திங்கள், 20 நவம்பர், 2023

மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு பெறுவது எப்படி? ....பகுதி 2

 


https://images.app.goo.gl/KFazUK6YDNpi4b567

போன பகுதியில் யார் யாரெல்லாம் நஷ்ட ஈடு பெற தகுதியுடையவர்கள் என்று படியலிட்டிருந்தோம் அல்லவா?

பெரும்பாலும் விபத்தினால்  காயம் பட்ட  அல்லது இறந்த நபருக்கான இழப்பீடு கோருவது அந்த காப்பீடு பாலிசியின் ஷரத்துகளுக்குள்ள் வராது என்று வாதிடுவது  காப்பீடு நிறுவனங்களின் பொது வாதமாக இருக்கும்.

அது போன்ற ஒரு வழக்கில் தான் இன்று  கேரளா உயர் நீதிமன்றம ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

அப்துல் ரசாக் ஒரு டிப்பர் லாரி தொழிலாளி. அவர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு இருக்கும்போது , ஒரு தென்னை மரம் அவர் மீது சாய்ந்து, விபத்து ஏற்பட்டதால், அவருக்கு நல்ல காயம். அவரும் நஷ்ட ஈடு கேட்டு, தொழிலாளர்  இழப்பீடு சட்டம், 1923 ன் கீழ் மனு செய்கிறார். (வழக்கம் போல,)   சரக்குகளை ஏற்றி, இறக்கும் தொழிலாளர்களை பாலிசி ‘கவர்’ செய்யாது என்று வாதிட்டது.

ஆனால் அந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் இழப்பீட்டு கமிஷனர் , அந்த வாதத்தை ஏற்காமல், அதிகம் என்று ஒள்ள முடியாது...ரூ.1,04,000/-ஐ இழப்பீடாக நிர்ணயம் செய்து, அதற்கு 12% வட்டியும், அவர் தாக்கல் செய்த மருத்துவ சிகிச்சை ஆவணங்களை கொண்டு அந்த செலவுகளையும் சேர்த்து கொடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம்  மேல்முறையீடு செய்கிறது. ஆவணங்களை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், மோட்டார் வாகன சட்டப்பிரிவு 147(1) provison(1) © சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலாளர்களையும் குறிக்கிறது என்பதையும் காப்பீடு செய்யப்பட்ட வாகனம் சரக்குகளை ஏற்றிசெல்லும் வாகனம், எனில், அதில் பயணம் செய்யும் தொழிலாளர்களையும் அந்த காப்பீடு அடக்கும் என்று இருப்பதை  சுட்டிக்காட்டியது.

இதில் காப்பீடு நிறுவனம் எடுத்து வைத்த இன்னொரு வாதம் என்னவெனில், விபத்திற்குள்ளான வாகனம், வெறுமனே நிறுத்தப்பட்டிருந்தது என்பதாலும், அதை இயக்கியதால் விபத்து  நேரவில்லை என்பதாலும் அவர்கள் பொறுப்பு ஏற்க்க தேவையில்லை என்றனர்.

வாகனம் நிறுத்தப்பட்டிருந்தாலும், அந்த விபத்துடன் வாகனம்  தொடர்பு கொண்டிருந்தால், இழப்பீடு கொடுக்க,  காப்பீடு நிறுவனம் மறுக்க முடியாது என்று ஏற்கெனவே இன்னொரு தீர்ப்பில் சொன்னதையும் சுட்டிக்காட்டி  மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் எதிர் அப்துல் ரசாக் )

அதே சமயம் இன்னொரு விவரத்தையும் மனதில் கொள்ள வேண்டும். நிறைய சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதை நாம் பார்க்கின்றோம்/. குறைவான பணம் கொடுத்தால் போதும் என்பதால் தொழிலாளர்கள் நிறைய பேர் அதில் பயணம் செய்வதை பார்க்கின்றோம்.. அந்த பயணம் ஆபத்தானது மட்டுமல்ல, அது காப்பீட்டிற்கு எதிரானது என்பதால் அது போன்ற சமயத்தில் விபத்து ஏதும் நேரும் போது, அவர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், இழப்பீடு கிடைக்காது.

தீர்ப்பாயத்தின் உத்தரவு இறுதியானதா என்றால் இல்லை. அதர் மேலாக உயர்நீதிமன்றத்தையும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் திருப்தியளிப்பதாக இல்லையென்றால், உச்சநீதிமன்றம் செல்லலாம்.

 

7.  தீர்ப்\பாயத்தின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்ய வழிமுறை என்ன?

·         மோட்டார் விபத்து கோரிக்கைத் தீர்ப்பாயத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட இழப்பீட்டு தொகை போதுமானதல்ல என்று கோரிக்கையாளர் கருதினால், அவர் தீர்ப்பு தேதியிலிருந்து 9௦ நாட்களுக்குள்,  மேல் முறையீடு செய்ய வேண்டும்.  இந்த கால வரம்பிற்குள்,  தீர்ப்பு நகல் வழங்க தீர்ப்பாயம் எடுத்து கொள்ளும் காலம் அடங்காது. கால வரம்பு தாண்டி மேல் முறையீடு செய்தால் தாமதத்தை மாணிக்க தகுந்த காரணத்தை காட்ட வேண்டும்.

‘தகுந்த, போதுமான காரணம்” என்பது வழக்கிற்கு வழக்கு மாறுபடும். அதனால் போதுமான காரணத்தை,ஆதாரத்தை காட்டிவிட்டோம், என்பதாலேயே கால தாமதத்தை மன்னிக்கவேண்டும் என்று உரிமையாக கோர முடியாது.அது நீதிமன்றத்தின் discretionary power.

 

·         இழப்பீடு தொகை கொடுக்க வேண்டிய நபர், மேல்முறையீடு செய்ய வேண்டுமானால், ரூ.2௦,௦௦௦/- அல்லது தீர்மானிக்கப்பட்ட இழப்பீட்டு தொகையில் 5௦ சதவீதம் இவைகளில் எது குறைவோ அந்த தொகையை வைப்பீடு செய்தால் தான்,  மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

சட்டத்தில் முக்கியமாக சொல்லப்பட்டுள்ள இந்த நடைமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

 

·          தாவா சம்பந்தமான தொகை ரூ.1௦,௦௦௦/- க்கு குறைவாக இருந்தால் மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது.

காப்பீடு நிறுவனத்திற்கு பொறுப்பு இல்லையென்றால் , அதாவது விபத்து  தேதியில் காப்பீடு நிலுவையில் இல்லையென்றால், அவர்களை இழப்பீடு தொகையை கட்டிவிட்டு, பின்னர் வாகன உரிமையாளரிடம் வசூலித்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது.

 

8. ஓட்டுனர் பால் தவறு இல்லாவிட்டாலும், இழப்பீடு கொடுக்கும் பொறுப்பு (NO FAULT LIABILITY)  என்றால் என்ன?

ஒரு விபத்து நடக்கும் போது, ஓட்டுனர் பால் தவறு இருந்தாலும், இல்லாவிட்டாலும், மோட்டார் வாகன சட்டப்பிவு 140 ன் கீழ் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். அந்த விபத்தில் மரணம் நேர்ந்தால், ரூ.5௦,௦௦௦/-ம்,  நிரந்தர ஊனம் நேர்ந்தால் ரூபாய் 25,௦௦௦/- மும் Fixed தொகையாக, கொடுக்கப்பட வேண்டும்.

மேலே சொன்ன தொகையை பெற கோரிக்கை எழுப்புபவர்.  வாகன ஓட்டுனரின் தவறு அல்லது குற்றம் அல்லது கவனக்குறைவை மெயபிக்கவேண்டிய வேண்டியதில்லை. அதாவது ஒட்டுனர்பால் தவறு இல்லாமல்  அந்த விபத்து நேர்ந்திருந்தாலும் இந்த நஷ்ட ஈட்டு தொகை கொடுக்கப்படவேண்டும்

நிரந்தர ஊனம் என்பது என்ன:?

      1. காது அல்லது கண் அல்லது உடலின் ஒரு பகுதி அல்லது இணைப்புகளில் நிரந்தர சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும்/

       2. தலையில் அல்லது முகத்தில் நிரந்தரஉருமாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

 

9.   சட்டப்பிரிவு 140 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்ளில் தீர்ப்பாயங்களின் கடமைகள்:

·         எவ்வளவு விரைந்து முடிக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டும்.

·         இழப்பீடு கோருகின்ற இழப்பீடு கோருகின்ற பிரதான மனு செய்யப்பட்ட பின், அது நிலுவையில் இருக்கும் போதே பிரிவு  140 ன் கீழ் மனு தாக்கல் செய்யபட்டால், இதைத் தான் தீர்ப்பாயம் முதலில் முடிக்க வேண்டும்.

·         இழப்பீடு கோரும் மனுவில் இறுதியாக வழங்குகின்ற இழப்பீடு தொகையில் இந்த பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை கழித்துக் கொள்ள வேண்டும்.

·         ஒரு வேளை பிரதான மனுவில் நிர்ணயம் செய்யப்பட்ட  இழப்பீட்டு தொகை, பிரிவு  140 ன் கீழ் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விட குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், அந்த தொகையை செலுத்த கடமைப்பட்டவர் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில், பிந்தைய தொகையானது முந்தைய தொகையில் அடங்கி விடுகிறது.

 

1௦.  மோதி மறையும் (HIT AND RUN) மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு பெறுவது எப்படி?

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் அடையாளத்தை நியாயமான முயற்சிகள் எடுத்தும் கண்டறியமுடியாத போது , அதை ‘மோதி மறையும் வாகன விபத்து (HIT AND RUN ACCIDENT ) என்பர்.

இத்தகைய விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, ,மத்திய அரசு ஒரு ஆதரவு நிதியை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து அத்தைய விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டால், ரூ.25,௦௦௦/-ம் கொடுங்காயம் ஏற்பட்டால் ரூ.12,5௦௦/-ம் இழப்பீடாக பெறலாம்.

 

தொடர்ந்து மோட்டார் வாகன இழேப்பீத் தொகையை தீர்ப்பாயம் எப்படி நிர்ணயம் செய்கிறது, நாம் மனு செய்வதற்கு தேவையானவை என்னென்ன என்பது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


(தொடரும்)

 

இந்த பதிவை எங்கள் யுடியுப் சானலிலும் பார்க்கலாம்.


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...