வியாழன், 4 ஏப்ரல், 2024

மாஜிஸ்திரேட்டு நீதிமன்றமா , முன்சீப் நீதி'மன்றமா ..... எது பெரியது ?

 மாஜிஸ்திரேட்டு  நீதிமன்றமா முன்சீப்  நீதிமன்றமா ...இரண்டில் எதற்கு அதிக அதிகாரம் என்ற கேள்வி எழும்போதெல்லாம், ஒருவரை சிறைக்கு அனுப்பும் அதிகாரம் இருப்பதால், மாஜிஸ்திரேட்டுக்கு தான் அதிகாரம் நிரம்ப என்று பெரும்பாலானவர் நினைத்திருப்பதை கண்டுள்ளேன். 

ஆனால் உண்மை அதுவல்ல. 

நீதிமன்ற அதிகார அமைப்பின்படி உள்ள அடுக்குகளில் , முதன்மையானது தான் இந்த சிவில் வழக்குகளை விசாரிக்கும் முன்சீப், மற்றும் குற்ற வழக்குகளை பொறுத்து விசாரிக்கும் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்கள். 

இந்த நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் ,  ஒரே தரத்தில் இருந்தாலும்,  இவை வழக்குகளை விசாரிக்கும் முறையில் முற்றிலும் வேறுபட்டது.

சிவில் வழக்குகளை பொறுத்தவரையில் சாட்சிகளையும் ,சாண்றாவனங்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தத்தம் தரப்பு கட்சிகளை நிரூபிக்கவேண்டியது இரண்டு தரப்பையும் சாரும்.  ஆனால் குற்ற வழக்குகளை பொறுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் ஏதும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவர் தான் இன்னின்ன குற்றம் செய்தார் என்று அரசு தரப்பில் , சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டியது கடமை. குற்றவாளி ஏதும் பேசக்கூட தேவையில்லலை. மவுனமாக நின்றாலே போதும். 

இத்தகைய பெரிய வேறுபாடு கொண்டதனால், சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பு , மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை கட்டுப்படுத்துமா ? அல்லது அதற்கு நேர்மாறா? என்ற கேள்வி எழும்.

இந்த கேள்வி, இன்று நேற்றல்லை...1954 லேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டு இதற்கான விடையை நமது உச்ச நீதிமன்றமும் வழங்கிவிட்டது. M.S.Sheriff vs.State of Madras என்ற வழக்கில் அரசியலமைப்பு பெஞ்ச்  , "ஒரு நீதிமன்றத்தின் உத்தரவை இன்னொரு நீதிமன்றத்தை கட்டுப்படுத்தும்  என்று சட்டம் வெளிப்படையாக சொல்லாததற்கு காரணம் , அது ஏற்படுத்தக்கூடிய தர்மசங்கடம்" என்றது.  ஆனால் அப்போதும், அதற்கு விதிவிலக்கு என்று " சிறை தண்டனை மற்றும்   அபராதங்கள் " என்றும் சொன்னது. 

இதுவே 1970 ல் உச்ச நீதிமன்றத்தின் பார்வை சற்று மாறி, சிவில் நீதிமன்றங்களின் தீர்ப்பு, குற்றவியல் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும். ஆனால் குற்றவியல் நீதிமன்றங்களிந தீர்ப்பு அப்படியல்ல " என்றது.

ஆனால் இது காலப்போக்கில் மாற்றப்பட்டது என்பதை Vishnu Dutt Sharma verses Daya Sapra வழக்கில் தெளிவாக்கியது.

கடைசியில் , Premshankar verses Inspector of Police வழக்கில் சிவில் நீதிமன்றம் கூட , குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை பரிசீலிக்கலாம்" என்றது.அத்தோடு  M.S.Sheriff vs.State of Madras  வழக்கையும் மேற்கோள் காட்டி ,'ஒரே மாதிரி தன்மையுடன் எல்லாவற்றையும் அணுகமுடியாது என்றும் மாறுபட்ட தீர்ப்புகளை சிவில் நீதிமன்றமும் குற்றவியல் நீதிமன்றமும்  வழங்கினாலும்,  சிறைத்தண்டனை மற்றும் அபராதம் தவிர்த்து , ஏனைய சமயத்தில் பொருட்படுத்தவேண்டியதில்லை என்றது.

கடைசியாக இந்த விஷயமாக Iqbal Singh Morwah verses Meenakshi Morvah  வழக்கில் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு பெஞ்ச் கூட ,  ஒரே விஷயமாக தொடரப்பட்ட குற்ற வழக்கு மற்றும் சிவில் வழக்கில் எதை நிறுத்தி வைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, "குற்றவியல் அமைப்பு தான் வேகமாக செயல்பட வேண்டியது. ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, 'நிரபராதிபதி "  என்று நிரூபிக்கும் வரையில், அவர் அந்த பழியை சுமக்க வேண்டிஇருக்கும் என்பதாலும், சாட்சியங்கள், சாட்சிகளிடையே பசுமையாக இருக்கும்போதே விசாரணை நடைபெரவெந்டிஉம் என்பதாலும், அதுவே சிவில் வழக்கேன்றால், வருடக்கணக்கில் நீளும் என்பதால் குற்ற வழக்கிர்க்கே முன்னுரிமை  கொடுத்து சிவில் வழக்கை நிறுத்தி வைக்கவேண்டும் என்றது. ஆனாலும் இது பொதுவானது அல்ல. முக்கால் வாசி சிவில் வழக்கு முடிந்திருந்தால், அதையே நடத்தலாம்' என்றும் சொன்னது.இந்த வழக்கில் கூட மM.S.Sheriff வழக்கு மேற்கோள் காட்டப்பட்டது.

எனவே இப்போதைக்கு பிரேம்ஷங்கர் வழக்கை தான் 




இதையெல்லாம் 

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...