்பத்தில் தண்டனையாகத்  தான் பார்க்கப்பட்டது.\   சிறை கைதிகளை வேலை செய்ய வைப்பது என்பது  சிறை நிர்வாகத்தின் செலவுகளை சரி செய்வதற்காக இருக்கக் கூடாது என்பது தான்  இந்த திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்த லார்ட் மெக்கலேயின் எண்ணமும் கூட PRISON-LABOUR-AND-INDUSTRY-IN-INDIA-AN-ANALYSIS-OF-WORK-Dr-Barik-1.pdf

        


1950 
ல் இது குறித்து    நடந்த ஹேக்  மாநாட்டில்,  கைதிகளின் திறனை ஒரு பயனுள்ள நோக்கத்திற்காக மாற்றுவதற்கான சிறந்த மாற்றாக 'வேலைஉள்ளது என்பதால்

  • கைதிகளை உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்துவது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.
  • அவர்களிடையே தன்னம்பிக்கையை ஊட்டவும்சமூகம். பரிந்துரைத்தபடி சட்டத்தை மதிக்கும் குடிமகனாக அவர்கள் திரும்பவும் நினைக்க வைக்கலாம
  •  இதன் மூலம்கைதிகள் சிறைக்குள் இருந்தே தங்கள் குடும்பத்திற்கு உதவலாம்.
  • சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்'வேலை' என்பது,  கைதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதே நேரத்தில் அரசுக்கு ஊதியமாக இருக்கும்.

·         அதே சமயம், மனித கண்ணியத்தின் மதிப்புகள் மதிக்கப்பட வேண்டும் என்பதால்கைதிகளின் வேலை நிலைமைகள்இலவசமாக பணி செய்யும் தொழிலாளர்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்று  யோசனை சொல்லப்பட்டது.

     அதன்படியே இந்தியாவின் பொருளாதார மறுவாழ்வு திட்டத்தில்திகார் சிறை ஒரு முன்னோடியாககருதப்படுகிறது. இது கிட்டத்தட்ட  12000 கைதிகள் உள்ளடக்கியது. திகார் சிறைத் தொழிற்சாலைதச்சுநெசவுதையல் மற்றும் பேக்கிங் சம்பந்தப்பட்டவைகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறது:  அங்கு உற்பத்தி செய்யப்படும் சில பொருட்கள், மாநில அரசின் தேவையை பூர்த்தி செய்கின்றன. ரொட்டி மற்றும் ஊறுகாய் போன்ற பொருட்கள் டெல்லியை சுற்றியுள்ள ஜெயில் விற்பனை நிலையம் மூலம் சந்தையில் விற்கப்படுகின்றன. சிறைத் தொழிற்சாலையின் தோராயமான வருவாய் ரூ.10 முதல் 15 கோடி மேல் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. .தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் (NCRB) -2010 தரவுகளின்படி, 36,995 கைதிகள் பயிற்சி பெற்றனர். அதில் நெசவு, தையல், தச்சு, விவசாயம் மற்றும் கைத்தறி ஆகியவை முக்கிய பயிற்சிப் பகுதிகளாகும்

      ஆனால்   இந்தியாவில் சிறைச் சட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு, நீண்ட காலமாக தீண்டப்படாமல் இருந்தன சிறைகள் எண்ணற்ற பிரச்சனைகளால் பீடிக்கப்பட்டுள்ளன.   கைதிகள் முறைகேடுகளுக்கும் இழிவான சிகிச்சைக்கும் உட்படுத்தப்படுகின்றனர். ஆனாலும்  சுதந்திரத்திற்குப் பிறகு, சிறைச்சாலைகளில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றிய விரிவான அறிக்கையைத் தயாரிக்கவும், மற்றும் நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் இந்திய அரசாங்கம் பல குழுக்களை நியமித்தது. என்றாலும் சிறைச்சாலைச் சீர்திருத்தக் குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகள்,  எதிலும் கைதிகள் செய்யும் பணிக்கான ஊதியம் குறித்த பிரச்சினை முன்வைக்கப்படவில்லை.

        1977 ஆம் ஆண்டு தான், கைதிகளின் ஊதியப் பிரச்சினை முதன்முதலில்கியாசுதீன் முகமத் எதிராக ஆந்திரப் பிரதேச மாநிலம்,  வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது இதை விசாரித்த உச்ச நீதிமன்றம்,    "ஊதியம் கொடுக்காத வேலை என்பது  "கொத்தடிமை உழைப்பு என்றும் அது  அவமானகரமானது" என்றும் கூறி  குறைதபட்ச ஊதியம் கூட சிறைக் கைதிகளுக்கு  ஆந்திர சிறை  நிர்வாகம் வழங்காதது குறித்து அதன் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியது.  பல தசாப்தங்களுக்குப் பிறகும் நாட்டில் ஊதிய திருத்தம் மற்றும் மறுவாழ்வு பற்றிய அனைத்து விவாதங்களுக்கு பிறகும் கூட , ஆந்திர  அரசாங்கம் இன்னும் கைதிகளுக்கு சரியாம ஊதியம் வழங்குவதற்கான விதிகளை    உருவாக்கவில்லை என்பது    ௨௦15 தரவுகள் மூலம் இன்னமும் சிறைகைதிகளுக்கு 5௦ ரூ வழங்குவதில் இருந்து தெரிகிறது.

  அந்த தீர்ப்பில் சொல்லப்பட்ட மற்ற சிறப்பம்சம் என்னவென்றால், :

(1) கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை, அவர் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும், கடின உழைப்பைச் செய்ய வேலைக்கு அமர்த்துவது சட்டப்பூர்வமானது.

(2) மற்ற கைதிகளை அவர்கள் செய்யத் தேர்ந்தெடுக்கும் எந்த வேலையையும் அத்தகைய கோரிக்கை விடுக்கும் போது   செய்ய அனுமதிப்பது   சிறை அதிகாரிகளுக்கு உரியது

(3)  கைதிகள் செய்யும் பணிக்கு சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அந்த  அளவை நிர்ணயம் செய்வதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலமானது பரிந்துரைகளை வழங்குவதற்காக ஊதிய நிர்ணய அமைப்பு ஒன்றை. ஒவ்வொரு மாநிலத்தையும் கூடிய விரைவில் அமைக்க வேண்டும் " என்றது.

    'கைதிகளின் உழைப்பை இலவசமாக பெறுவது என்பது  " அரசியலமைப்பு   23(1) சட்டப்பிரிவை மீறுவதாகும்"  என்று சிறைச் சீர்திருத்தங்கள் மற்றும்  கைதிகளின் ஊதிய உயர்வு கோரிய வழக்கில் ( AIR 1983 Kerala 261சுட்டிக்காட்டிய கேரளா உயர் நீதிமன்றம், 'இந்திய தண்டனைச் சட்டத்தின் 53வது பிரிவின்படி அங்கீகரிக்கப்பட்டவை கடின உழைப்பு கோரும் தண்டனை தானே தவிரஇலவச உழைப்பு அல்ல" என்றது. மேலும்  நியாயமான ஊதியத்தின் அடிப்படையிலான ஊதியத்தின் அளவையும் நீதிமன்றம் பரிசீலித்து ஊதியத்தை தற்காலிக பணியாளர் அடிப்படையில்ஒரு நாளைக்கு ரூ. 8/-உயர்த்தியது

          இந்த விதிகளின்படி, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறைசாளைகளில் உள்ள கைதிகளுக்கு ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு 2015 இன் போது. எடுக்கப்பட்ட தரவுகளின்படிபுதுச்சேரி தான் அதிக ஊதியமாக  ரூ. 180/-, ரூ. 160/-, மற்றும் ரூ.150/-என்று   திறமையான கைதிகள்அரை திறன் கொண்ட கைதிகள் மற்றும் திறமையற்ற குற்றவாளிகளுக்கு முறையே   கொடுப்பதாக தெரிகிறது.  தமிழ் நாடு ரூபாய் 80 கொடுக்கிறது ஆனால் சிறைக்கைதிகளுக்கு சில மாநில சிறைகள் சரியான ஊதியம் கொடுப்பதோ அல்லது குறித்த காலத்தில் ஊதியம் அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படுவதோ இல்லை.  

   1996 ண்டு மாண்புமிகு உச்ச நீதிமன்றம்ராமமூர்த்தி எதிர் கர்நாடக அரசு என்ற வழக்கில் ஒவ்வொரு மாநில சிறையும் வெவ்வேறு விதிமுறைகளை கையாளுவதை தவிர்த்து ஒரே மாதிரி ஜெயில் கையேடு இருக்க வேண்டும் என்று  வலியுறுத்தியதை அடுத்து 2016ல் மாதிரி சிறை கையேடு நடைமுறைக்கு வந்தது. அதன்படி 

  • கைதியின் ஊதியங்கள் நியாயமானதாகவும்சமமானதாகவும்பெயரளவாகவோ அற்பமானதாகவோ இருக்கக்  கூடாது. 
  •  அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை கருத்தில் கொண்டு அவ்வப்போது.சிறைச்சாலைகளில் உள்ள ஊதிய முறையை சிறைக்கு வெளியுள்ள சுதந்திர சமூகத்திற்கு இணக்கமாக வைத்திருக்கும் நோக்கில்,ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஊதியம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் மற்றும் தேவைப்படும் போது திருத்தப்பட வேண்டும்.
  • குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் ஒரு பகுதி அவரது பராமரிப்பிற்கும், மாநில அரசால் உருவாக்கப்படும் விதிகளின்படி பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீட்டு நிதிக்கு ஒரு பகுதியும் கழிக்கப்பட வேண்டும் .
  • ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் கைதியின் சேமிப்பு வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும்/
  •  பாஸ் புத்தகம் சம்பந்தப்பட்ட கைதியிடம் வைக்கப்பட வேண்டும்.

     கைதியின் பராமரிப்பு செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மாநில அரசு அவன் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய விதிகள் அனுமதிக்கபடுகின்றன. இவ்வாறு ஏன் செய்யபடுகிறது என்பதற்கும் மேற்சொன்ன குஜராத் வழக்கில் உச்ச நீதிமன்றம் காரணத்தை சொல்கிறது.
"
குறைந்தபட்ச ஊதியச் சட்டம் (1948) நிர்ணயம் செய்யப்பட்ட விகிதத்தில் ஒரு கைதிக்கு அத்தகைய விலக்கு ஏதும் இல்லாமல் வழங்கப்பட்டால், அதன் நிகர விளைவு என்னவென்றால், அவர்  சிறைக்கு வெளியே அதே வகையான வேலையைச் செய்யும் ஒரு தொழிலாளியின் ஊதியம் காட்டிலும் அதிகமாக ஊதியம் பெறுவார் . ஏனென்றால், பிந்தையவர் உணவு மற்றும் உடைகளுக்கான செலவுகளை அவருக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தில் இருந்து சமாளிக்க வேண்டும். இதன் மூலம் கைதிகளின் உணவு, உடைகள் மற்றும் இதர வசதிகளுக்காக அரசு செய்யும் செலவினங்களுக்காக கைதிகளின் ஊதியத்தை மாநில அரசு பிடித்தம் செய்யலாம்" என்றது.

      சிறைக் கைதிகளில் ஊதியத்தில் ஒரு பகுதியை பிரித்துப்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தான் குஜராத் மாநில அரசு எதிர் குஜராத் உயர் நீதிமன்றம் மற்றும் ஒருவர்  வழக்கில்,  மாநிலங்களுக்கு முதன் முதலில் பரிந்துரைத்தது   ,  AIR 1998 SC 3164  .

    2008ல் CrPC திருத்தப்பட்டது . அதில் ஒரு புதிய பிரிவு, 357A சேர்க்கப்பட்டது.   ஒவ்வொரு மாநிலமும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் சிஆர்பிசி திருத்தம் ஆகிய இரண்டிற்கும் பிறகு மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளும் குற்றத்த்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க VICTIM COMPENSATION FUND என்ற தனி ஏற்பாடுகளை செய்துள்ளது இதன்படி கைதிகளின் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கழிக்கப்பட்டு பாதிக்கப்பட்டோர் நல நிதியில் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த விகிதா சாரமானது மாநிலம் தோறும் வேறுபடுகிறது. 

            தமிழ்நாடு சிறைச்சாலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், இதன் சிறை விதிகள், 1983 இன் விதி 481, சம்பாதித்த ஊதியத்தைப் பயன்படுத்துதல். பற்றி   பின்வருமாறு கூறுகிறது:

         (1) ஊதியம் பெறும் திட்டத்தின் கீழ் இருக்கும் கைதிக்கு, அவரது சம்பாத்தியத்தை அவரது வரவுக்குள் வைத்திருக்கவோ அல்லது சிறைக்கு வெளியே உள்ள அவரது உறவினர்களுக்கு அனுப்பவோ விருப்புரிமை அளிக்கப்படும். வருவாயை தனது கிரெடிட்டில் வைத்திருப்பதற்கான அவரது விருப்பத்தை செயல்படுத்தினால், அவரது மொத்த அல்லது அவரது வருவாயின் ஒரு பகுதியை அவரது உறவினருக்கு அனுப்புவதற்கு ஆதரவாக எந்த நேரத்திலும் அவரது விருப்பத்தை திருத்திக்கொள்ள விருப்பம் வழங்கப்படும்.

        (2) கைதி, சிகரெட்,சோப்பு, எண்ணெய் போன்ற தனது தனிப்பட்ட உபயோகத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு, மாதம் ஒன்றுக்கு ரூபாய் 10க்கு மிகாமல் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார். தேவைப்படும் பொருள்களின் பட்டியல் சிறை கண்காணிப்பாளரால் அங்கீகரிக்கப்படும்.

        (3) எந்தவொரு கைதியும் தனது வருமானத்தை மற்றொரு கைதிக்கு கடனாக மாற்ற அனுமதிக்கப்படக்கூடாது

        தமிழ்நாட்டில் சிறை கைதிகளை பராமரிப்பதற்காக கைதிகள் சம்பாதிக்கும் ஊதியத்தில் 50% பிடித்தம் செய்தும் மேலும் 20% ஊதியத்தை சிறை நிதியில் வரவு வைக்கபடுகிறது.  இவ்வாறு  செய்ததற்கு எதிராக திரு கே ஆர் ​​ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக (பிஐஎல்) தாக்கல் செய்தார். மனுதாரர், திரு கே ஆர் ​​ராஜு, தமிழ்நாடு சிறை விதிகள், 1983 இன் விதி எண்.481ஐ அறிவிக்க வேண்டும் என்றும், கைதிகளை பராமரிப்பதற்காகவும், சிறை நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ள ஊதியத்தில் 20% பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட விரோதமாகவும், சட்டம் மற்றும் நீதிக்கு எதிராகவும் உள்ளதாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும்   நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கைதிகள் சொத்துக் கணக்கில் குறைந்தபட்சம் 30% முதல் 75% வரை பணமாகப் பெறுவார்கள் என்று உத்தரவிட வேண்டும் என்றும்  கோரியிருந்தார்..

           இந்த வழக்கில் மெட்ராஸ்  உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் முன் வைக்கப்பட்ட கேள்வி, "ஊதியத்தில் கணிசமான குறைப்பு என்பதுஇந்திய அரசியலமைப்பின் 23 வது பிரிவை மீறுகிறதா?"

             70 சதவீதத்தை (கைதிகளை பராமரிக்க 50 சதவீதமும், பாதிக்கப்பட்ட இழப்பீட்டுக்காக 20 சதவீதமும்) பிடித்தம் செய்து வருகிறது. ஒரு பொதுநல அரசு , எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாமல் ஒரு தனிநபரின் ஊதியத்தில் இருந்து கணிசமான கழித்தல் என்பது தீய மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது. சிறை விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் இருந்து கணிசமான அளவு பிடித்தம் செய்வது அரசியலமைப்பின் 23 வது பிரிவை மீறுவதாக உள்ளது. போதிய ஊதியம் கொடுக்காமல் வேலை வாங்குவதும் பிச்சைதான்.   தமிழகத்தில் கைதிகளுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதியம் வழங்கப்படவில்லை என்பது ஒப்புக்கொள்ள முடியாதது.. எனவே, சிறைச்சாலை விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் இருந்து கணிசமான கழித்தல் என்பது மாண்புமிகு உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்றது சென்னை உயர் நீதிமன்றம்.

      மேலும் அந்த தீர்ப்பில் "சிறைச்சாலைகளில் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத அத்துமீறல் மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைக்கு இது ஒரு அங்கீகாரம். நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத் திட்டம் இருக்க வேண்டும் என்று கூறி  கைதிகளின் மறுவாழ்வு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பீடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள சமநிலையை மனதில் கொண்டு  குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பிடித்தம் செய்ய அனுமதித்தது.  ஆனால் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியே கைதியின்  ஊதியத்தில் இருந்து இந்த பாத்திக்கபட்டவருக்கான நஷ்டஈட்டு நிதிக்கு கைதிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யபடுவதால் அதில தவறேதும் இல்லை என்றது. " ஊதியத்தின் ஐந்தில் ஒரு பங்கு இதற்காக பிடித்தம் செய்யபடுவதில் எந்த தவறும் உள்ளதாக தெரியவில்லை.  ஆனால் அதே சமயம் ஐம்பத்து சதவீதம் ஊதியத்தில் இருந்து அவர பராமரிப்பிற்காக பிடித்தம் செய்வது சட்ட விரோதமானது என்றது . 

        இதில் கொடுமை என்னவென்றால்கோடிக்கணக்காக இவ்வாறு வசூலிக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் கிடப்பதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது தான் தில்லி திஹார் கேயிலில் கூட இது போல திகார்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் ஊதியத்தில் இருந்து 2006- ஆம் ஆண்டு முதல் வசூலிக்கப்பட்ட ரூ.15 கோடியில், பாதிக்கப்பட்ட 194  பேருக்கு சுமார் ரூ.80.73 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ.14  கோடிக்கு மேல் பயன்படுத்தப்படாமல் கிடப்பதாகவும் காத்யாயினி என்பவர தொடர்ந்த  பொதுநல மனுவில் கூறியுள்ளார்.  ஏன் இது போன்ற நிலை??   

             பெரும்பாலோனோருக்கு இது போன்ற ஒரு நிதி உள்ள  விவரமே தெரிவதில்லை. ஒரு குற்றத்தில் பாதிக்கபட்டோர்ர் யார்  என்றால், அந்த  குற்றத்தினால், மனதாலோ உடலாலோ அல்லது  அவர் சொத்திற்கு தீங்கு  நடந்திருந்தால், அந்த குற்றத்தை செய்த  நபர் அடையாளம் காடபட்கிறாரோ இல்லையோ, நீதிமன்றத்தில்,  அந்த குற்றவாளிக்கு எதிராக வழக்கு தீர்ப்பாகிறதோ இல்லை அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டாரோ இல்லையயோ ,  அந்த குற்றத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு அரசு நஷ்டஈடு கொடுக்க வேண்டிய கடமை உண்டு.  அதேபோல, அந்த குற்றத்தை  செய்ததாக ஒருவர் தண்டனை பெற்று சிறைவாசம்  செய்யும்போது,குற்றத்தை செய்ததாக ஒருவர் தண்டனை பெற்று  சிறைவாசம் செய்யும்போது,  அங்கு அவர் செய்யும் வேலைக்கு  கொடுக்கப்படும் ஊதியத்தில் இதற்கென பிடித்தம் செய்யப்படும்  தொகையை பெறும் உரிமையும் இந்த பாதிக்கப்பட்டவருக்கு உண்டு   இதில் அந்த குற்றவாளி சிறை சென்றதால் பாதிக்கப்பட்ட  அவரை நம்பி உள்ள குடும உறவினரும் அடங்கும். குற்றவாளியின் மைனர் குழந்தைகளுக்காக அவர்களை பராமரிக்கும்  பாதுகாவலர்கள் இந்த  நிதியின் கீழ் அந்த குழ ந்தைகளுக்கு நஷ்டஈடு  கேட்டு பெறலாம்.

        நீதிமன்றத்தின் மூலமாக பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு பெற குற்ற விசாரணை நடை சட்டம் இருந்தாலும், இந்த நிதி அரசின் பாதுகாப்பில் இருப்பதால் எளிதில் பெற முடியும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டது என்றாலும இத்திட்டம் தற்போது பெரும் கால தாமதத்தையே ஏற்படுத்துகிறது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

        

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


    

 

 

புதன், 4 மே, 2022

ஆக்கிரமிப்பு என்றால் என்ன? உதாரணம் கூறமுடியுமா?

சென்னை மைலாப்பூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற சமயம், ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி சாவு.......

மக்கள் ஆவேசம்....வீட்டை இடிக்கவிடாமல் தடுத்தனர்

அதிகாரிகள் அங்குள்ள மக்களை வசைபாடியாடியே தொடர்ந்து அங்குள்ள வீடுகளை இடித்து வருகின்றனர்..... .

''திங்கட் கிழமை நாங்கள் உச்ச நீதிமன்றம் போக உள்ளோம். அதற்குள் இந்த ஞாயிற்றுக் கிழமை அன்று வீட்டை இடிக்கின்றனர்

இத்தனைக்கும் காரணம் ஒருவர் போட்ட பொதுநல வழக்கு தான் '

நாங்கள் பல தசாப்தங்கலாக இங்கு தான் வாழுகிறோம் சொத்து வரி கட்டியும் ஆதார் கார்டு பெற்றும் எங்களை இவ்வளவு மோசமாக நடத்துகின்றனர்" .

என்று அங்குள்ள மக்கள் குமுற,....

நீதிமன்றம் கோடை விடுமுறையில் இருக்கும் போது அரசு இப்படி செய்யலாமா ' ஏன், இந்த அவசரம்?' என்ற கேள்வி உள்ளுக்குள் எழ '

ஏற்கெனவே அந்த பகுதியை 'சேரி' என்ற குடிசைப்பகுதி என்று 1973 லேயே அரசு ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையி;ல் இது போன்று வீடுகளை பொதுப் பணித்துறை இடிப்பது தவறு . "

என்று அவர்கள் கூறுவதை கேட்டபோது என்ன தான் நிலவரம் என்று அறிய தேடியபோது, இந்த கேள்வியும் கண்ணில் பட்டது.

எது ஆக்கிரமிப்பு?

தனக்கு சொந்தமில்லாததை தன்னுடையதாக எண்ணுவது மட்டுமல்லாமல், அதில் உரிமை கோரும் விதத்தில், அதன் உரிமையாளர் அனுமதியின்றி தன்னுடைய அனுபவத்தில் அதை வைத்திருத்தல்....

௨௦௦ ஆ ண்டுகளுக்கும் மேலான பழமையான பக்கிங்ஹாம் கால்வாய பற்றி இன்று அதிகம் அறியப்படவில்லை. ""மதராஸ் பட்டினம்:: வந்து புண்ணியம் கட்டிக்கொண்டது!!

இதை பற்றி அதிக விவரங்கள் தெரியாதவர்களுக்கு………அப்படியே அந்தப்பாட்டின் பின்னணி இசையை மனதுக்குள் இசைத்துக் கொண்டே மேலும் படியுங்கள்!!

பக்கிங்ஹாம் கால்வாய் உப்பு நீர் கொண்ட முக்கியமான நீர்வழிப் பாதைகளில் ஒன்று..

இது கோரமண்டல் கடற்கரைக்கு இணையாக உள்ள து

ஆந்திராவில் உள்ள பெட்டகஞ்சத்தில் இருந்து தொடங்குகிறது

பக்கிங்ஹாம் கால்வாய் இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் புதுச்சேரி அருகே மரக்காணம் மற்றும் தமிழ்நாடு வழியாக நீளும்

இது நகர எல்லைக்குள் வடக்கு கால்வாய், தெற்கு கால்வாய் மற்றும் மத்திய கால்வாய் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது வாமிநகர், கிரீன்வேஸ், ராஜா அண்ணாமலை புரம், முண்டககன்னியம்மன், லைட் ஹவுஸ், திருவல்லிக்கேணி , மந்தவெளி, மயிலாப்பூர், சேப்பாக்கம், கேசவபெர்மாள்புரம் என்று நகரின் மையப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

வெள்ளம் வரும் போது தடுப்பானை போன்று செயல்படும் இது,

சமூகத்தின் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர், குடிசைவாசிகள் என்று ஆரம்ப ஆண்டுகளில் இந்த கால்வாயில் இருந்தவை , காலப்போக்கில் பெரிய அளவில் வளர்ந்து. பக்கிங்ஹாம் கால்வாயின் கரையில் பல சேரிகள் வந்துவிட்டன. சில சேரிகளில கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் முன்பாகவே வந்தவை.

இந்த கால்வாய் கிழக்கிந்திய கம்பெனியின் காலத்தில் ஆங்கிலேயர்களால் பிரிட்டிஷ் தொழிலதிபரின் வர்த்தக நலன்களுக்காக அவர்கள் வழிசெலுத்தலுக்காக உருவாக்கப்பட்டது, ஆனால் தற்போது சென்னை எல்லைக்குள் சாக்கடை நீர் மற்றும் குப்பைகளை மட்டுமே கொண்டு செல்கிறது ஆங்கிலேயர் காலத்தில் 60 மீட்டராக இருந்த கால்வாயின் அகலம், வீடுகள், தொழிற்சாலைகள் என்று சில பகுதிகள். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், வெறும் ஆறு மீட்டராக பரப்பளவு குறைந்துள்ளது

அதற்கு காரணம்…… தமிழ்நாடு அரசின் சரியான கால்வாய் மேலாண்மை இல்லாமை.!!

நீர் நிலைகளை எந்த காரணம் கொண்டும் அது காய்ந்த நிலையில் இருந்தாலும் யாருக்கும் தாரை வார்த்து கொடுக்க கூடாது என்று நமது உயர் நீதிமன்றமும் சரி உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தி சொல்லி வருகின்றன.

அப்படியிருக்க பொதுப்பணித்துறையின் வசம் இருக்கும் இந்த கால்வாயானது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது!!

2015ல் ஒரு பெரு வெள்ளம் சென்னையில் வந்ததே நினைவிருக்கிறதா? அப்போது ஒரு ரிட் மனு சென்னை உயர் நீதியான்றத்தில் பொது நல வழக்காக பதியப்பட்டு, ' இந்த அசம்பாவிதத்துக்கு யார் காரணம்/? என்று ஒரு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு உயர் மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரித்து குறைகளை சரி செய்ய வேண்டும் என்று ராஜீவ் ராய் என்பவரால் போடப்பட்டது. அப்போது இந்த கால்வாயின் கரையில் இருந்த 408 ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டு மற்ற சுமார் முன்னூறு ஆக்கிரமிப்புதார்களின் ஏக எதிர்ப்பின் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டது. அப்படி அகற்றியும். கால்வாயின் முகப்பு பகுதியி]லிருந்து வெறும் நாற்பது அடிகள் மட்டுமே கிடைக் கின்றன என்றும் இப்போதைய ஆக்கிரமிப்புகளையும் அகற்றினால் மட்டுமே அதன் முழு விஸ்தீரணம் கிடைக்கும் என்கிறது இந்த ஆக்கிரம்மிப்புகளை அகற்றும் பொதுப் பணித்துறை.

ஆனால் 'சேரி' என்று அரசு உத்தரவு இருக்கும் போது, அங்குள்ள சேரிவாசிகளை குடிசைப்பகுதி மாற்று வாரிய சட்டபப் பிரிவு 11 படி அறிவிப்பானை கொடுத்து தானே அகற்ற வேண்டும் என்றால் அதற்கும் ஒரு பதில் வைத்துள்ளது அரசு தரப்பு.

அரசு ஆணை அப்படி போடப்பட்டாலும், இதுநாள் வரை பொதுப்பணி துறை, அந்த நிலத்தை குடிசை பகுதி மாற்று வாரியத்திடம் ஒப்படைக்கவில்லை. அப்படியிருக்கும் போது, அந்த சட்டம் இவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது" என்கின்றனர். ஆனால் அரசு தானே அதை சேரி என்று ஆணை பிறப்பித்தது. பிறகு அந்த சட்டப் பிரிவின்படி தானே அது நடக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்…..

, பொது இடத்தில் உள்ள நீர் நிலையை சேரி என்று அரசு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தின் முழு பெஞ்ச், டி. கே. சண்முகம் எதிர் தமிழக அரசு வழக்கில் (2015) 5 LW 397 (FB), நீர் நிலைகள், யாருக்கும் மாற்ற முடியாதது யாராலும் மாற்ற முடியாதது என்ற தீர்ப்பை சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் ஒரு பகுதியை சேரி என்று அறிவிப்பதே அதில் அடிப்படை வசதியை கொண்டு வந்து மேம்படுத்த முடியுமா என்று முயல்வதற்கே. ஆனால் கால்வாயின் கரையில் உள்ள இந்த பகுதிக்கு அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் தான், 1973 ல் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், அதன் பிறகு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் அது கிடப்பில் போடப்பட்டது என்று தெரிய வருகிறது. . மேலும் டவுன் நில அளவீடு பதிவேடுகளின்படி பக்கிங்காம் கால்வாய் என்ற வகைப்பாட்டில் தான் இந்த வீடுகள் வருகின்றன .இதை ஆக்கிரமிப்பு செய்தவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர்……

இங்கல்ல…... சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு!!

அரசு தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று இவர்கள்மனு செய்து விட்டு அதை பின்னர் வாபஸ் வாங்கியுள்ளனர். மேலும் இந்த அரசு ஆணையை தவிர குடிசை மாற்று வாரியம் இவர்களுக்கு அந்த இடத்தை ஒதுக்கீடு செய்ததாக எந்தவித ஆவணமும் இவர்கள் வசம் இல்லை. மேலும் இந்த இளங்கோ தெரு என்பதும் இவர்களே உருவாக்கியது தான் என்றும் அரசு அந்த தெருவை அமைக்கவில்லை என்றும் ஒத்துக்கொண்டுள்ளனர். அதனால் தான் உயர் நீதிமன்றம் கூட இவர்களில் நூற்றுக்கனக்கானோர் உயர் நீதிமன்றத்தை அணுகிய போது, இந்த அரசு ஆணையை வைத்துக் கொண்டு, பொது நிலத்தில் அதிலும் நீர் நிலையில் எந்த உரிமையும் கொண்டாட முடியாது என்றும் இந்த அரசு ஆணையினால் மட்டுமே, இவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற மாற்றமுடியாத உரிமை ஏதும் கிடைத்து விடவில்லை என்றும் தெளிவு படுத்தியது

மேலும் .Sarvepalli Ramaiah (Died) vs. The District Collector [Civil Appeal No.7461 of 2009] decided on 14.03.2019, என்ற வழக்கில் கூட, நீர்நிலைகள் பாதுகாக்க, புனரமைக்க சொன்னதோடு அல்லாமல், காய்ந்த நிலைக்கு போனாலும், அவற்றை யாருக்கும் மாற்றம் செய்து கொடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .

நீர்நிலைகளை எந்த விதத்திலும் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது, அதை அரசும் அனுமதிக்க கூடாது என்று சொன்ன தீர்ப்புகளில் சில…. (1) Susetha vs. State of Tamil Nadu, reported in (2006) 6 SCC 543; (2) M.C.Mehta (Badkhal and Surajkund Lakes Matter) vs. Union of India, reported in (1997) 3 SCC 715 and (3) Intellectuals Forum v. State of Andhra Pradesh, reported in (2006) 3 SCC 549.”

நமது உயர் நீதின்றம் கூட, , நிலப்பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம், "இந்த நிலம், நீர் நிலை வகைப்பாட்டில் வரவில்லை" என்ற உறுதியை பத்திர பதிவு அலுவலகங்கள் பெற வேண்டும் என்றும் அதே போல நீர்நிலைகள் பட்டியலை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் டான்ஜெட்கோ விற்கு அனுப்ப, அது அங்கு வீடு கட்டி மின்வசதி கோருபவருக்கு அனுமதி அளிக்க கூடாது என்கின்றது.

இந்த விவகாரத்தில் கூட, உயர் நீதிமன்றம் கொடுத்த கால கெடுவிற்கு பிறகும் காலி செய்யாதவர்களின் வீடுகளில் மின் இனைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த நிலை தான் இன்றைய தேதி வரையில் நிலவுகிறது. இப்படி ஒவ்வொரு அடியாக தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும், இவர்கள் சொல்வது போல திடீரேன ஒரு நாளில் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் தெரிகிறது.

'தனி நபர் தொடர்ந்த பொது நல வழக்கில் போடப்பட்ட உத்தரவுக்கு இவ்வளவு மரியாதை செய்கின்றனர் அதிகாரிகள்; என்று ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. உண்மையில் 2008 ல் முதன் முதலில் போடப்பட்டது பொது நல வழக்கு அல்ல. ஆனால் அதில் கோரப்பட்ட பரிகாரம், பொது நலன் சம்பந்தப்பட்டது என்பதால் அவ்வாறு மாற்றப்பட்டது. அதன்பிறகு உயர்நீதிமன்றம் போட்ட தீர்ப்பை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றம் போயினர். 2011 ல் இந்த எஸ்.எல்.பி யில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது இதற்கிடையே அரசு தரப்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. சென்னை மாநகராட்சியிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு ஆக்கிரமிப்புகளை அப்புறப் படுத்த சொல்லி கடிதம் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து நடவடிக்கை தாமதம் ஆகவும் , உச்ச நீதிமன்ற உத்தரவு அமுலபடுத்தவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டது. இன்னொன்று… 11.02.2011 லேயே உச்ச நீதிமன்றம், உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று சொல்லியுள்ளது. அதுவே இறுதி நிலை என்னும்போது, அதன் பிறகு வெவவேறு காரணங்களை சொல்லி மனுக்கள் போடப்பட்டு காலம் தாழ்த்தப்பட்டு வந்தன. இதற்கிடையே சென்னையில் பெரு வெள்ளம் வந்து, நிறைய பேரின் உயிரை பறிக்க, உயர்நீதிமன்றத்தின் கோபத்தை தாங்க முடியாமலும், உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இணங்கியும், 408 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆனாலும் கடுமையாக எதிர்த்த மற்றவர்கள் உயர்நீதிமன்றத்தில் 2018ல் வழக்கு தொடுக்கின்றனர். அதில் உச்ச நீதிமன்றம் இட்ட உத்தரவையும் மறைக்கின்றனர். பல சங்கதிகள் உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட மனுவில் இடம்பெறவில்லை. இருந்தாலும், உயர் நீதிமன்றம், பெருந்தன்மையோடு அதை மன்னித்து, மனுதாரர்கள் ஆக்கிரப்பாளர்கள் என்பது முடிவாகியுள்ளதால், அவர்கள் இங்கு தொடர்ந்து தங்க வசிக்க முடியாது. என்றும் இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் குடிசை பகுதிமாற்று வாரியம் கொடுக்கும் மாற்று இடத்தை வாங்கி கொண்டு பள்ளிப் படிப்பு படிக்கும் அவர்கள் குழந்தைகள் சிரமப்படாமல் இருக்க, 2018 சூன் 15 க்குள் அங்கு குடி செல்லவேண்டும் என்றது /https://indiankanoon.org/doc/191133807/

ஆனால் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர். அவர்களும் இந்த தீர்ப்பை உறுதி செய்தனர்.. அதே வேளையில், தாங்கள் ஆக் கிரப்பாளர்கள் அல்ல என்ற இவர்கள் வாதத்தை உயர்நீதிமன்றத்தில் கொண்டு முன் வைக்க அனுமதி அளித்தது. திரும்பவும் 2019ல் உயர்நீதிமன்றத்தில் முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி ரிட்\ மனு. அதில் தான் நீதியரசர்கள் வேணுகோபால் அவர்களும் நீதியரசர் வைத்தியநாதன் அவர்களும், மேலும் இந்த கால அளவை 10.06.2019 வரை நீடித்து தீர்ப்பு அளிக்\கின்றனர். https://indiankanoon.org/doc/15274525/

இந்த காலக் கெவிற்குள் ஒத்துழைக்காத ஆக்கிரப்மிப்பாளர்களின் வீட்டை இடித்துக்கொள்ள அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதற்கு போதிய போலிஸ் பாதுகாப்பு வழங்க சொல்லி உத்தரவும் வருகிறது. போன வருடம் சுமார் முந்நூறு பேர்களை அகற்றி மாற்று இடம் கொடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் சொல்கின்றனர்.

பக்கிங்ஹாம் கால்வாய் நீர்நிலை முழுவதையும் தேசிய நீர்வழிப் பாதையாக (காக்கிநாடா-புதுச்சேரி கால்வாய்கள் மற்றும் களுவேலி குளம், பத்ராசலம் ராஜமுந்திரி நீட்சி, கோதாவரி நதி மற்றும் வஜீராபாத் விஜயவாடா நீட்சி ஆகியவை தேசிய நீர்வழிப் பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.. தேசிய நீர்வழிச் சட்டம், 2016 வந்தபிறகு, கிருஷ்ணா நதி) சட்டம், 2008, ரத்து செய்யப்பட்டது, ஆனால் உள்நாட்டு நீர்வழிச் பாதையின் நோக்கத்திற்காக முழு பக்கிங்ஹாம் கால்வாயும் தொடர்ந்து தேசியமயமாக்கப்பட்டது. எனவே, பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் உள்ள அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் அல்லது ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனப்படுகிறது..

மத்திய நீர் ஆணையத்தின் வெள்ள முன்னறிவிப்பு நிலையம் 14 அமைக்க முன்மொழியப்பட்டது. ஆனால் தமிழகத்தில் ஒன்று கூட இல்லை, மேலும் வெள்ளஅபாயம் ஏற்ப்படும் போது, அதை தடுப்பதற்கான போதிய நீண்ட கால திட்டங்கள் ஏதும் நம் கைவசம் இல்லை.

நீர்நிலைகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் மேம்படுத்தவும் உதவும் நோக்கில் தமிழ்நாடு தொட்டிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம், 2007 ஐ அரசு இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தின் நோக்கமே, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நீர்த்தேக்கத்தின் சரியான எல்லையைக் கண்டறிவதும், அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின்படி, ஆக்கிரமிப்புகளைக் கண்டறிவதும் அகற்றுவதற்கானதும் ஆகும். .. துரதிர்ஷ்டவசமாக, மேற்குறிப்பிட்ட அரசு ஆணைகளை நிறைவேற்றுவதன் மூலம், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்களை அரசு தீவிரமாக ஊக்குவிக்கிறது மேலும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கும் அவர்களின் உடைமைகளை முறைப்படுத்தவும் முனைகிறது என்று தான் சொல்லவேண்டும்.

மாற்று இடம் கண்டறிந்து ஆக்கிரப்பாளர்களை அங்கு குடியேற்றுவது என்பது அரசின் கடமை அதை செய்யாமல், நீர்நிலை ஆக்கிரப் புகளை களைவதை காலம் தாழ்த்த கூடாது என்ற நமது உயர் நீதிமன்றத்தின் கெடுபிடியான தீர்ப்பின் அடிப்படையிலேயே, தற்போதும் ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்கிறது. நாட்டில் நிலவும் சூழலையும் வழக்கின் தன்மையையும் நன்கு அறிந்த முன்னாள் துணை முதல்வரும் உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையிலேயே இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடைபெறுகின்றன என்பதை நன்கு அறிந்தும் மாற்று கருத்து சொல்லியிருப்பது. துரதிர்ஷ்டமானது என்று தான் சொல்லவேண்டும்

அரசுக்கு மட்டுமா நீர்நிலைகளை காப்பாற்றும் கடமை உள்ளது.? நமக்கும் தான்.

காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட தேசியச் சூழலைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும், உயிரினங்களிடம் கருணை காட்டுவதும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51-ஏ அறிவுறுத்துகிறது. மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது 19 மற்றும் 21 பிரிவு பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள்,உட்பட அரசியலமைப்பு சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் நோக்கத்தைப் மனதில் கொள்ள வேண்டும்.

தற்போது நமது தமிழக முதல்வர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதியின் , தற்போது கட்டப்பட்டு வரும் அரசு குடியிருப்பில் வீடு வழங்கப்படும் என்றும் சொல்லியிருப்பது நல்ல செய்தி தானே !

அது சரி …….அசையா பொருளை மட்டும் தான் ஆக்கிரமிப்பு செய்ய முடியுமா?

அப்படியானால், தனக்கு சொந்தமான மனைவியை/கணவனை ஆக்கிரமிப்பு செய்வது ??

https://m.youtube.com/channel/UCVWEar2R5mwMTP7YBlbRL3Q

https://www.youtube.com/watch?v=a9UMpqZbr6I












சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...