ஞாயிறு, 13 மார்ச், 2022

வெளிநாட்டில் மருத்துவம் படித்த பலர் இந்தியாவில் நடத்தப்படும், பயிற்சி மேற்கொள்வதற்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் திணறுவதற்கு காரணங்கள் என்ன?

            ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படிக்க 
வெளிநாட்டிற்கு  சென்ற நிலையில் உக்ரைனில் தொடங்கிய 
போரினால்,  அவர்கள்  உடன் நாடு திரும்ப வேண்டிய 
கட்டாயத்தில்  திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய 
அமைச்சர் ஒருவர், "வெளி நாட்டில் மருத்துவம் படிக்கும் 
மாணவர்களில் 90% பேர் இந்தியாவில் நடத்தப்படும் தகுதி 
தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை" என்று சொன்னது நிறைய 
விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

 
தேசிய  தேர்வுகள் போர்டு நடத்துகின்ற , இந்தியாவில் மருத்துவராக பயிற்சி பெற தேசிய  மருத்துவ கமிஷனால் கட்டாயமாக்கபட்ட  வெளிநாட்டு மருத்துவ  பட்டதாரிகளுக்கான தகுதி தேர்வு அதை சுருக்கமாக FMGEயில்  பெற்ற தேர்ச்சி விகிதங்களை பார்த்தோமேயானால், அவர் 
கூறியது உண்மை என்றே கூற வேண்டும் .

             2019 ல்    25.79 % பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றபோது,     2020ல்    14.68% பேரும்   2021ல்   23.83% தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதற்கும் முந்தைய ஆண்டுகளில் இந்த தேர்ச்சி விகிதம் இன்னமும் குறைவாக இருந்தது.    ஆண்டுதோறும் சராசரியாக 20% பேர் தான் தேர்ச்சி பெறுகின்றனர் என்கிறது NMB புள்ளிவிவரம்  
            

        அதுவும் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய 
கட்டாயம், ரஷ்யா, உக்ரைன், சீனா,. பிலிப்பைன்ஸ், 
பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் பயின்ற 
பட்டதாரிகளுக்கு மட்டுமே.  இதுவே அமெரிக்கா, இங்கிலாந்து, 
ஆஸ்திரேலியா நாடுகளில் பயின்ற MBBS  பட்டதாரிகள் 
தேர்வெழுத தேவையில்லை.   

            ஏன் இந்த பாரபட்ச்சம்? ஏன் இந்த தகுதி தேர்வு 
கட்டாயமாக்கப்பட்டது ? என்ற கேள்விக்கு  NBE இன் முன்னாள்
நிர்வாக இயக்குனர் டாக்டர் விபின் பாத்ரா கூறுகையில், 1998-99
ஆம் ஆண்டில் தான், ஸ்கிரீனிங் தேர்வு பற்றிய யோசனையே
வந்தது, என்றும், அதற்கு முன்பு , இது ஒரு இராஜதந்திர சாளரமாக
இருந்தது என்பதால் முந்தைய USSR மற்றும் பின்னர் CIS
காமன்வெல்த் ஆஃப் சுதந்திரமான நாடுகள் ) இல் முதுகலை
மருத்துவக் கல்விக்கு மாணவர்களை அரசாங்கம்
பரிந்துரைக்கும். இந்த நிலைமை படிப்படியாக வணிக
முயற்சியாக மாறி, அந்த பிராந்தியத்தில் அதிகமான கல்லூரிகள்
இந்திய மாணவர்களுக்கு தங்கள் கதவுகளைத் திறந்தன.

            மருத்துவக் கல்வியில் DEMAND AND SUPPLY பொருத்தமின்மை
இந்தியாவிற்கு எப்போதும் ஒரு பிரச்சனையாகவே இருந்து
வருகிறது. இங்குள்ள தேவைக்கேற்றவாறு மருத்துவ கல்வி பெற,
இந்திய மாணவர்கள் வெளிநாட்டிற்கு செல்வது
அதிகரித்துவிடவே, 1998 ஆம் ஆண்டில், MCI முதன்முறையாக
வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளின் அங்கீகாரத்தை ரத்து
செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது, ” என்கிறார்.

        1998 இல் பொக்ரான் அணுகுண்டு சோதனை ஒரு
பின்னடைவைப் பெற்றது. அப்போது நாட்டிற்கு பொருளாதாரத்
தடைகள் இருந்தபோது, ரஷ்யா மட்டுமே இந்தியாவுடன் நின்ற
ஒரே நாடு. இந்தியாவுடன் நின்ற ஒரு நாட்டின் பட்டங்களின்
அங்கீகாரத்தை நீக்குவதற்கு எதிராக நிறைய இராஜதந்திர
அழுத்தம் இருந்தது, எனவே இறுதியாக, 2001 இல், ஒரு நடுத்தர
பாதை வகுக்கப்பட்டது. வெளிநாட்டில் மருத்துவ கல்வி பெறும்
பட்டதாரிகளுக்கு ஒரு தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெறுவோரை
மட்டுமே இந்தியாவில் மருத்துவம் பயில அனுமதிக்க முடிவு
செய்யப்பட்டது.


            இருப்பினும், இந்த தகுதி தேர்வும் சில எதிர்ப்பை சந்தித்தது.
சில மருத்துவப் பட்டதாரிகள், மருத்துவப் பாடங்களில் மட்டும்
கேள்விகள் இருக்க வேண்டும் என்றும், கேட்கப்படும் கேள்விகளின் வரம்பைக் குறைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றம், அதன் தீர்ப்பில், அந்த தேர்வில் பங்கு பெறுவதற்கான எண்ணிக்கையை அகற்றுவது உட்பட சில தளர்வுகளை அனுமதித்தது. அதன்படியே, முதல் FMGE 2004 மார்ச்சில் நடந்தது, இது கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

            அப்படியானால், இ ந்தத் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய
பிறகு கிட்டத்தட்ட 80 சதவீத பட்டதாரிகள் என்ன செய்வார்கள்?
இது குறித்து 'தி பிரிண்ட்' ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில்
கலந்துக கொண்ட வெளிநாட்டு பட்டதாரிகள் FMGE க்கு
விண்ணப்பிக்கும் போது NBE உடன் ' தகவல்களை
வெளிப்படுத்தாத ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டதால், தங்களை
பற்றிய விவரங்களை மறைத்து கொண்டு, இந்த
கருத்துக்கணிப்பில் பங்குபெற்றனர். ஆய்வில், சிலர்
மருத்துவத்தைத் தொடர வேண்டும் என்ற தங்கள் கனவைக்
கைவிட்டு, வேறு வாழ்க்கைப் பாதையைக் கடைப்பிடிக்கிறார்கள்
என்றும் மற்றவர்கள் எப்படியாவது அந்த தேர்வில் தேர்ச்சி
அடைய வேண்டும் என்று தங்கள் முயற்சியை தொடர்கிறார்கள்
என்றும் தெரிய வந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம்
என்னவென்றால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, FMGEக்கான
முயற்சிகளின் எண்ணிக்கையில் தான் வரம்பு இல்லையே. .
            

        ஏன் இந்த தகுதி தேர்வில் அவர்களால் தேர்ச்சி பெற
முடியவில்லை என்ற காரணத்தை கேட்ட போது,
  •    வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம் இல்லாதது: "NBE ஆல் தங்களுக்கு எந்த புத்தகங்களும் பரிந்துரைக்கப்படவில்லை. தேர்வுக்கு தயாராகும் போது குறிப்பிடக்கூடிய வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம் எதுவும் இல்லை என்பதால் தேர்வை கடினமாக்குகிறது." என்றார்கள். அதில் சிலர் பத்து வருடங்களாக தேர்ச்சி பெற மோற்சித்து கொண்டிருப்பவரும் உண்டு.
ThePrint தொடர்பு கொண்ட கல்வி ஆலோசகர்கள் கூறுகையில்,
  • தேர்வில் தேர்ச்சி பெறுவதில் பல முறை தோல்வியடைந்த பிறகு, பெரும்பாலானவரகள் மாற்றுத் தொழில்களை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தங்கள் பாதையை மாற்றிகொள்கின்றனர் என்று கூறினர்.
  •  இந்த வெளிநாட்டு பட்டதாரிகள் இந்த தேர்விவில் தேர்ச்சி பெறாமல் இந்தியாவில் பயிற்சி செய்ய முடியாது என்றாலும் அவர்கள் படித்த நாட்டில் பயிற்சி செய்யலாம். வசதியும், தொடர்பும் உள்ளவர்கள், சீனா, ரஷ்யாவில் இன்டர்ன்ஷிப் பெற்று, பிறகு அங்கு பயிற்சி செய்யத் தொடங்குகிறார்கள் அத்தகைய வாய்ப்புகளைப் பெற முடியாத மற்றவர்கள், மாற்றுத் தொழில் பாதையை மேற்கொள்வார்கள் அல்லது தொலைதூரப் பகுதிகள், கிராமங்கள் அல்லது சிறிய நகரங்களில் உரிமம் பெற்ற வல்லுநர்கள் தேவைப்படாத கிளினிக்கில் பணிபுரிவார்கள். என்றாலும் இது தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தில் சாத்தியமாக இருந்தது இப்போதைய சூழ்நிலையில் அதுவும் உக்ரைனில் போர் நடந்து வரும் போது, அங்கு நிலைமை எப்போது சீராகும் என்பதும் தெரியாத நிலையில் உள்ள போது , அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளன என்கின்றனர்.

            பெரும்பாலானவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற மீண்டும்
மீண்டும் முயற்சி செய்கிறார்கள் ஆனால் அதில் தேர்ச்சி பெற
முடியாதவர்கள் இந்தியாவில் தங்க வேண்டியிருந்தால் அது
தொடர்பான தொழிலை மேற்கொள்கின்றனர். முடிந்தவர்கள்
மருத்துவம் செய்யக்கூடிய நாடுகளுக்குச் செல்கிறார்கள்.
            

            மேலும் வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு ஸ்கிரீனிங் தேர்வில்
தேர்ச்சி பெற வேண்டும் என்று விதித்துள்ளது இந்தியா மட்டும்
அல்ல, இன்னும் சில நாடுகளும் உண்டு. இந்தியாவில் இருந்து
செல்லும் மருத்துவ பட்டதாரிகளை யுனைடெட் ஸ்டேட்ஸ்
மெடிக்கல் லைசென்சிங் எக்ஸாமினேஷன் எழுத வேண்டும்
என்று அமெரிக்காவும் கோருகிறது. .

            மேலும் இந்த தகுதி தேர்வு மிகவும் கடினமாக இருப்பதற்கு
ஒரு காரணம் உள்ளது, என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்த
வெளிநாட்டு மருத்துவ படிப்பின் தரம் குறித்து , வெளிநாட்டு
மருத்துவ பட்டதாரிகளுடன் பணிபுரிந்த அனுபவம் உள்ள
மருத்துவர்கள் கூறும்போது , ஸ்கிரீனிங் தேர்வில் தேர்ச்சி
பெறுபவர்கள் கூட பெரும்பாலும் மருத்துவ மற்றும் நடைமுறை
திறன்களில் குறைவாக இருப்பதாகக் கூறுகின்றனர். தில்லியின்
இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த
மருத்துவர் ஒருவர் தி பிரிண்டிடம் கூறுகையில், “நோயாளியின்
மீது கானுலாவைக் கூட வைக்க முடியாத பட்டதாரிகளை தாங்கள்
சந்திக்க நேரிட்டஷாக கூறியுள்ளனர்.

        மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளராக
இருந்த போது மருத்துவக் கல்வித் துறையை யைக் கையாண்ட
முன்னாள் கேரள தலைமைச் செயலாளர் டாக்டர் விஸ்வாஸ்
மேத்தா ThePrint இடம் கூறியதாவது: “தான் ஆர்மீனியா, ஜார்ஜியா
மற்றும் ரஷ்யாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்ற
போது, அங்கு நுழைவுத் தேர்வு இல்லை, மற்றும் கட்டணம்
நியாயமானதாக இருப்பதால், நிறைய பேர் அங்கு மருத்துவம்
படிக்க சென்றனர் என்றாலும், அங்குள்ள சட்டங்கள் மிகக்
கடுமையாக உள்ளன, என்பதால், மாணவர்கள் நோயாளியைத்
தொட அனுமதிக்க மாட்டார்கள், எனவே அவர்களுக்கு ஒரு
வடிகுழாய் அல்லது ஊசி போடுவது அல்லது பிரசவம் செய்வது
எப்படி என்று தெரியாது." என்று சொல்லியிருக்கிறார்.
            

        "வெளிநாட்டு மருத்துவ கல்வியின் தரநிலைகள் மிகவும்
வேறுபட்டவை. மேலும், அவர்களின் பட்டங்களை
அங்கீகரிப்பதற்காக இந்த நாடுகளுடன் பரஸ்பர ஏற்பாடு எதுவும்
இல்லை". அதனால் தான் இந்த தகுதி தேர்வு மிகவும் கடினமாக
இருக்கின்றது என்று கூறுகின்றனர் அனுபவம் வாந்தவர்கள்.
          

          இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள்
கிராமப்பறங்களில் வாழ்கின்றனர். தங்களின் அடிப்படை
உரிமைகளைப் பற்றிய அதிக விழிப்புணர்வு இல்லாதவர்கள்.
அவர்களின் உயிருடன் சம்பந்தப்பட்ட மருத்துவ தொழிலை
மேற்கொள்ள இருக்கும் நபருக்கு தகுதிகளை நிர்ணயம்
செய்வதில் அரசு காட்டும் கடினத்துவம் நியாயமானதாகவே
இருக்கின்றது. அதே சமயம் நம் இளைய சமுதாயத்தின்
புத்திக் கூர்மையிலும் சந்தேகமில்லை. அவர்கள் இந்த தகுதி
தேர்வில் தேர்ச்சி பெறும் விகிதம் வரும் காலங்களில் கூடும் என்று
நம்புவோம்.

         

சனி, 12 மார்ச், 2022

முதல்வரின் உத்தரவின் பேரில் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் நடைமுறை காலாகாலமாக இருக்கிறது, இது இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது தானே?

இரண்டு நாட்களுக்கு முன், உச்ச நீதிமன்றத்தின் கடும் 

கோபத்திற்கு  ஆளாகியுள்ளது தமிழக அரசு. கேந்திர தேவி 

என்பவர் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் 

இறுதி விசாரணையில் தான் இந்த நிகழ்வு

     

என்ன நடந்தது?

      

        கருணை அடிப்படையில் அரசு பணி பெற்ற உதவி 

பொறியாளர்களுக்கும் நேரடியான தேர்வு மூலமாக அந்த 

பதவியை  பெற்றவர்களுக்கும் இடையே பணி மூப்பு 

அதாவது  சீனியாரிட்டியை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட 

பிரச்சினையின்  காரணமாக நேரடி பணி நியமனம் 

பெற்றவர்கள் சென்னை  உயர்நீதிமன்றத்தை  

அணுகுகிறார்கள். அப்போது வழக்கு   ஆவணங்களை 

பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம்,   ஹரியானா 

மாநில அரசுக்கு எதிராக உமேஷ் குமார் நாக்பால் 

என்பவர்  தொடர்ந்த வழக்கில் (https://indiankanoon.org/doc/1737552/) 1994ல் 

உச்ச  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கருணை அடிப்படையில் 

பணி  நியமனம் செய்வதில் மேற்கொள்ள வேண்டிய 

வழிமுறைகளை  பின்பற்ற தவறிவிட்டதாக கூறியது. அதே 

சமயம், மிக கால  தாமதமாக நீதிமன்றத்தை அணுகிய 

காரணத்தினால், வழக்கை  தள்ளுபடி செய்கின்றது

"      ஆபரேஷன் சக்சஸ்  பேஷண்ட் டைட் " என்பார்களே அது 

போன்ற நிலை.  சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் 

போல,  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கின்றனர்.   

இந்த வழக்கு விசாரணையின் போது தான் தமிழக அரசு உச்ச 

நீதிமன்றத்தின் கோபத்திற்கு உள்ளானது.

      

        1994 லேயே உச்சநீதிமன்றம் இது சம்பந்தமான தீர்ப்பு 

ஒன்றை வழங்கி அது தான் இந்த நிலத்தின் இறுதியான தீர்ப்பு 

என்ற நிலையில்,, அதை சற்றும் மதிக்காமல் தொடர்ந்து பனி 

நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும் 20006 சூலை 

மாதத்தில்  போடப்பட்ட ஒரு அரசு உத்தரவிற்கு  பின்னர் தான் 

அது  போன்ற  நியமனங்கள் நிறுத்தப்பட்டன" என்றும் .  இது 

சற்றும்  மன்னிக்கப்படக்கூடிய ஒன்று அல்ல என்று தன் 

காட்டத்தை  காட்டியது நீதிமன்றம்.  இது பற்றி மேலும் 

விவரங்களுக்கு போகும் முன்னர்,  கருணை 

அடிப்படையிலான பணி என்றால் என்ன என்று 

தெரியாதவர்களுக்காக ஒரு சிறு விளக்கம்.   


        கருணை அடிப்படையிலான  நியமனம் என்பது இந்திய 

அரசாங்கத்தால்  தொடங்கப்பட்ட ஒரு சமூகப் பாதுகாப்புத் 

திட்டம்என்று சொல்லலாம்.  ஒரு அரசு ஊழியர் பணியில் 

இருக்கும் போது அல்லது மருத்துவ  காரணங்களுக்காக ஓய்வு 

பெறும்போது கருணை அடிப்படையில்  அவருடைய  குடும்ப 

உறுப்பினருக்கு அவருடைய கல்வி  தகுதியின்  அடிப்படையில், 

ஒரு அரசு பணி கொடுtத்து,  அந்த குடும்பம் வறுமையில் 

வாடாதவாறு  அவர்களின்  வாழ்வாதாரத்தைத் தக் கவைக்க 

உடனடியாக உதவுவதே  இத்திட்டத்தின் நோக்கம். இது போல 

நியமனம் செய்யப்படுபவர்களுக்கான சம்பளமும், அந்த 

பணிக்கான தேர்வில் மூலம தேர்ந்து எடுக்கப்படுபர்களுக்கு 

வழங்கப்படும் சம்பளமும் ஒன்றாகவே இருக்கும் என்று உச்ச 

நீதிமன்றமே சமீபத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.  


            பொதுவாக ஒவ்வொரு மாநில அரசும் கருணை 

அடிப்படையிலான பணி நியமனத்திற்கான கொள்கை ஒன்றை 

அவ்வப்போது மாற்றி  வகுப்பதுண்டு. இப்படி கொள்கை மாற்றம் 

இருக்கும் போது, அரசு ஊழியர்  இறந்த சமயத்தில் 

பின்பற்றப்பட்ட வழிமுறைகளை கடைப்பிடிப்பதா  அல்லது, 

பணி நியமனம் வேண்டிய மனுவை பரிசீலனை 

செய்யும்  காலத்தியதா என்ற குழப்பமும் இருக்கும். ஆஷிஷ்  

அஷ்வேதியின்  மனுவை பரிசீலிக்கும் போது, மத்திய பிரதேச 

அரசுக்கும் இதே  போன்றந்தேகம் ஏற்பட்டது.  அரச ஊழியர் 

ஒருவர் பணிக் காலத்தில்  இறக்கும் போது தான் இந்த பணி 

நியமனம் செய்யும் கோரிக்கை எழுகிறது  என்பதால் அந்த 

காலகட்டத்திய அரசின் கொள்கையையே 

கருத்தில்  கொள்ளவேண்டும் என்றும், அதன் பின்னர் அதில் 

செயயப்படும் எந்த  மாற்றத்தையும் கணக்கில் கொள்ளக் கூடாது 

என்று உச்ச நீதிமன்றம் வழி  காட்டியுள்ளது.  


            இதன் அடிப்படை\யில் பணி வேண்டி மனு செய்வதற்கும் 

ஒரு காலவரையறை உண்டு.  அந்த அரசு ஊழியர் இறந்த மூன்று 

வருட காலத்திற்குள் இந்த மனு செய்ய  வேண்டும்.  அதே சமயம், 

மருத்துவ  காரணத்தினால் பனி ஒய்வு பெற்றவர் அதன் பின்னர் 

உடல் நலக்குறைவு  ஏற்பட்டு சில வருடங்கள் கழித்து இறந்தால், 

அந்த  கால தாமதம்  மன்னிக்கப்படும்.  ஆனால் எந்த வித ஏற்றுக் 

கொள்ளும் காரணமும்  இன்றி, கால தாமதமாக இந்த பணி 

நியமனம் வேண்டி செய்யப்படும் மனு  ஏற்றுக் கொள்ளப்பட 

மாட்டாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில்  ஸ்டீல்  அத்தாரிட்டி 

தொடர்ந்த வழக்கில் தெளிவுபடுத்தியுள்ளது.  

 
     மனுவை தாக்கல் செய்வதற்கு காலத்தை நிர்ணயம் 

செய்த  அதே வேளையில், அந்த மனுவை பரிசீலனை செய்து 

உத்தரவு  பிறப்பிப்பதற்கு எந்த கால நிர்ணயமும் 

செய்யப்படவில்லை.  உரிய  பணியிடம்  காலியாகும் போது, 

நியமனம்செய்வதை  கருத்தில் கொள்ள வேண்டும் என்று 

மட்டுமே  வழிமுறைகள்  சொல்லியுள்ளது. அதே சமயம், எந்தவித 

கால அளவும்  இல்லாமல், அந்த கோரிக்கை விடுத்தவர் 

காத்திருக்க  வேண்டிய நிலையும் உள்ளது. கருணை 

அடிப்படையிலான  பணி நியமனம் செய்படுவதன் நோக்கமே, 

திடீரென ஒரு அரசு  ஊழியர் இறக்கும் போது அதனால் அந்த 

குடும்பமே நிதி  சிக்கலில் மாட்டி தவிப்பதை தடுக்கும் 

நோக்கத்தில்  கொண்டு வரப்பட்டது. 


             ஆனால் திட்டத்தின் நோக்கத்தையே முறியடிக்கும் 

வகையில் கால தாமதம் செய்தால், என்ன செய்வது?   

நிலுவையில் உள்ள அந்த மனுவை பரிசீலிக்க மட்டுமே 

உயர்நீதிமன்றம் உத்தரவிடலாம். ஆனால் அந்த மனுவின் 

அடிப்படையில் பணி உத்தரவு கொடுக்க  வேண்டும் 

என்று உத்தரவிட முடியாது ஏனெனில்  இந்த கருணை 

அடிப்படையிலான பணி நியமனத்தை உரிமையாக கோர 

முடியாது  அந்த பணி நியமனம்  செய்பவர் 

திருப்தியடையாதபோது அதை நிராகரிக்கும் அவருக்கு 

அதிகாரம் உள்ளது.   எனவே தான் " இந்த கருணை 

அடிப்படியிலான பணி கோருதல் என்பது உடனடியான உதவி 

தரக்கூடிய ஒரு பலவீனமான உரிமை" என்றுள்ளது நமது உயர் 

நீதிமன்றம்.  


            காலதாமதப் படுத்திவிட்டு, இறுதியாக மனு செய்த நபரை 

பணி நியமனம் செய்தாலும், , மனு செய்த மூன்று மாத 

காலத்திற்குள் முடிவு எடுக்காமல் இந்த கால தாமதம் 

ஏற்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நஷ்டஈடு 

செலுத்த வேண்டியிருக்கும் என்று ஹிரித்திக் என்பவர் 

பொதுத்துறை துணை இயக்குனருக்கு எதிராக தொடர்ந்த 

வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு 

வழங்கியுள்ளது. நம்முடைய மாண்புமிகு சென்னை 

உயர்நீதிமன்றம் மட்டும்  என்ன? சாவகாசமாக பதினைந்து 

வருடங்கள் கழித்து, கருணை அடிப்படையில் பணி நியமனம் 

கோரிய மனுவை நிராரித்த பள்ளி கல்வி இயக்குனர ஒரு லட்சம் 

ருபாய் செலவு தொகையாக மனுதாரர் அருள்ஜோதிக்கு 

வழங்க உத்தரவிட்டது. 
 
     தமிழக  தேர்வாணையத்தின் வலைத்தளத்தில் கருணை 

அடிப்படையிலான பணி நியமனம் குறித்த சில 

கேள்விகளுக்கான் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளனஅதில் 

கருணை அடிப்படையிலான பணி நியமனம் 

யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்ற கேள்விக்கு

இறந்தவரின்  அல்லது மருத்துவ  காரணங்களுக்காக 

ஓய்வுபெற்றவரின் மனைவி, அல்லது கணவன், மகன்,மகள்.  

விவாகரத்தான மகள் மற்றும் விதவையான மகள் என்று 

குறிப்பிடப்பட்டிருக்கும்


           பொதுவாக மகளுக்கு திருமணம் ஆன பிறகு, அவள் 

இன்னொரு குடும்பத்தின் அங்கமாகிறாள் என்ற 

அடிப்படையில்,  இந்த வகை பணி நியமனத்தில்,  மகனா 

அல்லது மகளா என்று கேள்வி எழும்போது, மகனுக்கே 

அதிக வாய்ப்பு உள்ளது. 

            மகனுக்கு திருமணமாகியிருந்தாலும், தகப்பனாரின் 

இறப்பினாலோ  அல்லது மருத்துவ காரணத்தினால் ஓய்வு 

பெறும்போதோ . கருணை அடிப்படையிலான பணி 

பெறும் உரிமை உள்ளபோது, திருமணமான மகளுக்கு 

ஏன் அந்த உரிமை இல்லை,அவளுக்கு விவாகரத்து 

ஆகியோ அல்லது அவள் கணவன் இறந்து, அவள் 

தகப்பனாரின் தயவில் வாழ்ந்து வந்து கொண்டிருந்தால் 

மட்டுமே அந்த தகுதி அவளுக்கு உண்டு என்று ஏன் பிரித்து 

பார்க்க வேண்டும் என்ற கேள்வி என்னுள்எழுந்ததுண்டு.   

இதே போன்ற வழக்கு ஒன்று, தேபஸ்ரீ சக்ரவர்த்தி 

என்பவரால் தொடரப்பட்டு,  மாண்புமிகு 

திரிபுரா உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது 

நீதிபதிகள், அதே போன்ற கருத்தை தெரிவித்தது 

மட்டுமல்லாமல், திருமணமான மகளை தவிர்த்த அந்த 

அரசின் அறிப்பனையை ரத்து செய்துள்ளது.   நமது 

உச்ச நீதிமன்றம் இதற்கெல்லாம் முன்னோடியாக 

இருப்பது அல்லவா? முகேஷ் குமார் என்பவர்  தொடர்ந்த 

வழக்கில், இரயில்வே போர்டு  ஒன்றின் சுற்றறிக்கையில்

இறந்த அரசு ஊழியரின் இரண்டாம் மனைவிக்கு பிறந்த 

குழந்தைகளுக்கு கருணை அடிப்படியிலான பணி 

நியமனம் செய்ய விதித்த தடையை நீக்கியது. ( முகேஷ் 

குமார் எதிர் யூனியன் ஆப்  இந்தியா ) 


            உரிமை கோரும் இடத்தில் கடமையும் இருக்கும் 

அல்லவா?இறந்த கணவனின் பணியிடத்தில் கருணை 

அடிப்படையில் பணி நியமனம் பெற்ற பெண்,  அப்போது 

கொடுக்கும் உறுதிமொழியின்அடிப்படையில்,  கணவன் 

தாயையும் சரியாக பராமரித்து அவருக்கு வேண்டிய 

மருத்துவ வசதியையும் செய்து கொடுக்க 

வேண்டியவளாகிறாள் என்றுரூக்கிறது கல்கத்தா 

உயர்  நீதிமன்றம். துர்கா பாய் மண்டல்  என்பவர் 

தொடர்ந்த வழக்கில். 

            
                 இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் இறந்தவரின் 

மனைவியோ அல்லது கணவரோ அதிகபட்சம் ஐம்பது 

வயதும் , மகன் அல்லது மகள் என்றால் 35 வயது 

கொண்டவராக இருக்க  வேண்டும் என்று  நிர்ணயம் 

செய்யப்பட்டுள்ளது. இந்த வயது நிர்ணயம் அரசு 

ஊழியரின் இறந்த தேதியை பொறுத்து  

 நிர்ணயிக்கப்படும்.


             ஒருவருக்கு மேற்பட்ட தகுதியான வாரிசுகள் 

இறந்தவருக்கு  இருந்தால்,  யாருக்கு பணி நியமனம் செய்வது 

என்பது, அந்த  அரசு ஊழியரின் கணவர் அல்லது மனைவியின் 

சிபாரிசின்  அடிப்படையில் இருக்கும். அதுவே திருமணமாக 

நபராக அந்த  இறந்தவர் இருந்தால். அவருடைய சகோதரர் 

அல்லது  சகோதரிக்கு அந்த பணி கோரும் உரிமை உண்டு.    

 

      அதே போல, இன்னொரு சந்தேகமும் நமக்குள் எழும்.  

கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி நாம் மனு 

கொடுத்த காலத்தில் நமக்கு இருந்த கல்வி தகுதி ஒன்றாக 

இருக்கும்.  அந்த மனு நிலுவையில் இருக்கும் போது, நம்முடைய 

கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டால், அந்த தகுதியின் 

அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுமா? 

உதாரணத்திற்கு  இளநிலை உதவியாளர் என்கிற ஜூனியர் 

அசிஸ்டன்ட்  பதவிக்கு  மட்டுமே தகுதியாக இருந்த மனுதாரர்,  

தன் கல்வி  தகுதியை  உயர்த்திக் கொண்டால் அடுத்த உயர் 

நிலை  பணியான தட்டச்சர்  எனப்படும் டைபிஸ்ட் பணிக்கு 

நியமிக்கப்படுவாரா? என்றால். இதற்கு தமிழக அரசின் 

தேர்வாணையத்தின் வலைத்தளத்தில் 

அவருக்கு சாதகமான பதிலே உள்ளது. இதே போன்ற ஒரு 

உத்தரவை தான் டெல்லி உயர்நீதிமன்றமும், நிர்மலா தேவி 

என்பவர் தொடர்ந்த வழக்கில்  பிறப்பித்தது. ஆனால் அதை 

ஏற்றுக் கொள்ளாத டெல்லி ஜெயில் போர்டு, தற்போது  உச்ச 

நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தொடர்பாக உச்ச 

நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை 

பொறுத்திருந்து பார்ப்போம்.  

     
         உச்ச நீதிமன்றத்தின் கோபத்திற்கு தமிழக அரசு 

ஆளானது  குறித்து சொல்லிக்கொண்டு இருந்தேன் அல்லவா? 

அந்த  முக்கித்துவம் வாய்ந்த 1994 வருடத்திய தீர்ப்பில், 

முக்கியமாக  கருணை அடிப்படியிலான பணி நியமனம் 

என்பது அரசு  பணிகளில் கீழ் நிலைகளில் உள்ள 'சி' மற்றும் 

'டி' பிரிவில்  மட்டுமே செய்யப்படவேண்டும் என்றும், 'ஏ'  

மற்றும் 'பி' பிரிவு நியமனங்களுக்கு உரிய முறையில் தேர்வு 

நடத்தியே நியமிக்க  வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 

சொல்லியிருந்தது. ஆனால்  இந்த வழக்கில்  கருணை 

அடிப்படையில் நியமனம்  செய்யப்பட்டது உதவி 

பொறியாளர் எனப்படும் பி பிரிவு பணி.  அவர்களுக்கும் 

நேரிடையாக அந்த பணியில் நியமனம் 

செயயப்பட்டவர்களுக்கும் இடையே பனி மூப்பு, எனப்படும் 

சீனியாரிட்டியை நிர்ணயம் செய்யும் போது, இந்த நேரிடை 

பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், கருணை 

அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஜூனியர்களாக 

ஆக்கப்பட்டனர். அதனால் ஏற்பட்ட அதிருப்தியால், அவர்கள்,  

அந்த கருணை அடிப்படியிலான பணி நியமனம் 

செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.  

 

      ஏன் உச்ச நீதிமன்றத்தின் 1994 வருடத்திய தீர்ப்பில் 

கொடுக்கப்பட்ட அறிவுருத்தல்களை தமிழக அரசு 

கடைப்பிடிக்கவில்லை, ஏன்  தொடர்ந்து 'பி' பிரிவு 

அதிகாரிகளை கருணை அடிப்படையில் பணி நியமனம் 

தொடர்ந்து செய்து கொண்டு இருந்துள்ளது என்றதற்கு அரசு 

தரப்பின் பதில் என்ன தெரியுமா.?? உச்ச நீதிமன்றத்தின் அந்த 

தீர்ப்பின் விவரமே  அரசின் சட்டத் துறைக்கு 2001 ல் தான் 

தெரிய வந்தது என்றும், அதன் பின்னர் அந்த தீர்ப்பின் படியே, '

ஏ' மற்றும் 'பி' பிரிவு பணிகளுக்கு கருணை 

அடிப்படையிலான பணி நியமனம் ஏதும் 

செய்யப்படவில்லை என்று சொல்லியுள்ளது. 

      

        இதை நீதிமன்றம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

அந்த காலக் கட்டத்தில் 'சி' மற்றும் 'டி' பிரிவில் கருணை 

அடிப்படையிலான எத்தனை பணி நியமனம் எப்படிப்பட்டது 

என்ற  விவரங்களை கூட தமிழ அரசு கொடுக்கவில்லை 

என்று கண்டித்த  நீதிமன்றம், அதே வேளையில்,இந்த வழக்கு 

மிக காலதாமதமாக  தொடரப்பட்ட குறைபாட்டை சுட்டிக் 

காட்டியது. இந்த வழக்கு  விசாரணைக்கு உச்ச 

நீதிமன்றத்தை வந்தடைந்த போது, ஏறக்குறைய அந்த பணி 

நியமனம் பெற்றவர்கள் இருபது  வருடங்களுக்கு மேலாக 

பணி செய்து, அவர்களுக்கும் மற்ற  நேரிடையாக அந்த 

பணியில் நியமனம்  செய்யப்பட்டவர்களுக்கும் 

இடையே பணி மூப்பும் நிர்ணயம் செய்யப்பட்டு, பதவி 

உயர்வும்  அளிக்கப்பட்டு விட்ட நிலையில், அதுவும் அரசு 

செய்த தவறில்,  அந்த பணியில் நியக்கபட்டவர்களின் . பங்கு 

ஏதும் இல்லாத  காரணத்தினால், இதில் தலையிட முடியா 

நிலையில் இருப்பதாக  கூறியது

https://www.barandbench.com/news/unpardonable-supreme-court-pulls-up-tamil-nadu-compassionate-appointments-violation-top-courts-1994-ruling 

      

            இறுதியில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு 

விட்டாலும்...இந்த வழக்கு நமக்குள் எழுப்பியுள்ள வினா 

ஒன்று...

      
        உச்ச நீதிமன்றம் அளித்த 1994 வருடத்திலான தீர்ப்பை ஒரு 

மாநில அரசு தனக்கு 2006 சூலை வரை  தெரியவேயில்லை 

என்றுள்ளது. ஒரு தனி மனிதன் இது போன்ற வாதத்தை 

எடுத்து வைத்தால், எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளப்படும் 

என்பது சந்தேகமே. அதே சமயம் நீதிமன்றத்தின் உத்தரவை 

அவமரியாதை செய்த காரணத்திற்காக தண்டிக்கவும் 

படலாம். அப்படியிருக்க, அந்த மக்களின் அரசு, அவர்களுக்கு 

எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய நிலையில் இருந்து 

மாறி, இந்த தவறை ....இல்லையில்லை  தப்பை 

செய்யும்போது?? 

இந்த கேள்விக்கான பதிலை உங்களுக்குள்ளேயே கேட்டு 

பெற்று கொள்ளுங்கள்...

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...